சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் செய்ய
செய்ய     செய்யர்,     செய்யமேனியீர்!     செய்யன்     செய்யு     செய்யான்     செய்யமா     செய்யுள்நிகழ்     செய்யா     செய்யன்,     செய்யனே!     செய்யதாமரைமேல்     செய்யும்     செய்யர்;     செய்யனே;     செய்யாய்,     செய்யானை,     செய்யார்    
1.002   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்ய மேனி வெளிய பொடிப் பூசுவர், சேரும் அடியார்மேல்
பைய நின்ற வினை பாற்றுவர், போற்றி இசைத்து என்றும் பணிவாரை
மெய்ய நின்ற பெருமான், உறையும் இடம் என்பர் அருள் பேணி,
பொய் இலாத மனத்தார் பிரியாது பொருந்தும் புகலூரே.

1.028   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யர், செய்யசடையர், விடை ஊர்வர்,
கை கொள் வேலர், கழலர், கரிகாடர்,
தையலாள் ஒரு பாகம் ஆய எம்
ஐயர், சோற்றுத்துறை சென்று அடைவோமே.

1.088   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்ய கலிங்கத்தார், சிறு தட்டு உடையார்கள்,
பொய்யர் புறம் கூற, புரிந்த அடியாரை
ஐயம் அகற்றுவான், அணி ஆப்பனூரானைப்
பைய நினைந்து எழுவார் வினை பற்று அறுப்பாரே.

1.092   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்!
பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே!

1.114   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்ய தண் தாமரைக் கண்ணனொடும்
கொய் அணி நறுமலர் மேல் அயனும்
ஐயன் நன் சேவடி அதனை உள்க,
மையல் செய் வள நகர் மாற்பேறே.

2.050   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யா தாமரை மேல் இருந்தவனோடு மால் அடி, தேட, நீள் முடி
வெய்ய ஆர் அழல் ஆய் நிமிர்கின்ற வெற்றிமை என்?
தையலாளொடு பிச்சைக்கு இச்சை, தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு,
ஐயம் ஏற்று உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!

3.037   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யன், வெள்ளியன், ஒள்ளியார்சிலர் என்றும் ஏத்தி நினைந்திட,
ஐயன், ஆண்டகை, அந்தணன், அருமா மறைப்பொருள் ஆயினான்;
பெய்யும் மா மழை ஆனவன்; பிரமாபுரம் இடம் பேணிய
வெய்ய வெண்மழு ஏந்தியை(ந்) நினைந்து, ஏத்துமின், வினை வீடவே!

3.044   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்ய நுண் துவர் ஆடையினாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலாக்
கையர் கேண்மை எனோ? கழிப்பாலை எம்
ஐயன் சேவடியே அடைந்து உய்(ம்)மினே!

3.051   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யனே! திரு ஆலவாய் மேவிய
ஐயனே! அஞ்சல்! என்று அருள்செய், எனை;
பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்
பையவே சென்று, பாண்டியற்கு ஆகவே!

3.078   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்ய திரு மேனிமிசை வெண்பொடி அணிந்து, கருமான் உரிவை போர்த்து
ஐயம் இடும்! என்று மடமங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம்
வையம் விலை மாறிடினும், ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார்
வெய்ய மொழி தண் புலவருக்கு உரை செயாத அவர், வேதிகுடியே.

3.120   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யதாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதல் செல்வி,
பை அரவு அல்குல் பாண்டிமாதேவி நாள்தொறும் பணிந்து இனிது ஏத்த,
வெய்ய வேல், சூலம், பாசம், அங்குசம், மான், விரி கதிர் மழு உடன் தரித்த
ஐயனார் உமையோடு இன்பு உறுகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே.

3.902   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
செய்யும் வண்ணஞ் சிரித்துப் புரம்மிசை
பெய்யும் வண்ணப் பெருந்தகை யானதோர்
உய்யும் வண்ணமிங் குன்னருள் நோக்கிட
மெய்யும் வண்ணக் கிளியன்ன வூரனே.

4.016   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும்
கையர்; கனைகழல் கட்டிய காலினர்;
மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே.

4.062   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர் தேவே!
மை அணி கண்டத்தானே! மான்மறி மழு ஒன்று ஏந்தும்
சைவனே!-சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன்
ஐயனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!

5.040   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்ய மேனி வெண் நீறு அணிவான் தனை
மையல் ஆகி, மதிக்கிலள், ஆரையும்;
கை கொள் வெண் மழுவன், கழிப்பாலை எம்
ஐயனே அறிவான், இவள் தன்மையே.

5.072   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்-
நெய் அது ஆடிய நீலக்குடி அரன்,
மையல் ஆய் மறவா மனத்தார்க்கு எலாம்
கையில் ஆமலகக்கனி ஒக்குமே.

6.004   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்யனே; கரியனே, கண்டம்; பைங்கண் வெள் எயிற்று ஆடு அரவனே; வினைகள் போக
வெய்யனே; தண் கொன்றை மிலைத்த சென்னிச் சடையனே; விளங்கு மழுச் சூலம் ஏந்தும்
கையனே; காலங்கள் மூன்று ஆனானே; கருப்பு வில் தனிக் கொடும் பூண் காமற் காய்ந்த
ஐயனே; பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே.

6.056   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்ய மலர் மேலான், கண்ணன், போற்றித்
தேடி உணராமை நின்றாய், போற்றி!
பொய்யா நஞ்சு உண்ட பொறையே, போற்றி!
பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய், போற்றி!
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய், போற்றி!
மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய், போற்றி!
கை ஆனை மெய்த்தோல் உரித்தாய், போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6.057   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்யாய், கரியாய், வெளியாய், போற்றி!
செல்லாத செல்வம் உடையாய், போற்றி!
ஐயாய், பெரியாய், சிறியாய், போற்றி!
ஆகாய வண்ண முடியாய், போற்றி!
வெய்யாய், தணியாய், அணியாய், போற்றி!
வேளாத வேள்வி உடையாய், போற்றி!
கை ஆர் தழல் ஆர் விடங்கா, போற்றி!
கயிலை மலையானே, போற்றி போற்றி!.

6.060   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செய்யானை, வெளியானை, கரியான் தன்னை, திசைமுகனை, திசை எட்டும் செறிந்தான் தன்னை,
ஐயானை, நொய்யானை, சீரியானை, அணியானை,   சேயானை, ஆன் அஞ்சு ஆடும்
மெய்யானை, பொய்யாதும் இல்லான் தன்னை, விடையானை, சடையானை, வெறித்த மான் கொள்
கையானை, கற்குடியில் விழுமியானை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டேன், நானே.

7.027   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
செய்யார் மேனியனே! திரு நீல மிடற்றினனே!
மை ஆர் கண்ணி பங்கா! மதயானை உரித்தவனே!
கை ஆர் சூலத்தினாய் திருக்கற்குடி மன்னி நின்ற
ஐயா! எம்பெருமான்! அடியேனையும், அஞ்சல்! என்னே! .

8.119   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
செய்ய வாய்ப் பைம் சிறகின் செல்வீ! நம் சிந்தை சேர்
ஐயன், பெருந்துறையான், ஆறு உரையாய் தையலாய்!
வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து, இழியும்
ஆனந்தம் காண், உடையான் ஆறு.

9.022   9 st/nd Thirumurai   Song # 8   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
செய்ய கோடுடன் கமலமலர் சூழ்தரு
   தில்லை மாமறை யோர்கள் தாந்தொழ
வையம் உய்யநின்று மகிழ்ந்தாடு
   சிற்றம் பலவன்
செய்யவாயின் முறுவலும் திகழும் திருக்காதும்
   காதினின் மாத்திரைகளோ(டு)
ஐய தோடும் அன்றே
   அடியேனை ஆட்கொண் டனவே.
பல், காது முதலியன
10.412   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்
கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
துய்ய முடியும் அவயவத் தோற்றமே.

10.516   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
செய்யன் கரியன் வெளியன் பசியனென்
றெய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
ஐயனற் கண்ணல் லடுகரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.

10.721   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
செய்யு மளவில் திருநான் முகூர்த்தமே
எய்யுங் கலைகாலம் இந்து பருதிகால்
நையு மிடத்தோடில் நன்காம நூல்நெறி
செய்க வலம்இடம் தீர்ந்து விடுக்கவே.

11.009   11 st/nd Thirumurai   Song # 78   நக்கீரதேவ நாயனார்   கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி  
செய்ய சடைமுடிஎன் செல்வனையான் கண்டெனது
கையறவும் உள்மெலிவும் யான்காட்டப் - பையவே
காரேறு பூஞ்சோலைக் காளத்தி யாள்வார்தம்
போரேறே இத்தெருவே போது.

11.022   11 st/nd Thirumurai   Song # 85   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ்
செய்யான் பழனத்தான் மூவுலகும் செய்யாமுன்
நாட்டூணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சே
நாட்டூணாய் நின்றானை நாம்.

11.026   11 st/nd Thirumurai   Song # 17   பட்டினத்துப் பிள்ளையார்   கோயில் நான்மணிமாலை  
செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்கென்
தையல் வளைகொடுத்தல் சாலுமே ஐயன்தேர்
சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே
தாயே நமதுகையில் சங்கு.

12.070   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
செய்ய ஒண்சடை கரந்ததோர் திருமுடிச் சிகையும்
சைவ வெண்திரு நீற்றுமுண் டகத்தொளித் தழைப்பும்
மெய்யின் வெண்புரி நூலுடன் விளங்குமான் தோலும்
கையின் மன்னிய பவித்திர மரகதக் கதிரும்.
12.210   12 st/nd Thirumurai   Song # 224   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
செய்யமா மணியொளிசூழ் திருமுன்றின்
முன்தேவா சிரியன் சார்ந்து
கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாலும் ஆரூ ராரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருக்கக்
காய்கவர்ந்த கள்வ னேன்என்
றெய்தரிய கையறவாந் திருப்பதிகம்
அருள்செய்தங் கிருந்தார் அன்றே.
12.210   12 st/nd Thirumurai   Song # 294   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
செய்ய சடையார் பழையாறை
எய்த அதனில் செல்பொழுதின்
மையல் அமணர் மறைத்தவட
தளியின் மன்னுஞ் சிவனாரைக்
கைகள் கூப்பித் தொழுதருளக்
கண்ட வாற்றால் அமணர்கள்தம்
பொய்கொள் விமானம் எனக்கேட்டுப்
பொறாத உள்ளம் மிகப்புழுங்கி.
12.210   12 st/nd Thirumurai   Song # 317   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
செய்ய ஐயர் திருவோத்தூர்
ஏத்திப் போந்து செழும்புவனம்
உய்ய நஞ்சுண் டருளும்அவர்
உறையும் பதிகள் பலவணங்கித்
தையல் தழுவக் குழைந்தபிரான்
தங்குந் தெய்வப் பதியென்று
வையம் முழுதும் தொழுதேத்தும்
மதில்சூழ் காஞ்சி மருங்கணைந்தார்.

12.280   12 st/nd Thirumurai   Song # 166   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்ய சடையார்
திருவேட் களஞ்சென்று
கைதொழுது சொற்பதிகம்
பாடிக் கழுமலக்கோன்
வைகி அருளுமிடம்
அங்காக மன்றாடும்
ஐயன் திருக்கூத்துக்
கும்பிட் டணைவுறுநாள்.
12.280   12 st/nd Thirumurai   Song # 221   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்ய பொன்புனை வெண்தர
ளத்தணி சிறக்கச்
சைவ மாமறைத் தலைவர்பால்
பெறுந்தனிக் காளம்
வையம் ஏழுடன் மறைகளும்
நிறைதவத் தோரும்
உய்ய ஞானசம் பந்தன்வந்
தான்என ஊத.
12.280   12 st/nd Thirumurai   Song # 707   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்ய மேனியர் திருமக
னார்உறை மடத்தில்
நையும் உள்ளத்த ராய்அமண்
கையர்தாம் நணுகிக்
கையி னால்எரி இடவுடன்
படும்எல்லி கரப்ப
வெய்ய வன்குண கடலிடை
எழுந்தனன் மீது.
12.280   12 st/nd Thirumurai   Song # 785   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்ய தாமரை அகவித
ழினும்மிகச் சிவந்த
கையி லேட்டினைக் கைதவன்
பேரவை காண
வெய்ய தீயினில் வெற்றரை
யவர்சிந்தை வேவ
வையம் உய்ந்திட வந்தவர்
மகிழ்ந்துமுன் னிட்டார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 53   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்ய சடையார் திருப்பனையூர்ப்
புறத்துத் திருக்கூத் தொடுங்காட்சி
எய்த அருள எதிர்சென்றங்
கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி
ஐயர் தம்மை அரங்காட
வல்லார் அவரே யழகியரென்
றுய்ய வுலகு பெறும்பதிகம்
பாடி யருள்பெற் றுடன்போந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 75   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செய்ய சடையார் திருவானைக்
காவி லணைந்து திருத்தொண்டர்
எய்த முன்வந் தெதிர்கொள்ள
இறைஞ்சிக் கோயி லுள்புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக்கீழ்
ஆர்வம் பெருக வீழ்ந்தெழுந்து
மெய்யு முகிழ்ப்பக் கண்பொழிநீர்
வெள்ளம் பரப்ப விம்முவார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 84   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
செய்ய மேனிக் கருங்குஞ்சிச்
செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம்
உய்ய அமுது செய்யாதே
ஒளித்த தெங்கே யெனத்தேடி
மையல் கொண்டு புறத்தணைய
மறைந்த அவர்தாம் மலைபயந்த
தைய லோடுஞ் சரவணத்துத்
தனய ரோடுந் தாமணைவார்.
12.400   12 st/nd Thirumurai   Song # 1   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
செய்யுள்நிகழ் சொல்தெளிவும்
செவ்வியநூல் பலநோக்கும்
மெய்யுணர்வின் பயனிதுவே
எனத்துணிந்து விளங்கியொளிர்
மையணியுங் கண்டத்தார்
மலரடிக்கே ஆளானார்
பொய்யடிமை யில்லாத புலவர்எனப் புகழ்மிக்கார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF