சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் செம்மை
செம்மைமுன்     செம்மையால்     செம்மை     செம்மைபெற     செம்மைசேர்    
4.078   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன், தேவ தேவன்,
வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி
அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு
இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே!

8.151   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை,
மும்மை மலம் அறுவித்து, முதல் ஆய முதல்வன் தான்
நம்மையும் ஓர் பொருள் ஆக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கு அருளிய ஆறு, ஆர் பெறுவார்? அச்சோவே!

10.821   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிதல்போல்
அம்மெய்ப் பரத்தோ(டு) அணுவன் உள்ளாயிடப்
பொய்ம்மைச் சகம்உண்ட போத வெறும் பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.

12.010   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
செம்மையால் தணிந்த சிந்தைத்
தெய்வவே தியர்க ளானார்
மும்மைஆ யிரவர் தாங்கள்
போற்றிட முதல்வ னாரை
இம்மையே பெற்று வாழ்வார்
இனிப்பெறும் பேறொன் றில்லார்
தம்மையே தமக்கொப் பான
நிலைமையால் தலைமை சார்ந்தார்.
12.200   12 st/nd Thirumurai   Song # 2   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
செம்மை வெண்ணீற் றொருமையினார்
இரண்டு பிறப்பின் சிறப்பினார்
மும்மைத் தழலோம் பியநெறியார்
நான்கு வேதம் முறைபயின்றார்
தம்மை ஐந்து புலனும்பின் செல்லுந்
தகையார் அறுதொழிலின்
மெய்ம்மை யொழுக்கம் ஏழுலகும்
போற்றும் மறையோர் விளங்குவது.
12.280   12 st/nd Thirumurai   Song # 76   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்மைபெற எடுத்ததிருத்
தோடுடைய செவியன்எனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம்
பிரமபுரம் மேவினார்
தம்மையடை யாளங்க
ளுடன்சாற்றித் தாதையார்க்
கெம்மையிது செய்தபிரான்
இவனன்றே எனவிசைத்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 67   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்மை மறையோர் திருக்கலைய
நல்லூ ரிறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெறவிறைஞ்சி
முன்பு பரவித் தொழுதெழுவார்
கொம்மை மருவு குரும்பைமுலை
யுமையாள் என்னுந் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவுமிகச்
சிறப்பித் திசையின் விளம்பினார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 314   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்மை நெறிசேர் திருநாவ
லூரர் ஒற்றி யூர்சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார்
தம்மைக் குலவு மணம்புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம்அவர்பால்
விட்டார் வந்து கட்டுரைப்பத்
தம்மை யறியா வெகுளியினால்
தரியா நெஞ்சி னொடுந்தளர்வார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 400   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
செம்மைசேர் சிந்தை மாந்தர்
சென்றெதிர் கொண்டு போற்ற
நம்மையா ளுடைய நம்பி
நகைமுகம் அவர்க்கு நல்கி
மெய்ம்மையாம் விருப்பி னோடும்
மேவியுட் புகுந்து மிக்க
மொய்ம்மலர்த் தவிசின் மீது
முகம்மலர்ந் திருந்த போது.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88