சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் சிந்தை
சிந்தை     சிந்தையி     சிந்தையில்     சிந்தைய     சிந்தையைத்     சிந்தையால்     சிந்தையிற்     சிந்தையும்     சிந்தையுள்    
1.110   1 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிந்தை இல் சமணொடு தேரர் சொன்ன
புந்தி இல் உரை அவை பொருள் கொளாதே,
அந்தணர் ஓத்தினொடு அரவம் ஓவா,
எந்தைதன் வள நகர் இடைமருதே.

2.033   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிந்தை திருகல் சமணர், தேரர், தவம் என்னும்
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர்
மந்த முழவம் தரு விழாஒலியும், வேதச்
சந்தம் விரவி, பொழில் முழங்கிய நள்ளாறே.

2.060   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
சிந்தை இடையார், தலையின் மிசையார், செஞ்சொல்லார்,
வந்து மாலை வைகும்போழ்து என் மனத்து உள்ளார்,
மைந்தர், மணாளர் என்ன, மகிழ்வார் ஊர்போலும்
பைந் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.

4.023   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சிந்தையைத் திகைப் பியாதே செறிவு உடை அடிமை செய்ய,
எந்தை! நீ அருளிச் செய்யாய்! யாது நான் செய்வது? என்னே!
செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும் கொல்லோ!

4.048   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சிந்தையும் தெளிவும் ஆகி, தெளிவினுள் சிவமும் ஆகி,
வந்த நன் பயனும் ஆகி, வாணுதல் பாகம் ஆகி,
மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென் கரை மேல் மன்னி
அந்த மோடு அளவு இலாத அடிகள்-ஆப்பாடியாரே.

5.027   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்;
பொந்து வார் புலால் வெண்தலைக் கையினன்;
முந்தி வாயது ஓர் மூஇலைவேல் பிடித்து
அந்தி வாயது ஓர் பாம்பர்-ஐயாறரே.

5.028   5 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய், முழுநீறு அணி
சந்தி வண்ணத்தராய், தழல் போல்வது ஓர்
அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.

5.028   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சிந்தை வண்ணமும், தீயது ஓர் வண்ணமும்,
அந்திப் போது அழகு ஆகிய வண்ணமும்,
பந்திக் காலனைப் பாய்ந்தது ஓர் வண்ணமும்,
அந்திவண்ணமும், ஆவர்-ஐயாறரே.

5.048   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சிந்தையுள் சிவம் ஆய் நின்ற செம்மையோடு
அந்திஆய், அனல் ஆய், புனல், வானம் ஆய்,
புந்திஆய், புகுந்து உள்ளம் நிறைந்த எம்
எந்தை ஏகம்பம் ஏத்தித் தொழுமினே!

6.005   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
சிந்தை ஆய் நின்ற சிவனே, போற்றி!
சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய், போற்றி!
புந்தி ஆய்ப் புண்டரிகத்து உள்ளாய், போற்றி!
புண்ணியனே, போற்றி! புனிதா, போற்றி!
சந்திஆய் நின்ற சதுரா, போற்றி!
தத்துவனே, போற்றி! என் தாதாய், போற்றி!
அந்தி ஆய் நின்ற அரனே, போற்றி!
அலை கெடில வீரட்டத்து ஆள்வாய், போற்றி!.

8.105.08   8 st/nd Thirumurai   Song # 79   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
சிந்தை செய்கை கேள்வி வாக்கு சீரில் ஐம் புலன்களால்
முந்தை ஆன காலம் நின்னை எய்தி டாத மூர்க்கனேன்
வெந்தையா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன்
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற் றிருப்பனே.

10.407   10 st/nd Thirumurai   Song # 14   திருமூலர்   திருமந்திரம்  
சிந்தையி னுள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் மாயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமும் ஆதியும் ஆம்வன்னத் தாளே.

10.408   10 st/nd Thirumurai   Song # 47   திருமூலர்   திருமந்திரம்  
சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்தி லேவைத்து
நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதிசெய் வீரே.

10.413   10 st/nd Thirumurai   Song # 52   திருமூலர்   திருமந்திரம்  
சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தாய் கரங்கள் இருமூன்றும் உள்ளன
பந்தமா சூலம் படைபாசம் வில்அம்பு
முந்தை (கீலீம்)எழ முன்னிருந் தாளே.

10.817   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
சிந்தையி னுள்ளுள(து) எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லா னாயின்
எந்தையை யானும் அறியகி லேனே.

10.921   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
சிந்தைய தென்னச் சிவன்என்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.

11.034   11 st/nd Thirumurai   Song # 85   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
சிந்தையைத் தேனைத் திருவா
வடுதுறை யுள்திகழும்
எந்தையைப் பாட லிசைத்துத்
தொலையா நிதியமெய்தித்
தந்தையைத் தீத்தொழில் மூட்டிய
கோன்சரண் சார்விலரேல்
நிந்தையைப் பெற்(று)ஒழி யாதிரந்
தேகரம் நீட்டுவரே.

12.070   12 st/nd Thirumurai   Song # 3   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
சிந்தை செய்வது சிவன்கழல் அல்லதொன் றில்லார்
அந்தி வண்ணர்தம் அடியவர்க் கமுதுசெய் வித்துக்
கந்தை கீளுடை கோவணங் கருத்தறிந் துதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும்பயன் கொள் வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 270   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சிந்தை இடையறா அன்பும்
திருமேனி தன்னில் அசைவும்
கந்தை மிகையாம் கருத்தும்
கையுழ வாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும்
வடிவிற் பொலிதிரு நீறும்
அந்தமி லாத்திரு வேடத்
தரசும் எதிர்வந் தணைய.
12.280   12 st/nd Thirumurai   Song # 452   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சிந்தையால் அளவுபடா இசைப்பெருமை
செயலளவில் எய்து மோநீர்
இந்தயா ழினைக்கொண்டே இறைவர்திருப்
பதிகஇசை இதனில் எய்த
வந்தவா றேபாடி வாசிப்பீர்
எனக்கொடுப்பப் புகலி மன்னர்
தந்தயா ழினைத்தொழுது கைக்கொண்டு
பெரும்பாணர் தலைமேற் கொண்டார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 694   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சிந்தையிற் களிப்பு மிக்குத்
திருக்கழு மலத்தார் வேந்தன்
வந்தவா றெம்மை யாள
எனவரு மகிழ்ச்சி யோடும்
கொந்தலர் குழலார் போதக்
குலச்சிறை யார்அங் கெய்த
இந்தநன் மாற்றம் எல்லாம்
அவர்க்குரைத் திருந்த பின்னர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1063   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சிந்தை வெந்துயர் உறுசிவ
நேசருந் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில்
வையகத் துள்ளோர்
இந்த வெவ்விடம் ஒழிப்பவர்க்கு
ஈகுவன்என் னுடைய
அந்த மில்நிதிக் குவையெனப்
பறையறை வித்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 391   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
சிந்தையால் வாக்கால் அன்பர்
திருந்தடி போற்றி செய்ய
எந்தமை யாளும் ஏயர்
காவலர் தம்பால் ஈசர்
வந்துனை வருத்துஞ் சூலை
வன்தொண்டன் தீர்க்கி லன்றி
முந்துற வொழியா தென்று
மொழிந்தருள் செய்யக் கேட்டு.
12.360   12 st/nd Thirumurai   Song # 75   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
சிந்தை கலங்கிச் சிறுத்தொண்டர்
மனையா ரோடுந் திகைத்தயரச்
சந்த னத்தா ரெனுந்தாதி
யார்தாம் அந்தத் தலையிறைச்சி
வந்த தொண்டர் அமுதுசெயும்
பொழுது நினைக்க வருமென்றே
முந்த வமைத்தேன் கறியமுதென்று
எடுத்துக் கொடுக்க முகமலர்ந்தார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 20   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
சிந்தை மகிழும் சேரலனார்
திருவா ரூரர் எனும்இவர்கள்
தந்தம் அணிமே னிகள்வேறாம்
எனினும் ஒன்றாந் தன்மையராய்
முந்த எழுங்கா தலின்தொழுது
முயங்கி உதியர் முதல்வேந்தர்
எந்தை பெருமான் திருவாரூர்ச்
செல்வம் வினவி யின்புற்றார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88