![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கொடி
கொடி
கொடிஆறு
கொடிய
கொடிமேல்
கொடியேர்
கொடியும்
கொடிறு
கொடிக்குல
கொடித்தே
கொடிநீடு
கொடிமாடம்
கொடிநிரைத்த
கொடி,
கொடிகள்
கொடித்தேர்
கொடியைக்
1.017
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொடி ஆர் நெடுமாடக் குன்றளூரின் கரைக் கோல
இடி ஆர் கடல் அடி வீழ்தரும் இடும்பாவனத்து இறையை,
அடி ஆயும் அந்தணர் காழியுள் அணி ஞானசம்பந்தன்
படியால் சொன்ன பாடல் சொல, பறையும், வினைதானே.
2.027
2 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொடி கொள் ஏற்றினர், கூற்று உதைத்தவர்,
பொடி கொள் மேனியில் பூண்ட பாம்பினர்,
அடிகள், இந்திரநீலப்பர்ப்பதம்
உடைய வாணர், உகந்த கொள்கையே!
3.012
3 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொடி உயர் மால்விடை ஊர்தியினான் திருக்கோட்டாற்றுள்
அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை,
கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல்-
படி, இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை, பாவமே.
3.032
3 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொடி நெடுமாளிகை, கோபுரம், குளிர்மதி
வடிவு உற அமைதர, மருவிய ஏடகத்து
அடிகளை அடி பணிந்து அரற்றுமின், அன்பினால்!
இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே.
3.044
3 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொடி கொள் ஏற்றினர்; கூற்றை உதைத்தனர்
பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர்;
கடி கொள் பூம்பொழில் சூழ் கழிப்பாலையுள
அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே?
3.103
3 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கொடி உடை மும்மதில் ஊடு உருவக் குனி வெஞ்சிலை தாங்கி
இடிபட எய்த அமரர்பிரான், அடியார் இசைந்து ஏத்தத்
துடி இடையாளை ஒர்பாகம் ஆகத் துதைந்தார், இடம்போலும்
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன்நகரே.
4.102
4 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடி, கொள் விதானம், கவரி, பறை, சங்கம், கைவிளக்கோடு,
இடிவு இல் பெருஞ் செல்வம் எய்துவர்; எய்தியும் ஊனம் இல்லா
அடிகளும் ஆரூர் அகத்தினர் ஆயினும், அம் தவளப்-
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும், நந்தி புறப்படினே.
5.032
5 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடி கொள் செல்வ விழாக் குணலை அறாக்
கடி கொள் பூம்பொழில் கச்சி ஏகம்பனார்,
பொடிகள் பூசிய பூந்துருத்தி(ந்) நகர்
அடிகள், சேவடிக்கீழ் நாம் இருப்பதே!
6.013
6 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடி மாட நீள் தெருவு கூடல், கோட்டூர், கொடுங்கோளூர், தண் வளவி கண்டியூரும்,
நடம் ஆடும் நல் மருகல், வைகி; நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக;
படு மாலை வண்டு அறையும் பழனம், பாசூர், பழையாறும், பாற்குளமும், கைவிட்டு, இந் நாள்
பொடி ஏறும் மேனியராய்ப் பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!
6.017
6 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடி ஆர் இடபத்தர்; கூத்தும் ஆடி, குளிர்
கொன்றை மேல் வைப்பர்; கோலம் ஆர்ந்த
பொடி ஆரும் மேனியர்; பூதிப் பையர்;
புலித்தோலர்; பொங்கு அரவர்; பூண நூலர்;
அடியார் குடி ஆவர்; அந்தணாளர் ஆகுதியின்
மந்திரத்தார்; அமரர் போற்ற
இடி ஆர் களிற்று உரியர்-எவரும் போற்ற
இடைமருது மேவி இடம் கொண்டாரே.
6.062
6 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
கொடி ஏயும் வெள் ஏற்றாய்! கூளி பாட, குறள் பூதம் கூத்து ஆட, நீயும் ஆடி,
வடிவு ஏயும் மங்கை தனை வைத்த மைந்தா! மதில் ஆனைக்கா உளாய்! மாகாளத்தாய்!
படி ஏயும் கடல் இலங்கைக் கோமான் தன்னைப் பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த
அடியே வந்து, அடைந்து, அடிமை ஆகப் பெற்றால், அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.
7.009
7 st/nd Thirumurai
Song # 4
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கொடி உடை மும்மதில் வெந்து அழிய, குன்றம் வில்லா, நாணியின் கோல் ஒன்றி(ன்)னால்
இடிபட எய்து எரித்தீர், இமைக்கும் அளவில்; உமக்கு ஆர் எதிர்? எம்பெருமான்!
கடி படு ங்கணையான், கருப்புச் சிலைக் காமனை, வேவக் கடைக் கண்ணி(ன்)னால்
பொடி பட நோக்கியது என்னை கொல்லோ? பொழில் ஆர் திருப்புத்தூர்ப் புனிதனீரே!
7.010
7 st/nd Thirumurai
Song # 3
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கொடிகள் இடைக் குயில் கூவும் இடம்; மயில் ஆலும்(ம்) இடம்; மழுவாள் உடைய
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறைக்கண்டன் இடம்; பிறைத்துண்டம் முடிச்
செடி கொள் வினைப்பகை தீரும் இடம்; திரு ஆரும் இடம்; திரு மார்பு-அகலத்து
அடிகள் இடம்(ம்); அழல் வண்ணன் இடம் கலிக் கச்சி அனேகதங்காவதமே.
8.216
8 st/nd Thirumurai
Song # 23
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
கொடித்தேர் மறவர் குழாம்வெங்
கரிநிரை கூடினென்கை
வடித்தே ரிலங்கெஃகின் வாய்க்குத
வாமன்னு மம்பலத்தோன்
அடித்தே ரலரென்ன அஞ்சுவன்
நின்ஐய ரென்னின்மன்னுங்
கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ்
விண்தோய் கனவரையே.
9.028
9 st/nd Thirumurai
Song # 7
சேதிராயர்
திருவிசைப்பா
கொடியைக் கோமளச் சாதியைச் கொம்பிளம்
பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம்
இடியச் செஞ்சிலை கால்வளைத் தீர்என்று
முடியும் நீர்செய்த மூச்சறவே.
10.404
10 st/nd Thirumurai
Song # 26
திருமூலர்
திருமந்திரம்
கொடிஆறு சென்று குலாவிய குண்டம்
அடிஇரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏ ழுலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.
10.408
10 st/nd Thirumurai
Song # 43
திருமூலர்
திருமந்திரம்
கொடிய திரேகை குருவுள் ளிருப்பப்
படிவது வாருணைப் பைங்கழல் ஈசன்
வடிவது ஆனந்தம் வந்து முறையே
இடுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே.
11.006
11 st/nd Thirumurai
Song # 20
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
கொடிமேல் இடபமுங் கோவணக்
கீளுமோர் கொக்கிறகும்
அடிமேற் கழலும் அகலத்தின்
நீறும்ஐ வாய்அரவும்
முடிமேல் மதியும் முருகலர்
கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவுமென் கண்ணுள்எப்
போதும் வருகின்றவே.
11.007
11 st/nd Thirumurai
Song # 14
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
கொடியேர் நுடங்கிடையாள் கொய்தாரான் பின்னே
அடியால் நடந்தடைந்தாள் ஆவாக - பொடியாக
நண்ணார்ஊர் மூன்றெரித்த நாகஞ்சேர் திண்சிலையான்
தண்ணாரூர் சூழ்ந்த தடம்.
11.008
11 st/nd Thirumurai
Song # 57
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்
வடிவுடைய தொங்கலுஞ் சூழக் கடிகமழும்
11.021
11 st/nd Thirumurai
Song # 28
கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை
கொடிறு முரித்தனன் கூறாளன் நல்லன் குருகினஞ்சென்
றிடறுங் கழனிப் பழனத் தரசை எழிலிமையோர்
படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவைநஞ்சம்
மிடறு தடுத்தது வும்மடி யேங்கள் விதிவசமே.
11.021
11 st/nd Thirumurai
Song # 34
கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை
கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்ட கோளரவம்
பிடிக்கில அம்முடிப் பூணலை யத்தொடு மால்விடையின்
இடிக்குரல் கேட்டிடி என்றிறு கக்கடி வாளெயிற்றால்
கடிக்க லுறுமஞ்சி நஞ்சம் இருந்தநின் கண்டத்தையே.
11.034
11 st/nd Thirumurai
Song # 88
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
கொடித்தே ரவுணர் குழாமன
லூட்டிய குன்றவில்லி
அடித்தேர் கருத்தி னருகா
சனியை யணியிழையார்
முடித்தேர் கமலர் கவர்வான்,
முரிபுரு வச்சிலையால்
வடித்தேர் நயனக் கணையிணை
கோத்து வளைத்தனரே.
11.038
11 st/nd Thirumurai
Song # 53
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
கொடிநீடு விடையுடைய
பெருமானை அடிபரவு
குணமேதை கவுணியர்கள்
குலதீப சுபசரிதன்
அடியேன திடர்முழுதும்
அறவீசு தமிழ்விரகன்
அணியான புகலிநகர்
அணையான கனைகடலின்
முடிநீடு பெருவலைகொ
டலையூடு புகுவன்நுமர்
முறையேவு பணிபுரிவன்
அணிதோணி புனைவனவை
படியாரும் நிகரரிய
வரியாரும் மதர்நயனி
பணைவார்மென் முலைநுளையர்
மடமாதுன் அருள்பெறினே. 34
12.210
12 st/nd Thirumurai
Song # 407
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
கொடிமாடம் நிலவுதிருப்
பூவணத்துக் கோயிலினுள்
நெடியானுக் கறிவரியார்
நேர்தோன்றக் கண்டிறைஞ்சி
வடிவேறு திரிசூலத்
தாண்டகத்தால் வழுத்திப்போய்ப்
பொடிநீடு திருமேனிப்
புனிதர்பதி பிறபணிவார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 987
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
கொடிநிரைத்த வீதியில்
கோலவே திகைப்புறங்
கடி கொள்மாலை மொய்த்தபந்தர்
கந்தநீர்த் தசும்புடன்
மடிவில்பொன் விளக்கெடுத்து
மாதர்மைந்தர் மல்குவார்
படிவிளக்கும் அன்பரும்பரந்த
பண்பில் ஈண்டுவார்.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF