சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கைம்
கைம்     கைம்மையி     கைம்மான்     கைம்மாவின்தோல்     கைம்மா    
1.014   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர,
கொய்ம் மா மலர்ச் சோலை புக மண்டும் கொடுங்குன்றம்
அம்மான்! என உள்கித் தொழுவார்கட்கு அருள் செய்யும்
பெம்மான் அவன், இமையோர் தொழ, மேவும் பெரு நகரே.

1.098   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்,
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி,
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா! நீ
பைம்முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே?

2.044   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கைம்மாவின்தோல் போர்த்த காபாலி, வான் உலகில்
மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடி,
அம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம்
பெம்மான்! என்று ஏத்தாதார் பேயரின் பேயரே.

6.024   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்; கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான் காண்;
அம்மான்காண்; ஆடு அரவு ஒன்று ஆட்டினான்காண்; அனல் ஆடிகாண்; அயில்வாய்ச்சூலத்தான்காண்;
எம்மான்காண்; ஏழ் உலகும் ஆயினான்காண்; எரிசுடரோன்காண்; இலங்கும் மழுவாளன்காண்;
செம் மானத்து ஒளி அன்ன மேனியான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

6.046   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கைம் மான மதகளிற்றை உரித்தான் தன்னை, கடல் வரை வான் ஆகாசம் ஆனான் தன்னை,
செம் மானப் பவளத்தை, திகழும் முத்தை, திங்களை, ஞாயிற்றை, தீ ஆனானை,
எம்மானை, என் மனமே கோயில் ஆக இருந்தானை, என்பு உருகும் அடியார் தங்கள்
அம்மானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே   அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

7.047   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி,
மைம் மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச் சிங்கடி-
தம்மான்-ஊரன், சடையன் சிறுவன், அடியன்-தமிழ் மாலை
செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.

11.034   11 st/nd Thirumurai   Song # 18   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
கைம்மையி னால்நின் கழல்பர
வாது,கண் டார்க்(கு)இவனோர்
வன்மைய னேயென்னும் வண்ணம்
நடித்து, விழுப்பொருளோ(டு)
இம்மையில் யானெய்து மின்பங்
கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி
யோ!சொல்லு சம்பந்தனே.

12.280   12 st/nd Thirumurai   Song # 167   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கைம்மான் மறியார்
கழிப்பாலை யுள்ளணைந்து
மெய்ம்மாலைச் சொற்பதிகம்
பாடிவிரைக் கொன்றைச்
செம்மாலை வேணித்
திருவுச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட்
டருந்தமிழும் பாடினார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D