சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கை
கைம்     கை     கையது,     கைவிட்டு     கைவிட்டி     கைப்பட்ட     கையவை     கைவிட     கைகலந்தானைக்     கைவண்டும்     கைக்கும்     கையா     கைச்செல்வ     கைம்மையி     கைப்பாணி     கைதொழுவார்     கைதவத்தால்     கையின்மான்     கைகள்     கைக     கையினிற்     கைக்கடா     கைத்தலத்     கையினைத்     கைவா     கைச்சிலை     கைதொழுது     கையுந்     கையார்ந்த     கையில்     கையதனால்     கைம்மான்     கைதொழு     கைகளுந்     கைக்கொண்டு     கையால்     கைம்மாவின்தோல்     கையினில்     கையது     கைப்     கைகாள்,     கையராய்க்     கைத்தலை     கையினோடு     கைப்பற்றித்     கைத்தலங்கள்     கைம்மா     கைஆர்     கைக்குவான்    
1.014   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கைம் மா மத கரியின் இனம் இடியின் குரல் அதிர,
கொய்ம் மா மலர்ச் சோலை புக மண்டும் கொடுங்குன்றம்
அம்மான்! என உள்கித் தொழுவார்கட்கு அருள் செய்யும்
பெம்மான் அவன், இமையோர் தொழ, மேவும் பெரு நகரே.

1.047   1 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும், போய்,
மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னே
கை அடைந்த களைகள் ஆகச் செங்கழுநீர் மலர்கள்
செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே?

1.098   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்,
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி,
வெம் முக வேழத்து ஈர் உரி போர்த்த விகிர்தா! நீ
பைம்முக நாகம் மதி உடன் வைத்தல் பழி அன்றே?

1.117   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கையது, வெண்குழை காதது, சூலம்; அமணர் புத்தர்,
எய்துவர், தம்மை, அடியவர், எய்தார்; ஓர் ஏனக்கொம்பு,
மெய் திகழ் கோவணம், பூண்பது, உடுப்பது; மேதகைய
கொய்து அலர் பூம்பொழில் கொச்சையுள் மேவிய கொற்றவரே.

2.006   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையால்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் அல;
மை கொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல்
வாழ்த்தவே.
ஐயம் தேர்ந்து அளிப்பானும் ஐயாறு உடை ஐயனே.

2.007   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கை இலங்கு மறி ஏந்துவர், காந்தள் அம்மெல்விரல்
தையல் பாகம் உடையார், அடையார் புரம் செற்றவர்,
செய்யமேனிக் கரிய மிடற்றார் திரு வாஞ்சியத்து
ஐயர்; பாதம் அடைவார்க்கு அடையா, அருநோய்களே

2.044   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கைம்மாவின்தோல் போர்த்த காபாலி, வான் உலகில்
மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடி,
அம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம்
பெம்மான்! என்று ஏத்தாதார் பேயரின் பேயரே.

2.053   2 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கை அரிவையர் மெல்விரல்(ல்) அவை காட்டி, அம்மலர்க்காந்தள், அம் குறி
பை அராவிரியும் புறவு ஆர்பனங்காட்டூர்,
மெய் அரிவை ஓர்பாகம் ஆகவும் மேவினாய்! கழல் ஏத்தி நாள்தொறும்
பொய் இலா அடிமை புரிந்தார்க்கு அருளாயே!

2.060   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்கண்
மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார்
நெய் ஆடுதல் அஞ்சு உடையார், நிலாவும் ஊர்போலும்
பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே.

2.063   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கை ஆர் சோறு கவர் குண்டர்களும், துவருண்ட
மெய் ஆர் போர்வை மண்டையர், சொல்லு மெய் அல்ல;
பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில்
ஐயா! என்பார்க்கு, ஐயுறவு இன்றி அழகு ஆமே.

2.072   2 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கையில் மழு ஏந்தி, காலில் சிலம்பு அணிந்து, கரித்தோல்கொண்டு
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும் மிடைந்து வானோர்,
ஐய! அரனே! பெருமான்! அருள் என்று என்று ஆதரிக்க,
செய்யகமலம் மொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே.

2.078   2 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கை இலங்கிய வேலினார், தோலினார், கரி காலினார்,
பை இலங்கு அரவு அல்குலான் பாகம் ஆகிய பரமனார்,
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார்,
மெய் இலங்கு வெண் நீற்றினார், மேயது விள நகர் அதே.

2.083   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கையினில் உண்டு மேனி உதிர் மாசர் குண்டர், இடு சீவரத்தின் உடையார்,
மெய் உரையாத வண்ணம் விளையாட வல்ல விகிர்தத்து உருக் கொள் விமலன்
பை உடை நாக வாயில் எயிறு ஆர மிக்க குரவம் பயின்று மலர,
செய்யினில் நீலம் மொட்டு விரியக் கமழ்ந்து மணம் நாறு கொச்சைவயமே.

2.092   2 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையினால்
தம்
மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் என
விரும்பேல்!
செய்யில் வாளைகளோடு செங்கயல் குதிகொளும் புகலூர்,
மை கொள் கண்டத்து எம்பெருமான்
வர்த்தமானீச்சுரத்தாரே.

3.003   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கையினில் உண்பவர், கணிகநோன்பர்,
செய்வன தவம் அலாச் செதுமதியார்,
பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத
மெய்யவர் அடி தொழ விரும்பினனே!
வியந்தாய், வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி
உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்கு உடன் இருந்தவனே!

3.004   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கையது வீழினும், கழிவு உறினும்,
செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன்;-
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மை அணி மிடறு உடை மறையவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே!

3.053   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும்,
மெய்யைப் போர்க்கும் பொய்யரும், வேதநெறியை அறிகிலார்
தையல் பாகம் ஆயினான், தழல் அது உருவத்தான், எங்கள்
ஐயன், மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்மினே!

3.055   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கை ஆர் வெண்மழுவா! கனல் போல்-திருமேனியனே!
மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே!
செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும்
ஐயா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

3.071   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கை இருபதோடு மெய் கலங்கிட, விலங்கலை எடுத்த கடியோன்
ஐ-இருசிரங்களை ஒருங்கு உடன் நெரித்த அழகன் தன் இடம் ஆம்
கையின் மலர் கொண்டு, நல காலையொடு மாலை, கருதி, பலவிதம்
வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும், எழில் வைகாவிலே.

3.093   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கையில் மான் மழுவினர், கடுவிடம் உண்ட எம் காளகண்டர்
செய்ய மா மேனியர், ஊன் அமர் உடைதலைப் பலி திரிவார்
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ, நடம் அது ஆடும்
ஐயன், மா தேவியோடு இருப்பு இடம் அம்பர்மாகாளம் தானே.

3.106   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கை அமரும் மழு, நாகம், வீணை, கலைமான் மறி, ஏந்தி;
மெய் அமரும் பொடிப் பூசி; வீசும் குழை ஆர்தரு தோடும்
பை அமரும்(ம்) அரவு ஆட, ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம்
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே.

4.007   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கைப் போது மலர் தூவி, காதலித்து, வானோர்கள்
முப்போதும் முடி சாய்த்து, தொழ நின்ற முதல்வனை;
அப்போடு மலர் தூவி, ஐம்புலனும் அகத்து அடக்கி,
எப்போதும் இனியானை:-என் மனத்தே வைத்தேனே!

4.009   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கைகாள், கூப்பித் தொழீர்!-கடி மா மலர் தூவி நின்று,
பைவாய்ப் பாம்பு அரை ஆர்த்த பரமனை-கைகாள், கூப்பித் தொழீர்!

4.058   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கையராய்க் கபாலம் ஏந்தி, காமனைக் கண்ணால் காய்ந்து
மெய்யராய், மேனி தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி,
உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து
பை அரா அரையில் ஆர்த்து, பருப்பதம் நோக்கினாரே.

4.090   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கையது, கால் எரி நாகம், கனல்விடு சூலம் அது;
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரிசடை விண்ணவர் கோன்,
செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதி குடி
ஐயனை, ஆரா அமுதினை, நாம் அடைந்து ஆடுதுமே.

4.090   4 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கைத்தலை மான் மறி ஏந்திய கையன்; கனல் மழுவன்;
பொய்த்தலை ஏந்தி, நல் பூதி அணிந்து பலி திரிவான்;
செய்த்தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதி குடி
அத்தனை; ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.

4.101   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு,
உய்யும் நெறி கண்டு, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
ஐயன், அணி வயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

5.036   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கை கொள் சூலத்தர், கட்டுவாங்கத்தினர்,
மை கொள் கண்டத்தர் ஆகி இருசுடர்
செய்யமேனி வெண் நீற்றர்-செம்பொன்பள்ளி
ஐயர்; கையது, ஓர் ஐந்தலைநாகமே.

5.075   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கை அனைத்தும் கலந்து எழு காவிரி,
செய் அனைத்திலும் சென்றிடும், செம் புனல்
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே.

5.079   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கையினோடு கால் கட்டி, உமர் எலாம்,
ஐயன் வீடினன் என்பதன் முன்னம், நீர்,
பொய் இலா அரன், புள்ளிருக்குவேளூர்,
மை உலாவிய கண்டனை, வாழ்த்துமே!

5.096   5 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கைப்பற்றித் திருமால் பிரமன்(ன்) உனை
எய்ப் பற்றி(ய்) அறிதற்கு அரியாய்! அருள்
அப் பற்று அல்லது, மற்று அடிநாயினேன்
எப்பற்றும்(ம்) இலன்; எந்தைபிரானிரே!

6.009   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கை ஓர் கபாலத்தர்;மானின் தோலர்;கருத்து
 உடையர்;நிருத்தராய்க் காண்பார் முன்னே;
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி, திகழ்
புன்சடை முடிமேல்-திங்கள் சூடி,
மெய் ஒருபாகத்து உமையை வைத்து, மேவார்
 திரிபுரங்கள் வேவச் செய்து(வ்),
ஐயனார் போகின்றார்;வந்து காணீர்-அழகியரே,
  ஆமாத்தூர் ஐயனாரே!.

6.011   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கை எலாம் நெய் பாய, கழுத்தே கிட்ட, கால் நிமிர்த்து, நின்று உண்ணும் கையர் சொன்ன
பொய் எலாம் மெய் என்று கருதிப் புக்குப் புள்ளுவரால் அகப்படாது உய்யப் போந்தேன்;
செய் எலாம் செழுங் கமலப் பழன வேலித் திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை,
நெய்தல் வாய்ப் புனல் படப்பை நீடூரானை, -நீதனேன் என்னே நான் நினையா ஆறே!.

6.023   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கை கிளரும் வீணை வலவன் கண்டாய்; காபாலி கண்டாய்; திகழும் சோதி
மெய் கிளரும் ஞான விளக்குக் கண்டாய்; மெய் அடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்;
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய்;   பராபரன் கண்டாய்; பாசூரான் கண்டாய்;
வை கிளரும் கூர்வாள் படையான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

6.024   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்; கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான் காண்;
அம்மான்காண்; ஆடு அரவு ஒன்று ஆட்டினான்காண்; அனல் ஆடிகாண்; அயில்வாய்ச்சூலத்தான்காண்;
எம்மான்காண்; ஏழ் உலகும் ஆயினான்காண்; எரிசுடரோன்காண்; இலங்கும் மழுவாளன்காண்;
செம் மானத்து ஒளி அன்ன மேனியான்காண்-திரு ஆரூரான்காண், என் சிந்தையானே.

6.046   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கைம் மான மதகளிற்றை உரித்தான் தன்னை, கடல் வரை வான் ஆகாசம் ஆனான் தன்னை,
செம் மானப் பவளத்தை, திகழும் முத்தை, திங்களை, ஞாயிற்றை, தீ ஆனானை,
எம்மானை, என் மனமே கோயில் ஆக இருந்தானை, என்பு உருகும் அடியார் தங்கள்
அம்மானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே   அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.

6.049   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கையால் கயிலை எடுத்தான் தன்னைக் கால் விரலால்-தோள் நெரிய ஊன்றினான் காண்;
மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண்;
பொய்யர் மனத்துப் புறம்பு ஆவான் காண்; போர்ப் படையான் காண்; பொருவார் இல்லாதான் காண்;
மை கொள் மணிமிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே.

6.053   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கை வேழ முகத்தவனைப் படைத்தார் போலும்; கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும்;
செய் வேள்வித் தக்கனை முன் சிதைத்தார் போலும்; திசை முகன் தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும்;
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும்; வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும்;
ஐவேள்வி, ஆறு அங்கம், ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

6.059   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும், கரி காட்டில் எரி ஆடும் கடவுளாரும்,
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும், பரவுவார் பாவங்கள் பாற்று வாரும்,
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திருப் புன்கூர் மேவிய செல்வனாரும்,
மெய் எலாம் வெண்நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

6.079   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர் கோமான் கயிலை மலை அது தன்னைக் கருதாது ஓடி,
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும், திருவிரல் ஒன்று அவன் மேல் வைப்ப,
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு, பரிந்து,   அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமத்
தத்துவனை; தலையாலங்காடன் தன்னை; சாராதே சால நாள் போக்கினேனே!.

6.086   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும், கல்லாத   வன்மூடர்க்கு, அல்லாதானை;
பொய் இலாதவர்க்கு என்றும் பொய் இலானை; பூண் நாகம் நாண் ஆகப், பொருப்பு வில்லா,
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்குக் கோலா, கடுந் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!.

7.014   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கையது கபாலம்; காடு உறை வாழ்க்கை; கட்டங்கம் ஏந்திய கையர்;
மெய்யது புரிநூல்; மிளிரும் புன்சடை மேல் வெண்திங்கள் சூடிய விகிர்தர்;
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்;
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வது ஆகில், இவர் அலாது இல்லையோ, பிரானார்?.

7.021   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கை ஆர் வெஞ்சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே,
எய்தாய், மும்மதிலும் எரியுண்ண; எம்பெருமான்!
செய் ஆர் பைங்கமலத் திரு மேற்றளி உறையும்
ஐயா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .

7.036   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கை ஒர் பாம்பு, அரை ஆர்த்த ஒர் பாம்பு, கழுத்து ஒர் பாம்பு, அவை பின்பு தாழ்
மெய் எலாம் பொடிக் கொண்டு பூசுதிர்; வேதம் ஓதுதிர்; கீதமும்
பையவே விடங்கு ஆக நின்று, பைஞ்ஞீலியேன் என்றீர், அடிகள் நீர்;
ஐயம் ஏற்குமிது என் கொலோ? சொலும்! ஆரணீய விடங்கரே!

7.047   7 st/nd Thirumurai   Song # 10   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி,
மைம் மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச் சிங்கடி-
தம்மான்-ஊரன், சடையன் சிறுவன், அடியன்-தமிழ் மாலை
செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.

8.108   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கைஆர் வளை சிலம்பக் காதுஆர் குழை ஆட
மைஆர் குழல் புரழத் தேன் பாய வண்டு ஒலிப்பச்
செய்யானை வெண் நீறு அணிந்தானைச் சேர்ந்து அறியாக்
கையானை எங்கும் செறிந்தானை அன்பர்க்கு
மெய்யானை அல்லாதார்க்கு அல்லாத வேதியனை
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானை!

8.125   8 st/nd Thirumurai   Song # 8   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கையால் தொழுது. உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு,
எய்யாது என் தன் தலை மேல் வைத்து, எம் பெருமான்!', பெருமான்!' என்று,
ஐயா! என் தன் வாயால் அரற்றி, அழல் சேர் மெழுகு ஒப்ப,
ஐயாற்று அரசே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

9.018   9 st/nd Thirumurai   Song # 1   பூந்துருத்தி நம்பி காடநம்பி   திருவிசைப்பா  
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து
   கழுத்திலோர் தனிவடங் கட்டி
முக்கண்நா யகராய்ப் பவனிபோந்(து) இங்ஙன்
   முரிவதோர் முரிவுமை அளவும்
தக்கசீர்க் கங்கை அளவுமன்(று) என்னோ
   தம்மொருப் பாடுல கதன்மேல்
மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி
   விடங்கராய் நடம்குலா வினரே.
10.105   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே. 

10.216   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும்
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிடாத இடிஞ்சிலு மாமே.

10.222   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
வெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
நெய்ப்பட்ட பால்இள நீர்தயிர்தான் நிற்கக்
கைப்பிட்டுண் பான்போன்றும் கன்மிஞா னிக்கொப்பே. 23,

10.410   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
கையவை ஆறும் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்ய ருளத்தில் துலங்குமெய் உற்றத்தாப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

10.733   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள்
எய்தி யவனை இசையினால் ஏத்துமின்
ஐவ ருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே. 34,

10.838   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
கைகலந்தானைக் கருந்தினுள் நந்தியை
மெய்கலந் தான்றன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதானைப் புனிதப்
பொய்யொழிந்த தார்க்கே புகலிட மாமே.

11.008   11 st/nd Thirumurai   Song # 99   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் மொய்கொண்ட

11.020   11 st/nd Thirumurai   Song # 2   கபிலதேவ நாயனார்    மூத்த நாயனார் திருஇரட்டைமணிமாலை  
கைக்கும் பிணியொடு கான் தலைப்படும் ஏல்வையினில்
எய்க்கும் கவலைக் கிடைந்தடைந் தேன்வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த பாய்மத யானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே.

11.022   11 st/nd Thirumurai   Song # 38   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
கையா றவாவெகுளி அச்சங் கழிகாமம்
கையாறு செஞ்சடையான் காப்பென்னும் கையாறு
மற்றிரண்ட தோளானைச் சேர்நெஞ்சே சேரப்போய்
மற்றிரண்ட தோளான் மனை.

11.032   11 st/nd Thirumurai   Song # 70   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
கைச்செல்வ மெய்திட லாமென்று
பின்சென்று கண்குழியல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்
கேயென்றும் பொன்றலில்லா
அச்செல்வ மெய்திட வேண்டுதி
யேல்தில்லை யம்பலத்துள்
இச்செல்வன் பாதங் கருதிரந்
தேனுன்னை யென்னெஞ்சமே.

11.034   11 st/nd Thirumurai   Song # 18   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
கைம்மையி னால்நின் கழல்பர
வாது,கண் டார்க்(கு)இவனோர்
வன்மைய னேயென்னும் வண்ணம்
நடித்து, விழுப்பொருளோ(டு)
இம்மையில் யானெய்து மின்பங்
கருதித் திரிதருமத்
தன்மையி னேற்கும் அருளுதி
யோ!சொல்லு சம்பந்தனே.

11.037   11 st/nd Thirumurai   Song # 82   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டும் தராதலத்துள் எப்பொழுதும்

11.037   11 st/nd Thirumurai   Song # 122   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
கைதொழுவார் நின்று கலைசரிவார் மால் கொண்டு
மெய்தளர்வார் வெள்வளைகள் போய் வீழ்வார் வெய்துயிர்த்துப்

11.038   11 st/nd Thirumurai   Song # 50   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
கைதவத்தால் என்னிடைக்கு
  நீவந்ததறியேனோ கலதிப் பாணா
மெய்தவத்தார் உயிரனைய மிகுசைவசிகாமணியை
   வேணுக் கோனைச்
செய்தவத்தால் விதிவாய்ந்த செழுமுலையார்அவனுடைய
  செம்பொன் திண்டோள்
எய்தவத்தால் விளிவெனக்கென் யாதுக்குநீபலபொய்
  இசைக்கின் றாயே. 31
  பதிக வகை: மதங்கியார் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

12.000   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
கையின்மான் மழுவர் கங்கைசூழ் சடையில்
கதிரிளம் பிறைநறுங் கண்ணி
ஐயர்வீற் றிருக்குந் தன்மையி னாலும்
அளப்பரும் பெருமையி னாலும்
மெய்யொளி தழைக்குந் தூய்மையி னாலும்
வென்றிவெண் குடைஅந பாயன்
செய்யகோல் அபயன் திருமனத் தோங்குந்
திருக்கயி லாயநீள் சிலம்பு.
12.000   12 st/nd Thirumurai   Song # 19   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
கைகள் கூப்பித் தொழுதெழுந் தத்திசை
மெய்யில் ஆனந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐயம் நீங்க வினவுவோ ரந்தணர்.
12.000   12 st/nd Thirumurai   Song # 29   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
கைக ளஞ்சலி கூப்பிக் கலங்கினான்
செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்
மையல் மானுட மாய்மயங் கும்வழி
ஐய னேதடுத் தாண்டருள் செய்என.
12.000   12 st/nd Thirumurai   Song # 315   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
கையினிற் புனைபொற் கோலும் 
காதினில் இலங்கு தோடும்
மெய்யினில் துவளு நூலும்
நெற்றியின் விளங்கு நீறும்
ஐயனுக் கழகி தாமென்
றாயிழை மகளிர் போற்றச்
சைவமெய்த் திருவின் கோலந்
தழைப்பவீ தியினைச் சார்ந்தார்.
12.000   12 st/nd Thirumurai   Song # 317   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
கைக்கடா குரங்கு கோழி
சிவல்கவு தாரி பற்றிப்
பக்கமுன் போது வார்கள்
பயில்மொழி பயிற்றிச் செல்ல
மிக்கபூம் பிடகை கொள்வோர்
விரையடைப் பையோர் சூழ
மைக்கருங் கண்ணி னார்கள்
மறுகநீண் மறுகில் வந்தார்.
12.050   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
கைத்தலத் திருந்த வஞ்சக்
கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று
புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான்முன்
நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப் 
பொருளெனத் தொழுது வென்றார்.
12.080   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கையினைத் துணித்த போது
கடலெனக் கதறி வீழ்ந்து
மைவரை யனைய வேழம்
புரண்டிட மருங்கு வந்த
வெய்யகோல் பாகர் மூவர்
மிசைகொண்டார் இருவ ராக
ஐவரைக் கொன்று நின்றார்
அருவரை அனைய தோளார்.
12.090   12 st/nd Thirumurai   Song # 39   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கைவா ளுடன்பலகை
நீக்கக் கருதியது
செய்யார் நிராயுதரைக்
கொன்றா ரெனுந்தீமை
எய்தாமை வேண்டும்
இவர்க்கென் றிரும்பலகை
நெய்வா ளுடனடர்த்து
நேர்வார்போல் நேர்நின்றார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 108   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
கைச்சிலை விழுந்த தோரார்
 காளையார் மீள இந்தப்
பச்சிலை யோடு பூவும்  
பறித்திட்டு நீரும் வார்த்து
மச்சிது செய்தார் யாரோ  
என்றலும் மருங்கு நின்ற
அச்சிலை நாணன் தானும்
நான் இது அறிந்தேன் என்பான்.
12.180   12 st/nd Thirumurai   Song # 32   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
கைதொழுது நடமாடும்
கழலுன்னி அழல்புக்கார்
எய்தியஅப் பொழுதின்கண்
எரியின்கண் இம்மாயப்
பொய்தகையும் உருவொழித்துப்
புண்ணியமா முனிவடிவாய்
மெய்திகழ்வெண் ணூல்விளங்க
வேணிமுடி கொண்டெழுந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 167   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கையுந் தலைமிசை புனைஅஞ் சலியன
கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யுந் தகையன கரணங் களுமுடன்
உருகும் பரிவின பேறெய்தும்
மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரும்
மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்.
12.210   12 st/nd Thirumurai   Song # 253   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கைகள் குவித்துக் கழல்போற்றிக்
கலந்த அன்பு கரைந்துருக
மெய்யில் வழியுங் கண்ணருவி
விரவப் பரவுஞ் சொல்மாலை
செய்ய சடையார் தமைச்சேரார்
தீங்கு நெறிசேர் கின்றார்என்
றுய்யு நெறித்தாண் டகம்மொழிந்தங்
கொழியாக் காதல் சிறந்தோங்க.
12.210   12 st/nd Thirumurai   Song # 325   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கையார்ந்த திருத்தொண்டு
கழியமிகுங் காதலொடும்
செய்யாநின் றேஎல்லாச்
செந்தமிழ்மா லையும்பாடி
மையார்ந்த மிடற்றர்திரு
மயானத்தை வலங்கொண்டு
மெய்யார்வ முறத்தொழுது
விருப்பினொடு மேவுநாள்.
12.210   12 st/nd Thirumurai   Song # 358   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கைக ளும்மணி பந்த சைந்துற
வேக ரைந்து சிதைந்தபின்
மெய்க லந்தெழு சிந்தை அன்பின்
விருப்பு மீமிசை பொங்கிட
மொய்க டுங்கனல் வெம்ப ரற்புகை
மூளு மத்த முயங்கியே
மைகொள் கண்டர்தம் அன்பர் செல்ல
வருந்தி உந்தினர் மார்பினால்.
12.250   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கையினிற் கவர்ந்து சுற்றிக்
கண்ணெரி காந்து கின்ற
பையர வுதறி வீழ்த்துப்
பதைப்புடன் பாந்தள் பற்றும்
வெய்யவே கத்தால் வீழா
முன்னம்வே கத்தால் எய்திக்
கொய்தஇக் குருத்தைச் சென்று
கொடுப்பன்என் றோடி வந்தான்.
12.270   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
கையில் விளங்கு கனலுடையார்
தமக்கு விளக்கு மிகைகாணும்
நெய்யிங் கில்லை விளக்கெரிப்பீ
ராகில் நீரை முகந்தெரித்தல்
செய்யும் என்று திருத்தொண்டர்க்
குரைத்தார் தெளியா தொருபொருளே
பொய்யும் மெய்யு மாம்என்னும்
பொருள்மேல் கொள்ளும் புரைநெறியார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 103   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கையதனால் ஒத்தறுத்துப் பாடுதலும்
கண்டருளிக் கருணை கூர்ந்த
செய்யசடை வானவர்தம் அஞ்செழுத்தும்
எழுதியநற் செம்பொற் றாளம்
ஐயரவர் திருவருளால் எடுத்தபா
டலுக்கிசைந்த அளவால் ஒத்த
வையமெலாம் உய்யவரு மறைச்சிறுவர்
கைத்தலத்து வந்த தன்றே.
12.280   12 st/nd Thirumurai   Song # 167   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கைம்மான் மறியார்
கழிப்பாலை யுள்ளணைந்து
மெய்ம்மாலைச் சொற்பதிகம்
பாடிவிரைக் கொன்றைச்
செம்மாலை வேணித்
திருவுச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட்
டருந்தமிழும் பாடினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 347   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கைதொழு தேத்திப் புறத்தணைந்து
காமர் பதியதன் கட்சிலநாள்
வைகி வணங்கி மகிழ்ந்தணைவார்
மன்னுந் தவத்துறை வானவர்தாள்
எய்தி இறைஞ்சி எழுந்துநின்றே
இன்தமிழ் மாலைகொண் டேத்திப்போந்து
வைதிக மாமணி அம்மருங்கு
மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 865   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கைகளுந் தலைமீ தேறக்
கண்ணில்ஆ னந்த வெள்ளம்
மெய்யெலாம் பொழிய வேத
முதல்வரைப் பணிந்து போற்றி
ஐயனே அடிய னேனை
அஞ்சலென் றருள வல்ல
மெய்யனே என்று வீட
லாலவாய் விளம்ப லுற்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 188   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
கைகள் கூப்பி முன்னணைவார்
கம்பை யாறு பெருகிவர
ஐயர் தமக்கு மிகஅஞ்சி
ஆரத் தழுவிக் கொண்டிருந்த
மையு லாவுங் கருநெடுங்கண்
மலையா ளென்றும் வழிபடுபூஞ்
செய்ய கமலச் சேவடிக்கீழ்த்
திருந்து காத லுடன் வீழ்ந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 172   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
கைக்கொண்டு கொடுபோம்அக்
கைவினைஞர் தமையேவி
மைக்கொண்ட மிடற்றாரை
வணங்கிப்போய்க் கொங்ககன்று
மெய்க்கொண்ட காதலினால்
விரைந்தேகி மென்கரும்பும்
செய்க்கொண்ட சாலியுஞ்சூழ்
திருவாரூர் சென்றணைந்தார்.
12.440   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
கையால் அவர்தம் அடிபிடிக்கக்
காதல் மனையார் முன்பேவல்
செய்யா தகன்ற தமர்போலும்
என்று தேரும் பொழுதுமலர்
மொய்யார் வாசக் கரகநீர்
வார்க்க முட்ட முதல்தொண்டர்
மையார் கூந்தல் மனையாரைப்
பார்த்து மனத்துட் கருதுவார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%95%E0%AF%88