![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் காது
காது
காதுப்பொ
காதுக்
1.002
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காது இலங்கு குழையன், இழை சேர் திருமார்பன், ஒருபாகம்
மாது இலங்கு திருமேனியினான், கருமானின் உரி ஆடை
மீது இலங்க அணிந்தான், இமையோர் தொழ, மேவும் இடம் சோலைப்
போதில் அங்கு நசையால் வரிவண்டு இசை பாடும் புகலூரே.
1.030
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காது ஆர் கன பொன் குழை தோடு அது இலங்க,
தாது ஆர் மலர் தண் சடை ஏற முடித்து,
நாதான் உறையும் இடம் ஆவது நாளும்
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே.
2.057
2 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காது அமரும் வெண்குழையீர்! கறுத்த அரக்கன் மலை
எடுப்ப,
மாது அமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டு
உகந்தீர்!
தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திரு நல்லூர்,
மாது அமரும் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.
3.113
3 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
காது அமரத் திகழ் தோடினனே; கானவனாய்க் கடிது ஓடினனே;
பாதம் அதால் கூற்று உதைத்தனனே; பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே;
தாது அவிழ் கொன்றை தரித்தனனே; சார்ந்த வினை அது அரித்தனனே
போதம் அமரும் உரைப் பொருளே, புகலி அமர்ந்த
பரம்பொரு
6.002
6 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
காது ஆர் குழையினர்; கட்டங்கத்தர்; கயிலாயமாமலையார்; காரோணத்தார்;
மூதாயர் மூதாதை இல்லார் போலும்; முதலும் இறுதியும் தாமே போலும்;
மாது ஆய மாதர் மகிழ, அன்று, வன் மத வேள் தன் உடலம் காய்ந்தார்-இந்நாள்
போது ஆர் சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.
6.052
6 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
காது இசைந்த சங்கக் குழையினான் காண்; கனகமலை அனைய காட்சியான் காண்;
மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண்; வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண்;
ஆதியன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்; ஐந்தலை மாநாகம் நாண் ஆக்கினான் காண்;
வேதியன் காண்; வேதவிதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.
7.065
7 st/nd Thirumurai
Song # 6
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
காது பொத்தர் ஐக் கின்னரர், உழுவை, கடிக்கும் பன்னகம், பிடிப்ப(அ)ரும் சீயம்,
கோது இல் மா தவர் குழு உடன், கேட்பக் கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர;
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு, நின் இணை அடி அடைந்தேன்-
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே! .
8.107
8 st/nd Thirumurai
Song # 14
மாணிக்க வாசகர்
திருவாசகம்
காது ஆர் குழை ஆட, பைம் பூண் கலன் ஆட,
கோதை குழல் ஆட, வண்டின் குழாம் ஆட,
சீதப் புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி,
வேதப் பொருள் பாடி, அப் பொருள் ஆமா பாடி,
சோதி திறம் பாடி, சூழ் கொன்றைத் தார் பாடி,
ஆதி திறம் பாடி, அந்தம் ஆமா பாடி,
பேதித்து நம்மை, வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி, ஆடு' ஏல் ஓர் எம்பாவாய்!
10.502
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்
தோதுந் திருமேனி உட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே.
11.008
11 st/nd Thirumurai
Song # 105
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித்
தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து மாதராள்
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81