சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கல்
கல்லால்     கல்வியாளர்,     கல்     கல்-நவிலும்     கல்லா     கல்வி     கல்லாத     கல்லொளி     கல்லைப்     கல்லாக்     கல்லின்புறந்     கல்லாலே     கல்லால்நிழல்     கல்லின்     கல்-நெடுமால்     கல்லிலோதம்     கல்லவடம்,     கல்லினால்     கல்-துணை     கல்மனவீர்!     கல்-நெடுங்காலம்     கல்லினோடு     கல்லலகு     கல்லாலின்     கல்பொலி     கல்லாதார்     கல்வாய்     கல்லேன்     கல்-தானும்     கல்லாடத்துக்     கல்லாத,    
1.011   1 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல்லால் நிழல் கீழாய்! இடர் காவாய்! என வானோர்
எல்லாம் ஒரு தேர் ஆய், அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப,
வல்லாய் எரி காற்று ஈர்க்கு, அரி கோல், வாசுகி நாண், கல்
வில்லால், எயில் எய்தான் இடம் வீழிமிழலையே.

1.029   1 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல்வியாளர், கனகம் அழல் மேனி
புல்கு கங்கை புரி புன் சடையான் ஊர்,
மல்கு திங்கள் பொழில் சூழ், நறையூரில்
செல்வர் சித்தீச்சுரம் சென்று அடை நெஞ்சே!

1.031   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல் ஆர் மதில் காழியுள் ஞானசம்பந்தன்
கொல் ஆர் மழு ஏந்தி குரங்கணில் முட்டம்
சொல் ஆர் தமிழ் மாலை செவிக்கு இனிது ஆக
வல்லார்க்கு எளிது ஆம், பிறவா வகை வீடே.

1.040   1 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல் உயர் மாக்கடல் நின்று முழங்கும் கரை பொரு காழி அ மூர்
நல் உயர் நால்மறை நாவின் நல் தமிழ் ஞானசம்பந்தன்
வல் உயர் சூலமும் வெண்மழுவாளும் வல்லவன் வாழ்கொளிபுத்தூர்,
சொல்லிய பாடல்கள் வல்லார் துயர் கெடுதல் எளிது ஆமே.

1.046   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல் ஆர் வரை அரக்கன் தடந்தோள் கவின் வாட,
ஒல்லை அடர்த்து, அவனுக்கு அருள்செய்து, அதிகையுள்,
பல் ஆர் பகுவாய நகு வெண்தலை சூடி,
வில்லால் எயில் எய்தான் ஆடும், வீரட்டானத்தே.

1.062   1 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல்-நவிலும் மால்வரையான், கார் திகழும் மாமிடற்றான்,
சொல்-நவிலும் மாமறையான், தோத்திரம் செய் வாயின் உளான்,
மின் நவிலும் செஞ்சடையான்; வெண்பொடியான், அம் கையினில்
கொல்-நவிலும் சூலத்தான்-கோளிலி எம்பெருமானே.

1.085   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா! என்று
எல்லாமொழியாலும் இமையோர் தொழுது ஏத்த,
வில்லால் அரண்மூன்றும் வெந்து விழ எய்த
நல்லான்; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.

1.117   1 st/nd Thirumurai   Song # 12   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல் உயர் இஞ்சிக் கழுமலம் மேய கடவுள் தன்னை
நல் உரை ஞானசம்பந்தன் ஞானத்தமிழ் நன்கு உணரச்
சொல்லிடல் கேட்டல் வல்லோர், தொல்லை வானவர் தங்களொடும்
செல்குவர்; சீர் அருளால் பெறல் ஆம் சிவலோகம் அதே.

2.024   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல்லால்நிழல் மேயவனே! கரும்பின்
வில்லான் எழில் வேவ, விழித்தவனே!
நல்லார் தொழும் நாகேச்சுரநகரில்
செல்வா! என, வல்வினை தேய்ந்து அறுமே.

2.042   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல் நெடிய குன்று எடுத்தான் தோள் அடரக் கால் ஊன்றி,
இன் அருளால் ஆட்கொண்ட எம்பெருமான் தொல்
கோயில்
பொன் அடிக்கே நாள்தோறும் பூவோடு நீர் சுமக்கும்
தன் அடியார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே.

2.046   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல்லால் நிழல் மேவி, காமுறு சீர் நால்வர்க்கு, அன்று,
எல்லா அறன் உரையும் இன் அருளால் சொல்லினான்
நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தைச்
சொல்லாதவர் எல்லாம் சொல்லாதார். தொல் நெறிக்கே

2.056   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல்லின் மணி மாடக் கழுமலத்தார் காவலவன்
2.072   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழிக் கவுணி சீர் ஆர்
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல்,
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர், இம் மண்ணின்மேலே.

3.007   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல்-நெடுமால் வரைக்கீழ் அரக்கன்(ன்) இடர் கண்டானும்,
வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு
பொன் நெடுங்கோல் கொடுத்தானும் தண் புகலி(ந்)நகர்,
அன்னம் அன்ன(ந்) நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே!

3.009   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல்லின் நன்பாவை ஓர் பாகத்தார், காதலித்து ஏத்திய
மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார்;
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து, எழு ஞாயிற்றின்
பல் அனைத்தும் தகர்த்தார், அடியார் பாவநாசரே.

3.040   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல்லால் நீழல் அல்லாத் தேவை
நல்லார் பேணார்; அல்லோம், நாமே.

3.040   3 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன்;
சொல்லாதாரோடு அல்லோம், நாமே.

3.042   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே.

3.076   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல் பொலி சுரத்தின் எரி கானின் இடை மாநடம் அது ஆடி, மடவார்
இல் பலி கொளப் புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவிமேல்
மல் பொலி கலிக் கடல் மலைக்குவடு எனத் திரை கொழித்த மணியை
வில் பொலி நுதல், கொடி இடை, கனிகைமார் கவரும் வேதவனமே.

3.079   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல்லவடம், மொந்தை, குழல், தாளம், மலி கொக்கரையர்;
அக்கு அரைமிசை
பல்ல பட நாகம் விரி கோவணவர்; ஆளும் நகர் என்பர் அயலே
நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக,
கொல்ல விட நோய் அகல்தர, புகல் கொடுத்து அருளு கோகரணமே.

3.104   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல் வளர் ஆடையர், கையில் உண்ணும் கழுக்கள், இழுக்கு ஆன
சொல் வளம் ஆக நினைக்க வேண்டா; சுடு நீறு அது ஆடி,
நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம்போலும்
பல் வளர் முல்லை அம் கொல்லை வேலிப் பரிதி(ந்) நியமமே.

3.106   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து, வளையாதார்
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான், இடர் நீங்க
மல் இயலும் திரள்தோள் எம் ஆதி, வலஞ்சுழி மா நகரே
புல்கிய வேந்தனைப் புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே.

3.121   3 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல் இசை பூணக் கலை ஒலி ஓவாக் கழுமல முதுபதி தன்னில்
நல் இசையாளன், புல் இசை கேளா நல்-தமிழ் ஞானசம்பந்தன்,
பல் இசை பகுவாய்ப் படுதலை ஏந்தி மேவிய பந்தணைநல்லூர்
சொல் இசைப்பாடல் பத்தும் வல்லவர் மேல், தொல்வினை சூழகிலாவே.

3.125   3 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
கல் ஊர்ப் பெரு மணம் வேண்டா கழுமலம்
பல் ஊர்ப் பெரு மணம் பாட்டு மெய் ஆய்த்தில?
சொல் ஊர்ப் பெரு மணம் சூடலரே! தொண்டர்
நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே!

4.041   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே
எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும்!
பல் இல் வெண்தலை கை ஏந்திப் பல் இலம் திரியும் செல்வர்
சொல்லும் நன்பொருளும் ஆவார்-திருச் சோற்றுத் துறையனாரே.

4.049   4 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கிய(ன்)னார்
நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார்
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடிக்
கொல்லி ஆம் பண் உகந்தார்-குறுக்கை வீரட்டனாரே.

4.066   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கல்-துணை வில் அது ஆகக் கடி அரண் செற்றார் போலும்;
பொன்துணைப் பாதர் போலும்; புலி அதள் உடையார் போலும்;
சொல்-துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம்
நல்-துணை ஆவர் போலும்-நாக ஈச்சுரவனாரே.

4.081   4 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கல்மனவீர்! கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே?
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன் மலையில் வெள்ளிக் குன்று அது போலப் பொலிந்து இலங்கி,
என் மனமே ஒன்றிப் புக்கனன்; போந்த சுவடு இல்லையே!

4.113   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கல்-நெடுங்காலம் வெதும்பி, கருங்கடல் நீர் சுருங்கி,
பல்-நெடுங்காலம் மழைதான் மறுக்கினும், பஞ்சம் உண்டு என்று
என்னொடும் சூள் அறும்-அஞ்சல்!-நெஞ்சே! இமையாத முக்கண்
பொன்நெடுங்குன்றம் ஒன்று உண்டுகண்டீர், இப் புகல் இடத்தே.

5.072   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர் புக நூக்க, என் வாக்கினால்,
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி, உய்ந்தேன் அன்றே!

5.076   5 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கல்வி ஞானக்கலைப் பொருள் ஆயவன்,
செல்வம் மல்கு திருக்கானூர் ஈசனை,
எல்லியும் பகலும்(ம்) இசைவு ஆனவா
சொல்லிடீர், நும் துயரங்கள் தீரவே!

6.009   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கல்லலகு தாம் கொண்டு, காளத்தி(ய்)யார், கடிய
  விடை ஏறி, காணக்காண
இல்லமே தாம் புகுதா, இடுமின், பிச்சை!
  என்றாருக்கு எதிர் எழுந்தேன்;எங்கும் காணேன்;
சொல்லாதே போகின்றீர்;உம் ஊர் ஏது?
  துருத்தி? பழனமோ? நெய்த்தான(ம்)மோ?
அல்லலே செய்து அடிகள் போகின்றார்,
 தாம்-அழகியரே, ஆமாத்தூர் ஐயனாரே!.

6.010   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார்;
காரோணம் காதலார்; காதல்செய்து
நல்லூரார்; ஞானத்தார்; ஞானம் ஆனார்;
  நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்;
மல் ஊர் மணி மலையின்மேல் இருந்து, வாள்
  அரக்கர்கோன் தலையை மாளச் செற்று,
பல் ஊர் பலி திரிவார்; பைங்கண் ஏற்றார்; பலி
ஏற்றார்-பந்தணைநல்லூராரே.

6.018   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும்
கவின்  மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று
சொல் ஆகச் சொல்லியவா தோன்றும் தோன்றும்; 
சூழ் அரவும், மான்மறியும், தோன்றும் தோன்றும்;
அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும்; 
ஐவகையால் நினைவார் பால் அமர்ந்து தோன்றும்;
பொல்லாத புலால் எலும்பு பூண் ஆய்த் தோன்றும்
பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.

6.052   6 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கல்பொலி தோள் சலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக்கு அருள்செய்த கருணையான் காண்;
வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண்; வேடுவனாய்ப் போர் பொருது காட்டினான் காண்;
தற்பரம் ஆய் நற்பரம் ஆய் நிற்கின்றான் காண்; சதாசிவன் காண்; தன் ஒப்பார் இல்லாதான் காண்;
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.

6.084   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள் தன்னை; கற்றார்கள் உற்று ஓரும் காதலானை;
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ, அன்று, பொரு சரம் தொட்டானை;
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க, நிறை   தவத்தை அடியேற்கு நிறைவித்து, என்றும்
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

6.094   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
கல் ஆகி, களறு ஆகி, கானும் மாகி, காவிரி ஆய், கால் ஆறு ஆய், கழியும் மாகி,
புல் ஆகி, புதல் ஆகி, பூடும் மாகி, புரம் ஆகி, புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி,
சொல் ஆகி, சொல்லுக்கு ஓர் பொருளும் மாகி, சுலாவு ஆகி, சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி,
நெல் ஆகி, நிலன் ஆகி, நீரும் மாகி, நெடுஞ்சுடர் ஆய்   நிமிர்ந்து, அடிகள் நின்ற வாறே!.

7.003   7 st/nd Thirumurai   Song # 1   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கல்வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிவவின் கரை மேல்
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும், நில வெண்மதி சூடிய, நின்மலனே!
நல் வாய் இல்செய்தார், நடந்தார், உடுத்தார், நரைத்தார், இறந்தார் என்று நானிலத்தில்
சொல் ஆய்க் கழிகின்றது அறிந்து, அடியேன் தொடர்ந்தேன்; உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே! .

7.015   7 st/nd Thirumurai   Song # 4   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கல்லேன் அல்லேன், நின் புகழ்; அடிமை கல்லாதே பல கற்றேன்;
நில்லேன் அல்லேன், நின் வழி; நின்றார்-தம்முடை நீதியை நினைய
வல்லேன் அல்லேன்; பொன் அடி பரவ-மாட்டேன்; மறுமையை நினைய,
நல்லேன் அல்லேன், நான் உமக்கு அல்லால்; நாட்டியத்தான் குடி நம்பீ!.

7.090   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
கல்-தானும் குழையும் ஆறு அன்றியே, கருதுமா கருத கிற்றார்க்கு,
எற்றாலும் குறைவு இல்லை என்பர்காண்; உள்ளமே! நம்மை நாளும்-
செற்று ஆட்டித் தருமனார் தமர் செக்கில் இடும்போது-தடுத்து ஆட்கொள்வான்,
பெற்றேறி,(ப்) புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே!

8.102   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கல்லாடத்துக் கலந்து, இனிது அருளி,
நல்லாளோடு நயப்புறவு எய்தியும்;
பஞ்சப்பள்ளியில் பால்மொழி தன்னொடும்,
எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும்;
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்

8.108   8 st/nd Thirumurai   Song # 5   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கல்லா மனத்துக் | கடைப்பட்ட |நாயேனை,
வல்லாளன், தென்னன், |பெருந்துறையான், | பிச்சு ஏற்றி,
கல்லைப் பிசைந்து | கனி ஆக்கி, |தன் கருணை
வெள்ளத்து அழுத்தி, | வினை கடிந்த | வேதியனை,
தில்லை நகர் புக்கு,| சிற்றம்பலம் |மன்னும்
ஒல்லை விடையானை |பாடுதும் காண்; | அம்மானாய்!

8.111   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கல் நார் | உரித்து என்ன, | என்னையும் | தன் கருணையினால்
பொன் ஆர் | கழல் பணித்து, | ஆண்ட பிரான் | புகழ் பாடி,
மின் நேர் | நுடங்கு இடை, | செம் துவர் வாய், | வெள் நகையீர்!
தென்னா, தென்னா | என்று தெள்ளேணம் | கொட்டாமோ!

8.115   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கல் போலும் நெஞ்சம் கசிந்து உருக, கருணையினால்
நிற்பானைப் போல, என் நெஞ்சின் உள்ளே புகுந்தருளி,
நல் பால் படுத்து என்னை, நாடு அறியத் தான் இங்ஙன்,
சொல் பாலது ஆனவா தோள் நோக்கம் ஆடாமோ!

8.131   8 st/nd Thirumurai   Song # 4   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
கல்லாத, புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை,
வல்லாளன் ஆய் வந்து, வனப்பு எய்தி இருக்கும்வண்ணம்,
பல்லோரும் காண, என்தன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே!

10.116   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர்
கல்லா அரசனிற் காலன் மிகநல்லன்
கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லென்பான்
நல்லாரைக் காலன் நணுகிநில் லானே.

10.123   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
கல்வி யுடையார் கழிந்தோடிப் போகின்றார்
பல்லி யுடையார் பரம்பரிந் துண்கின்றார்
எல்லியுங் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமு மாமே. 

10.125   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே. 

10.125   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 25   திருமூலர்   திருமந்திரம்  
கல்லொளி யேஎன நின்ற வடதிசைக்
கல்லொளி யேஎன நின்றநல் லிந்திரன்
கல்லொளி யேஎன நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேஎனக் காட்டிநின் றானே.

10.824   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
கல்லொளி மாநிறம் சோபைக் கதிர்தட்டல்
நல்ல மணிஒன்றில் நாடில்ஒண் முப்பதம்
சொல்லறு பாழில் சொல்லறு பேர்உரைத்(து)
அல்லறு முத்திராந் தத்தனு பூதியே.

11.010   11 st/nd Thirumurai   Song # 28   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக்
கொல்லை எழுந்த கொழும்புறவின் முல்லை அங்கண்
பல்லரும்ப மொய்த்தீனும் ஈங்கோயே மூவெயிலும்
கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.

11.010   11 st/nd Thirumurai   Song # 29   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட
எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி வல்லே
இருந்துகிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே மேனிப்
பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு.

12.150   12 st/nd Thirumurai   Song # 21   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
கல்லின்புறந் தேய்த்த முழங்கை
கலுழ்ந்து சோரி
செல்லும்பரப் பெங்கணும் என்பு
திறந்து மூளை
புல்லும்படி கண்டு பொறுத்திலர்
தம்பி ரானார்
அல்லின்கண் எழுந்த துவந்தருள்
செய்த வாக்கு.
12.340   12 st/nd Thirumurai   Song # 13   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
கல்லாலே யெறிந்ததுவு
மன்பான படிகாணில்
வில்வேடர் செருப்படியும்
திருமுடியின் மேவிற்றால்
நல்லார்மற் றவர்செய்கை
யன்பாலே நயந்ததனை
அல்லா தார் கல்லென்பா
ரரனார்க்கஃ தலராமால்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D