![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் கண்
கண்
கண்ணு
கண்ணின்
கண்ணன்,
கண்ணுத
கண்ணனுங்
கண்டேன்
கண்ணுதல்
கண்டிருந்
கண்டுகண்
கண்ணாக்கு
கண்ணில்
கண்ணன்
கண்டனுங்
கண்டெழுந்
கண்ட
கண்ணுடை
கண்டெண்
கண்டிடு
கண்டிடும்
கண்டுகொள்
கண்டஇச்
கண்டங்கள்
கண்டுகொண்
கண்காணி
கண்டகன
கண்டறி
கண்டார்க்
கண்டெந்தை
கண்ணாரக்
கண்களங்
கண்டங்
கண்ணார்
கண்ணாடி
கண்ணென்னும்
கண்டால்
கண்டுகேட்
கண்அவனை
கண்ணும்
கண்கொண்
கண்ணிடந்த
கண்ணி
கண்டம்
கண்டிறந்து
கண்ணென்றும்
கண்கள்
கண்களெண்
கண்ணிடை
கண்டதோர்
கண்கொள்ளாக்
கண்டனர்
கண்டுசென்
கண்டவர்
கண்டபொழு
கண்டத்திடை
கண்டபின்
கண்ணீலக்
கண்மலர்
கண்கட்டி
கண்டார்கள்
கண்டு
கண்மலர்கள்
கண்டியூர்
கண்ணாரும்
கண்டெதிர்
கண்ண
கண்டஅப்
கண்ணார்ந்த
கண்ணினுக்
கண்ணுதலார்
கண்டவர்கள்
கண்துயில்
கண்ணுதலிற்
கண்டருளும்
கண்டசடைச்
கண்டார்
கண்ணனும்,
கண்காள்,
கண்டகங்காள்!
கண்டவா
கண்டராய்,
கண்ணனும்
கண்ணினால்
கண்டியில்
கண்டம்தான்
கண்டி
கண்ணவனாய்
கண்டமும்
கண்ணுதலான்,
கண்டது
கண்ணப்பன்
கண்கடம்
கண்ணுழை
கண்பனி
கண்ணியல்
Search limited to first 100
Search limited to first 100
1.003
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் நிறைந்த விழியின் அழலால் வரு காமன் உயிர் வீட்டி,
பெண் நிறைந்த ஒருபால் மகிழ்வு எய்திய பெம்மான் உறை கோயில்
மண் நிறைந்த புகழ் கொண்டு அடியார்கள் வணங்கும் வலிதாயத்து
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த, நம் உண்மைக் கதி ஆமே.
1.032
1 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் ஆர் கமழ் காழியுள் ஞானசம்பந்தன்
எண் ஆர் புகழ் எந்தை இடைமருதின்மேல்
பண்ணோடு இசை பாடிய பத்தும் வல்லார்கள்
விண்ணோர் உலகத்தினில் வீற்றிருப்பாரே.
1.047
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில் வெண்மழுவும்
பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னே
எண்ணும் மூன்று கனலும் ஓம்பி, எழுமையும் விழுமியர் ஆய்,
திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே?
1.067
1 st/nd Thirumurai
Song # 2
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் மேல் கண்ணும், சடைமேல் பிறையும், உடையார்; காலனைப்
புண் ஆர் உதிரம் எதிர் ஆறு ஓடப் பொன்றப் புறம்தாளால்
எண்ணாது உதைத்த எந்தை பெருமான்-இமவான் மகளோடும்,
பண் ஆர் களி வண்டு அறை பூஞ்சோலைப் பழன நகராரே.
1.067
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் தான் கழுவா முன்னே ஓடிக் கலவைக் கஞ்சியை
உண்டு ஆங்கு அவர்கள் உரைக்கும் சிறு சொல் ஓரார், பாராட்ட,
வண் தாமரை இன்மலர் மேல் நறவம் அது வாய் மிக உண்டு,
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே.
1.070
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் கொள் நுதலார், கறை கொள் மிடற்றார், கரியின் உரி-தோலார்,
விண் கொள் மதி சேர் சடையார், விடை ஆர் கொடியார், வெண் நீறு
பெண் கொள் திருமார்பு அதனில் பூசும் பெம்மான், எமை ஆள்வார்
எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே.
1.082
1 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக,
பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில்
மண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும்
விண்ணில் புயல் காட்டும் வீழி மிழலையே.
1.088
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்ணன், கடிக் கமல மலர் மேல் இனிது உறையும்
அண்ணற்கு அளப்பு அரிது ஆய் நின்று, அங்கு அடியார்மேல்
எண் இல் வினை களைவான், எழில் ஆப்பனூரானைப்
பண்ணின் இசை பகர்வார் வினை பற்று அறுப்பாரே.
1.103
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் நுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை,
நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை,
பண் இயல்பால் பாடிய பத்தும் இவை வல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.
1.108
1 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் அமர் நெற்றியினான், கமழ் கொன்றைச் சடைதன்மேல் நன்றும்
விண் இயல் மா மதியும் உடன் வைத்தவன், விரும்பும்
பெண் அமர் மேனியினான், பெருங்காடு அரங்கு ஆக ஆடும்
பண் இயல் பாடலினான், உறை கோயில் பாதாளே.
2.005
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்ணன் வண்ண மலரானொடும் கூடியோர்க்கு ஐயம் ஆய்
எண்ணும் வண்ணம், அறியாமை எழுந்தது ஓர் ஆர் அழல்
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம்
நண்ணும் வண்ணம் உடையார் வினைஆயின நாசமே.
2.016
2 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்த
தண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை,
மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரி,
பண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.
2.017
2 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்ணன், கடிமாமலரில் திகழும்
அண்ணல், இருவர் அறியா இறை ஊர்
வண்ணச் சுதை மாளிகைமேல் கொடிகள்
விண்ணில் திகழும் வேணுபுரமே.
2.040
2 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் நுதலான், வெண் நீற்றான், கமழ் சடையான், விடை >ஏறி,
பெண் இதம் ஆம் உருவத்தான், பிஞ்ஞகன், பேர்பல >உடையான்,
விண் நுதலாத் தோன்றிய சீர்ப் பிரமபுரம் தொழ விரும்பி
எண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே.
2.046
2 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் ஆர் நுதலான், கனல் ஆடு இடம் ஆகப்
பண் ஆர் மறை பாடி ஆடும் பரஞ்சோதி,
நண்ணார் புரம் எய்தான், நாலூர் மயானத்தை
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நன்நெறியே.
2.046
2 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் பாவு வேகத்தால் காமனை முன் காய்ந்து உகந்தான்,
பெண் பாவு பாகத்தான், நாகத்தோல் ஆகத்தான்
நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை
எண் பாவு சிந்தையார்க்கு ஏலா, இடர்தானே.
2.048
2 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,
பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,
பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்,
வெண் காட்டில் உறைவானும் விடை காட்டும் கொடியானே.
2.060
2 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்ணின் அயலே கண் ஒன்று உடையார், கழல் உன்னி
எண்ணும் தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்,
உள் நின்று உருக உவகை தருவார், ஊர்போலும்
பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.
2.062
2 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்டார் நாணும் படியார், கலிங்கம் முடை பட்டை
கொண்டார், சொல்லைக் குறுகார், உயர்ந்த
கொள்கையார்;
பெண்தான் பாகம் உடையார், பெரிய வரை வில்லா
விண்டார் புரம் மூன்று எரித்தார், மீயச்சூராரே.
2.075
2 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலிக் காழியு
அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன்
சொல்,
வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார்,
விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே.
2.097
2 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்கள் காண்பு ஒழிந்து, மேனி கன்றி, ஒன்று அலாத
நோய்
உண்கிலாமை செய்து, நும்மை உய்த்து அழிப்பதன் முனம்
விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுது செய்,
கண்கள் மூன்று உடைய, எம் கருத்தர் காழி சேர்மினே!
2.103
2 st/nd Thirumurai
Song # 6
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் உலாவிய கதிர் ஒளி முடிமிசைக் கனல் விடு சுடர்
நாகம்,
தெண் நிலாவொடு, திலகமும், நகுதலை, திகழ வைத்தவர்
மேய
மண் உலாம் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்
உள் நிலாம் நினைப்பு உடையவர் யாவர், இவ் உலகினில்
உயர்வாரே.
3.007
3 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவே
பண் இசை பாட நின்று ஆடினானும், பரஞ்சோதியும்
புண்ணிய நால்மறையோர்கள் ஏத்தும் புகலி(ந்) நகர்,
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே!
3.014
3 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் புனல் விளை வயல் காழிக் கற்பகம்
நண்பு உணர் அருமறை ஞானசம்பந்தன்
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார்
உண்பின உலகினில், ஓங்கி வாழ்வரே.
3.055
3 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் ஆரும் நுதலாய்! கதிர் சூழ் ஒளி மேனியின்மேல்
எண் ஆர் வெண்பொடி-நீறு அணிவாய்! எழில் ஆர் பொழில் சூழ்
திண் ஆர் வண் புரிசைத் திரு வான்மியூர் உறையும்
அண்ணா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.
3.062
3 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் பொலி நெற்றியினான், திகழ் கையில் ஓர் வெண்மழுவான்,
பெண் புணர் கூறு உடையான், மிகு பீடு உடை மால்விடையான்,
விண் பொலி மா மதி சேர்தரு செஞ்சடை வேதியன், ஊர்
தண் பொழில் சூழ் பனந்தாள் திருத் தாடகையீச்சுரமே.
3.065
3 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் ஆரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும்
பெண் ஆரும் திருமேனிப் பெருமானது அடி வாழ்த்தி,
தண் ஆரும் பொழில் காழித் தமிழ் ஞானசம்பந்தன்
பண் ஆரும் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.
3.073
3 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப, முகம் ஏத்து கமழ் செஞ்சடையினான்,
பண்ணின்மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான்,
மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார்
விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே.
3.109
3 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண்ணனும், நான்முகன், காண்பு அரியார்
வெண் நாவல் விரும்பு மயேந்திரரும்,
கண்ணப்பர்க்கு அருள் செய்த கயிலை எங்கள்
அண்ணல், ஆரூர் ஆதி ஆனைக்காவே.
3.113
3 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
கண் நிகழ் புண்டரிகத்தினனே, கலந்து இரி புண் தரி கத்தினனே,
மண் நிகழும் பரிசு ஏனம் அதே, வானகம் ஏய் வகை சேனம் அதே,
நண்ணி அடிமுடி எய்தலரே; நளிர் மலி சோலையில் எய்து அலரே
பண் இயல் கொச்சை பசுபதியே, பசு மிக ஊர்வர்,
பசுபதியே.
4.009
4 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்காள், காண் மின்களோ!-கடல் நஞ்சு உண்ட கண்டன் தன்னை,
எண்தோள் வீசி நின்று ஆடும் பிரான் தன்னை,-கண்காள், காண்மின்களோ!
4.012
4 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்டகங்காள்! முண்டகங்காள்! கைதைகாள்! நெய்தல்காள
பண்டரங்க வேடத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான்,
வண்டு உலா(அ)ம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர்வண்ணம்
கொண்ட(ந்)நாள் தான் அறிவான், குறிக் கொள்ளா தொழிவானோ?
4.013
4 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் ஆனாய்! மணி ஆனாய்! கருத்து ஆனாய்! அருத்து ஆனாய்!
எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய்!
விண் ஆனாய்! விண் இடையே புரம் எரித்த வேதியனே!
அண் ஆன ஐயாறர்க்கு ஆள் ஆய் நான் உய்ந்தேனே!
4.023
4 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம்
கொண்டிருந்து ஆடிப் பாடிக் கூடுவன், குறிப்பினாலே;
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
எண் திசையோரும் ஏத்த, இறைவ! நீ ஆடும் ஆறே!
4.036
4 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்டராய், முண்டர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி,
தொண்டர்கள் பாடி ஆடித் தொழு கழல் பரமனார்தாம்
விண்டவர் புரங்கள் எய்த வேதியர்; வேத நாவர்
பண்டை என் வினைகள் தீர்ப்பார்-பழனத்து எம் பரமனாரே
4.036
4 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே
எண்ணியும் துதித்தும் ஏத்த, எரி உரு ஆகி நின்று,
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண் உலாம் பாடல் கேட்டார்-பழனத்து எம் பரமனாரே.
4.068
4 st/nd Thirumurai
Song # 3
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்ணினால் காமவேளைக் கனல் எழ விழிப்பர் போலும்;
எண் இலார் புரங்கள் மூன்றும் எரியுணச் சிரிப்பர் போலும்;
பண்ணின் ஆர் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேய
அண்ணலார்-எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே.
4.095
4 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்டியில் பட்ட கழுத்து உடையீர்! கரிகாட்டில் இட்ட
பண்டியில் பட்ட பரிகலத்தீர்! பதிவீழி கொண்டீர்
உண்டியில், பட்டினி, நோயில், உறக்கத்தில்,-உம்மை, ஐவர்
கொண்டியில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
5.005
5 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்டம்தான் கறுத்தான், காலன் ஆர் உயிர்
பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார்,
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டு போகும், நம் மேலைவினைகளே.
5.013
5 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்ணினால் களி கூரக் கையால்-தொழுது
எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன் தனை,-
விண் உளார் தொழும் வீழிமிழலையுள்
அண்ணலே!-அடியேனைக் குறிக்கொளே!
5.066
5 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் பனிக்கும்; கை கூப்பும்; கண் மூன்று உடை
நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும்;
வண் பொன்(ன்)னித் தென் வலஞ்சுழி மேவிய
பண்பன் இப் பொனைச் செய்த பரிசு இதே!
5.070
5 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்ட பேச்சினில் காளையர் தங்கள் பால்
மண்டி ஏச்சுணும் மாதரைச் சேராதே,
சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அக்
கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே!
5.071
5 st/nd Thirumurai
Song # 7
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் பல் உக்க கபாலம் அங்கைக் கொண்டு
உண் பலிக்கு உழல் உத்தமன், உள் ஒளி
வெண்பிறைக்கண்ணியான், விசயமங்கை
நண்பனை, தொழப்பெற்றது நன்மையே.
5.074
5 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் நிறைந்த கன பவளத்திரள்;
விண் நிறைந்த விரி சுடர்ச் சோதியான்;
உள்-நிறைந்து, உருஆய், உயிர் ஆயவன்
எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே.
5.092
5 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்டு கொள்ள(அ) அரியானைக் கனிவித்துப்
பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல்,
கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கைக்-
கொண்ட தொண்டரைத் துன்னிலும் சூழலே!
5.095
5 st/nd Thirumurai
Song # 10
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்டி பூண்டு கபாலம் கைக் கொண்டிலர்;
விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர்;
அண்டமூர்த்தி, அழல்நிற-வண்ணனைக்
கெண்டிக் காணல் உற்றார்-அங்கு இருவரே.
6.010
6 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் அமரும் நெற்றியார்; காட்டார்; நாட்டார்; கன
மழுவாள் கொண்டது ஓர் கையார்; சென்னிப்
பெண் அமரும் சடைமுடியார்; பேர் ஒன்று இல்லார்;
பிறப்பு இலார்; இறப்பு இலார்; பிணி ஒன்று இல்லார்;
மண்ணவரும், வானவரும், மற்றையோரும்,
மறையவரும், வந்து எதிரே வணங்கி ஏத்தப்
பண் அமரும் பாடலார்; பைங்கண் ஏற்றார்; பலி
ஏற்றார்-பந்தணைநல்லூராரே.
6.021
6 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும்; காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்;
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும்; ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்;
எண்ணாயிரம் கோடி பேரார் போலும்; ஏறு ஏறிச் செல்லும் இறைவர் போலும்;
அண்ணாவும், ஆரூரும், மேயார் போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
6.044
6 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண்ணவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே! காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே!
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள் செய்வானே! வேதனாய் வேதம் விரித்திட்டானே!
எண்ணவனே! எண்ணார் புரங்கள் மூன்றும் இமையாமுன் எரி கொளுவ நோக்கி நக்க
திண்ணவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
6.052
6 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் அவன் காண்; கண் ஒளி சேர் காட்சியான் காண்; கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற
பண் அவன் காண்; பண் அவற்றின் திறம் ஆனான் காண்; பழம் ஆகிச் சுவை ஆகிப் பயக்கின்றான் காண்;
மண் அவன் காண்; தீ அவன் காண்; நீர் ஆனான் காண்; வந்து அலைக்கும் மாருதன் காண்; மழை மேகம் சேர்
விண் அவன் காண்; விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே.
6.052
6 st/nd Thirumurai
Song # 6
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் துஞ்சும் கரு நெடுமால் ஆழி வேண்டி, கண் இடந்து, சூட்ட, கண்டு அருளுவான் காண்;
வண்டு உண்ணும் மதுக் கொன்றை, வன்னி, மத்தம், வான்கங்கை, சடைக் கரந்த மாதேவன் காண்;
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண்; பரமன் காண்; பரமேட்டி ஆயினான் காண்;
வெண்திங்கள் அரவொடு செஞ்சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலை யானே.
6.081
6 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்; கல் மதில் சூழ் கந்த மாதனத்தான் கண்டாய்;
மண்தலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய்; மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்;
விண்தலம் சேர் விளக்கு ஒளி ஆய் நின்றான் கண்டாய்; மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்;
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன்
கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
7.024
7 st/nd Thirumurai
Song # 5
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கண் ஆய், ஏழ் உலகும் கருத்து ஆய அருத்தமும் ஆய்,
பண் ஆர் இன் தமிழ் ஆய், பரம் ஆய பரஞ்சுடரே!
மண் ஆர் பூம்பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே!
அண்ணா! நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே? .
7.056
7 st/nd Thirumurai
Song # 9
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கண்டமும் கறுத்திட்ட பிரானை, காணப் பேணுமவர்க்கு எளியானை,
தொண்டரைப் பெரிதும்(ம்) உகப்பானை, துன்பமும் துறந்து இன்பு இனியானை,
பண்டை வல்வினைகள் கெடுப்பானை, பாகம் மாமதி ஆயவன் தன்னை,
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர்க் கேண்மையால் பணியா விடல் ஆமே?
7.089
7 st/nd Thirumurai
Song # 6
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
கண் நுதலான், காமனையும் காய்ந்த திறல்; கங்கை, மலர்,
தெண்நிலவு, செஞ்சடைமேல் தீ மலர்ந்த கொன்றையினான்;
கண்மணியை மறைப்பித்தாய்; இங்கு இருந்தாயோ? என்ன,
ஒண்நுதலி பெருமானார், உளோம்; போகீர்! என்றானே!
8.101
8 st/nd Thirumurai
Song # 5
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்ணுதலான், தன் கருணைக் கண் காட்ட, வந்து எய்தி,
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி;
விண் நிறைந்து, மண் நிறைந்து, மிக்காய், விளங்கு ஒளியாய்!
எண் இறந்து, எல்லை இலாதானே! நின் பெரும் சீர்,
பொல்லா வினையேன், புகழும் ஆறு ஒன்று அறியேன்;
8.106
8 st/nd Thirumurai
Song # 33
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்டது செய்து, கருணை மட்டுப் பருகிக் களித்து,
மிண்டுகின்றேனை விடுதி கண்டாய்? நின் விரை மலர்த் தாள்
பண்டு தந்தால் போல் பணித்து, பணிசெயக் கூவித்து, என்னைக்
கொண்டு, என் எந்தாய், களையாய் களை ஆய குதுகுதுப்பே.
8.110
8 st/nd Thirumurai
Song # 4
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,
என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
8.117
8 st/nd Thirumurai
Song # 2
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர்,
உள் நின்று உருக்குவர்; அன்னே! என்னும்,
உள் நின்று உருக்கி, உலப்பு இலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால்; அன்னே! என்னும்.
8.133
8 st/nd Thirumurai
Song # 9
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண் ஆர் நுதலோய்! கழல் இணைகள் கண்டேன், கண்கள் களி கூர;
எண்ணாது, இரவும் பகலும், நான், அவையே எண்ணும்இது அல்லால்
மண்மேல் யாக்கை விடும் ஆறும், வந்து, உன் கழற்கே புகும் ஆறும்
அண்ணா! எண்ணக் கடவேனோ? அடிமை சால அழகு உடைத்தே!
8.149
8 st/nd Thirumurai
Song # 1
மாணிக்க வாசகர்
திருவாசகம்
கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே
காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே
மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே
பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே
பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே
விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே.
8.216
8 st/nd Thirumurai
Song # 27
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
கண்கடம் மாற்பயன் கொண்டனங்
கண்டினிக் காரிகைநின்
பண்கட மென்மொழி ஆரப்
பருக வருகஇன்னே
விண்கட நாயகன் தில்லையின்
மெல்லியல் பங்கனெங்கோன்
தண்கடம் பைத்தடம் போற்கடுங்
கானகந் தண்ணெனவே.
8.224
8 st/nd Thirumurai
Song # 16
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
கண்ணுழை யாதுவிண் மேகங்
கலந்து கணமயில்தொக்
கெண்ணுழை யாத்தழை கோலிநின்
றாலு மினமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை
மன்னன தின்னருள்போற்
பண்ணுழை யாமொழி யாளென்ன
ளாங்கொல்மன் பாவியற்கே.
9.008
9 st/nd Thirumurai
Song # 5
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்
களைகணே! ஓலம்என்(று) ஓலிட்டு
என்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)
என்னையும் புணர்ப்பவன் கோயில்
பண்பல தெளிதேன் பாடிநின் றாடப்
பனிமலர்ச் சோலைசூழ் மொழுப்பில்
செண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே.
9.014
9 st/nd Thirumurai
Song # 4
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
கண்ணியல் மணியின் சூழல்புக்(கு) அங்கே
கலந்துபுக்(கு) ஒடுங்கினேற்(கு) அங்ஙன்
நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை
நுண்ணிமை இறந்தமை அறிவன்
மண்ணியன் மரபில் தங்கிருள் மொழுப்பின்
வண்டினம் பாடநின் றாடும்
புண்ணிய மகளிர் ஆவண வீதிப்
பூவணங் கோயில்கொண் டாயே.
10.101
10 st/nd Thirumurai
Song # 7
திருமூலர்
திருமந்திரம்
கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.
10.107
10 st/nd Thirumurai
Song # 8
திருமூலர்
திருமந்திரம்
கண்ணனுங் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின் றளக்கின்ற தொன்றும் அறிகிலார்
விண்ணுறுவா ரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே.
10.122
10 st/nd Thirumurai
Song # 6
திருமூலர்
திருமந்திரம்
கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்றன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி
கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.
10.214
10 st/nd Thirumurai
Song # 24
திருமூலர்
திருமந்திரம்
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாகவகுத்துவைத் தானே.
10.216
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
கண்டிருந் தார்உயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தார்உயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.
10.306
10 st/nd Thirumurai
Song # 1
திருமூலர்
திருமந்திரம்
கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.
10.308
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
பிண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.
10.311
10 st/nd Thirumurai
Song # 17
திருமூலர்
திருமந்திரம்
கண்ணில் வியாதி உரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.
10.314
10 st/nd Thirumurai
Song # 24
திருமூலர்
திருமந்திரம்
கண்ணன் பிறப்பிலி காண்நந்தி யாய்உள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாய்நிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே.
10.319
10 st/nd Thirumurai
Song # 3
திருமூலர்
திருமந்திரம்
கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வான்நீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே.
10.402
10 st/nd Thirumurai
Song # 79
திருமூலர்
திருமந்திரம்
கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடைக்
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்பழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமஎன லாமே.
10.406
10 st/nd Thirumurai
Song # 11
திருமூலர்
திருமந்திரம்
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசத்தி
அண்டமொ டெண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுட் பூசனை யாளே.
10.408
10 st/nd Thirumurai
Song # 12
திருமூலர்
திருமந்திரம்
கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணா
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே.
10.408
10 st/nd Thirumurai
Song # 13
திருமூலர்
திருமந்திரம்
கண்டெண் டிசையும் கலந்து வருங்கன்னி
பண்டெண் டிசையும் பராசத்தி யாய்நிற்கும்
விண்டெண் டிசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் டிசையும் தொழநின்ற கன்னியே.
10.409
10 st/nd Thirumurai
Song # 19
திருமூலர்
திருமந்திரம்
கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தள வொத்தபின்
கண்டிடும் அப்புறங் காரொளி யானதே.
10.413
10 st/nd Thirumurai
Song # 5
திருமூலர்
திருமந்திரம்
கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கு மளவே.
10.413
10 st/nd Thirumurai
Song # 12
திருமூலர்
திருமந்திரம்
கண்டுகொள் ளும்தனி நாயகி தன்னையும்
மொண்டுகொள் ளும்முக வச்சியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே.
10.413
10 st/nd Thirumurai
Song # 18
திருமூலர்
திருமந்திரம்
கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதா
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.
10.413
10 st/nd Thirumurai
Song # 66
திருமூலர்
திருமந்திரம்
கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்காரம்
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே.
10.413
10 st/nd Thirumurai
Song # 73
திருமூலர்
திருமந்திரம்
கண்டஇச் சத்தி இருதய பங்கயம்
கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்
பண்டை அவாவுப் பகையை யறுத்திட
இன்றென் மனத்தில் இனிதிருந்தாளே.
10.502
10 st/nd Thirumurai
Song # 3
திருமூலர்
திருமந்திரம்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதும் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதும் கண்டவர் கண்டமா
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே.
10.516
10 st/nd Thirumurai
Song # 9
திருமூலர்
திருமந்திரம்
கண்டுகொண் டோம்இரண் டுந்தொடர்ந்தாங்கொளி
பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடும் மலர்வார் சடைஅண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.
10.736
10 st/nd Thirumurai
Song # 1
திருமூலர்
திருமந்திரம்
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே.
10.736
10 st/nd Thirumurai
Song # 6
திருமூலர்
திருமந்திரம்
கண்காணி யாகவே கையகத்தே எழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்
கண்காணி யாகிய காதலன் றானே.
10.803
10 st/nd Thirumurai
Song # 12
திருமூலர்
திருமந்திரம்
கண்டகன வைந்தும் கலந்தன தாம்ஐந்தும்
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய னாகிப் பரந்த வச்சாக்கிரத்
தண்டமுந் தானாய் அமர்ந்துநின் றானே.
10.925
10 st/nd Thirumurai
Song # 8
திருமூலர்
திருமந்திரம்
கண்டறி வார் இல்லைக் கயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் `இறைவன்`என் றேத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம்
தொண்டர் முகந்த துறைஅறி யோமே.
10.925
10 st/nd Thirumurai
Song # 12
திருமூலர்
திருமந்திரம்
கண்டார்க் கழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்டான் நிரம்பி மடவிய ளானால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே.
11.004
11 st/nd Thirumurai
Song # 72
காரைக்கால் அம்மையார்
அற்புதத் திருவந்தாதி
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாறுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்குங்
கண்ணாளா ஈதென் கருத்து.
11.004
11 st/nd Thirumurai
Song # 85
காரைக்கால் அம்மையார்
அற்புதத் திருவந்தாதி
கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும்
எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன்
எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்.
11.006
11 st/nd Thirumurai
Song # 3
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
கண்களங் கஞ்செய்யக் கைவளை
சோரக் கலையுஞ்செல்ல
ஒண்களங் கண்ணுதல் வேர்ப்பவொண்
கொன்றையந் தார்உருவப்
பெண்களங் கம் இவள் பேதுறும்
என்பதோர் பேதைநெஞ்சம்
பண்களங் கம்இசை பாடநின்
றாடும் பரமனையே.
11.006
11 st/nd Thirumurai
Song # 29
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
கண்டங் கரியன் கரிஈர்
உரியன் விரிதருசீர்
அண்டங் கடந்த பெருமான்
சிறுமான் தரித்தபிரான்
பண்டன் பரம சிவனோர்
பிரமன் சிரமரிந்த
புண்தங் கயிலன் பயிலார
மார்பனெம் புண்ணியனே.
11.007
11 st/nd Thirumurai
Song # 3
சேரமான் பெருமாள் நாயனார்
திருவாரூர் மும்மணிக்கோவை
கண்ணார் நுதல்எந்தை காமரு
கண்டம் எனவிருண்ட
விண்ணால் உருமொடு மேலது
கீழது கொண்டல்விண்ட
மண்ணார் மலைமேல் இளமயில்
ஆல்மட மான் அனைய
பெண்ணாம் இவள்இனி என்னாய்க்
கழியும் பிரிந்துறைவே.
11.008
11 st/nd Thirumurai
Song # 74
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று
பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார் அண்ணல்மேற்
11.008
11 st/nd Thirumurai
Song # 75
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்
திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார் ஒண்ணிறத்த
11.008
11 st/nd Thirumurai
Song # 154
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின் சவிகொண்டாள் வண்ணஞ்சேர்
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D