சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் எந்த
எந்தை!     எந்தை     எந்தையும்எம்     எந்த     எந்தை,     எந்தையே!     எந்தையை,     எந்தைஎந்    
1.024   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எந்தை! என்று, அங்கு இமையோர் புகுந்து ஈண்டி,
கந்தமாலை கொடு சேர் காழியார்,
வெந்த நீற்றர், விமலர் அவர் போல் ஆம்
அந்தி நட்டம் ஆடும் அடிகளே.

2.036   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்,
சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்
செந்தண்தமிழ் செப்பிய பத்துஇவை வல்லார்,
பந்தம் அறுத்து ஓங்குவர், பான்மையினாலே.

2.064   2 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தையுள்ளே கோயில் ஆகத் திகழ்வானை,
மந்தி ஏறி, இனம் ஆம் மலர்கள் பல கொண்டு,
முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.

2.090   2 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று ஏத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லால், சென்று கைகூடுவது அன்றால்
கந்த மா மலர் உந்தி, கடும் புனல் நிவா மல்கு கரைமேல்,
அம் தண்சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம்(ம்) அருளே

2.117   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எந்தை பெம்மான் இடம், எழில் கொள் சோலை இரும்பைதனுள்
மந்தம் ஆய பொழில் சூழ்ந்து அழகு ஆரும் மாகாளத்தில்,
அந்தம் இல்லா அனல் ஆடுவானை, அணி ஞானசம்
பந்தன் சொன்ன தமிழ் பாட வல்லார் பழி போகுமே.

5.007   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எந்த மா தவம் செய்தனை, நெஞ்சமே!-
பந்தம் வீடு அவை ஆய பராபரன்
அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி
சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே?

5.096   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எந்தை, எம்பிரான் என்றவர்மேல் மனம்,
எந்தை, எம்பிரான் என்று இறைஞ்சித் தொழுது,
எந்தை, எம்பிரான் என்று அடி ஏத்துவார்,
எந்தை, எம்பிரான் என்று அடி சேர்வரே.

5.097   5 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எந்தையே! எம்பிரானே! என உள்கிச்
சிந்திப்பார் அவர் தீவினை தீருமால்;
வெந்தநீறு மெய் பூசிய வேதியன்
அந்தமா அளப்பார், அடைந்தார்களே.

7.057   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எந்தையை, எந்தை தந்தை பிரானை, ஏதம் ஆய(வ்) இடர் தீர்க்க வல்லானை,
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை, முதல் காண்பு அரியானை,
கந்தின் மிக்க(க்) கரியின் மருப்போடு, கார் அகில், கவரி(ம்)மயிர், மண்ணி
வந்து வந்து இழி வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?

7.073   7 st/nd Thirumurai   Song # 11   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
எந்தை இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? என்று
சிந்தை செயும் திறம் வல்லான், திரு மருவும் திரள் தோளான்,
மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவல் ஆரூரன்
சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே.

8.105.05   8 st/nd Thirumurai   Song # 47   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
எந்தை, யாய், எம்பிரான்; மற்றும் யாவர்க்கும்
தந்தை, தாய், தம்பிரான்; தனக்கு அஃது இலான்;
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தையாலும் அறிவு அரும் செல்வனே.

8.113   8 st/nd Thirumurai   Song # 2   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
எந்தை, எம் தாய், சுற்றம், மற்றும் எல்லாம், என்னுடைய
பந்தம் அறுத்து, என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான்;
அந்த இடைமருதில், ஆனந்தத் தேன் இருந்த
பொந்தைப் பரவி, நாம் பூவல்லி கொய்யாமோ!

9.029   9 st/nd Thirumurai   Song # 13   சேந்தனார்   திருப்பல்லாண்டு  
எந்தைஎந் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு
   தாம்மெம் பிரான்என் றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார்
   அடிநாய் செப்புரை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்
   தாண்டுகொண் டாருயிர்மேற்
பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று
   பல்லாண்டு கூறுதுமே. 

10.404   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னமே சண்முகன் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால்
மைந்தன் இவனென்று மாட்டுக்கொள் ளீரே.

10.706   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானம்ஆம்
சந்தித் திருந்த இடம்பெருங் கண்ணியை
உந்திக்கு மேல்வைத் துகந்திருந் தானே.

12.210   12 st/nd Thirumurai   Song # 32   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
எந்தையும்எம் அனையும்அவர்க்
கெனைக்கொடுக்க இசைந்தார்கள்
அந்தமுறை யால்அவர்க்கே
உரியதுநான் ஆதலினால்
இந்தவுயிர் அவருயிரோ
டிசைவிப்பன் எனத்துணிய
வந்தவர்தம் அடியிணைமேல்
மருணீக்கி யார்விழுந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 214   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எந்தை ஈசன் எனஎடுத்து இவ்வருள்
வந்த வாறுமற்று இவ்வண மோஎன்று
சிந்தை செய்யும் திருப்பதி கத்துஇசை
புந்தி யாரப் புகன்றெதிர் போற்றுவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 831   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எந்தை யாரவர் எவ்வகை யார்கொலென்
றிந்த வாய்மைமற் றெப்பொருட் கூற்றினும்
முந்தை யோரைஎக் கூற்றின் மொழிவதென்
றந்தண் பூந்தராய் வேந்த ரருளினார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4