சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் எடுத்த
எடுத்த     எடுத்தான்     எடுத்தஅக்     எடுத்தகுழற்     எடுத்தமனக்     எடுத்ததிருப்     எடுத்துரைத்த     எடுத்துடன்ற     எடுத்தானை     எடுத்தனன்     எடுத்தவன்    
1.024   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்த அரக்கன் நெரிய, விரல் ஊன்றி,
கடுத்து, முரிய அடர்த்தார், காழியார்;
எடுத்த பாடற்கு இரங்குமவர் போல் ஆம்
பொடிக் கொள் நீறு பூசும் புனிதரே.

1.082   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்தான் தருக்கினை இழித்தான், விரல் ஊன்றி;
கொடுத்தான், வாள்; ஆளாக் கொண்டான்; உறை கோயில்
படித்தார், மறை வேள்வி பயின்றார், பாவத்தை
விடுத்தார், மிக வாழும் வீழி மிழலையே.

1.095   1 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்தான் புயம் தன்னை அடுத்தார் மருதரைத்
தொடுத்து ஆர்மலர் சூட்ட, விடுத்தார், வேட்கையே.

2.016   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்தானை எழில் முடிஎட்டும் இரண்டும் தோள
கெடுத்தானை, கேடு இலாச் செம்மை உடையானை,
மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரி
பிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே

2.027   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்த வல் அரக்கன் கரம்புயம்
அடர்த்தது ஓர் விரலான், அவனை ஆட்
படுத்தன், இந்திரநீலப்பர்ப்பதம்
முடித்தலம் உற, முயலும், இன்பமே!

3.009   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்த வல் மாமலைக்கீழ் இராவணன் வீழ்தர,
விடுத்து அருள்செய்து, இசை கேட்டவர் வீழிமிழலையார்;
படுத்து வெங்காலனை, பால் வழிபாடு செய் பாலற்குக்
கொடுத்தனர், இன்பம், கொடுப்பர், தொழ; குறைவு இல்லையே.

3.016   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்தனன் கயிலையை, இயல் வலியினால்,
அடர்த்தனர் திருவிரலால்; அலறிடப்
படுத்தனர்; ஏன்று அவன் பாடல் பாடலும்,
கொடுத்தனர், கொற்றவாள்; கொள்ளிக்காடரே.

3.043   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்த வல் அரக்கன் முடிதோள் இற
அடர்த்து, உகந்து அருள் செய்தவர் காழியுள
கொடித் தயங்கு நன் கோயிலுள், இன்புஉற,
இடத்து மாதொடு தாமும் இருப்பரே.

3.123   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
எடுத்தவன் தருக்கை இழித்தவர், விரலால்; ஏத்திட ஆத்தம் ஆம் பேறு
தொடுத்தவர்; செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர்; வேள்வி
தடுத்தவர்; வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர்; விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமாலைஅமர்ந்தாரே.

4.049   4 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எடுத்தனன் எழில் கயி(ல்)லை இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்து ஒரு விரலால் ஊன்ற, அலறிப் போய் அவனும் வீழ்ந்து,
விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட,
கொடுத்தனர், கொற்றவாள் நாள்; குறுக்கை வீரட்டனாரே.

5.012   5 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர்
உடுப்பர், கோவணம்; உண்பது பிச்சையே
கெடுப்பது ஆவது, கீழ் நின்ற வல்வினை;
விடுத்துப் போவது, வீழிமிழலைக்கே.

5.028   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்,
இடர்(க்)கள் போல் பெரிது ஆகிய வண்ணமும்,
கடுத்த கைந்நரம்பால் இசை வண்ணமும்,
அடுத்த வண்ணமும், ஆவர்-ஐயாறரே.

10.404   10 st/nd Thirumurai   Song # 5   திருமூலர்   திருமந்திரம்  
எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.

12.140   12 st/nd Thirumurai   Song # 14   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
எடுத்தகுழற் கருவியினில்
எம்பிரான் எழுத்தைந்தும்
தொடுத்தமுறை யேழிசையின்
சுருதிபெற வாசித்துத்
தடுத்தசரா சரங்களெலாம்
தங்கவருந் தங்கருணை
அடுத்தஇசை யமுதளித்துச்
செல்கின்றார் அங்கொருநாள்.
12.210   12 st/nd Thirumurai   Song # 60   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
எடுத்தமனக் கருத்துய்ய
எழுதலால் எழுமுயற்சி
அடுத்தலுமே அயர்வொதுங்கத்
திருவதிகை அணைவதனுக்
குடுத்துழலும் பாயொழிய
உறியுறுகுண் டிகையொழியத்
தொடுத்தபீ லியும்ஒழியப்
போவதற்குத் துணிந்தெழுந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 108   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எடுத்ததிருப் பதிகத்தின் இசைதிருத்தா
ளத்தினால் இசைய வொத்தி
அடுத்தநடை பெறப்பாடி ஆர்வமுற
வணங்கிப்போந் தலைநீர்ப் பொன்னி
மடுத்தவயற் பூந்தரா யவர்வாழ
மழவிளங்கோ லத்துக் காட்சி
கொடுத்தருளி வைகினார் குறைவிலா
நிறைஞானக் கொண்ட லார்தாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 425   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எடுத்த வண்டமிழ்ப் பதிகநா
லடியின்மே லிருசீர்
தொடுத்த வைப்பொடு தொடர்ந்தஇன்
னிசையினால் துதிப்பார்
மடுத்த காதலில் வள்ளலார்
அடியிணை வழுத்தி
அடுத்த சிந்தையால் ஆதரித்
தஞ்சலி அளித்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 790   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எடுத்த ஏட்டினை அவையின்
முன் காட்டிஅம் முறையில்
அடுத்த வண்ணமே கோத்தலும்
அதிசயித் தரசன்
தொடுத்த பீலிமுன் தூக்கிய
கையரை நோக்கிக்
கடுத்து நீரிட்ட ஏட்டினைக்
காட்டுமின் என்றான்.
12.280   12 st/nd Thirumurai   Song # 923   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எடுத்துரைத்த புத்தனெதிர் இயம்பு மன்பர்
எரியுணர்வுக் கெடுத்துக்காட் டாகச் சொன்னாய்
அடுத்தவுணர் உருவுடைய தன்று சொன்ன
அனல்வடிவிற் றாம் அதுவும் அறிதி நுங்கோன்
தொடுத்தநிகழ் காலமே யன்றி ஏனைத்
தொடர்ந்தஇரு காலமுந்தொக் கறியுமாகில்
கடுத்தஎரி நிகழ்காலத் திட்ட தல்லால்
காணாத காலத்துக் கதுவா தென்றார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1091   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
எடுத்த பாட்டினில்வடிவுபெற்
றிருநான்கு திருப்பாட்
டடுத்த அம்முறைப் பன்னிரண்
டாண்டள வணைந்து
தொடுத்த வெஞ்சமண் பாட்டினில்
தோன்றிடக் கண்டு
விடுத்த வேட்கையர் திருக்கடைக்
காப்புமேல் விரித்தார்.
12.500   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
எடுத்துடன்ற முனைஞாட்பின்
இருபடையிற் பொருபடைஞர்
படுத்தநெடுங் கரித்துணியும்
பாய்மாவின் அறுகுறையும்
அடுத்தமர்செய் வயவர்கருந்
தலைமலையும் அலைசெந்நீர்
மடுத்தகடல் மீளவுந்தாம்
வடிவேல்வாங் கிடப்பெருக.
12.720   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
எடுத்த அத்திருப் பதிகத்தின்
உட்குறிப்பு இவ்வுல கினிற்பாசம்
அடுத்த வாழ்க்கையை அறுத்திட
வேண்டுமென்று அன்பர்அன் பினில்பாடக்
கடுத்த தும்பிய கண்டர்தங்
கயிலையிற் கணத்தவ ருடன்கூடத்
தடுத்த செய்கைதான் முடிந்திடத்
தங்கழற் சார்புதந் தளிக்கின்றார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4