சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் இவ்வ
இவ்வகை     இவ்வாறு     இவ்வண்ணந்     இவ்வகைவரு     இவ்வண்ணம்     இவ்வா     இவ்வகையால்     இவ்வ     இவ்வகைய     இவ்வகையே     இவ்வரும்    
9.008   9 st/nd Thirumurai   Song # 2   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும்
    ஏழையேற்(கு) என்னுடன் பிறந்த
ஐவரும் பகையே யார்துணை என்றால்
    அஞ்சல்என் றருள்செய்வான் கோயில்
கைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்
    கடைசியர் களைதரு நீலம்
செய்வரம்(பு) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
    திருவளர் திருச்சிற்றம் பலமே.
10.315   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே. 

12.090   12 st/nd Thirumurai   Song # 32   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
இவ்வாறு கேட்டலுமே
ஏனாதி நாதனார்
அவ்வாறு செய்த லழகி
தெனவமைந்து
கைவாள் அமர்விளைக்கத்
தான்கருதும் அக்களத்தே
வெவ்வாள் உரவோன்
வருகவென மேற்கொள்வார்.
12.100   12 st/nd Thirumurai   Song # 43   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
இவ்வண்ணந் திண்ணனார் நிரம்பு நாளில்
இருங்குறவர் பெருங்குறிச்சிக் கிறைவ னாய
மைவண்ண வரைநெடுந்தோள் நாகன் தானும்
மலையெங்கும் வனமெங்கும் வரம்பில் காலம்
கைவண்ணச் சிலைவேட்டை யாடித் தெவ்வர்
கணநிரைகள் பலகவர்ந்து கானங் காத்து
மெய்வண்ணந் தளர்மூப்பின் பருவ மெய்தி
வில்லுழவின் பெருமுயற்சி மெலிவா னானான்.
12.100   12 st/nd Thirumurai   Song # 87   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
இவ்வகைவரு கொலைமறவினை
எதிர்நிகழ்வுழி அதிரக்
கைவரைகளும் வெருவுறமிடை
கானெழுவதொர் ஏனம்
பெய்கருமுகி லெனஇடியொடு
பிதிர்கனல்விழி சிதறி
மொய்வலைகளை அறநிமிர்வுற
முடுகியகடு விசையில்.
12.100   12 st/nd Thirumurai   Song # 141   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
இவ்வண்ணம் பெருமுனிவர்
ஏகினார் இனியிப்பால்
மைவண்ணக் கருங்குஞ்சி
வனவேடர் பெருமானார்
கைவண்ணச் சிலைவளைத்துக்  
கான்வேட்டை தனியாடிச்
செய்வண்ணத் திறம்மொழிவேன்
தீவினையின் திறம்ஒழிவேன்.
12.140   12 st/nd Thirumurai   Song # 35   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
இவ்வாறு நிற்பனவுஞ்
சரிப்பனவும் இசைமயமாய்
மெய்வாழும் புலன்கரண
மேவியவொன் றாயினவால்
மொய்வாச நறுங்கொன்றை
முடிச்சடையார் அடித்தொண்டர்
செவ்வாயின் மிசைவைத்த
திருக்குழல்வா சனையுருக்க.
12.150   12 st/nd Thirumurai   Song # 23   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
இவ்வண்ணம் எழுந்தது கேட்டெழுந்
தஞ்சி முன்பு
செய்வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்தபுண்
ஊறு தீர்ந்து
கைவண்ணம் நிரம்பின வாசமெல்
லாங்க லந்து
மொய்வண்ண விளங்கொளி எய்தினர்
மூர்த்தி யார்தாம்.
12.150   12 st/nd Thirumurai   Song # 25   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
இவ்வா றுலகத்தின் இறப்ப
உயர்ந்த நல்லோர்
மெய்வா ழுலகத்து விரைந்தணை
வார்க ளேபோல்
அவ்வா றரனார் அடியாரை
அலைத்த தீயோன்
வெவ்வாய் நிரயத் திடைவீழ
விரைந்து வீந்தான்.
12.150   12 st/nd Thirumurai   Song # 30   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
இவ்வகை பலவும் எண்ணி
இங்கினி அரசர் இல்லை
செய்வகை யிதுவே யென்று
தெளிபவர் சிறப்பின் மிக்க
மைவரை யனைய வேழங்
கண்கட்டி விட்டால் மற்றக்
கைவரை கைக்கொண் டார்மண்
காவல்கைக் கொள்வார் என்று.
12.180   12 st/nd Thirumurai   Song # 15   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
இவ்வகையால் தந்தொழிலின்
இயன்றவெலாம் எவ்விடத்தும்
செய்வனவுங் கோயில்களிற்
திருவாயிற் புறநின்று
மெய்விரவு பேரன்பு
மிகுதியினால் ஆடுதலும்
அவ்வியல்பிற் பாடுதலு
மாய்நிகழ்வார் அந்நாளில்.
12.180   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
இவ்வண்ணம் இரவுபகல்
வலஞ்செய்தங் கெய்தரிய
அவ்வண்ணம் நினைந்தழிந்த
அடித்தொண்ட ரயர்வெய்தி
மைவண்ணத் திருமிடற்றார்
மன்றில்நடங் கும்பிடுவ
தெவ்வண்ணம் எனநினைந்தே
ஏசறவி னொடுந்துயில்வார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 48   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
இவ்வ ளந்தரு பெருந்திரு நாட்டிடை என்றும்
மெய்வ ளந்தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப
எவ்வு கங்களும் உள்ளதென் றியாவரும் ஏத்தும்
கைவி ளங்கிய நிலையது காஞ்சிமா நகரம்.
12.210   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
இவ்வகைய திருநாட்டில்
எனைப்பலவூர் களுமென்றும்
மெய்வளங்கள் ஓங்கவரும்
மேன்மையன ஆங்கவற்றுள்
சைவநெறி ஏழுலகும்
பாலிக்குந் தன்மையினால்
தெய்வநெறிச் சிவம்பெருக்குந்
திருவாமூர் திருவாமூர்.
12.210   12 st/nd Thirumurai   Song # 82   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
இவ்வ கைப்பல அமணர்கள்
துயருடன் ஈண்டி
மெய்வ கைத்திறம் அறிந்திடில்
வேந்தனும் வெகுண்டு
சைவ னாகிநம் விருத்தியும்
தவிர்க்கும்மற் றினிநாம்
செய்வ தென்னென வஞ்சனை
தெரிந்துசித் திரிப்பார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 142   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
இவ்வண்ணம் போல எனைப்பல
மாக்கள் இயம்பியேத்த
மெய்வண்ண நீற்றொளி மேவும்
குழாங்கள் விரவிச்செல்ல
அவ்வண்ணம் நண்ணிய அன்பரும்
வந்தெய்தி அம்பவளச்
செவ்வண்ணர் கோயில் திருவீரட்
டானத்தைச் சேர்ந்தனரே.
12.250   12 st/nd Thirumurai   Song # 44   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
இவ்வகை அரசின் நாமம்
ஏத்திஎப் பொருளும் நாளும்
அவ்வருந் தவர்பொற் றாளே
எனவுணர்ந் தடைவார் செல்லும்
செவ்விய நெறிய தாகத்
திருத்தில்லை மன்றுள் ஆடும்
நவ்வியங் கண்ணாள் பங்கர்
நற்கழல் நண்ணி னாரே
12.280   12 st/nd Thirumurai   Song # 593   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இவ்வகை திரும றைக்காட்
டிறையவர் அருளை யுன்னி
மெய்வகை தெரிந்த வாக்கின்
வேந்தர்தாம் துயிலும் போதில்
மைவளர் கண்டர் சைவ
வேடத்தால் வந்து வாய்மூர்
அவ்விடை யிருத்தும் அங்கே
வாஎன அருளிப் போக.
12.280   12 st/nd Thirumurai   Song # 599   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இவ்வகை இவர்கள் அங்கண்
இருந்தனராக இப்பால்
செய்வகை இடையே தப்பும்
தென்னவன் பாண்டி நாட்டு
மெய்வகை நெறியில் நில்லா
வினைஅமண் சமய மிக்குக்
கைவகை முறைமைத் தன்மை
கழியமுன் கலங்குங் காலை.
12.280   12 st/nd Thirumurai   Song # 1216   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இவ்வகை நம்மை யாளும்
ஏர்வளர் தெய்வக் கோலம்
கவ்வினை மறையோர் செய்யக்
கடிகொள்செங் கமலத் தாதின்
செவ்விநீள் தாம மார்பர்
திருவடை யாள மாலை
எவ்வுல கோரும் ஏத்தத்
தொழுதுதாம் எடுத்துப் பூண்டார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 82   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இவ்வகை பரவித் திருக்கடைக் காப்பும்
ஏசின வல்லஎன் றிசைப்ப
மெய்வகை விரும்பு தம்பெரு மானார்
விழுநிதிக் குவையளித் தருள
மைவளர் கண்டர் கருணையே பரவி
வணங்கியப் பதியிடை வைகி
எவ்வகை மருங்கு மிறைவர்தம் பதிகள்
இறைஞ்சியங் கிருந்தனர் சில நாள்.
12.290   12 st/nd Thirumurai   Song # 378   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இவ்வகை இவர்வந் தெய்த
எய்திய விருப்பி னோடும்
மைவளர் நெடுங்கண் ணாரும்
மாளிகை அடைய மன்னும்
செய்வினை அலங்கா ரத்துச்
சிறப்பணி பலவுஞ் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம்
நிறைகுடம் நிரைத்துப் பின்னும்.
12.370   12 st/nd Thirumurai   Song # 81   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
இவ்வா றொழுகும் நாளின்கண்
இலங்கு மணிப்பூண் வன்றொண்டர்
மைவாழ் களத்து மறையவனார்
மருவும் இடங்கள் பலவணங்கிச்
செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத்
திருமா மதுரை முதலான
மொய்வார் சடையார் மூதூர்கள்
இறைஞ்ச முறைமை யால்நினைந்தார்.
12.420   12 st/nd Thirumurai   Song # 8   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்  
இவ்வகையே திருத்தொண்டின்
அருமைநெறி எந்நாளும்
செவ்வியஅன் பினல்ஆற்றித்
திருந்தியசிந் தையராகிப்
பைவளர்வாள் அரவணிந்தார்
பாதமலர் நிழல்சேர்ந்து
மெய்வகைய வழியன்பின்
மீளாத நிலைபெற்றார்.
12.480   12 st/nd Thirumurai   Song # 6   சேக்கிழார்   கறைக் கண்டன் சருக்கம்  
இவ்வகையால் திருந்துவிளக்
கெரித்துவர அங்கொருநாள்
மெய்வருந்தி அரிந்தெடுத்துக்
கொடுவந்து விற்கும்புல்
எவ்விடத்தும் விலைபோகாது
ஒழியவும்அப் பணியொழியார்
அவ்வரிபுல் லினைமாட்டி
அணிவிளக்கா யிடஎரிப்பார்.
12.720   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
இவ்வா றருளிச் செய்தருளி
இவர்கள் புதல்வன் தனைக்கொடிய
வெவ்வாய் முதலை விழுங்கும்மடு
எங்கே என்று வினவிக்கேட்டு
அவ்வாழ் பொய்கைக் கரையில் எழுந்
தருளி அவனை அன்றுகவர்
வைவாள் எயிற்று முதலைகொடு
வருதற் கெடுத்தார் திருப்பதிகம்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5