சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் இறைவ
இறைவர்     இறைவனே     இறைவர்திருக்     இறைவ     இறைவர்திருத்     இறைவன்     இறைவனை,     இறைவனார்,     இறைவன்!     இறைவனை    
1.092   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்!
கறை கொள் காசினை முறைமை நல்குமே!

2.074   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இறைவன் அமர் சண்பை, எழில் புறவம், அயன் ஊர்,
இமையோர்க்கு அதிபன் சேர் ஊர்,
குறைவு இல் புகழ்ப் புகலி, வெங்குரு, தோணிபுரம், குணம்
ஆர் பூந்தராய், நீர்ச்
சிறை மலி நல் சிரபுரம், சீர்க் காழி, வளர் கொச்சை,
கழுமலம் தேசு இன்றிப்
பறி தலையொடு அமண்கையர், சாக்கியர்கள், பரிசு அறியா
அம்மான் ஊரே.

2.083   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இறைவனை, ஒப்பு இலாத ஒளி மேனியானை, உலகங்கள் ஏழும் உடனே
மறைதரு வெள்ளம் ஏறி வளர் கோயில் மன்னி இனிதா இருந்த மணியை,
குறைவு இல ஞானம் மேவு குளிர் பந்தன் வைத்த தமிழ்மாலை பாடுமவர், போய்,
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி, என்றும் அழகா இருப்பது அறிவே.

5.038   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
இறைவனார், இமையோர் தொழு பைங்கழல்
மறவனார்-கடவூரின் மயானத்தார்;
அறவனார், அடியார் அடியார் தங்கள்
பிறவி தீர்ப்பர், பெருமான் அடிகளே.

7.044   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
இறைவன்! என்று எம்பெருமானை வானவர் ஏத்தப் போய்,
துறை ஒன்றி, தூ மலர் இட்டு, அடி இணை போற்றுவார்;
மறை அன்றிப் பாடுவது இல்லையோ? மல்கு வான் இளம்-
பிறை அன்றிச் சூடுவது இல்லையோ, எம்பிரானுக்கே?

9.025   9 st/nd Thirumurai   Song # 5   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
இறைவனை என்கதியை
   என்னுள்ளே உயிர்ப்பாகி நின்ற
மறைவனை மண்ணும் விண்ணும்
   மலிவான் சுடராய் மலிந்த
சிறையணி வண்டறையும் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலம்
நிறையணி யாம் இறையை
   நினைத்தேன் இனிப் போக்குவனே.
9.025   9 st/nd Thirumurai   Song # 10   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
இறைவனை ஏத்துகின்ற
   இளையாள்மொழி இன்றமிழால்
மறைவல நாவலர்கள்
   மகிழ்ந்தேத்து சிற்றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின்
   அணியாலைகள் சூழ்மயிலை
மறைவல ஆலிசொல்லை
   மகிழ்ந்தேத்துக வானெளிதே.
   
11.004   11 st/nd Thirumurai   Song # 5   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே
எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.

12.280   12 st/nd Thirumurai   Song # 1015   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இறைவர்திருக் காரிகரை யிறைஞ்சி அப்பால்
எண்ணில்பெரு வரைகளிரு மருங்கு மெங்கும்
நிறையருவி நிரைபலவாய் மணியும் பொன்னும்
நிறைதுவலை புடைசிதறி நிகழ்ப வாகி
அறைகழல்வா னவர்க்கிறைவன் குலிச வேற்றால்
அற்றசிறை பெற்றவன்மே லெழுவ தற்குச்
சிறகடித்துப் பறக்கமுயன் றுயர்ந்த போலும்
சிலைநிலத்தி லெழுந்தருளிச் செல்லா நின்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 335   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இறைவர் விரைவில் எழுந்தருள
எய்து மவர்கள் பின்தொடர
அறைகொள் திரைநீர் தொடர்சடையில்
அரவு தொடர அரியஇளம்
பிறைகொள் அருகு நறைஇதழிப்
பிணையல் சுரும்பு தொடரவுடன்
மறைகள் தொடர வன்தொண்டர்
மனமுந் தொடர வரும்பொழுது.
12.370   12 st/nd Thirumurai   Song # 37   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
இறைவ ராணை மறுப்பதனுக்கு
அஞ்சி யிசைந்தார் இகல்வேந்தர்
நிறையு நிதியின் பரப்பையெல்லாம்
நிலத்தை நெளிய வுடன்கொண்டே
உறைமும் மதத்துக் களிறுபரி
யுள்ளிட் டனவேண் டுவகொண்டோர்
பிறைவெண் கோட்டு களிற்றுமேல்
கொண்டு போந்தார் பெரும்பாணர்.
12.370   12 st/nd Thirumurai   Song # 104   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
இறைவர்திருத் தொண்டுபுரி
யருமையினை இருநிலத்து
முறைபுரியும் முதல்வேந்தர்
மூவர்களும் கேட்டஞ்சி
மறைமுந்நூல் மணிமார்பின்
வன்றொண்டர் தமைப்பணிந்தார்
நிறைதவத்தோர் அப்பாலும்
நிருத்தர்பதி தொழநினைந்தார்.
12.370   12 st/nd Thirumurai   Song # 146   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
இறைவர் கோயில் மணிமுன்றில்
வலங்கொண் டிறைஞ்சி எதிர்புக்கு
நிறையுங் காத லுடன்வீழ்ந்து
பணிந்து நேர்நின் றாரூரர்
முறையில் விளம்புந் திருப்பதிகம்
முடிப்பது கங்கை யென்றெடுத்தப்
பிறைகொள் முடியார் தமைப்பாடிப்
பரவிப் பெருமா ளுடன்தொழுதார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5