சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் இரவு
இரவும்     இரவு    
3.007   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரவு இடை ஒள் எரி ஆடினானும், இமையோர் தொழச்
செரு இடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும்,
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி(ந்)நகர்,
அரவு இடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே!

3.012   3 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரவு அமரும் நிறம் பெற்று உடைய இலங்கைக்கு இறை,
கரவு அமரக் கயிலை எடுத்தான், வலி செற்றவன்-
குரவு அமரும் மலர்ச்சோலை சூழ்ந்த திருக்கோட்டாற்றுள்
அரவு அமரும் சடையான்; அடியார்க்கு அருள்செய்யுமே.

3.019   3 st/nd Thirumurai   Song # 4   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இரவு மல்கு இளமதி சூடி, ஈடு உயர்
பரவ மல்கு அருமறை பாடி, ஆடுவர்
அரவமோடு உயர் செம்மல் அம்பர், கொம்பு அலர்
மரவம் மல்கு எழில் நகர், மருவி வாழ்வரே.

6.036   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
இரவும் பகலும் ஆய் நின்றார் தாமே; எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார் தாமே;
அரவம் அரையில் அசைத்தார் தாமே; அனல் ஆடி அங்கை மறித்தார் தாமே;
குரவம் கமழும் குற்றாலர் தாமே; கோலங்கள் மேல் மேல் உகப்பார் தாமே;
பரவும் அடியார்க்குப் பாங்கர் தாமே பழனநகர் எம்பிரானார் தாமே.

10.407   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
இரவும் பகலும் இலாத இடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை நாடி
அரவஞ்செய் யாமல் அவளுடன் தூங்கப்
பருவஞ்செய் யாததோர் பாலனும் ஆமே.

10.516   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
இரவும் பகலும் இறந்த இடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை உன்னி
அரவசெய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி யாளும் பராபரை தானே.

11.034   11 st/nd Thirumurai   Song # 4   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி  
இரவும் பகலும்நின் பாதத்
தலரென் வழிமுழுதும்
பரவும் பரிசே யருளுகண்
டாயிந்தப் பாரகத்தே
விரவும் பரமத கோளரி
யே!குட வெள்வளைகள்
தரளஞ் சொரியுங் கடல்புடை
சூழ்ந்த தராய்மன்னனே.

12.270   12 st/nd Thirumurai   Song # 16   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
இரவு சென்று தம்பதியில்
எய்தி மனைபுக் கென்றும்போல்
விரவி நியமத் தொழில்முறையே
விமலர் தம்மை அருச்சித்துப்
பரவி அமுது செய்தருளிப்
பள்ளி கொண்டு புலர்காலை
அரவம் அணிவார் பூசையமைத்
தாரூர் நகரின் மீண்டணைந்தார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 708   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இரவு பாதகர் செய்ததீங்
கிரவிதன் மரபில்
குரவ ஓதியார் குலச்சிறை
யாருடன் கேட்டுச்
சிரபு ரப்பிள்ளை யாரைஇத்
தீயவர் நாட்டு
வரவ ழைத்தநாம் மாய்வதே
எனமனம் மயங்கி.
12.370   12 st/nd Thirumurai   Song # 27   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
இரவு கனவில் எழுந்தருளி
என்பால் அன்பால் எப்பொழுதும்
பரவு சேரன் தனக்குனக்குப்
பைம்பொன் காணம் பட்டாடை
விரவு கதிர்செய் நவமணிப்பூண்
வேண்டிற்று எல்லாங் குறைவின்றித்
தரநம் மோலை தருகின்றோம்
தாழா தேகி வருகென்று.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81