சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் இந்த
இந்து     இந்துவி     இந்துவும்     இந்தியம்     இந்த     இந்தனத்தை     இந்தநிலை     இந்திரனோடு     இந்திரன்     இந்திரத்தை     இந்திரனுக்கும்     இந்திரன்,     இந்திரியத்     இந்திரனும்,     இந்திரிய     இந்திர    
1.008   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இந்து அணையும் சடையார், விடையார், இப் பிறப்பு என்னை அறுக்க வல்லார்,
வந்து அணைந்து இன் இசை பாடுவார் பால் மன்னினர், மன்னி இருந்த ஊர் ஆம்
கொந்து அணையும் குழலார் விழவில் கூட்டம் இடை இடை சேரும் வீதி,
பந்து அணையும் விரலார்தம் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!

2.051   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி(ந்) நகர்க் கவுணியன்,
செந்து நேர் மொழியார் அவர் சேரும் திருக்களருள
அந்தி அன்னது ஓர் மேனியானை, அமரர் தம் பெருமானை, ஞானசம்
பந்தன் சொல் இவைபத்தும் பாட, தவம் ஆமே.

4.033   4 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரம் ஆனார் போலும்; துதிக்கல் ஆம் சோதிபோலும்;
சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து
மந்திரம் ஆனார்போலும்- மா மறைக்காடனாரே.

4.065   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
இந்திரன் பிரமன் அங்கி எண்வகை வசுக்களே
மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த,
தந்திரம் அறியாத் தக்கன் வேள்வியைத் தகர்த்த ஞான்று,
சந்திரற்கு அருள் செய்தாரும் சாய்க்காடு மேவினாரே.

6.028   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார்போலும்; இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர்போலும்;
சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார்போலும்; தூத் தூய திருமேனித் தோன்றல்போலும்;
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார்போலும்; மா நாகம் நாண் ஆக, வளைத்தார்போலும்;
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.

7.018   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
இந்திரனுக்கும் இராவணனுக்கும் அருள் புரிந்தார்;
மந்திரம் ஓதுவர்; மாமறை பாடுவர்; மான்மறியர்;
சிந்துரக் கண்ணனும், நான்முகனும்(ம்), உடன் ஆய்த் தனியே
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! .

7.100   7 st/nd Thirumurai   Song # 9   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
இந்திரன், மால், பிரமன்(ன்), எழில் ஆர் மிகு தேவர், எல்லாம்
வந்து எதிர்கொள்ள, என்னை மத்தயானை அருள்புரிந்து,
மந்திர மா முனிவர், இவன் ஆர்? என,-எம்பெருமான்
நம்தமர் ஊரன் என்றான்நொடித்தான்மலை உத்தமனே.

7.103   7 st/nd Thirumurai   Song # 3      
இந்திரியத் துடன் கலந்த கரணம் நான்கும் ஈர்-ஐந்து மாருதமும் மயங்கி ஒன்று(று) ஆய்,
மந்திரங்கள் ஈர்-எட்டும் எட்டும் போற்றி, மணிக்கரத்தால் அடி வணங்கி, சிறப்புச் செய்த
சுந்தரனே! சுடர் ஒளி ஆய் நின்ற சோதி! சூரியனே! தாரணித் துணை ஆய் நாளும்
அந்தரமே திர்ந்து(து) என்னை ஆண்டு கொண்டாய்! ஆதித்தா! அடியேன் என் இடர்தீர்ப் பாயே .

8.108   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
இந்திரனும், மால், அயனும்,| ஏனோரும், | வானோரும்,
அந்தரமே நிற்க, | சிவன் அவனி | வந்தருளி,
எம் தரமும் ஆட்கொண்டு,| தோள் கொண்ட | நீற்றன் ஆய்;
சிந்தனையை வந்து உருக்கும் | சீர் ஆர் |பெருந்துறையான்,
பந்தம் பறிய,| பரி மேல்கொண்டான், |தந்த
அந்தம் இலா ஆனந்தம்| பாடுதும் காண்; |அம்மானாய்!

8.131   8 st/nd Thirumurai   Song # 1   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
இந்திரிய வயம் மயங்கி, இறப்பதற்கே காரணம் ஆய்,
அந்தரமே திரிந்து போய், அரு நரகில் வீழ்வேனைச்
சிந்தை தனைத் தெளிவித்து, சிவம் ஆக்கி, எனை ஆண்ட
அந்தம் இலா ஆனந்தம் அணி கொள் தில்லைக் கண்டேனே!

9.017   9 st/nd Thirumurai   Song # 2   கருவூர்த் தேவர்   திருவிசைப்பா  
இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு)
   இணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாகம் மேகலை அரையா
   அகந்தொறும் பலிதிரி அடிகள்
தந்திரி வீணை கீதமும் பாடச்
   சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
   மருவிடம் திருவிடை மருதே.
10.408   10 st/nd Thirumurai   Song # 34   திருமூலர்   திருமந்திரம்  
இந்துவி னின்றெழும் நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழும் கண்டத்தின்
உந்திய சோதி இதயத் தெழும் ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே.

10.712   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
இந்துவும் பானுவுமி யங்குந் தலந்திடை
வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
இந்துவும் பானுவுமி யங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.

10.712   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர்
விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.

10.801   10 st/nd Thirumurai   Song # 4   திருமூலர்   திருமந்திரம்  
இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் மற்றாறும் முடிவிலே.

10.803   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
இந்தியம் ஈரைந்தீ ரைந்துதன் மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும்
அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தவச் சாக்கிரப் பாலது வாகுமே.

12.000   12 st/nd Thirumurai   Song # 135   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
இந்த மாதவர் கூட்டத்தை யெம்பிரான்
அந்த மில்புகழ் ஆலால சுந்தரன்
சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ்
வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம்.
12.100   12 st/nd Thirumurai   Song # 145   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
இந்தனத்தை முறித்தடுக்கி
எரிகடையும் அரணியினில்
வெந்தழலைப் பிறப்பித்து  
மிகவளர்த்து மிருகங்கள்
கொந்திஅயில் அலகம்பாற்  
குட்டமிட்டுக் கொழுப்பரிந்து
வந்தனகொண் டெழுந்தழலில்  
வக்குவன வக்குவித்து.
12.130   12 st/nd Thirumurai   Song # 7   சேக்கிழார்   இலை மலிந்த சருக்கம்  
இந்த நன்னிலை இன்னல்வந் தெய்தினும்
சிந்தை நீங்காச் செயலின் உவந்திட
முந்தை வேத முதல்வ ரவர்வழி
வந்த செல்வம் அறியாமை மாற்றினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 190   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இந்த மாநிலத் தின்இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி யானவர்
சிந்தை ஆரமு தாகிய செஞ்சடைத்
தந்தை யார்கழல் தாழ்ந்தெழுந்து ஏகினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1086   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இந்த மாநிலத் திறந்துளோர்
என்பினைப் பின்னும்
நந்து நன்னெறிப் படுத்திட
நன்மையாந் தன்மை
அந்த என்பொடு தொடர்ச்சியாம்
எனவருள் நோக்கால்
சிந்தும் அங்கம்அங் குடையபூம்
பாவைபேர் செப்பி.
12.290   12 st/nd Thirumurai   Song # 206   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இந்த நிலைமை யாரிவரிங்
கிருந்தார் முன்பே இவர்க்காக
அந்தண் கயிலை மலைநீங்கி
அருளாற் போந்த அநிந்திதையார்
வந்து புவிமேல் அவதரித்து
வளர்ந்து பின்பு வன்தொண்டர்
சந்த விரைசூழ் புயஞ்சேர்ந்த
பரிசு தெரியச் சாற்றுவாம்.
12.300   12 st/nd Thirumurai   Song # 22   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
இந்தநிலை மையிலிருந்தார்
எழுந்திருந்தங் கானிரைகள்
வந்தநெறி யேசென்று
வைத்தகாப் பினிலுய்த்த
முந்தையுடல் பொறைகாணார்
முழுதுணர்ந்த மெய்ஞ்ஞானச்
சிந்தையினில் வந்தசெயல்
ஆராய்ந்து தெளிகின்றார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4