சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் ஆக
ஆகத்து     ஆகுதி     ஆகின்ற     ஆகாய     ஆக்குகின்     ஆகுஞ்     ஆகிய     ஆகாச     ஆகமம்     ஆகும்     ஆக     ஆகுலம்     ஆக்கூர்     ஆகங்     ஆகமங்கள்     ஆகம்     ஆக்கு     ஆகமத்தொடு     ஆக்கையால்     ஆகாத     ஆக்கும்     ஆக்கம்,    
1.086   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆகத்து உமைகேள்வன், அரவச் சடை தாழ
நாகம் அசைத்தானை, நல்லூர்ப் பெருமானை,
தாகம் புகுந்து அண்மி, தாள்கள் தொழும் தொண்டர்
போகம் மனத்தராய், புகழத் திரிவாரே.

2.017   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ,
நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம்
போகம் தரு சீர் வயல் சூழ் பொழிகள்
மேகம் தவழும் வேணுபுரமே.

2.073   2 st/nd Thirumurai   Song # 11   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆக்கு அமர் சீர் ஊர் சண்பை, காழி, அமர் கொச்சை,
கழுமலம், அன்பான் ஊர்
ஓக்கம்(ம்) உடைத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண்
புறவம், நண்பு ஆர்
பூக்கமலத்தோன் மகிழ் ஊர், புரந்தரன் ஊர், புகலி,
வெங்குருவும், என்பர்
சாக்கியரோடு அமண்கையர் தாம் அறியா வகை நின்றான்
தங்கும் ஊரே.

2.121   2 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆகம் நல்லார் அமுது ஆக்க உண்டான்; அழல் ஐந்தலை
நாகம், நல்லார் பரவ(ந்), நயந்து அங்கு அரை ஆர்த்தவன்
போகம் நல்லார் பயிலும் பாதிரிப்புலியூர்தனுள்,
பாகம் நல்லாளொடு நின்ற எம் பரமேட்டியே.

3.001   3 st/nd Thirumurai   Song # 6   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆகம் தோய் அணி கொன்றையாய்! அனல் அங்கையாய்! அமரர்க்கு அமரா! உமை
பாகம் தோய் பகவா! பலி ஏற்று உழல் பண்டரங்கா!
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய்! மழுவாளினாய்! அழல்
நாகம் தோய் அரையாய்! அடியாரை நண்ணா, வினையே.

3.039   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா,
பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்கு உறு பக்கமா,
மா கதக்கரி போல்-திரிந்து, புரிந்து நின்று உணும் மாசு சேர்
ஆகதர்க்கு எளியேன் அலேன்-திரு ஆலவாய் அரன் நிற்கவே.

4.007   4 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆகம் பத்து அரவு அணையான், அயன், அறிதற்கு அரியானை;
பாகம் பெண் ஆண் பாகம் ஆய் நின்ற பசு பதியை;
மா கம்பம் மறை ஓதும் இறையானை; மதில் கச்சி
ஏகம்பம் மேயானை;-என் மனத்தே வைத்தேனே!

4.009   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆக்கையால் பயன் என்?- அரன் கோயில் வலம்வந்து.
பூக் கையால் அட்டி, போற்றி! என்னாத இவ் ஆக்கையால் பயன் என்?

6.013   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆகாத நஞ்சு உண்ட அந்தி வண்ணர், ஐந்தலைய மாசுணம் கொண்டு, அம் பொன் தோள்மேல்
ஏகாசமா இட்டு, ஓடு ஒன்று ஏந்தி வந்து(வ்),
இடு, திருவே, பலி! என்றார்க்கு, இல்லே புக்கேன்;
பாகு ஏதும் கொள்ளார்; பலியும் கொள்ளார்; பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி,
போகாத வேடத்தர் பூதம் சூழ, புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே!

6.035   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆகத்து உமை அடக்கி, ஆறு சூடி, ஐவாய் அரவு அசைத்து, அங்கு ஆன் ஏறு ஏறி,
போகம் பல உடைத்து ஆய்ப் பூதம் சூழ, புலித்தோல் உடையாப் புகுந்து நின்றார்;
பாகு இடுவான் சென்றேனைப் பற்றி நோக்கி, பரிசு அழித்து, என் வளை கவர்ந்தார், பாவியேனை;
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே.

6.045   6 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து, வெள் ஏறு ஏறி, அணி கங்கை செஞ்சடை மேல் ஆர்க்கச் சூடி,
பாகத்து ஓர் பெண் உடையார்; ஆணும் ஆவார்; பசு ஏறி உழி தரும் எம் பரமயோகி;
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக் கனலா எரி விழித்த கண் மூன்றி(ன்)னார்
ஓமத்தால் நால் மறைகள் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே.

7.004   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
ஆக்கும் அழிவும் அமைவும், நீ என்பன், நான்; சொல்லுவார் சொல்பொருள் அவை, நீ  என்பன், நான்;
நாக்கும் செவியும் கண்ணும், நீ என்பன், நான்; நலனே! இனி நான் உனை நன்கு உணர்ந்தேன்-
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புகப் பெய்து கொண்டு, ஏற நுந்தி
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே! .

8.101   8 st/nd Thirumurai   Song # 9   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
ஆக்கம், அளவு, இறுதி, இல்லாய்! அனைத்து உலகும்
ஆக்குவாய், காப்பாய், அழிப்பாய், அருள் தருவாய்,
போக்குவாய், என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பில்;
நாற்றத்தின் நேரியாய்! சேயாய்! நணியானே!
மாற்றம், மனம், கழிய நின்ற மறையோனே!

10.114   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி
தாமறி வாலே தலைப்பட்ட வாறே.

10.209   10 st/nd Thirumurai   Song # 15   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற தன்மைஇல் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே. 

10.209   10 st/nd Thirumurai   Song # 20   திருமூலர்   திருமந்திரம்  
ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே. 

10.214   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே. 

10.311   10 st/nd Thirumurai   Song # 34   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற அத்தனி நாயகி தன்னுடன்
கின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாய்கின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற தையாண்டின் மாலகு வாகுமே.

10.311   10 st/nd Thirumurai   Song # 37   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றன
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

10.311   10 st/nd Thirumurai   Song # 40   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே.

10.311   10 st/nd Thirumurai   Song # 45   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே. 
10.313   10 st/nd Thirumurai   Song # 16   திருமூலர்   திருமந்திரம்  
ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே. 14,

10.321   10 st/nd Thirumurai   Song # 2   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்
ஏகின்ற அக்கலை யெல்லாம் இடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே. 

10.402   10 st/nd Thirumurai   Song # 28   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற பாதமும் அந்நவ்வாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகரரமாம்
ஆகின்ற சீஇரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற அச்சுடர் அவ்வியவ் வாமே.

10.402   10 st/nd Thirumurai   Song # 32   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்தைந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத் தொருவெழுத் துள்நிற்கப்
பாகொன்றி நிற்கும் பராபரன் றானே.

10.406   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே.

10.408   10 st/nd Thirumurai   Song # 65   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற நாள்களில் ஐம்பத் தொருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
ஆகிநின் றாள்உட னாகிய சக்கரத்
தாகிநின் றான்அவன் ஆயிழை பாடே.

10.408   10 st/nd Thirumurai   Song # 70   திருமூலர்   திருமந்திரம்  
ஆகிய கோதண்டத் தாகும் மனோன்மனி
ஆகிய ஐம்ப துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடப் பரைஅவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.

10.409   10 st/nd Thirumurai   Song # 8   திருமூலர்   திருமந்திரம்  
ஆகாச அக்கர மாவது சொல்லிடில்
ஆகாச அக்கரத் துள்ளே எழுத்தவை
ஆகாச அவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவ தறிமினே.

10.413   10 st/nd Thirumurai   Song # 50   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கப்பூரம் ஆகோ சனம்நீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே.

10.413   10 st/nd Thirumurai   Song # 62   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்
பேர்கின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.

10.413   10 st/nd Thirumurai   Song # 63   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற மண்டலத் துள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத் தறுவகை யானவள்
ஆகின்ற ஐம்பத் தறுசத்தி நேர்தரும்
ஆகின்ற ஐம்பத் தறுவகைச் சூழலே.

10.503   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஆகமம் ஒன்பான் அதில்ஆன நாலேழு
மோகமில் நாலேழும் முப்பேதம் உற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மைஒன்
றாக முடிந்த தருஞ்சுத்த சைவமே.

10.701   10 st/nd Thirumurai   Song # 7   திருமூலர்   திருமந்திரம்  
ஆகும் உடம்பும் அகின்ற அவ்வுடல்
போகும் உடம்பும் பொருந்திய வாறுதான்
ஆகிய அக்கரம் ஐம்பது தத்துவம்
ஆகும் உடம்புக்கும் ஆறந்த மாமே.

10.704   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சத்தியின் உள்ளெ கதிரெழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.

10.712   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப்
போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறா(று) அதனின்மேற்
போகின்ற பொற்பையும் போற்றகின் றேனே.

10.724   10 st/nd Thirumurai   Song # 3   திருமூலர்   திருமந்திரம்  
ஆகும் கலையோ(டு) அருக்கன் அனல்மதி
ஆகும் கலைஇடை; நான்கென லாம்என்பர்;
ஆகும் அருக்கன் அனல்மதி யோடொன்ற
ஆகும்அப் பூரணை யாம்என் றறியுமே.

10.732   10 st/nd Thirumurai   Song # 1   திருமூலர்   திருமந்திரம்  
ஆக மதத்தன ஐந்து களிறுகள்
ஆக மதத்தறி யோடணை கின்றில
பாகனும் எய்த்தவை தாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்றறி யோமே.

10.804   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற தொண்ணூற்றோ டாறும் பொதுஎன்பர்
ஆகின்ற ஆறா(று) அருஞ்சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ்வே தாந்திக்கு வைணவர்க்(கு)
ஆகின்ற நாலா(று)ஐ யைந்துமாயா வாதிக்கே.

10.807   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஆகின்ற கேவலத்(து) ஆணவத்(து) ஆனவர்
ஆகின்ற வித்தேச ராம்அனந் தாதியர்
ஆகின்ற எண்மர் எழுகோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரு மாமே.

10.815   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
ஆகும் அனாதி கலைஆ கமவேதம்
ஆகும்அத் தந்திரம் அந்நூல் வழிநிற்றல்
ஆகும் மனாதி உடல்அல்லா மந்திரம்
ஆகும் சிவபோ தகம்உப தேசமே.

10.815   10 st/nd Thirumurai   Song # 30   திருமூலர்   திருமந்திரம்  
ஆகும் கலாந்தம் இரண்டந்தம் நாதாந்தம்
ஆகும் பொழுதில் கலைஐந்தாம் ஆதலின்
ஆகும் அரனேபஞ் சாந்தக னாமென்ன
ஆகும் மறைஆ கமம்மொழிந் தானே

10.816   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவம்பரம் மேல்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன்
ஆகிய தூலத்தீ சானனும் ஆமே.

10.816   10 st/nd Thirumurai   Song # 18   திருமூலர்   திருமந்திரம்  
ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோகம் அறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி எற்றல்போல்
ஆகுவ எல்லாம் அருட்பாசம் ஆகுமே.

10.826   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஆகிய அச்சோயம் தேவதத் தின்இடத்து
ஆகி யவைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொம் `தத் தசி` என்ப மெய்யறி
வாகிய சீவன் பரசிவ னாமே.

10.915   10 st/nd Thirumurai   Song # 13   திருமூலர்   திருமந்திரம்  
ஆகாச மாம் உடல் ஆங்கார் முயலகன்
ஏகாச மாம்திசை எட்டும் திருக்கைகள்
மோகாய முக்கண்கள் மூன்றொளி தானாக
மாகாய மன்றுள் நடம்செய்கின் றானே.

10.916   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்(து)
ஏகாச மாசுணம் இட்டங் கிருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனு மாமே.

11.008   11 st/nd Thirumurai   Song # 162   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினா ளாகிப்

11.022   11 st/nd Thirumurai   Song # 58   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந் தாழ்கின்றேன்
ஆக்கூர் அலர்தான் அழகிதா ஆக்கூர்
மறையோம்பு மாடத்து மாமறையோன் நான்கு
மறையோம்பு மாதவர்க்காய் வந்து.

11.032   11 st/nd Thirumurai   Song # 27   நம்பியாண்டார் நம்பி   கோயில் திருப்பண்ணியர் விருத்தம்  
ஆகங் கனகனைக் கீறிய
கோளரிக் கஞ்சிவிண்ணோர்
பாகங் கனங்குழை யாய்அரு
ளாயெனத் தில்லைப்பிரான்
வேகம் தருஞ்சிம்புள் விட்டரி
வெங்கதஞ் செற்றிலனேல்
மோகங் கலந்தன் றுலந்ததன்
றோவிந்த மூவுலகே.

11.037   11 st/nd Thirumurai   Song # 40   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை  
ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப்
போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் சோகமின்றி


This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%86%E0%AE%95