சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அருந்
அருந்திறல்     அருந்திய     அருந்தமி     அருந்தமிழ்     அருந்தவத்     அருந்தனயன்     அருந்தவர்     அருந்தவத்தோர்     அருந்தமிழா     அருந்தானை,     அருந்தும்பொழுது     அருந்     அருந்தவர்கள்     அருந்துணையை;     அருந்தவத்தின்     அருந்தவம்     அருந்தும்     அருந்தே    
1.109   1 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச்
சரம் துரந்து எரி செய்த சங்கரன் ஊர்
குருந்தொடு கொடிவிடு மாதவிகள்
திருந்திய புறவு அணி சிரபுரமே.

2.011   2 st/nd Thirumurai   Song # 3   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அருந்தானை, அன்பு செய்து ஏத்தகில்லார்பால்;
பொருந்தானை, பொய் அடிமைத் தொழில் செய்வாருள
விருந்தானை; வேதியர் ஓதி மிடை காழி
இருந்தானை; ஏத்துமின், நும் வினை ஏகவே!

4.101   4 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று,
வருந்தி நினைந்து, அரனே! என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோ-
திருந்திய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொருந்தும் தவம் உடைத் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

5.048   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந் திறல்(ல்) அமரர் அயன் மாலொடு
திருந்த நின்று வழிபடத் தேவியோடு
இருந்தவன்(ன்) எழில் ஆர், கச்சி ஏகம்பம்
பொருந்தச் சென்று புடைபட்டு எழுதுமே.

6.001   6 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந்தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன் தன்னை,
அமரர்கள்தம் பெருமானை, அரனை, மூவா-
மருந்து அமரர்க்கு அருள் புரிந்த மைந்தன் தன்னை,
மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி
சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையை, பெரும்பற்றப்புலியூரானை, -பேசாத
நாள் எல்லாம் பிறவா நாளே.

6.001   6 st/nd Thirumurai   Song # 5   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந்துணையை; அடியார் தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை; அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு, வான்
புலன்கள் அகத்து அடக்கி, மடவாரோடும்
பொருந்து அணைமேல் வரும் பயனைப் போக மாற்றி,
பொது நீக்கி, தனை நினைய வல்லோர்க்கு என்றும்
பெருந்துணையை; பெரும்பற்றப்புலியூரானை;- பேசாத
நாள் எல்லாம் பிறவா நாளே.

6.088   6 st/nd Thirumurai   Song # 6   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந்தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான் தன்னை; ஆராத   இன்னமுதை; அடியார் தம்மேல்
வரும் துயரம் தவிர்ப்பானை; உமையாள் நங்கை-மணவாள   நம்பியை; என் மருந்து தன்னை;
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு, துங்கப் பொழில் கெழுவு தரும், ஓமாம்புலியூர் நாளும்
திருந்து திரு வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே!.

6.091   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அருந்தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி, அடல் அரக்கன் தடவரையை எடுத்தான் திண்தோள்
முரிந்து, நெரிந்து, அழிந்து, பாதாளம் உற்று, முன் கை நரம்பினை எடுத்துக் கீதம் பாட,
இருந்தவனை; ஏழ் உலகும் ஆக்கினானை; எம்மானை; கைம்மாவின் உரிவை போர்த்த,
திருந்து எறும்பியூர் மலைமேல், மாணிக்கத்தை; செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே.

7.099   7 st/nd Thirumurai   Song # 2   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அருந்தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி, ஓர் ஆல் அதன் கீழ்
இருந்து, அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னைகொல் ஆம்!-
குருந்து அயலே குரவம்(ம்) அரவின்(ன்) எயிறு ஏற்று அரும்ப,
செருந்தி செம்பொன் மலரும்-திரு நாகேச்சுரத்து அரனே!

8.218   8 st/nd Thirumurai   Song # 7   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
அருந்தும் விடமணி யாம்மணி
   கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்
மருந்து மமிர்தமு மாகுமுன்
   னோன்தில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்துங் கடன்நெறி செல்லுமிவ்
   வாறு சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன
   யாமினி வாழ்வகையே.

8.223   8 st/nd Thirumurai   Song # 14   மாணிக்க வாசகர்    திருச்சிற்றம்பலக் கோவையார்  
அருந்தே ரழிந்தனம் ஆலமென்
   றோல மிடுமிமையோர்
மருந்தே ரணியம் பலத்தோன்
   மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்தே ரழிந்து பழங்கண்
   தருஞ்செல்வி சீர்நகர்க்கென்
வருந்தே ரிதன்முன் வழங்கேல்
   முழங்கேல் வளமுகிலே.

10.720   10 st/nd Thirumurai   Song # 11   திருமூலர்   திருமந்திரம்  
அருந்திய அன்ன மவைமூன்று கூறாம்
பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்ன
திருந்தும் உடல்மனம் ஆங்கது சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம தாகுமே.

11.033   11 st/nd Thirumurai   Song # 27   நம்பியாண்டார் நம்பி   திருத்தொண்டர் திருவந்தாதி  
அருந்தமி ழாகரன் வாதி
லமணைக் கழுநுதிமேல்
இருந்தமிழ் நாட்டிடை யேற்றுவித்
தோனெழிற் சங்கம்வைத்த
பெரும்தமிழ் மீனவன் தன்அதி
காரி பிரசமல்கு
குருந்தவிழ் சாரல் மணமேற்
குடிமன் குலச்சிறையே.

11.038   11 st/nd Thirumurai   Song # 18   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
அருந்தமிழ் விரகநிற் பரசுதும் திருந்திய
நிரைச்செழு மாளிகை
  நிலைதொறும் நிலைதொறும்
உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர்
சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்
தார்கெழு தண்டலை தண்பணை தழீஇக் (5)

12.020   12 st/nd Thirumurai   Song # 36   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
அருந்தவத் தொண்டர் தாமும்
அந்தணர் மொழியக் கேட்டுத்
திருந்திய மனைவி யாரைத்
தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையான் மூழ்கித்
தருகின்றேன் போது மென்று
பெருந்தவ முனிவ ரோடும்
பெயர்ந்துதம் மனையைச் சார்ந்தார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 209   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அருந்தனயன் உயிர்பெற்ற
அதுகண்டும் அமுதுசெயா
திருந்ததற்குத் தளர்வெய்தி
இடருழந்தார் துயர்நீங்க
வருந்துமவர் மனைப்புகுந்து
வாகீசத் திருமுனிவர்
விருந்தமுது செய்தருளி
விருப்பினுடன் மேவுநாள்.
12.250   12 st/nd Thirumurai   Song # 31   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அருந்தவர் எழுந்து செய்ய
அடியிணை விளக்கி வேறோர்
திருந்தும்ஆ சனத்தில் ஏறிப்
பரிகலந் திருத்து முன்னர்
இருந்துவெண் ணீறு சாத்தி
இயல்புடை இருவ ருக்கும்
பொருந்திய நீறு நல்கிப்
புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1171   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அருந்தவத்தோர் அந்தணர்கள்
அயலுள்ளோர் தாம்உய்யப்
பொருந்துதிரு நாள்ஓலை
பொருவிறந்தார் கொண்டணையத்
திருந்துபுகழ் நம்பாண்டார்
நம்பிசிறப் பெதிர்கொண்டு
வருந்தவத்தால் மகட்கொடுப்பார்
வதுவைவினை தொடங்குவார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1255   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அருந்தமிழா கரர்சரிதை
அடியேனுக் கவர்பாதம்
தரும்பரிசால் அறிந்தபடி
துதிசெய்தேன் தாரணிமேல்
பெருங்கொடையுந் திண்ணனவும்
பேருணர்வுந் திருத்தொண்டால்
வருந்தகைமைக் கலிக்காம
னார்செய்கை வழுத்துவேன்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D