சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அரி
அரியும்,     அரியொடு     அரிபிர     அரித்த     அரிக்கின்ற     அரியாகிக்     அரிஅரணஞ்     அரிகரியக்     அரியும்     அரியாரும்     அரிதன்     அரியோடு     அரியை     அரியாருங்     அரிதரு     அரிஅயனுக்     அரியானை     அரிதில்     அரிஅயனே     அரிசனமும்     அரிய     அரிஅயற்     அரிவைகா     அரியஅத்     அரிவையர்     அரியணை     அரியன     அரி,     அரிச்சு     அரிசிலின்     அரி     அரிச்சு,     அரியானை,     அரிச்சந்திரத்து     அரிபிரமர்     அரித்து     அரியானே     அரிக்கும்,|     அரிவையோர்    
1.058   1 st/nd Thirumurai   Song # 1   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரியும், நம் வினை உள்ளன ஆசு அற
வரி கொள் மாமணி போல் கண்டம்
கரியவன், திகழும் கரவீரத்து எம்
பெரியவன், கழல் பேணவே.

1.122   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரியொடு மலரவன் என இவர் அடி முடி
தெரி வகை அரியவர், திருவடி தொழுது எழ,
எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவு உறல்
புரிதரும் மன்னவர் புகழ் மிக உளதே.

3.054   3 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அரிய காட்சியராய், தமது அங்கை சேர்
எரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்
கரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்,
பெரியர்; ஆர் அறிவார், அவர் பெற்றியே?

4.030   4 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழலுண்ண வைத்தார்
பரிய தீ வண்ணர் ஆகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார்
கரியது ஓர் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

4.099   4 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரி, அயன், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்,
உரிய நின் கொற்றக் கடைத்தலையார் உணங்காக் கிடந்தார்;
புரிதரு புன் சடைப் போக முனிவர் புலம்புகின்றார்;-
எரிதரு செஞ்சடை ஏகம்ப!-என்னோ, திருக்குறிப்பே?

5.001   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரிச்சு உற்ற(வ்) வினையால் அடர்ப்புண்டு, நீர்,
எரிச் சுற்றக் கிடந்தார் என்று அயலவர்
சிரிச்சு உற்றுப் பல பேசப்படாமுனம்,
திருச் சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே!

5.010   5 st/nd Thirumurai   Song # 4   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரிய நால்மறை ஓதிய நாவரோ!
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ!
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ!
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே!

5.018   5 st/nd Thirumurai   Song # 7   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரிய நால்மறை ஆறு அங்கம் ஆய், ஐந்து
புரியன்; தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன்;
கரிய கண்டத்தினான்; கடம்பந்துறை
உரிய ஆறு நினை, மட நெஞ்சமே!

5.061   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரிசிலின் கரைமேல், அணி ஆர்தரு
புரிசை, நம் திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொடும் பரவிப் பணிவார்க்கு எலாம்
துரிசு இல் நன்நெறி தோன்றிடும்; காண்மினே!

5.085   5 st/nd Thirumurai   Song # 2   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார்,
அரி அயன் தொழுது ஏத்தும் அரும்பொருள்,
பெரியவன், சிராப்பள்ளியைப் பேணுவார்
அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே.

5.085   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரிச்சு, இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு,
சுரிச்சு இராது,-நெஞ்சே!-ஒன்று சொல்லக் கேள்:
திரிச் சிராப்பள்ளி என்றலும், தீவினை
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே.

6.001   6 st/nd Thirumurai   Song # 1   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரியானை, அந்தணர் தம் சிந்தை யானை,
அருமறையின் அகத்தானை, அணுவை, யார்க்கும்
தெரியாத தத்துவனை, தேனை, பாலை, திகழ் ஒளியை,
தேவர்கள்தம் கோனை, மற்றைக்
கரியானை, நான்முகனை, கனலை, காற்றை,
கனைகடலை, குலவரையை, கலந்து நின்ற
பெரியானை, பெரும்பற்றப்புலியூரானை,-பேசாத நாள்
எல்லாம் பிறவா நாளே.

6.051   6 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரிச்சந்திரத்து உள்ளார்; அம்பர் உள்ளார்; அரிபிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார்;
புரிச்சந்திரத்து உள்ளார்; போகத்து உள்ளார்; பொருப்பு அரையன் மகளோடு விருப்பர் ஆகி
எரிச் சந்தி வேட்கும் இடத்தார்; ஏம-கூடத்தார் பாடத் தேன் இசை ஆர் கீதர்;
விரிச்சு அங்கை எரிக் கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே.

6.074   6 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரிபிரமர் தொழுது ஏத்தும் அத்தன் தன்னை, அந்தகனுக்கு அந்தகனை, அளக்கல் ஆகா
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை, எண் ஆகிப் பண் ஆர் எழுத்து ஆனானை,
திரிபுரம் செற்று ஒருமூவர்க்கு அருள் செய்தானை, சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன் தன்னை,
நரி விரவு காட்டு அகத்தில் ஆடலானை,   நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.

6.084   6 st/nd Thirumurai   Song # 9   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அரிய பெரும் பொருள் ஆகி நின்றான் தன்னை; அலைகடலில் ஆலாலம் அமுது செய்த
கரியது ஒரு கண்டத்து, செங்கண் ஏற்று, கதிர்   விடு மா மணி பிறங்கு காட்சியானை;
உரிய பல தொழில் செய்யும் அடியார் தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பு இலானை;
தெரிவை ஒருபாகத்துச் சேர்த்தினானை; செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

7.007   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அரித்து நம்மேல் ஐவர் வந்து, இங்கு ஆறு அலைப்பான் பொருட்டால்,
சிரித்த பல் வாய் வெண்தலை போய் ஊர்ப்புறம் சேராமுன்,
வரிக் கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே .

7.044   7 st/nd Thirumurai   Song # 8   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்;
வரி தரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரி தரு புன்சடை வைத்த எம் புனிதற்கு, இனி
எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ, எம்பிரானுக்கே?

7.063   7 st/nd Thirumurai   Song # 6   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அரித்த நம்பி, அடி கை தொழுவார் நோய்; ஆண்ட நம்பி, முன்னை; ஈண்டு உலகங்கள்
தெரித்த நம்பி; ஒரு சே உடை நம்பி; சில்பலிக்கு என்று அகம் தோறும் மெய் வேடம்
தரித்த நம்பி; சமயங்களின் நம்பி; தக்கன் தன் வேள்வி புக்கு அன்று இமையோரை
இரித்த நம்பி; என்னை ஆள் உடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.

8.105.02   8 st/nd Thirumurai   Song # 18   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அரியானே யாவர்க்கும்! அம்பரவா! அம்பலத்து எம்
பெரியானே! சிறியேனை ஆட்கொண்ட பெய் கழல்கீழ்
விரை ஆர்ந்த மலர் தூவேன்; வியந்து அலறேன்; நயந்து உருகேன்;
தரியேன்; நான் ஆம் ஆறு என்? சாவேன்; நான் சாவேனே!

8.111   8 st/nd Thirumurai   Song # 3   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அரிக்கும்,| பிரமற்கும்,| அல்லாத |தேவர்கட்கும்,
தெரிக்கும் | படித்து அன்றி | நின்ற சிவம், | வந்து, நம்மை
உருக்கும், | பணி கொள்ளும், | என்பது கேட்டு, | உலகம் எல்லாம்
சிரிக்கும் | திறம் பாடி | தெள்ளேணம் | கொட்டாமோ!

9.025   9 st/nd Thirumurai   Song # 4   திருவாலியமுதனார்   திருவிசைப்பா  
அரிவையோர் கூறுகந்தான் அழகன்
   எழில் மால்கரியின்
உரிவைநல் உத்தரியம்
   உகந்தானும் பரார்தம்பிரான்
புரிபவர்க்(கு) இன்னருள்செய்
   புலியூர்த்திருச் சிற்றம்பலத்(து)
எரிமகிழ்ந் தாடுகின்ற
   எம்பிரான்என் இறையவனே.
10.204   10 st/nd Thirumurai   Song # 6   திருமூலர்   திருமந்திரம்  
அரிபிர மன்தக்கன் அற்க னுடனே
வருமதி வாலையும் வன்னிநல் இந்திரன்
சிரம்முகம் நாசி சிறந்தகை தோள்தாம்
அரனருள் இன்றி அழிந்தநல் லோரே.

10.307   10 st/nd Thirumurai   Song # 9   திருமூலர்   திருமந்திரம்  
அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே. 8,

10.924   10 st/nd Thirumurai   Song # 12   திருமூலர்   திருமந்திரம்  
அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித்
திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன்
விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.

11.008   11 st/nd Thirumurai   Song # 5   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனுந் தானே பரனாய

11.008   11 st/nd Thirumurai   Song # 191   சேரமான் பெருமாள் நாயனார்   திருக்கயிலாய ஞான உலா  
அரிஅரணஞ் செற்றாங் கலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் எரிஇரவில்

11.010   11 st/nd Thirumurai   Song # 4   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
அரிகரியக் கண்டவிடத் தச்சலிப்பாய் ஓடப்
பிரிவரிய தன் பிடியைப் பேணிக் கரிபெரிதும்
கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே
மையடுத்த கண்டன் மலை.

11.010   11 st/nd Thirumurai   Song # 5   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது  
அரியும் உழுவையுமே ஆளியுமே ஈண்டிப்
பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் சொரிய
எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே கூற்றம்
திரியாமற் செற்றான் சிலம்பு.

11.022   11 st/nd Thirumurai   Song # 15   கபிலதேவ நாயனார்    சிவபெருமான் திருவந்தாதி  
அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத் தமுதன் அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து.

11.029   11 st/nd Thirumurai   Song # 18   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
அரிதன் திருக்கண் இடநிரம்
பாயிரம் போதணிய
அரிதன் திருவடிக் கர்ச்சித்த
கண்ணுக் கருளுகம்பர்
அரிதன் திருக்கங் குலியால்
அழிந்த கயிலையல்லிங்
கரிதென் றிப்பதெம் பால்வெற்ப
எம்மையர்க் கஞ்சுதுமே.

11.036   11 st/nd Thirumurai   Song # 2   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக்கோவை  
அரியோடு நான்முகத்தோ னாதிசுரர்க் கெல்லாந்
தெரியாமைச் செந்தழலாய் நின்ற வொருவன்சீர்
தன்தலையின் மேல்தரித்த சம்பந்தன் தாளிணைகள்
என்தலையின் மேலிருக்க வென்று.

11.038   11 st/nd Thirumurai   Song # 15   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
அரியை நீ. எளியை நீ.
அறவன் நீ. துறவன் நீ.
பெரியை நீ உரியை நீ.
பிள்ளை நீ. வள்ளல் நீ.

11.038   11 st/nd Thirumurai   Song # 44   நம்பியாண்டார் நம்பி   ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்  
அரியாருங் கிரிநெறிஎங்
  ஙனம்நீர் வந்தீர்
அழகிதினிப் பயமில்லை
  அந்திக் கப்பால்
தெரியாபுன் சிறுநெறிகள்
  எந்தம் வாழ்விச்
சிறுகுடியின் றிரவிங்கே
  சிரமந் தீர்ந்திச்
சுரியார்மென் குழலியொடும்
  விடியச் சென்று
தொகுபுகழ்சேர் திருஞான
  சம்பந் தன்றன்
வரியாரும் பொழிலுமெழில்
  மதிலும் தோற்றும்
வயற்புகலிப் பதியினிது
  மருவ லாமே. 25
  பதிக வகை: ஈற்றடி மிக்குவந்த நான்கடிக் கலித்தாழிசை

12.000   12 st/nd Thirumurai   Song # 64   சேக்கிழார்   திருமலைச் சருக்கம்  
அரிதரு செந்நெற் சூட்டின்
அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்
பரிவுறத் தடிந்த பன்மீன்
படர்நெடுங் குன்று செய்வார்
சுரிவளை சொரிந்த முத்தின்
சுடர்ப்பெரும் பொருப்பு யர்ப்பார்
விரிமலர்க் கற்றை வேரி
பொழிந்திழி வெற்பு வைப்பார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 144   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அரிஅயனுக் கரியானை
அடியவருக் கெளியானை
விரிபுனல்சூழ் திருவதிகை
வீரட்டா னத்தமுதைத்
தெரிவரிய பெருந்தன்மைத்
திருநாவுக் கரசுமனம்
பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப்
பலபாடிப் பணிசெயுநாள்.
12.210   12 st/nd Thirumurai   Song # 175   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அரியானை என்றெடுத்தே அடியவருக்
கெளியானை அவர்தஞ் சிந்தை
பிரியாத பெரியதிருத் தாண்டகச்செந்
தமிழ்பாடிப் பிறங்கு சோதி
விரியாநின் றெவ்வுலகும் விளங்கியபொன்
அம்பலத்து மேவி ஆடல்
புரியாநின் றவர்தம்மைப் பணிந்துதமி
ழாற்பின்னும் போற்றல் செய்வார்.
12.210   12 st/nd Thirumurai   Song # 275   சேக்கிழார்   திருநின்ற சருக்கம்  
அரிதில் திறக்கத் தாம்பாட
அடைக்க அவர்பா டியஎளிமை
கருதி நம்பர் திருவுள்ளம்
அறியா தயர்ந்தேன் எனக்கவன்று
பெரிதும் அஞ்சித் திருமடத்தில்
ஒருபால் அணைந்து பேழ்கணித்து
மருவும் உணர்வில் துயில்கொண்டார்
வாய்மை திறம்பா வாகீசர்.
12.280   12 st/nd Thirumurai   Song # 4   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அரிஅயனே முதல்அமரர்
அடங்கஎழும் வெள்ளங்கள்
விரிசுடர்மா மணிப்பதணம்
மீதெறிந்த திரைவரைகள்
புரிசைமுதல் புறஞ்சூழ்வ
பொங்கோதம் கடைநாளில்
விரிஅரவ மந்தரஞ்சூழ்
வடம்போல வயங்குமால்.
12.280   12 st/nd Thirumurai   Song # 332   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அரிசனமும் குங்குமமும்
அரைத்தமைப்பார் அயலெல்லாம்
பரியஅகிற் குறைபிளந்து
புகைப்பார்கள் பாங்கெல்லாம்
எரியுமிழ்பேழ் வாய்த்தோணி
இரும்பீர்ப்பார் இடையெல்லாம்
விரிமலர்மென் புறவணிந்த
மீப்புலத்து வைப்பெல்லாம்.
12.280   12 st/nd Thirumurai   Song # 825   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அரிய காட்சியர் என்பதவ் வாதியைத்
தெரிய லாநிலை யால்தெரி யாரென
உரிய அன்பினிற் காண்பவர்க் குண்மையாம்
பெரிய நல்லடை யாளங்கள் பேசினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 1040   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அரிய நீர்மையில் அருந்தவம்
புரிந்தரன் அடியார்க்கு
உரிய அர்ச்சனை யுலப்பில
செய்தஅந் நலத்தால்
கரிய வாங்குழன் மனைவியார்
வயிறெனுங் கமலத்
துரிய பூமக ளெனவொரு
பெண்கொடி யுதித்தாள்.
12.290   12 st/nd Thirumurai   Song # 364   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அரிஅயற் கரியார் தாமும்
ஆயிழை யாரை நோக்கி
உரிமையால் ஊரன் ஏவ
மீளவும் உன்பால் வந்தோம்
முருகலர் குழலாய் இன்னம்
முன்புபோல் மறாதே நின்பால்
பிரிவுற வருந்து கின்றான்
வரப்பெற வேண்டும் என்றார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 387   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அரிவைகா ரணத்தி னாலே
ஆளுடைப் பரமர் தம்மை
இரவினில் தூது போக
ஏவியங் கிருந்தான் தன்னை
வரவெதிர் காண்பே னாகில்
வருவதென் னாங்கொல் என்று
விரவிய செற்றம் பற்றி
விள்ளும்உள் ளத்த ராகி.
12.360   12 st/nd Thirumurai   Song # 48   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அரிய தில்லை எனக் கேட்ட
பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிர வக்கோலப்
பிரானார் அருளிச் செய்வார்யாம்
பரியுந் தொண்டீர் மூவிருது
கழித்தாற் பசுவீழ்த் திடவுண்ப
துரிய நாளு மதற்கின்றால்
ஊட்ட அரிதாம் உமக்கென்றார்.
12.360   12 st/nd Thirumurai   Song # 55   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அரிய கற்பின் மனைவியார்
அவரை நோக்கி யுரைசெய்வார்
பெரிய பயிர வத்தொண்டர்
அமுது செய்யப் பெறுமதற்கிங்
குரியவகையால் அமுதமைப்போம்
ஒருவ னாகி ஒருகுடிக்கு
வருமச் சிறுவன் தனைப்பெறுமாறு
எவ்வா றென்று வணங்குதலும்.
12.530   12 st/nd Thirumurai   Song # 12   சேக்கிழார்   கடல் சூழ்ந்த சருக்கம்  
அரியஅத் திருத்தொண் டாற்றும்
அரசனார் அளவில் காலம்
மருவிய வுரிமை தாங்கி
மாலயற் கரியார் மன்னும்
திருவருட் சிறப்பி னாலே
செய்யசே வடியி னீழல்
பெருகிய வுரிமை யாகும்
பேரருள் எய்தி னாரே.
12.720   12 st/nd Thirumurai   Song # 24   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
அரிவையர் தெருவில் நடம்பயில்
அணிகிளர் தளிரடி தங்கிய
பரிபுர வொலிகள் கிளர்ந்தன
பணைமுர சொலிகள் பரந்தன
சுரிவளை நிரைகள் முரன்றன
துணைவர்கள் இருவரும் வந்தணி
விரிதரு பவன நெடுங்கடை
விறன்மத கரியி னிழிந்தனர்.
12.720   12 st/nd Thirumurai   Song # 26   சேக்கிழார்   வெள்ளானைச் சருக்கம்  
அரியணை யதனில் விளங்கிட
அடன்மழ விடையென நம்பியை
வரிமலர் அமளி அமர்ந்திட
மலையர்கள் தலைவர் பணிந்தபின்
உரிமைநல் வினைகள் புரிந்தன
உரைமுடி விலவென முன்செய்து
பரிசனம் மனமகி ழும்படி
பலபட மணிநிதி சிந்தினர்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF