சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அன்று
அன்று     அன்றுநின்     அன்றுந்     அன்றுவெள்     அன்றுய்ந்த     அன்றும்     அன்றுதிரு     அன்றுபோய்ப்     அன்றுதான்     அன்று,    
1.112   1 st/nd Thirumurai   Song # 2   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்று அடல் காலனைப் பாலனுக்கு ஆய்ப்
பொன்றிட உதை செய்த புனிதன் நகர்
வென்றி கொள் எயிற்று வெண்பன்றி முன்நாள்
சென்று அடி வீழ்தரு சிவபுரமே.

1.125   1 st/nd Thirumurai   Song # 9   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்று இயல் உருவு கொள் அரி அயன் எனுமவர்
சென்று அளவிடல் அரியவன் உறை சிவபுரம்
என்று இரு பொழுதும் முன் வழிபடுமவர் துயர்
ஒன்று இலர்; புகழொடும் உடையர், இவ் உலகே.

2.089   2 st/nd Thirumurai   Song # 8   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்று அ(வ்) ஆல் நிழல் அமர்ந்து அற உரை
நால்வர்க்கு அருள
பொன்றினார் தலை ஓட்டில் உண்பது, பொருகடல்
இலங்கை
வென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய்
குன்றம் அன்ன பொன் மாடக் கொச்சை வயம்
அமர்ந்தாரே.

3.065   3 st/nd Thirumurai   Song # 5   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்று ஆலின் கீழ் இருந்து, அங்கு அறம் உரைத்த அருள
குன்றாத வெஞ்சிலையில் கோள் அரவம் நாண் கொளுவி,
ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய
நின்றாரும் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.

3.108   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அன்று முப்புரம் செற்ற அழக! நின்
துன்று பொன்கழல் பேணா அருகரைத்
தென்ற வாதுசெயத் திரு உள்ளமே?
கன்று சாக்கியர் காணாத் தலைவனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!

5.022   5 st/nd Thirumurai   Song # 10   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அன்றுதான் அரக்கன் கயிலாயத்தைச்
சென்று தான் எடுக்க(வ்), உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு, நல்விரல் ஊன்றி, பின்
கொன்று, கீதம் கேட்டான், குடமூக்கிலே.

6.050   6 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை, அகத்தியனை உகப்பானை, அயன் மால் தேட
நின்றானை, கிடந்த கடல் நஞ்சு உண்டானை, நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும்
வென்றானை, மீயச்சூர் மேவினானை, மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கல் உற்றுச்
சென்றானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே.

7.028   7 st/nd Thirumurai   Song # 3   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அன்று ஆலின்(ன்) நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள் புரிந்து,
கொன்றாய், காலன்; உயிர் கொடுத்தாய், மறையோனுக்கு; மான்
கன்று ஆரும் கரவா! கடவூர்த் திரு வீரட்டத்துள்
என் தாதை! பெருமான்! எனக்கு ஆர் துணை, நீ அலதே? .

7.062   7 st/nd Thirumurai   Song # 5   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன், ஆள் அது ஆக! என்று ஆவணம் காட்டி,
நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்திலத் திரள்-தொத்தினை; முத்திக்கு
ஒன்றினான் தனை; உம்பர் பிரானை; உயரும் வல் அரணம் கெடச் சீறும்
குன்ற வில்லியை மெல்லியல் உடனே கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

7.062   7 st/nd Thirumurai   Song # 7   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
அன்று அயன் சிரம் அரிந்து, அதில் பலி கொண்டு, அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை;
துன்று பைங்கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை; சுடர் போல் ஒளியானை;
மின்தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை; வாசம் மா முடிமேல்
கொன்றை அம் சடைக் குழகனை; அழகு ஆர் கோலக் காவினில் கண்டு கொண்டேனே .

8.113   8 st/nd Thirumurai   Song # 13   மாணிக்க வாசகர்    திருவாசகம்  
அன்று, ஆல நீழல் கீழ் அரு மறைகள், தான் அருளி,
நன்று ஆக வானவர், மா முனிவர், நாள்தோறும்,
நின்று, ஆர ஏத்தும் நிறை கழலோன், புனை கொன்றைப்
பொன் தாது பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!

10.705   10 st/nd Thirumurai   Song # 10   திருமூலர்   திருமந்திரம்  
அன்றுநின் றான்கிடந் தான்அவன் என்றென்று
சென்றுநின் றெண்டிசை ஏத்துவர் தேவர்கள்
என்றுநின் றேத்துவன் எம்பெரு மான்றன்னை
ஒன்றிஎன் உள்ளத்தி னுள்இருந் தானே. 6,

11.004   11 st/nd Thirumurai   Song # 61   காரைக்கால் அம்மையார்    அற்புதத் திருவந்தாதி  
அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது

11.006   11 st/nd Thirumurai   Song # 101   சேரமான் பெருமாள் நாயனார்   பொன்வண்ணத்தந்தாதி  
அன்றுவெள் ளானையின் மீதிமை
யோர்சுற் றணுகுறச்செல்
வன்றொண்டர் பின்பரி மேற்கொண்டு
வெள்ளி மலைஅரன்முன்
சென்றெழில் ஆதி உலாஅரங்
கேற்றிய சேரர்பிரான்
மன்றிடை ஓதுபொன் வண்ணத்
தந்தாதி வழங்கிதுவே.

11.016   11 st/nd Thirumurai   Song # 29   நக்கீரதேவ நாயனார்   போற்றித் திருக்கலி வெண்பா  
அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து
நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து நன்று

11.029   11 st/nd Thirumurai   Song # 30   பட்டினத்துப் பிள்ளையார்   திருஏகம்பமுடையார் திருவந்தாதி  
அன்றும் பகையடர்க் கும்பரி
மாவும் மதவருவிக்
குன்றும் பதாதியுந் தேருங்
குலவிக் குடைநிழற்கீழ்
நின்றும் பொலியினுங் கம்பர்நன்
நீறு நுதற்கிலரேல்
என்றும் அரசும் முரசும்
பொலியா இருநிலத்தே.

12.290   12 st/nd Thirumurai   Song # 184   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அன்று வெண்ணெய் நல்லூரில்
அரியும் அயனுந் தொடர்வரிய
வென்றி மழவெள் விடையுயர்த்தார்
வேத முதல்வ ராய்வந்து
நின்று சபைமுன் வழக்குரைத்து
நேரே தொடர்ந்தாட் கொண்டவர்தாம்
இன்றிங் கெய்தப் பெற்றோமென்று
எயில்சூழ் காஞ்சிநகர் வாழ்வார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 236   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அன்று வெண்ணெய் நல்லூரில்
வலிய ஆண்டு கொண்டருளி
ஒன்று மறியா நாயேனுக்
குறுதி யளித்தீர் உயிர்காக்க
இன்றும் இவளை மணம்புணர்க்க
ஏன்று நின்றீர் எனப்போற்றி
மன்றல் மலர்ச்சே வடியிணைக்கீழ்
வணங்கி மகிழ்ந்தார் வன்தொண்டர்.
12.290   12 st/nd Thirumurai   Song # 302   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அன்றுதிரு நோக்கொன்றால்
ஆரக்கண் டின்புறார்
நின்றுநில மிசைவீழ்ந்து
நெடிதுயிர்த்து நேரிறைஞ்சி
வன்தொண்டர் திருவாரூர்
மயங்குமா லையிற்புகுந்து
துன்றுசடைத் தூவாயார்
தமைமுன்னந் தொழவணைந்தார்.
12.340   12 st/nd Thirumurai   Song # 10   சேக்கிழார்   வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்  
அன்றுபோய்ப் பிற்றைநாள்
அந்நியதிக் கணையுங்கால்
கொன்றைமுடி யார்மேற்றாங்
கல்லெறிந்த குறிப்பதனை
நின்றுணர்வா ரெனக்கப்போ
திதுநிகழ்ந்த தவரருளே
என்றதுவே தொண்டாக
வென்றுமது செயநினைந்தார்.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81