![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அந்நிலை
அந்நிலையே
அந்நிலைஆ
அந்நிலை
அந்நிலையில்
அந்நிலைமை
அந்நிலைமைத்
அந்நிலைமைச்
12.000
12 st/nd Thirumurai
Song # 121
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
அந்நிலையே உயிர்பிரிந்த
ஆன்கன்றும் அவ்வரசன்
மன்னுரிமைத் தனிக்கன்றும்
மந்திரியும் உடனெழலும்
இன்னபரி சானானென்
றறிந்திலன்வேந் தனும்யார்க்கும்
முன்னவனே முன்னின்றால்
முடியாத பொருளுளதோ.
12.000
12 st/nd Thirumurai
Song # 220
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
அந்நிலைஆ ரூரனுணர்ந்
தருமறையோ யுன்னடியென்
சென்னியில்வைத் தனையென்னத்
திசையறியா வகைசெய்தது
என்னுடைய மூப்புக்காண்
என்றருள அதற்கிசைந்து
தன்முடியப் பால்வைத்தே
துயிலமர்ந்தான் தமிழ்நாதன்.
12.020
12 st/nd Thirumurai
Song # 40
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
அந்நிலை யவரைக் காணும்
அதிசயங் கண்டா ரெல்லாம்
முன்னிலை நின்ற வேத
முதல்வரைக் கண்டா ரில்லை
இந்நிலை இருந்த வண்ணம்
என்னென மருண்டு நின்றார்
துன்னிய விசும்பி னூடு
துணையுடன் விடைமேற் கண்டார்.
12.080
12 st/nd Thirumurai
Song # 53
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
அந்நிலை எழுந்த சேனை
ஆர்கலி ஏழு மொன்றாய்
மன்னிய ஒலியின் ஆர்ப்ப
மண்ணெலாம் மகிழ்ந்து வாழ்த்தப்
பொன்னெடும் பொதுவில் ஆடல்
நீடிய புனிதர் பொற்றாள்
சென்னியிற் கொண்டு சென்னி
திருவளர் கோயில் புக்கான்.
12.100
12 st/nd Thirumurai
Song # 155
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
அந்நிலையில் அன்பனார்
அறிந்தநெறி பூசிப்ப
மன்னியஆ கமப்படியால்
மாமுனிவர் அருச்சித்திங்
கென்னுடைய நாயகனே
இதுசெய்தார் தமைக்காணேன்
உன்னுடைய திருவருளால்
ஒழித்தருள வேண்டுமென.
12.210
12 st/nd Thirumurai
Song # 33
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
அந்நிலையில் மிகப்புலம்பி
அன்னையும்அத் தனும்அகன்ற
பின்னையுநான் உமைவணங்கப் பெறுதலினால் உயிர்தரித்தேன்
என்னையினித் தனிக்கைவிட்
டேகுவீர் எனில்யானும்
முன்னம் உயிர் நீப்பனென
மொழிந்திடரின் அழுந்தினார்.
12.210
12 st/nd Thirumurai
Song # 416
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
அந்நிலைமை தனில்ஆண்ட
அரசுபணி செய்யஅவர்
நன்னிலைமை காட்டுவார்
நம்பர்திரு மணிமுன்றில்
தன்னில்வரும் உழவாரம்
நுழைந்தவிடந் தானெங்கும்
பொன்னினொடு நவமணிகள்
பொலிந்திலங்க அருள்செய்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 64
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்நிலையில் திருத்தோணி
வீற்றிருந்தார் அருள்நோக்கால்
முன்நிலைமைத் திருத்தொண்டு
முன்னியவர்க் கருள்புரிவான்
பொன்மலைவல் லியுந்தாமும்
பொருவிடைமே லெழுந்தருளிச்
சென்னியிளம் பிறைதிகழச்
செழும்பொய்கை மருங்கணைந்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 109
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார்
தமைமுன்னம் அளித்த தாயார்
முன்னுதிக்க முயன்றதவத் திருநன்னி
பள்ளிமுதன் மறையோர் எல்லாம்
மன்னுபெரு மகிழ்ச்சியுடன் மங்கலதூ
ரியந்துவைப்ப மறைகள் ஓதிக்
கன்னிமதிற் சண்பைநகர் வந்தணைந்து
கவுணியர்கோன் கழலில் தாழ்ந்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 334
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்நிலைமை ஆளுடைய
பிள்ளையார்க் கவர்களெலாம்
முன்னறிவித் திறைஞ்சுதலும்
முதல்வனார் அருள்தொழுதே
இந்நிலத்தின் இயல்பெனினும்
நமக்கெய்தப் பெறாஎன்று
சென்னிமதி யணிந்தாரைத்
திருப்பதிகம் பாடுவார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 596
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்நிலை அணைந்த போதில்
அம்பிகை யுடனே கூட
மன்னிய ஆடல் காட்டத்
தளரிள வளரும் பாடிச்
சென்னியால் வணங்கி வாய்மூர்
அரசொடுஞ் சென்று புக்கங்
கின்னியல் புறமுன் கூடி
இருவரும் போற்றி செய்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1141
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்நிலைமை யடைந்துதிளைத்
தாங்கெய்தாக் காலத்தின்
மன்னுதிரு அம்பலத்தை
வலங்கொண்டு போந்தருளிப்
பொன்னணிமா ளிகைவீதிப்
புறத்தணைந்து போதுதொறும்
இன்னிசைவண் தமிழ்பாடிக்
கும்பிட்டங் கினிதமர்ந்தார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 91
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற
அன்பனார் இன்பவெள் ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்துடன் பரவி
வளம்பதி யதனிடை மருவிப்
பொன்மணி மன்றுள் எடுத்தசே வடியார்
புரிநடங் கும்பிடப் பெற்றால்
என்னினிப் புறம்போய் எய்துவ தென்று
மீண்டெழுந் தருளுதற் கெழுவார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 371
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்நிலை மைக்கண் மன்மதன்
வாளிக் கழிவார்தம்
மன்னுயிர் நல்குந் தம்பெரு
மானார் வந்தெய்த
முன்னெதிர் சென்றே மூவுல
குஞ்சென் றடையுந்தாள்
சென்னியில் வைத்தென் சொல்லுவ
ரென்றே தெளியாதார்.
12.300
12 st/nd Thirumurai
Song # 10
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்நிலைமைத் தானத்தை
அகலாத தொருகருத்து
முன்னியெழுங் குறிப்பினால்
மூளும் ஆதரவெய்தப்
பின்னுமகன் றேகுவார்
பேணவருங் கோக்குலங்கள்
பொன்னிநதிக் கரைப்புறவிற்
புலம்புவன எதிர்கண்டார்.
12.340
12 st/nd Thirumurai
Song # 4
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
அந்நிலைமைச் சாக்கியர்தம்
அருங்கலைநூல் ஓதிஅது
தன்னிலையும் புறச்சமயச்
சார்வுகளும் பொருளல்ல
என்னுமது தெளிந்தீச
ரருள்கூட ஈறில்சிவ
நன்னெறியே பொருளாவ
தெனவுணர்வு நாட்டுவார்.
12.530
12 st/nd Thirumurai
Song # 9
சேக்கிழார்
கடல் சூழ்ந்த சருக்கம்
அந்நிலை யணைய வந்து
செருத்துணை யாராம் அன்பர்
முன்னுறு நிலைமை யங்குப்
புகுந்தது மொழிந்த போது
மன்னரும் அவரை நோக்கி
மற்றிதற் குற்ற தண்டம்
தன்னைஅவ் வடைவே யன்றோ
தடிந்திடத் தகுவ தென்று.
12.570
12 st/nd Thirumurai
Song # 11
சேக்கிழார்
கடல் சூழ்ந்த சருக்கம்
அந்நிலையே சிவபெருமான்
அன்பர்எதிர் வெளியேநின்று
உன்னுடைய கைவாளால்
உறுபாசம் அறுத்தகிளை
பொன்னுலகின் மேலுலகம்
புக்கணையப் புகழோய்நீ
இந்நிலைநம் முடன்அணைகஎன்
றுஏவியெழுந் தருளினார்.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88