![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அந்த
அந்தமும்
அந்தம்
அந்தரத்தில்-தேர்
அந்திமதியோடும்
அந்தணாளர்தம்
அந்திவண்
அந்தண
அந்தண்மை
அந்தமி
அந்திப்பன்
அந்த
அந்தமில்
அந்தமு
அந்தரஞ்
அந்தம்ஓர்
அந்தக்
அந்தணனைத்
அந்துகில்
அந்துகிலும்
அந்தவிள
அந்தி
அந்தாழ்
அந்தமுந்
அந்தணர்
அந்தரத்
அந்தணனாம்
அந்திப்
அந்தணர்கள்
அந்தண்
அந்தணரின்
அந்தணர்சூ
அந்தியும்நண்
அந்தியிளம்
அந்தணர்தஞ்
அந்தரம்
அந்தணாளர்
அந்தியை,
அந்தகனை
அந்தணாளன்
அந்தியும்
அந்தமும்,
அந்தியின்
அந்திபோல்
1.006
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தமும் ஆதியும், நான்முகனும் அரவு அணையானும், அறிவு அரிய,
மந்திரவேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த! சொல்லாய்
செந்தமிழோர்கள் பரவி ஏத்தும் சீர் கொள் செங்காட்டங்குடி அதனுள்
கந்தம் அகில் புகையே கமழும் கணபதியீச்சுரம் காமுறவே?
1.032
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் அறியாத அருங் கலம் உந்திக்
கந்தம் கமழ் காவிரிக் கோலக் கரை மேல்,
வெதபொடிப் பூசிய வேத முதல்வன்-
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ.
1.039
1 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆர் அழல் அங்கை அமர்ந்து இலங்க;
மந்த முழவம் இயம்ப; மலைமகள் காண, நின்று ஆடி;
சந்தம் இலங்கு நகுதலை, கங்கை, தண்மதியம், அயலே ததும்ப;
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே.
1.062
1 st/nd Thirumurai
Song # 8
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப,
சுந்தரத் தன் திருவிரலால் ஊன்ற, அவன் உடல் நெரிந்து,
மந்திரத்த மறை பாட, வாள் அவனுக்கு ஈந்தானும்
கொந்து அரத்த மதிச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.
1.073
1 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆதி அயனும் மாலும் ஆர்க்கும் அறிவு அரியான்,
சிந்தையுள்ளும் நாவின்மேலும் சென்னியும் மன்னினான்,
வந்து என் உள்ளம் புகுந்து மாலைகாலை ஆடுவான்-
கந்தம் மல்கு கானூர் மேய எந்தை பெம்மானே.
1.085
1 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்திமதியோடும் அரவச் சடை தாழ,
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டு எரி ஆடி;
சிந்தித்து எழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி; நமை ஆள்வான்-நல்லம் நகரானே.
1.094
1 st/nd Thirumurai
Song # 4
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய்
பந்தி ஆர் கழல் சிந்தை செய்ம்மினே!
1.096
1 st/nd Thirumurai
Song # 7
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தணாளர்தம் தந்தை! அன்னியூர்
எந்தையே! என, பந்தம் நீங்குமே.
1.114
1 st/nd Thirumurai
Song # 10
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் இல் ஞானசம்பந்தன் நல்ல
செந்து இசை பாடல் செய் மாற்பேற்றைச்
சந்தம் இன் தமிழ்கள் கொண்டு ஏத்த வல்லார்
எந்தை தன் கழல் அடி எய்துவரே.
2.034
2 st/nd Thirumurai
Song # 11
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும்
பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை, ஆரச்
சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி,
வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.
3.028
3 st/nd Thirumurai
Song # 3
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும்,
செந்தமிழ்க் கீதமும், சீரினால் வளர்தர,
பந்து அணை மெல்விரலாளொடும் பயில்வு இடம்
மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே.
3.045
3 st/nd Thirumurai
Song # 1
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் ஆய், உலகு ஆதியும் ஆயினான்,
வெந்த வெண் பொடிப் பூசிய வேதியன்,
சிந்தையே புகுந்தான்-திரு ஆரூர் எம்
எந்தைதான்; எனை ஏன்று கொளும்கொலோ?
3.071
3 st/nd Thirumurai
Song # 9
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தம் முதல்-ஆதி பெருமான் அமரர்கோனை, அயன் மாலும் இவர்கள்
எந்தைபெருமான்! இறைவன்! என்று தொழ, நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம்
சிந்தை செய்து பாடும் அடியார், பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள்
வந்து பல சந்த மலர், முந்தி அணையும் பதி நல் வைகாவிலே.
3.086
3 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தரம் உழிதரு திரிபுரம், ஒரு நொடி அளவினில்
மந்தர வரிசிலை அதன் இடை அரவு அரிவாளியால்,
வெந்து அழிதர எய்த விடலையர்; விடம் அணி மிடறினர்
செந்தழல் நிறம் உடை அடிகள் தம் வள நகர் சேறையே.
3.108
3 st/nd Thirumurai
Song # 5
திருஞானசம்பந்த சுவாமிகள்
திருக்கடைக்காப்பு
அந்தணாளர் புரியும் அருமறை
சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
சிந்த, வாதுசெயத் திரு உள்ளமே?
வெந்த நீறு அது அணியும் விகிர்தனே!
ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென்-
ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
4.034
4 st/nd Thirumurai
Song # 4
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தரம் தேர் கடாவி, ஆர் இவன்? என்று சொல்லி,
உந்தினான் மாமலையை ஊன்றலும், ஒள் அரக்கன்
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டு அலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார்-திரு மறைக்காடனாரே.
4.088
4 st/nd Thirumurai
Song # 9
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தியை, நல்ல மதியினை, யார்க்கும் அறிவு அரிய
செந்தியை வாட்டும் செம்பொன்னினை, சென்று அடைந்தேனுடைய
புந்தியைப் புக்க அறிவினை, பூந்துருத்தி(ய்) உறையும்
நந்தியை, நங்கள் பிரான் தனை-நான் அடி போற்றுவதே.
4.095
4 st/nd Thirumurai
Song # 2
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர்! அண்டம் எண்திசையும்
பந்தமும் வீடும் பரப்புகின்றீர்! பசு ஏற்று உகந்தீர்
வெந்தழல் ஓம்பும் மிழலை உள்ளீர்!-என்னைத் தென்திசைக்கே
உந்திடும்போது மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
4.098
4 st/nd Thirumurai
Song # 1
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன், ஐயாறு அமர்ந்து வந்து என்
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும், பொய் என்பனோ?-
சிந்தி வட்டச்சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
4.113
4 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தி வட்டத்து இளங்கண்ணியன், ஆறு அமர் செஞ்சடையான்,
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும்,- பொய் என்பனோ-
சந்தி வட்டச் சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே?
5.083
5 st/nd Thirumurai
Song # 8
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தம் இல் புகழ் ஆயிழையார் பணிந்து,
எந்தை! ஈசன்! என்று ஏத்தும் இறைவனை,
கந்த வார் பொழில் நாகைக்காரோணனை,
சிந்தை செய்யக் கெடும், துயர்; திண்ணமே.
6.096
6 st/nd Thirumurai
Song # 5
திருநாவுக்கரசர்
தேவாரம்
அந்தகனை அயில் சூலத்து அழுத்திக் கொண்டார்; அரு மறையைத் தேர்க்குதிரை ஆக்கிக் கொண்டார்;
சுந்தரனைத் துணைக் கவரி வீசக் கொண்டார்; சுடுகாடு நடம் ஆடும் இடமாக் கொண்டார்;
மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக் கொண்டார்; மாகாளன் வாசல் காப்பு ஆகக் கொண்டார்;
தந்திர மந்திரத்தராய் அருளிக் கொண்டார் சமண் தீர்த்து என் தன்னை ஆட் கொண்டார் தாமே.
7.043
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்தொறும்
சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே?
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம்
முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே!
7.055
7 st/nd Thirumurai
Song # 1
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக் காப்பது காரணம் ஆக,
வந்த காலன் தன் ஆர் உயிர் அதனை வவ்வினாய்க்கு, உன் தன் வன்மை கண்டு அடியேன்,
எந்தை! நீ எனை நமன் தமர் நலியின், இவன் மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
7.081
7 st/nd Thirumurai
Song # 8
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தம் இல்லா அடியார் தம் மனத்தே உற
வந்து, நாளும் வணங்கி, மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே.
7.083
7 st/nd Thirumurai
Song # 1
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன்,
சிந்தை பராமரியா தென்திரு ஆரூர் புக்கு,
எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே?
8.102
8 st/nd Thirumurai
Song # 21
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்,
எம்தமை ஆண்ட பரிசுஅது பகரின்
ஆற்றல் அது உடை, அழகு அமர் திரு உரு,
நீற்றுக் கோடி நிமிர்ந்து, காட்டியும்;
ஊனம் தன்னை ஒருங்கு உடன் அறுக்கும்
8.103
8 st/nd Thirumurai
Song # 11
மாணிக்க வாசகர்
திருவாசகம்
அந்தமும், ஆதியும், அகன்றோன் காண்க!
பந்தமும், வீடும், படைப்போன் காண்க!
நிற்பதும், செல்வதும், ஆனோன் காண்க!
கற்பமும், இறுதியும், கண்டோன் காண்க!
யாவரும் பெற உறும் ஈசன் காண்க!
8.212
8 st/nd Thirumurai
Song # 10
மாணிக்க வாசகர்
திருச்சிற்றம்பலக் கோவையார்
அந்தியின் வாயெழி லம்பலத்
தெம்பரன் அம்பொன்வெற்பிற்
பந்தியின் வாய்ப்பல வின்சுளை
பைந்தே னொடுங்கடுவன்
மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ்
சிலம்ப மனங்கனிய
முந்தியின் வாய்மொழி நீயே
மொழிசென்றம் மொய்குழற்கே.
9.010
9 st/nd Thirumurai
Song # 10
கருவூர்த் தேவர்
திருவிசைப்பா
அந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்
அழகிய சடையும்வெண் ணீறும்
சிந்தையால் நினையிற் சிந்தையும் காணேன்;
செய்வதென் தெளிபுனல் அலங்கல்
கெந்தியா வுகளும் கொண்டைபுண் டரீகம்
கிழிக்கும்தண் பணைசெய்கீழ்க் கோட்டூர்
வந்தநாள் மணியம் பலத்துள்நின் றாடும்
மைந்தனே அறியும்என் மனமே.
10.101
10 st/nd Thirumurai
Song # 42
திருமூலர்
திருமந்திரம்
அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று
சிந்தைசெய் வண்ணந் திருந்தடி யார்தொழ
முந்திவண் ணாமுதல் வாபர னேஎன்று
வந்திவ்வண் ணம்எம் மனம்புகுந் தானே.
10.115
10 st/nd Thirumurai
Song # 1
திருமூலர்
திருமந்திரம்
அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர்
செந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்
தந்தவ நற்கரு மத்துநின் றாங்கிட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே.
10.115
10 st/nd Thirumurai
Song # 11
திருமூலர்
திருமந்திரம்
அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே.
10.404
10 st/nd Thirumurai
Song # 17
திருமூலர்
திருமந்திரம்
அந்தமி லானுக் ககலிடந் தானில்லை
அந்தமி லானை அளப்பவர் தாமில்லை
அந்தமி லானுக் கடுத்தசொல் தானில்லை
அந்தமி லானை அறிந்துகொள் பத்தே.
10.406
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
அந்தம் பதினா லதுவே வயிரவி
முந்தும் நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத் தெழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகிநின் றாளே.
10.406
10 st/nd Thirumurai
Song # 15
திருமூலர்
திருமந்திரம்
அந்தம் நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரைசெய்யும்
செந்தமி ழாதி தெளிந்து வழிபடும்
நந்தி இதனை நவம்உரைத் தானே.
10.409
10 st/nd Thirumurai
Song # 12
திருமூலர்
திருமந்திரம்
அந்தமும் ஈறும் முதலா னவைஅற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருட மானதே.
10.512
10 st/nd Thirumurai
Song # 3
திருமூலர்
திருமந்திரம்
அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.
10.719
10 st/nd Thirumurai
Song # 1
திருமூலர்
திருமந்திரம்
அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு
வந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே.
10.719
10 st/nd Thirumurai
Song # 4
திருமூலர்
திருமந்திரம்
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.
10.720
10 st/nd Thirumurai
Song # 5
திருமூலர்
திருமந்திரம்
அந்தமு மாதியு மாகிப் பராபரன்
வந்த வியாபி யெனலாகு மந்நெறி
கந்தம தாகிய காரண காரியம்
தந்தைங் கருமமுந் தான்செய்யும் வீயமே.
10.807
10 st/nd Thirumurai
Song # 11
திருமூலர்
திருமந்திரம்
அந்தரஞ் சுத்தவத் தைகே வலத்தாறு
தந்தோர்தஞ் சுத்தகேவ லத்தற்ற தற்பரத்
தின்பால் துரியத் திடையே அறிவுறத்
தன்பால் தனையறி தத்துவந் தானே.
10.815
10 st/nd Thirumurai
Song # 2
திருமூலர்
திருமந்திரம்
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அதிசுத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறிவார் அமலத்தர்
அந்தம்ஓர் ஆறும் அறியா ரவர்தமக்(கு)
அந்தமொ டாதி அறியஒண் ணாதே.
10.837
10 st/nd Thirumurai
Song # 8
திருமூலர்
திருமந்திரம்
அந்தமும் ஆதியும ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னில் பரமுடன்
நந்தமை உண்டுமெய்ஞ் ஞானஞே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாம்அறி யோமே. 38,
10.843
10 st/nd Thirumurai
Song # 12
திருமூலர்
திருமந்திரம்
அந்தக் கருவை அருவை வினைசெய்தற்
பந்தப் பனிஅச்சம் பல்பிறப் பும்வாட்டிச்
சிந்தை திருத்தலும் சேர்ந்தார்அச் சோதனை
சந்திக்கத் தற்பர மாகும் சதுரர்க்கே.
10.928
10 st/nd Thirumurai
Song # 21
திருமூலர்
திருமந்திரம்
அந்தம் கடந்தும் அதுவது வாய்நிற்கும்
பெந்த உலகினிற் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகெங்குந் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பது வாமே.
11.003
11 st/nd Thirumurai
Song # 4
காரைக்கால் அம்மையார்
திரு இரட்டை மணிமாலை
அந்தணனைத் தஞ்சம்என் றாட்பட்டார் ஆழாமே
வந்தணைந்து காத்தளிக்கும் வல்லாளன் - கொந்தணைந்த
பொன்கண்டால் பூணாதே கோள்அரவம் பூண்டானே
என்கண்டாய் நெஞ்சே இனி.
11.006
11 st/nd Thirumurai
Song # 46
சேரமான் பெருமாள் நாயனார்
பொன்வண்ணத்தந்தாதி
அந்தண ராமிவர் ஆரூ
ருறைவதென் றேனதுவே
சந்தணை தோளியென் றார்தலை
யாயசலவர் என்றேன்
பந்தணை கையாய் அதுவுமுண்
டென்றார் உமையறியக்
கொந்தணை தாரீர் உரைமினென்
றேன்துடி கொட்டினரே.
11.008
11 st/nd Thirumurai
Song # 90
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியில்
சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் வந்து
11.008
11 st/nd Thirumurai
Song # 158
சேரமான் பெருமாள் நாயனார்
திருக்கயிலாய ஞான உலா
அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் முந்துறவே
11.010
11 st/nd Thirumurai
Song # 2
நக்கீரதேவ நாயனார்
திருஈங்கோய்மலை எழுபது
அந்தவிள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக்
கொந்தவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் சந்தின்
இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே மேரு
மலைவளைக்கை வில்லி மலை.
11.021
11 st/nd Thirumurai
Song # 1
கபிலதேவ நாயனார்
சிவபெருமான் திருஇரட்டைமணிமாலை
அந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்
அந்தியே போலும் அவிர்சடையான் அந்தியின்
தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான்
வீங்கிருள்சேர் நீல மிடறு.
11.024
11 st/nd Thirumurai
Song # 16
இளம்பெருமான் அடிகள்
சிவபெருமான் திருமும்மணிக்கோவை
அந்த ணாளர் செந்தொடை ஓழுக்கமும்
அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும்
அவுணர் நன்னாட் டிறைவன் ஆகிக்
குறுநெடுந் தானை பரப்பித் தறுகண்
மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்க
காய்சின அரவுநாண் பற்றி நீயோர்
நெடுவரை நெறிய வாங்கிச்
சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே.
11.033
11 st/nd Thirumurai
Song # 20
நம்பியாண்டார் நம்பி
திருத்தொண்டர் திருவந்தாதி
அந்தாழ் புனல்தன்னி லல்லும்
பகலும்நின் றாதரத்தால்
உந்தாத அன்பொடு ருத்திரஞ்
சொல்லிக் கருத்தமைந்த
பைந்தா ருருத்ர பசுபதி
தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூரென்
றுரைப்பரிந் நானிலத்தே.
11.035
11 st/nd Thirumurai
Song # 6
நம்பியாண்டார் நம்பி
ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
அந்தமுந் தும்பிற வித்துயர்
தீர வரனடிக்கே
பந்தமுந் துந்தமிழ் செய்த
பராபரன் பைந்தடத்தேன்
வந்துமுந் தும்நந்தம் முத்தங்
கொடுப்ப வயற்கயலே
சந்தமுந் தும்பொழிற் சண்பையர்
காவலன் சம்பந்தனே.
12.000
12 st/nd Thirumurai
Song # 18
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
அந்தி வான்மதி சூடிய அண்ணல்தாள்
சிந்தி யாவுணர்ந் தம்முனி தென்திசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்றொண்டன்
எந்தை யார்அரு ளால்அணை வான்என.
12.000
12 st/nd Thirumurai
Song # 25
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
அந்த மில்சீர் அனிந்திதை ஆய்குழல்
கந்த மாலைக் கமலினி என்பவர்
கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி
வந்து வானவர் ஈசர் அருளென.
12.000
12 st/nd Thirumurai
Song # 31
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
அந்த ணாளரும் ஆங்கது கேட்டவர்
பந்த மானுடப் பாற்படு தென்றிசை
இந்த வான்றிசை எட்டினும் மேற்பட
வந்த புண்ணியம் யாதென மாதவன்.
12.000
12 st/nd Thirumurai
Song # 40
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை
நந்தம் நாதனாம் நம்பியாண் டார்நம்பி
புந்தி யாரப் புகன்ற வகையினால்
வந்த வாறு வழாமல் இயம்புவாம்.
12.000
12 st/nd Thirumurai
Song # 195
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
அந்தணர் கூற வின்னு
மாளோலை யிவனே காண்பான்
தந்தைதன் தந்தை தான்வே
றெழுதுகைச் சாத்துண் டாகில்
இந்தவா வணத்தி னோடு
மெழுத்துநீ ரொப்பு நோக்கி
வந்தது மொழிமின் என்றான்
வலியஆட் கொள்ளும் வள்ளல்.
12.000
12 st/nd Thirumurai
Song # 314
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
அந்தரத் தமரர் போற்றும்
அணிகிள ராடை சாத்திச்
சந்தனத் தளறு தோய்ந்த
குங்குமக் கலவை சாத்திச்
சுந்தரச் சுழியஞ் சாத்திச்
சுடர்மணிக் கலன்கள் சாத்தி
இந்திரத் திருவின் மேலாம்
எழில்பெற விளங்கித் தோன்ற.
12.020
12 st/nd Thirumurai
Song # 32
சேக்கிழார்
தில்லை வாழ் அந்தணர் சருக்கம்
அந்தணனாம் எந்தைபிரான்
அருமறையோர் முன்பகர்வான்
இந்தவேட் கோவன்பால்
யான்வைத்த பாத்திரத்தைத்
தந்தொழியான் கெடுத்தானேல்
தன்மனைவி கைப்பற்றி
வந்துமூழ் கியுந்தாரான்
வலிசெய்கின் றான்என்றார்.
12.150
12 st/nd Thirumurai
Song # 10
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
அந்திப் பிறைசெஞ் சடைமேல்அணி
ஆல வாயில்
எந்தைக் கணிசந் தனக்காப்பிடை
என்றும் முட்டா
அந்தச் செயலி னிலைநின்றடி
யாரு வப்பச்
சிந்தைக் கினிதாய திருப்பணி
செய்யும் நாளில்.
12.150
12 st/nd Thirumurai
Song # 16
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
அந்தம் இலவாம் மிறைசெய்யவும்
அன்ப னார்தாம்
முந்தைம் முறைமைப் பணிமுட்டலர்
செய்து வந்தார்
தந்தம் பெருமைக் களவாகிய
சார்பில் நிற்கும்
எந்தம் பெருமக் களையாவர்
தடுக்க வல்லார்.
12.180
12 st/nd Thirumurai
Song # 36
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
அந்தணர்கள் அதிசயித்தார்
அருமுனிவர் துதிசெய்தார்
வந்தணைந்த திருத்தொண்டர்
தம்மைவினை மாசறுத்துச்
சுந்தரத்தா மரைபுரையும்
துணையடிகள் தொழுதிருக்க
அந்தமிலா ஆனந்தப்
பெருங்கூத்தர் அருள்புரிந்தார்.
12.190
12 st/nd Thirumurai
Song # 74
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
அந்த மின்றிநல் லறம்புரிந் தளிக்கும்
அம்மை தன்திருக் காமக்கோட் டத்தில்
வந்து சந்திர சூரியர் மீது
வழிக்கொ ளாததன் மருங்குபோ தலினால்
சந்த மாதிர மயங்கியெம் மருங்குஞ்
சாயை மாறிய தன்றிசை மயக்கம்
இந்த மாநிலத் தவரெலாங் காண
என்றும் உள்ளதொன் றின்றுமங் குளதால்.
12.200
12 st/nd Thirumurai
Song # 42
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
அந்தண் மறையோர் ஆகுதிக்குக்
கறக்கும் பசுக்க ளானவெலாம்
சிந்தை மகிழ்ந்து பரிவினால்
திரளக் கொடுபோய் மேய்ப்பான்போல்
கந்தம் மலிபூம் புனல்மண்ணி
மணலில் கறந்து பாலுகுத்து
வந்த பரிசே செய்கின்றான்
என்றான் என்று வாய்மொழிந்தார்.
12.200
12 st/nd Thirumurai
Song # 44
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
அந்த ணாளர் தமைவிடைகொண்
டந்தி தொழுது மனைபுகுந்து
வந்த பழியொன் றெனநினைந்தே
மகனார் தமக்கு வாய்நேரான்
இந்த நிலைமை அறிவேனென்
றிரவு கழிந்து நிரைமேய்க்க
மைந்த னார்தாம் போயினபின்
மறைந்து சென்றான் மறைமுதியோன்.
12.210
12 st/nd Thirumurai
Song # 201
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
அந்தணரின் மேம்பட்ட
அப்பூதி அடிகளார்
தந்தனய ருடன்சாலை
கூவல்குளந் தருதண்ணீர்ப்
பந்தர்பல ஆண்டஅர
செனும்பெயரால் பண்ணினமை
வந்தணைந்த வாகீசர்
கேட்டவர்தம் மனைநண்ண.
12.210
12 st/nd Thirumurai
Song # 295
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
அந்த விமானந் தனக்கருகா
ஆங்கோர் இடத்தின் பாங்கெய்திக்
கந்த மலருங் கடிக்கொன்றை
முடியார் செய்ய கழலுன்னி
மந்த அமணர் வஞ்சனையால்
மறைத்த வஞ்சம் ஒழித்தருளிப்
பந்தங் கொண்ட குண்டர்திறம்
பாற்றும் என்று பணிந்திருப்பார்.
12.210
12 st/nd Thirumurai
Song # 378
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
அந்தண் வெள்ளிமால் வரையிரண்
டாம்என அணைந்தோர்
சிந்தை செய்திடச் செங்கண்மால்
விடைஎதிர் நிற்ப
முந்தை மாதவப் பயன்பெறு
முதன்மையால் மகிழ்ந்தே
நந்தி எம்பிரான் நடுவிடை
யாடிமுன் நணுக.
12.280
12 st/nd Thirumurai
Song # 198
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்த ணாளர் உரைத்தஅப் போழ்தினில்
வந்து கூடி மகிழ்ந்தற் புதமுறுஞ்
சிந்தை யோடும் செழுநீர் அரத்துறை
இந்து சேகரர் கோயில்வந் தெய்தினர்.
12.280
12 st/nd Thirumurai
Song # 239
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்தணர் விசயமங் கையினில் அங்கணர்
தந்தனி ஆலயஞ் சூழ்ந்து தாழ்ந்துமுன்
வந்தனை செய்துகோ தனத்தை மன்னிய
செந்தமிழ் மாலையிற் சிறப்பித் தேத்தினார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 821
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்தணர் தேவர்ஆ னினங்கள் வாழ்கஎன்
றிந்தமெய்ம் மொழிப்பயன் உலகம் இன்புறச்
சந்தவேள் விகள்முதல் சங்க ரர்க்குமுன்
வந்தஅர்ச் சனைவழி பாடு மன்னவாம்.
12.280
12 st/nd Thirumurai
Song # 931
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்தணர்சூ ளாமணியார்
பூந்துருத்திக் கணித்தாக
வந்தருளும் பெருவார்த்தை
வாகீசர் கேட்டருளி
நந்தமையா ளுடையவரை
நாம்எதிர்சென் றிறைஞ்சுவது
முந்தைவினைப் பயனென்று
முகமலர அகமலர்வார்
12.280
12 st/nd Thirumurai
Song # 1081
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்த மில்பெரு மகிழ்ச்சியால்
அவனிமேல் பணிந்து
வந்து தந்திரு மனையினில்
மேவிஅம் மருங்கு
கந்த வார்பொழில் கன்னிமா
டத்தினில் புக்கு
வெந்த சாம்பலோ டென்புசேர்
குடத்தைவே றெடுத்து.
12.290
12 st/nd Thirumurai
Song # 214
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்த மாற்றங் கேட்டவர்தாம்
அயர்வும் பயமும் அதிசயமும்
வந்த வுள்ளத் தினராகி
மற்ற மாற்றம் மறைத்தொழுகப்
பந்தம் நீடும் இவர்குலத்து
நிகராம் ஒருவன் பரிசறியான்
சிந்தை விரும்பி மகட்பேச
விடுத்தான் சிலருஞ் சென்றிசைத்தார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 224
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்தி வண்ணத் தொருவர்திரு
வருளால் வந்த ஆரூரர்
கந்த மாலைச் சங்கிலியார்
தம்மைக் காதல் மணம்புணர
வந்த பருவ மாதலால்
வகுத்த தன்மை வழுவாத
முந்தை விதியால் வந்தொருநாள்
முதல்வர் கோயி லுட்புகுந்தார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 291
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்தியும்நண் பகலும்என
எடுத்தார்வத் துடனசையால்
எந்தைபிரான் திருவாரூர்
என்றுகொல்எய் துவதென்று
சந்தஇசை பாடிப்போய்த்
தாங்கரிய ஆதரவு
வந்தணைய அன்பருடன்
மகிழ்ந்துவழிக் கொள்கின்றார்.
12.300
12 st/nd Thirumurai
Song # 1
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்தியிளம் பிறைக்கண்ணி
அண்ணலார் கயிலையினில்
முந்தைநிகழ் கோயிலுக்கு
முதற்பெருநா யகமாகி
இந்திரன்மால் அயன்முதலாம்
இமையவர்க்கு நெறியருளும்
நந்திதிரு வருள்பெற்ற
நான்மறையோ கிகளொருவர்.
12.300
12 st/nd Thirumurai
Song # 11
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்தணர்தஞ் சாத்தனூர்
ஆமேய்ப்பார் குடித்தோன்றி
முந்தைமுறை நிரைமேய்ப்பான்
மூலனெனும் பெயருடையான்
வந்துதனி மேய்க்கின்றான்
வினைமாள வாழ்நாளை
வெந்தொழில்வன் கூற்றுண்ண
வீடிநிலத் திடைவீழ்ந்தான்.
12.310
12 st/nd Thirumurai
Song # 8
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்தம் இல்லா அறிவுடையார்
உரைப்பக் கேட்ட அறிவில்லார்
சிந்தித் திந்த அறங்கேளாய்
செவியும் இழந்தா யோஎன்ன
மந்த வுணர்வும் விழிக்குருடும்
கேளாச் செவியும் மற்றுமக்கே
இந்த வுலகத் துள்ளனஎன்
றன்பர் பின்னும் இயம்புவார்.
12.310
12 st/nd Thirumurai
Song # 17
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அந்த னான வுனக்கறிவும்
இல்லை யென்றா ரியானதனுக்
கெந்தை பெருமா னருளால்யான்
விழிக்கி லென்செய் வீரென்ன
இந்த வூரில் இருக்கிலோம்
என்றே ஒட்டி னார்இதுமேல்
வந்த வாறு கண்டிந்த
வழக்கை முடிப்ப தெனமொழிந்தார்.
12.690
12 st/nd Thirumurai
Song # 6
சேக்கிழார்
மன்னிய சீர்ச் சருக்கம்
அந்தரத் தெழுந்த ஓசை
அன்பினிற் பாணர் பாடும்
சந்தயாழ் தரையிற் சீதந்
தாக்கில்வீக் கழியும் என்று
சுந்தரப் பலகை முன்நீர்
இடுமெனத் தொண்ட ரிட்டார்
செந்தமிழ்ப் பாண னாருந்
திருவருள் பெற்றுச் சேர்ந்தார்.
12.720
12 st/nd Thirumurai
Song # 6
சேக்கிழார்
வெள்ளானைச் சருக்கம்
அந்த ணாளர் வணங்கிஅரும்
புதல்வர் இருவர் ஐயாண்டு
வந்த பிராயத் தினர்குளித்த
மடுவில் முதலை ஒருமகவை
முந்த விழுங்கப் பிழைத்தவனை
முந்நூல் அணியுங் கலியாணம்
இந்த மனைமற் றந்தமனை
இழந்தார் அழுகை யென்றுரைத்தார்.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4