சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     

Thirumurai   1   2   3   4   5   6   7   8   9   10   11   12

Pathigam first Letter :                                          
Paadal first letter:       (  .                                                
Search: Filter By: Order By:
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அண்டர்
அண்டர்     அண்டர்பிரான்     அண்டர்கள்    
3.013   3 st/nd Thirumurai   Song # 7   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அண்டர்கள் உய்ந்திட, அவுணர் மாய்தரக்
கண்டவர்; கடல்விடம் உண்ட கண்டனார்
புண்டரீக(வ்) வயல் பூந்தராய் நகர்
வண்டு அமர் குழலிதன் மணாளர்; காண்மினே!

3.068   3 st/nd Thirumurai   Song # 10   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை, துண்ட மதியோடு
இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள்கண்டர் இடம் ஆம்
குண்டு அமண வண்டர் அவர், மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள், பண்டும் அறியாத கயிலாயமலையே.

4.085   4 st/nd Thirumurai   Song # 8   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை
உண்டும் அதனை ஒடுக்க வல்லான், மிக்க உம்பர்கள் கோன்,
தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார், சடைமேல்
இண்டை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே?

5.039   5 st/nd Thirumurai   Song # 3   திருநாவுக்கரசர்   தேவாரம்  
அண்டர் வாழ்வும், அமரர் இருக்கையும்,
கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம்
வண்டு சேர் மயிலாடுதுறை அரன்
தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.

12.070   12 st/nd Thirumurai   Song # 46   சேக்கிழார்   தில்லை வாழ் அந்தணர் சருக்கம்  
அண்டர் பூமழை பொழியமற் றதனிடை ஒளித்த
முண்ட வேதிய ரொருவழி யான்முதல் நல்லூர்ப்
பண்டு தாம்பயில் கோலமே விசும்பினிற் பாகம்
கொண்ட பேதையுந் தாமுமாய்க் காட்சிமுன் கொடுத்தார்.
12.190   12 st/nd Thirumurai   Song # 68   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும்
அளவி னால்அஞ்சி அஞ்சலி கூப்பிக்
கொண்ட இற்றையென் பூசனை யின்னும்
குறைநி ரம்பிடக் கொள்கஎன் றருள
வண்டு வார்குழல் மலைமகள் கமல
வதனம் நோக்கிஅம் மலர்க்கண்நெற் றியின்மேல்
முண்ட நீற்றர்நின் பூசனை யென்றும்
முடிவ தில்லைநம் பாலென மொழிய.
12.200   12 st/nd Thirumurai   Song # 56   சேக்கிழார்   மும்மையால் உலகாண்ட சருக்கம்  
அண்டர் பிரானும் தொண்டர்தமக்
கதிபன் ஆக்கி அனைத்துநாம்
உண்ட கலமும் உடுப்பனவும்
சூடு வனவும் உனக்காகச்
சண்டீ சனுமாம் பதந்தந்தோம்
என்றங் கவர்பொற் றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை
மாலை வாங்கிச் சூட்டினார்.
12.280   12 st/nd Thirumurai   Song # 324   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்டர்பிரான் ஆலயங்கள்
அம்மருங்குள் ளனபணிந்து
தெண்டிரைநீர்த் தடம்பொன்னித்
தென்கரையாங் கொங்கினிடை
வண்டலையும் புனற்சடையார்
மகிழ்விடங்கள் தொழுதணைந்தார்
கொண்டல்பயில் நெடும்புரிசைக்
கொடிமாடச் செங்குன்றூர்.
12.290   12 st/nd Thirumurai   Song # 225   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்டர் பெருமான் அந்தணராய்
ஆண்ட நம்பி யங்கணரைப்
பண்டை முறைமை யாற்பணிந்து
பாடிப் பரவிப் புறம்போந்து
தொண்டு செய்வார் திருத்தொழில்கள்
கண்டு தொழுது செல்கின்றார்
புண்ட ரீகத் தடம்நிகர்பூந்
திருமண் டபத்தி னுட்புகுந்தார்.
12.290   12 st/nd Thirumurai   Song # 331   சேக்கிழார்   வம்பறா வரிவண்டுச் சருக்கம்  
அண்டர் வாழக் கருணையினால்
ஆல காலம் அமுதாக
உண்ட நீலக் கோலமிடற்
றொருவர் இருவர்க் கறிவரியார்
வண்டு வாழும் மலர்க்கூந்தல்
பரவை யார்மா ளிகைநோக்கித்
தொண்ட னார்தம் துயர்நீக்கத்
தூத னாராய் எழுந்தருள.

This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D