![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Selected thirumurai
thirumurai Thalangal
All thirumurai Songs
Thirumurai
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
Pathigam first Letter :
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ஞ த ந ப ம ய வ
Paadal first letter:
( . அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ங ச ஞ ட த ந ப ம ய ற வ
திருமுறை 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 இருந்து பாடல் சொல் அங்கண
அங்கண்
அங்கணரை
அங்கண
அங்கண்மலைத்
அங்கணைந்து
அங்கணன்
அங்கண்விழ
அங்கணைந்
அங்கணகன்
அங்கண்இனி
அங்கணர்
அங்கணரைப்
அங்கண்வட
அங்கண்அமர்
அங்கணர்தம்
அங்கணைவார்
அங்கணர்தங்
அங்கணனை
11.004
11 st/nd Thirumurai
Song # 52
காரைக்கால் அம்மையார்
அற்புதத் திருவந்தாதி
அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.
12.000
12 st/nd Thirumurai
Song # 17
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
அங்கண் ஓரொளி ஆயிர ஞாயிறு
பொங்கு பேரொளி போன்றுமுன் தோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திருந் தாரெலாம்
இங்கி தென்கொல் அதிசயம் என்றலும்.
12.000
12 st/nd Thirumurai
Song # 224
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
அங்கணரை அடிபோற்றி அங்ககன்று மற்றந்தப்
பொங்குநதித் தென்கரைபோய்ப் போர்வலித்தோள் மாவலிதன்
மங்கலவேள் வியிற்பண்டு வாமனனாய் மண்ணிரந்த
செங்கணவன் வழிபட்ட திருமாணி குழியணைந்தார்.
12.000
12 st/nd Thirumurai
Song # 232
சேக்கிழார்
திருமலைச் சருக்கம்
அங்கண் மாமறை முழங்கும் மருங்கே
ஆட ரம்பையர் அரங்கு முழங்கும்
மங்குல் வானின்மிசை ஐந்தும் முழங்கும்
வாச மாலைகளின் வண்டு முழங்கும்
பொங்கும் அன்பருவி கண்பொழி தொண்டர்
போற்றி சைக்குமொலி எங்கும் முழங்கும்
திங்கள் தங்குசடை கங்கை முழங்கும்
தேவ தேவர்புரி யுந்திரு வீதி.
12.080
12 st/nd Thirumurai
Song # 42
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
அங்கண ரடியார் தம்மைச்
செய்தஇவ் அபரா தத்துக்
கிங்கிது தன்னாற் போதா
தென்னையுங் கொல்லவேண்டும்
மங்கல மழுவாற் கொல்கை
வழக்குமன் றிதுவா மென்று
செங்கையா லுடைவாள் வாங்கிக்
கொடுத்தனர் தீர்வு நேர்வார்.
12.100
12 st/nd Thirumurai
Song # 44
சேக்கிழார்
இலை மலிந்த சருக்கம்
அங்கண்மலைத் தடஞ்சாரற் புனங்க ளெங்கும்
அடலேனம் புலிகரடி கடமை ஆமா
வெங்கண்மரை கலையொடுமான் முதலா யுள்ள
மிருகங்கள் மிகநெருங்கி மீதூர் காலைத்
திங்கள்முறை வேட்டைவினை தாழ்த்ததென்று
சிலைவேடர் தாமெல்லாம திரண்டு சென்று
தங்கள்குல முதற்றலைவ னாகி யுள்ள
தண்தெரியல் நாகன்பால் சார்ந்து சொன்னார்.
12.160
12 st/nd Thirumurai
Song # 13
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
அங்கண் அமருந் திருமுருகர்
அழகார் புகலிப் பிள்ளையார்
பொங்கு மணத்தின் முன்செய்த
பூசை அதனாற் புக்கருளிச்
செங்கண் அடலே றுடையவர்தாஞ்
சிறந்த அருளின் பொருளளிக்கத்
தங்கள் பெருமான் அடிநீழற்
தலையாம் நிலைமை சார்வுற்றார்.
12.170
12 st/nd Thirumurai
Song # 3
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
அங்கண் மாநகர் அதனிடை அருமறை வாய்மைத்
துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர்
செங்கண் மால்விடை யார்செழும் பொன்மலை வல்லி
பங்க னார்அடி மைத்திறம் புரிபசு பதியார்.
12.190
12 st/nd Thirumurai
Song # 12
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
அங்கண் வான்மிசை அரம்பையர் கருங்குழற் சுரும்பு
பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல்மூழ்கிப் போகாச்
செங்கண் மால்விடை யார்திருக் காளத்தி யென்னும்
மங்குல் சூழ்வரை நிலவிய வாழ்வினால் மல்கும்.
12.200
12 st/nd Thirumurai
Song # 32
சேக்கிழார்
மும்மையால் உலகாண்ட சருக்கம்
அங்கண் முன்னை அர்ச்சனையின்
அளவின் தொடர்ச்சி விளையாட்டாப்
பொங்கும் அன்பால் மண்ணிமணற்
புளினக் குறையில் ஆத்தியின்கீழ்ச்
செங்கண் விடையார் திருமேனி
மணலால் ஆக்கிச் சிவாலயமும்
துங்க நீடு கோபுரமுஞ் சுற்றா
லயமும் வகுத்தமைத்தார்.
12.210
12 st/nd Thirumurai
Song # 214
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
அங்கணைந்து தம்பெருமான்
அடிவணங்கி ஆராது
பொங்கியஅன் பொடுதிளைத்துப்
போற்றிசைத்துப் பணிசெயுநாள்
தங்குபெருங் காதலினால்
தாமரைமேல் விரிஞ்சனொடு
செங்கண்மால் அறிவரியார்
திருவாரூர் தொழநினைந்தார்.
12.210
12 st/nd Thirumurai
Song # 306
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
அங்கண் இருந்த மறையவர்பால்
ஆண்ட அரசும் எழுந்தருள
வெங்கண் விடைவே தியர்நோக்கி
மிகவும் வழிவந் திளைத்திருந்தீர்
இங்கென் பாலே பொதிசோறுண்
டிதனை உண்டு தண்ணீர்இப்
பொங்கு குளத்தில் குடித்திளைப்புப்
போக்கிப் போவீர் எனப்புகன்றார்.
12.210
12 st/nd Thirumurai
Song # 348
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
அங்கண் மாமலை மேல்ம ருந்தை
வணங்கி யாரரு ளான்மிகப்
பொங்கு காதலின் உத்த ரத்திசை
மேல்வி ருப்பொடு போதுவார்
துங்க மால்வரை கானி யாறு
தொடர்ந்த நாடு கடந்தபின்
செங்கண் மால்விடை அண்ணல் மேவு
திருப்ப ருப்பதம் எய்தினார்.
12.240
12 st/nd Thirumurai
Song # 59
சேக்கிழார்
திருநின்ற சருக்கம்
அங்கணன் அம்மை யேஎன்
றருள்செய அப்பா என்று
பங்கயச் செம்பொற் பாதம்
பணிந்துவீழ்ந் தெழுந்தார் தம்மைச்
சங்கவெண் குழையி னாருந் தா
மெதிர் நோக்கி நம்பால்
இங்குவேண் டுவதென் என்ன
இறைஞ்சிநின் றியம்பு கின்றார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 33
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கண்விழ விற்பெருகு சண்பையகல் மூதூர்ச்
சங்கபட கங்கருவி தாரைமுத லான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கொலி மலிந்தமறு கெல்லாம்.
12.280
12 st/nd Thirumurai
Song # 236
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கணைந் திளம்பிறை அணிந்த சென்னியார்
பொங்கெழிற் கோபுரந் தொழுது புக்கபின்
துங்கநீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 279
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கண் அமர்கின்ற நாளில்
அருந்தமிழ்நா டெத்தி னுள்ளும்
திங்கட் சடையண்ண லார்தம்
திருப்பதி யாவையுங் கும்பிட்
டெங்குந் தமிழ்மா லைபாடி
ஏத்திஇங் கெய்துவன் என்று
தங்குலத் தாதையா ரோடுந்
தவமுனி வர்க்கருள் செய்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 310
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கணகன் றம்மருங்கில் அங்கணர்தம்
பதிபிறவும் அணைந்து போற்றிச்
செங்கமலப் பொதியவிழச் சேல்பாயும்
வயல்மதுவால் சேறு மாறாப்
பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட
கரைமிசைப் போய்ப் புகலி வேந்தர்
நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிரா
மம்பணிய நண்ணும் போதில்.
12.280
12 st/nd Thirumurai
Song # 404
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கண்இனி தமருநாள்
அடல்வெள்ளே னத்துருவாய்ச்
செங்கண்நெடு மால்பணியும்
சிவபுரத்துச் சென்றடைந்து
கங்கைசடைக் கரந்தவர்தங்
கழல்வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம்
முன்நின்று போற்றிசைத்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 470
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கணைந்து கோயில்வலங் கொண்டருளி
அரவணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்து
செங்கண்அரு விகள்பொழியத் திருமுன்பு
பணிந்தெழுந்து செங்கை கூப்பித்
தங்கள்பெருந் தகையாரைச் சிறுத்தொண்டர்
தொழவிருந்த தன்மை போற்றிப்
பொங்கியெழும் இசைபாடிப் போற்றிசைத்தங்
கொருபரிசு புறம்பு போந்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 494
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த
அரசும் எதிர்வந் தணைய வாசப்
பொங்கு புனல்தண் புகலி வந்த
பூசுரர் சிங்கமும் பொற்பி னெய்தித்
தங்களின் அன்பின் முறைமை யாலே
தாழ்ந்து வணங்கித் தனித்த னியே
மங்கல மாகிய நல்வ ரவின்
வாய்மை வினவி மகிழும் போது.
12.280
12 st/nd Thirumurai
Song # 548
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கண் அமர்வார்
அரனார் அடியிணைக்கீழ்த்
தங்கிய காதலினாற்
காலங்கள் தப்பாமே
பொங்குபுகழ் வாகீச
ருங்கூடப் போற்றிசைத்தே
எங்கும் இடர்தீர்ப்பார்
இன்புற் றுறைகின்றார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 679
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கண் மேவிய சமணர்கள்
பிள்ளையார் அமர்ந்த
துங்க மாமடந் தன்னிடைத்
தொண்டர்தங் குழாங்கள்
எங்கும் ஓதிய திருப்பதி
கத்திசை எடுத்த
பொங்கு பேரொலி செவிப்புலம்
புக்கிடப் பொறாராய்.
12.280
12 st/nd Thirumurai
Song # 877
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கணரைப் பணிந்துபோந்
தருகணைந்தார் தமைவினவ
இங்கெம்மைக் கண்விடுத்த
காழியார் இளவேறு
தங்குமிடம் திருநீற்றுத்
தொண்டர்குழாஞ் சாருமிடம்
செங்கமலத் திருமடம்மற்
றிதுவென்றே தெரிந்துரைத்தார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 914
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கணைந்து மண்டபத்துப் புத்த ரோடும்
பிள்ளையார் அருகணைய நின்ற போதில்
எங்குநிகழ் திருச்சின்னந் தடுத்த புத்தன்
இருஞ்சிரத்தைப் பொடியாக்கும் எதிரில் அன்பர்
பொங்குபுகழ்ப் புகலிகா வலர்தம் பாதம்
போற்றிஅரு ளாற்சாரி புத்தன் தன்னை
உங்கள்தலை வனும்பொருளும் உரைக்க என்ன
உற்றவா தினைமேற்கொண் டுரைசெய் கின்றான்.
12.280
12 st/nd Thirumurai
Song # 946
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கணரைப் போற்றியெழுந்
தாண்ட அரசமர்ந்த
பொங்கு திருமடத்திற்
புக்கங் கினிதமர்ந்து
திங்கட் பகவணியும்
சென்னியார் சேவடிக்கீழ்த்
தங்கு மனத்தோடு
தாம்பரவிச் செல்லுநாள்.
12.280
12 st/nd Thirumurai
Song # 971
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கண் அணைவார் பணிந்தெழுந்து
போற்றி செய்தம் மலைமீது
தங்கு விருப்பில் வீற்றிருந்தார்
தாள்தா மரைகள் தம்முடிமேல்
பொங்கும் ஆர்வத் தொடும்புனைந்து
புளகம் மலர்ந்த திருமேனி
எங்கு மாகிக் கண்பொழியும்
இன்ப அருவி பெருக்கினார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 984
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கண் அமரர் பெருமானைப்
பணிந்து போந்தா டரவினுடன்
பொங்கு கங்கை முடிக்கணிந்தார்
மகிழும் பதிகள் பலபோற்றி
மங்கை பாகர் அமர்ந்தருளும்
வயல்மா கறலை வழுத்திப்போய்க்
கொங்கு மலர்நீர்க் குரங்கணில்முட்
டத்தைச் சென்று குறுகினார்.
12.280
12 st/nd Thirumurai
Song # 1026
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கண்வட திசைமேலுங் குடக்கின் மேலும்
அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறுஞ்
சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி.
12.280
12 st/nd Thirumurai
Song # 1125
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கண்அமர் வார்உலகா
ளுடையாரை அருந்தமிழின்
பொங்கும்இசைப் பதிகங்கள்
பலபோற்றிப் போந்தருளிக்
கங்கையணி மணிமுடியார்
பதிபலவும் கலந்திறைஞ்சிச்
செங்கண்விடைக் கொடியார்தம்
இடைச்சுரத்தைச் சேர்வுற்றார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 6
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கண் மிக்கஅக் குடியினில் அவதரித் துள்ளார்
கங்கை வாழ்முடி யார்தொண்டர் கலிக்காமர் என்பார்
தங்கள் நாயகர் அடிபணி வார்அடிச் சார்ந்து
பொங்கு காதலி னவர்பணி போற்றுதல் புரிந்தார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 145
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கணரைப் பணிந்தேத்தி
அருளினால் தொழுதுபோய்
மங்குலணி மணிமாடத்
திருக்கடவூர் வந்தெய்தித்
திங்கள்வளர் முடியார்தந்
திருமயா னமும்பணிந்து
பொங்குமிசைப் பதிகம்மரு
வார்கொன்றை யெனப்போற்றி.
12.290
12 st/nd Thirumurai
Song # 153
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கண்இனி தமர்ந்தருளால்
திருப்புன்கூ ரணைத்திறைஞ்சிக்
கொங்கலரும் மலர்ச்சோலைத்
திருக்கோலக் காஅணையக்
கங்கைசடைக் கரந்தவர்தாம்
எதிர்காட்சி கொடுத்தருளப்
பொங்குவிருப் பால்தொழுது
திருப்பதிகம் போற்றிசைப்பார்.
12.290
12 st/nd Thirumurai
Song # 192
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கண் அமர்வார் அனேகதங்கா
வதத்தை யெய்தி யுள்ளணைந்து
செங்கண் விடையார் தமைப்பணிந்து
தேனெய் புரிந்தென் றெடுத்ததமிழ்
தங்கு மிடமா மெனப்பாடித்
தாழ்ந்து பிறவுந் தானங்கள்
பொங்கு காத லுடன்போற்றிப்
புரிந்தப் பதியிற் பொருந்துநாள்.
12.290
12 st/nd Thirumurai
Song # 282
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கணர்தம் பதியதனை
அகன்றுபோய் அன்பருடன்
பங்கயப்பூந் தடம்பணைசூழ்
பழையனுர் உழையெய்தித்
தங்குவார் அம்மைதிருத்
தலையாலே வலங்கொள்ளும்
திங்கண்முடி யாராடுந்
திருவாலங் காட்டினயல்.
12.290
12 st/nd Thirumurai
Song # 293
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கணரை ஆமாத்தூர்
அழகர்தமை யடிவணங்கித்
தங்கும்இசைத் திருப்பதிகம்
பாடிப்போய்த் தாரணிக்கு
மங்கலமாம் பெருந்தொண்டை
வளநாடு கடந்தணைந்தார்
செங்கண்வள வன்பிறந்த
சீர்நாடு நீர்நாடு.
12.290
12 st/nd Thirumurai
Song # 296
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கணைவார் தமையடியார்
எதிர்கொள்ளப் புக்கருளிப்
பொங்குதிருக் கோயிலினைப்
புடைவலங்கொண்டு உள்ளணைந்து
கங்கைவாழ் சடையாய்ஓர்
கண்ணிலேன் எனக்கவல்வார்
இங்கெனக்கா ருறவென்னுந்
திருப்பதிக மெடுத்திசைத்தார்.
12.320
12 st/nd Thirumurai
Song # 6
சேக்கிழார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
அங்கண் அவ்வூர் தமக்கொருபற்று
அடியார் தங்கட் கமுதாக்க
எங்குங் காணா வகைதோன்ற
இலம்பா டெய்தி யிருந்தயர்வார்
தங்கும் வகையால் தாமுன்பு
கற்ற தன்மை நற்சூதால்
பொங்கு பொருளாக் கவுமங்குப்
பொருவா ரின்மை யினிற்போவார்.
12.370
12 st/nd Thirumurai
Song # 70
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
அங்கண் அருள்பெற் றெழுவாரைக்
கொண்டு புறம்போந் தாரூரர்
நங்கை பரவை யார்திருமா
ளிகையில் நண்ண நன்னுதலார்
பொங்கு விளக்கும் நிறைகுடமும்
பூமா லைகளும் புகையகிலும்
எங்கும் மடவார் எடுத்தேத்த
அணைந்து தாமும் எதிர்கொண்டார்.
12.370
12 st/nd Thirumurai
Song # 112
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
அங்கணரைப் பணிந்துறையும்
ஆரூரர்க் கவ்வூரில்
கங்குலிடைக் கனவின்கண்
காளையாந் திருவடிவால்
செங்கையினிற் பொற்செண்டுந்
திருமுடியிற் சுழியமுடன்
எங்குமிலாத் திருவேடம்
என்புருக முன்காட்டி.
12.370
12 st/nd Thirumurai
Song # 139
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
அங்கண் அரனார் கருணையினை
ஆற்றா தாற்றித் திளைத்திறைஞ்சித்
தங்கள் பெருமான் திருவருளால்
தாழ்ந்து மீண்டுந் தடம்பொன்னிப்
பொங்கு நதியின் முன்வந்த
படியே நடுவு போந்தேறத்
துங்க வரைபோல் நின்றநீர்
துரந்து தொடரப் பெருகியதால்.
12.370
12 st/nd Thirumurai
Song # 169
சேக்கிழார்
வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்
அங்கணர்தங் கோயிலினை
அஞ்சலிகூப் பித்தொழுது
மங்குலுற நீண்டதிரு
வாயிலினை வந்திறைஞ்சிப்
பொங்குவிருப் புடன்புக்கு
வலங்கொண்டு புனிதநதி
திங்கள்முடிக் கணிந்தவர்தந்
திருமுன்பு சென்றணைந்தார்.
12.410
12 st/nd Thirumurai
Song # 11
சேக்கிழார்
பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
அங்கண்இனி துறையுநாள்
அரசிறைஞ்ச வீற்றிருந்து
கொங்கரொடு குடபுலத்துக்
கோமன்னர் திறைகொணரத்
தங்கள் குல மரபின்முதல்
தனிநகராங் கருவூரின்
மங்கலநா ளரசுரிமைச்
சுற்றமுடன் வந்தணைந்தார்.
12.580
12 st/nd Thirumurai
Song # 3
சேக்கிழார்
பத்தராய்ப் பணிவார் சருக்கம்
அங்கணனை அடியாரை
ஆராத காதலினால்
பொங்கிவரும் உவகையுடன்
தாம்விரும்பிப் பூசிப்பார்
பங்கயமா மலர்மேலான்
பாம்பணையான் என்றிவர்கள்
தங்களுக்கும் சார்வரிய
சரண்சாருந் தவமுடையார்.
12.720
12 st/nd Thirumurai
Song # 41
சேக்கிழார்
வெள்ளானைச் சருக்கம்
அங்கண் எய்திய திருவணுக்
கன்திரு வாயிலின் அடற்சேரர்
தங்கள் காவலர் தடையுண்டு
நின்றனர் தம்பிரா னருளாலே
பொங்கு மாமதம் பொழிந்தவெள்
ளானையின் உம்பர்போற் றிடப்போந்த
நங்கள் நாவலூர்க் காவலர்
நண்ணினார் அண்ணலார் திருமுன்பு.
This page was last modified on Wed, 07 Aug 2024 19:12:48 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thirumurai all list column name paadal first lang tamil string %E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3