| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian Spanish Hebrew Korean
| Naayanmaar | Puja Month & Natchathiram | Period CE | Possible English Date (Experimental) | ThiruThondu |
|---|---|---|---|---|
| கண்ணப்பர் நாயனார் | Thai - Mirugasirisham | 300-600 | 2027-01-20 2026-01-29 | பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர். |
| கலிக்கம்பர் நாயனார் | Thai - Revathi | 600-840 | 2027-01-15 2026-01-25 | முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்த மனைவியின் கையை வெட்டியவர். |
| அப்பூதி அடிகள் | Thai - Sathayam | 600-660 | திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்து வைத்தவர். பின் இறந்த மகனை சிவன் அருளால் உயிர் பெற செய்தவர். | |
| அரிவாட்டாயர் நாயனார் | Thai - Thiruvathiraia | 300-600 | 2027-01-20 2026-01-30 | சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர். |
| சண்டேசுர நாயனார் | Thai - Uthiram | 300-600 | 2026-02-05 2027-01-26 | சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உதைத்த தந்தையின் காலை வெட்டியவர். |
| திருநீலகண்ட நாயனார் | Thai - Visakam | 600-840 | 2026-02-09 2027-01-30 | கூடா நட்பின் விளைவால் மனைவியை இளம் வயது முதல் தீண்டவில்லை. முதுமை காலத்தில் மனைவியாருடன் கோல் பிடித்து குளத்தில் முழுகி சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார். |
| எறிபத்தர் நாயனார் | Maasi - Hastham | 300-600 | 2026-03-05 | சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர். மன்னன் சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், அவனிடமிருந்து வாள் பெற்று தன் கழுத்தை வெட்டக் கொள்ள துணிந்தவர். |
| காரி நாயனார் | Maasi - Pooradam | 600-840 | 2026-02-14 2026-03-13 | காரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார். |
| கோச்செங்கட் சோழர் | Maasi - Sathayam | 300-600 | 2026-02-18 | முற்பிறவியில் சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய் பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம் மாடக்கோவிலாகக் கட்டினார். |
| முனையடுவார் நாயனார் | Panguni - Poosam | 600-840 | 2026-03-28 | அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்கள் அனைவருக்கும் உணவு அளித்தார். |
| நேசர் | Panguni - Rohini | 600-840 | 2026-03-24 | |
| தண்டி அடிகள் | Panguni - Sathayam | 300-600 | 2026-03-17 2026-04-14 | கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர். சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர். |
| காரைக்கால் அம்மையார் | Panguni - Swathi | 300-600 | 2026-04-04 | இறைவனின் அருளால் கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார். |
| கணநாதர் நாயனார் | Panguni - Thiruvathiraia | 600-840 | 2026-03-26 | சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார். |
| சிறுத்தொண்டர் நாயனார் | Chiththirai - Bharani | 600-660 | 2026-04-18 2026-05-16 | பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர். |
| நின்றசீர் நெடுமாறனார் | Aippasi - Bharani | 600-660 | 2026-04-18 2026-05-16 | திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தை வளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர். |
| இசைஞானியார் | Chiththirai - Chithirai | 840-865 | 2026-04-30 | சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை. |
| மங்கையர்க்கரசியார் | Chiththirai - Rohini | 600-660 | 2026-04-20 | சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும்படி செய்த அம்மையார். |
| திருநாவுக்கரசர் | Chiththirai - Sathayam | 560-660 | 2026-04-14 2026-05-11 | தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர். |
| திருக்குறிப்புத் தொண்டர் | Chiththirai - Swathi | 600-840 | 2026-05-01 | சிவ தொண்டர் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால் குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர். |
| விறல்மிண்டர் நாயனார் | Chiththirai - Thiruvathiraia | 840-865 | 2026-04-22 | சிவ பக்தர்களை வணங்காத காரணத்தினால் சுந்தாரை கடிந்து ஏசியவர். சுந்தரர் திருத்தொண்டர்தொகை பாட காரணமாக விளங்கியவர். |
| சோமாசிமாறர் நாயனார் | Vaikaasi - Ayilyam | 840-865 | 2026-05-22 | நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர். லோகம் சுபிட்சம் பெற பல சிவ யாகங்கள் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர். |
| கழற்சிங்க நாயனார் | Vaikaasi - Bharani | 840-865 | 2026-05-16 2026-06-12 | சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர். |
| முருக நாயனார் | Vaikaasi - Moolam | 600-660 | 2026-06-02 | வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாலும் பாமாலையாலும் அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார். |
| திருநீலநக்கர் நாயனார் | Vaikaasi - Moolam | 600-660 | 2026-06-02 | திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில் சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர். ஈசன் கனவில் காட்சியளித்தது அருள் புரிந்தார். |
| திருஞானசம்பந்தர் | Vaikaasi - Moolam | 600-660 | 2026-06-02 | பார்வதி அம்மையிடம் ஞானப்பால் பெற்று ஞானக்குழந்தையாக பல அற்புதங்கள் செய்தவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப்பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர். |
| திருநீலகண்ட யாழ்ப்பாணர் | Vaikaasi - Moolam | 600-660 | 2026-06-02 | ஞானசம்பந்தருடன் பாடல்களுக்கு யாழ் இசைத்து சிவனைப் போற்றியவர். |
| நமிநந்தி அடிகள் | Vaikaasi - Poosam | 300-600 | 2026-05-21 | ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர். |
| மாணிக்கவாசகர் | Aani - Magam | 200-300 | 2026-06-19 | |
| அமர்நீதியார் நாயனார் | Aani - Pooram | 300-600 | 2026-06-20 | சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக, தன்னுடைய சொத்தையும், குடும்பத்தையும் தந்தவர். |
| ஏனாதிநாதர் நாயனார் | Aani - Revathi | 840-865 | 2026-07-08 | கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல், தான் உயிர் இழந்தவர். |
| பெருமிழலைக் குறும்பர் | Aadi - Chithirai | 840-865 | 2026-07-21 | சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர். சுந்தரருடன் கயிலை சென்றவர். |
| மூர்த்தி நாயனார் | Aadi - Karthigai | 300-600 | 2026-08-07 | சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு உருத்திராட்சம் சடைமுடியைத் தன்னுடைய சின்னமாகக் கொண்டவர். |
| புகழ்ச்சோழ நாயனார் | Aadi - Karthigai | 600-840 | 2026-08-07 | எறிபத்தர் தவறு செய்த தனது யானையை கொன்றார் என அறிந்து சிவனாடியாரிடம் சென்று சிவனை நினைத்து தன் தலையை அறுத்து யாகத்தில் உயிர் துறந்தவர். |
| கலியர் நாயனார் | Aadi - Kettai | 600-840 | 2026-07-25 | வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசு இல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர். |
| கோட்புலி நாயனார் | Aadi - Kettai | 840-865 | 2026-07-25 | சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் தலைகளைக் கொய்தவர். |
| சேரமான் பெருமாள் | Aadi - Swathi | 840-865 | 2026-07-22 | சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார். |
| சுந்தரமூர்த்தி நாயனார் | Aadi - Swathi | 840-865 | 2026-07-22 | தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். திருத்தொண்டத்தொகை பாடினார். |
| கூற்றுவர் நாயனார் | Aadi - Thiruvathiraia | 300-600 | 2026-07-13 2026-08-09 | நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால் வாய்ப்புக் கிடைக்காததால் தன் சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர். |
| குலச்சிறையார் நாயனார் | Aavani - Anusham | 600-660 | 2026-08-20 | பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர். |
| அதிபத்தர் நாயனார் | Aavani - Ayilyam | 600-840 | 2026-09-09 | வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். ஒரே ஒரு பொன் மீன் கிடைத்தும் அதையும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார். |
| புகழ்த்துணை நாயனார் | Aavani - Ayilyam | 300-600 | 2026-09-09 | வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின் பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார். |
| இளையான்குடிமாற நாயனார் | Aavani - Magam | 600-840 | 2026-08-13 2026-09-10 | நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் தன்னுடைய வீட்டுக் அறுத்தவர். விறகாக கூரையை சிவனடியாருக்கு உணவு தந்தவர். |
| குங்கிவியக்கலயர் நாயனார் | Aavani - Moolam | 600-660 | 2026-08-23 | சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர். |
| செருத்துணை நாயனார் | Aavani - Poosam | 840-865 | 2026-09-08 | சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர். |
| உருத்திரபசுபதி நாயனார் | Purattasi - Aswini | 600-840 | 2026-09-28 | கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர். |
| திருநாளைப்போவார் (நந்தனார்) | Purattasi - Rohini | 600-840 | 2026-10-01 | தாழ்ந்த குலமென்பதால் கோவிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன் தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் சென்று ஈசன் அருள் பெற்றவர். |
| நரசிங்க முனையரையர் | Purattasi - Sathayam | 840-865 | 2026-09-24 | சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். சிவனாடியர்களுக்கு பொன் கொடுத்தவர். |
| ஏயர்கோன் கலிக்காமர் | Purattasi - Uthiram | 600-840 | 2026-10-09 | இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது. |
| பூசலார் நாயனார் | Ayppasi - Anusham | 600-840 | 2026-10-14 2026-11-10 | பொருள் இல்லாததால் மனதில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற்கோயிலை விட்டு இறைவன் முதலில் பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார். |
| திருமூலர் நாயனார் | Ayppasi - Aswini | 300-600 | 2026-10-26 | சித்தர். திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார். இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்ததால் திருமூலர். |
| இடங்கழி நாயனார் | Ayppasi - Karthigai | 600-840 | 2026-10-28 | அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர். |
| ஐயடிகள் காடவர்கோன் | Ayppasi - Moolam | 300-600 | 2026-10-16 2026-11-13 | மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர். |
| சத்தி நாயனார் | Ayppasi - Poosam | 600-840 | 2026-11-01 | சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர். |
| ஆனாயர் நாயனார் | Karththikai - Hastham | 600-840 | 2026-12-03 | புல்லாங்குழல் ஓசையில் பக்தியை வெளிப்படுத்தியவர். |
| கணம்புல்லர் நாயனார் | Karththikai - Karthigai | 300-600 | 2026-11-24 | விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர். |
| மூர்க்கர் நாயனார் | Karththikai - Moolam | 600-840 | 2026-11-13 2026-12-10 | சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தவர். |
| சிறப்புலி நாயனார் | Karththikai - Pooradam | 600-840 | 2026-11-14 2026-12-11 | சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். |
| மெய்ப்பொருள் நாயனார் | Karththikai - Uthiram | 600-840 | 2026-12-02 | தன்னுடைய பகைவன் போலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும் சாகும் தறுவாயிலும் சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர். |
| சாக்கியர் நாயனார் | Markazi - Pooradam | 300-600 | 2027-01-07 | அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர். இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின. |
| வாயிலார் நாயனார் | Markazi - Revathi | 600-840 | 2026-12-19 2027-01-15 | இறைவனை எப்போதும் நினைத்து அமைதியாக வழிபட்டார். சிவபெருமானுடைய அருள் பெற்றார். |
| மானக்கஞ்சறார் நாயனார் | Markazi - Swathi | 840-865 | 2027-01-02 | தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும் சிவனடியார் கேட்க மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர். |
| சடையனார் நாயனார் | Markazi - Thiruvathiraia | 840-865 | 2026-12-24 | சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை. |
| இயற்பகை நாயனார் | Markazi - Uthiram | 600-840 | 2026-12-30 | சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை, முழுநம்பிகையுடன் அனுப்பியவர். |