சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
96   திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 51 - வாரியார் # 68 )  

வஞ்சத்துடன் ஒரு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்தத் தனதன தந்தத் தனதன
     தந்தத் தனதன ...... தனதான


வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை
     வஞ்சிக் கொடியிடை ...... மடவாரும்
வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு
     மண்டிக் கதறிடு ...... வகைகூர
அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்
     அங்கிக் கிரையென ...... வுடன்மேவ
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
     அன்றைக் கடியிணை ...... தரவேணும்
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
     கன்றச் சிறையிடு ...... மயில்வீரா
கண்டொத் தனமொழி அண்டத் திருமயில்
     கண்டத் தழகிய ...... திருமார்பா
செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
     செந்திற் பதிநக ...... ருறைவோனே
செம்பொற் குலவட குன்றைக் கடலிடை
     சிந்தப் பொரவல ...... பெருமாளே.

வஞ்சத்துடனொரு நெஞ்சிற் பலநினை
வஞ்சிக் கொடியிடை மடவாரும்
வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு
மண்டிக் கதறிடு வகைகூர
அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்
அங்கிக் கிரையென வுடன்மேவ
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
அன்றைக்கு அடியிணை தரவேணும்
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
கன்றச் சிறையிடும் அயில்வீரா
கண்டொத் தனமொழி அண்டத் திருமயில்
கண் தத்து அழகிய திருமார்பா
செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
செந்திற் பதிநகருறைவோனே
செம்பொற் குலவட குன்றைக் கடலிடை
சிந்தப் பொரவல பெருமாளே.
வஞ்சனையுடன், நெஞ்சமாகிய ஒன்றில் பல்வேறு சிந்தனைகளை உடையவர்களும், வஞ்சிக்கொடி போன்ற இடையை உடையவர்களும் ஆகிய பெண்களும், வணங்கும் புதல்வர்களும், நெருங்கிய சுற்றத்தார்களும், ஒன்று சேர்ந்து அழுகின்ற செயல் மிகுதியாக, உடலின் பாகங்கள் யாவும் கலைபட்டுப் போய், பஞ்சு போன்ற இந்தப் புழுத்த உடம்பு நெருப்புக்கு இரையாக்கப் படுவதற்கென உடனே எடுத்துச் செல்லப்பட, அருகே வந்து அச்சுறுத்தி உயிரை வெற்றி கொண்டு செல்வதற்கு யமன் வருகின்ற அந்த நாளில் உனது இரு திருவடிகளையும் தந்தருள வேண்டும். தாமரை மலரில் அமரும் பிரமன் அஞ்சுமாறு துயரப்படுத்தி அவன் மனம் நோகச் சிறையிட்ட வேலாயுத வீரனே, கற்கண்டைப் போன்ற இனிய மொழி பேசும் தேவமாதாகிய அழகிய மயில் போன்ற தேவயானையின் கண்பார்வை பாய்கின்ற அழகிய திரு மார்பனே, செம்மை பொருந்திய சொற்களை ஆளும் புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச் சூடிக்கொண்டு திருச்செந்தூர் நகரில் வீற்றிருப்பவனே, செம்பொன் நிறத்துடன் வடக்கே நின்ற கிரெளஞ்சமலையை கடலினிடையே சிதறி விழுமாறு போர் புரியவல்ல பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
வஞ்சத்துடனொரு நெஞ்சிற் பலநினை ... வஞ்சனையுடன்,
நெஞ்சமாகிய ஒன்றில் பல்வேறு சிந்தனைகளை உடையவர்களும்,
வஞ்சிக் கொடியிடை மடவாரும் ... வஞ்சிக்கொடி போன்ற இடையை
உடையவர்களும் ஆகிய பெண்களும்,
வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு ... வணங்கும் புதல்வர்களும்,
நெருங்கிய சுற்றத்தார்களும்,
மண்டிக் கதறிடு வகைகூர ... ஒன்று சேர்ந்து அழுகின்ற செயல்
மிகுதியாக,
அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல் ... உடலின் பாகங்கள் யாவும்
கலைபட்டுப் போய், பஞ்சு போன்ற இந்தப் புழுத்த உடம்பு
அங்கிக் கிரையென வுடன்மேவ ... நெருப்புக்கு இரையாக்கப்
படுவதற்கென உடனே எடுத்துச் செல்லப்பட,
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும் ... அருகே வந்து
அச்சுறுத்தி உயிரை வெற்றி கொண்டு செல்வதற்கு யமன் வருகின்ற
அன்றைக்கு அடியிணை தரவேணும் ... அந்த நாளில் உனது இரு
திருவடிகளையும் தந்தருள வேண்டும்.
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து ... தாமரை மலரில் அமரும்
பிரமன் அஞ்சுமாறு துயரப்படுத்தி
கன்றச் சிறையிடும் அயில்வீரா ... அவன் மனம் நோகச் சிறையிட்ட
வேலாயுத வீரனே,
கண்டொத் தனமொழி அண்டத் திருமயில் ... கற்கண்டைப்
போன்ற இனிய மொழி பேசும் தேவமாதாகிய அழகிய மயில் போன்ற
தேவயானையின்
கண் தத்து அழகிய திருமார்பா ... கண்பார்வை பாய்கின்ற அழகிய
திரு மார்பனே,
செஞ்சொற் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி ... செம்மை பொருந்திய
சொற்களை ஆளும் புலவர்களின் கூட்டம் புகல்கின்ற தமிழைச்
சூடிக்கொண்டு
செந்திற் பதிநகருறைவோனே ... திருச்செந்தூர் நகரில்
வீற்றிருப்பவனே,
செம்பொற் குலவட குன்றைக் கடலிடை ... செம்பொன்
நிறத்துடன் வடக்கே நின்ற கிரெளஞ்சமலையை கடலினிடையே
சிந்தப் பொரவல பெருமாளே. ... சிதறி விழுமாறு போர் புரியவல்ல
பெருமாளே.
Similar songs:

96 - வஞ்சத்துடன் ஒரு (திருச்செந்தூர்)

தந்தத் தனதன தந்தத் தனதன
     தந்தத் தனதன ...... தனதான

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 96