![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
72 - நிலையாப் பொருளை (திருச்செந்தூர்) Songs from this thalam திருச்செந்தூர் 1334 - கன்றிவரு நீல
72 திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 38 - வாரியார் # 51 )
நிலையாப் பொருளை
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனனாத் தனன தனனாத் தனன
தனனாத் தனன ...... தனதான
நிலையாப் பொருளை யுடலாக் கருதி
நெடுநாட் பொழுது ...... மவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற் குரிய ...... நெறியாக
மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு
மலர்தாட் கமல ...... மருள்வாயே
கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற ...... முதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு
கொதிவேற் படையை ...... விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித ...... வடிவாகும்
அரனார்க் கதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய ...... பெருமாளே.
நிலையாப் பொருளை உடலாக் கருதி
நெடுநாட் பொழுதும் அவமேபோய்
நிறைபோய் செவிடு குருடாய்
பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி
மலநீர் சயன மிசையாப் பெருகி
மடிவேற்கு உரிய நெறியாக
மறைபோற் றரிய ஒளியாய்ப் பரவு
மலர்தாட் கமலம் அருள்வாயே
கொலைகாட்டு அவுணர் கெட சலதி
குளமாய்ச் சுவற முதுசூதம்
குறிபோய்ப் பிளவு பட மேற் கதுவு
கொதிவேற் படையை விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித வடிவாகும்
அரனார்க்கு அதித பொருள்காட் டதிப
அடியார்க் கெளிய பெருமாளே.
நிலையில்லாத பொருட்களை பொன்னாக மதித்து, நீண்ட நாட்களெல்லாம் வீணாக்கி, மனத்திண்மை போய், செவிடாகி, குருடாகி, நோய்கள் மிகுந்து, ஐம்பொறிகளும் தடுமாற்றம் அடைந்து, மலமும், சிறுநீரும் படுக்கை மேலேயே (தன்னிச்சையின்றி) பெருகி, இறந்து படுவேனுக்கு, கடைத்தேறுவதற்கு உரிய முக்தி நெறியாக, வேதங்களாலும் போற்றுதற்கு அரியதான ஒளியாக விரிந்துள்ள நின்மலர்த் தாமரையை தந்தருள்வாயாக. கொலையே செய்து வருகின்ற அசுரர்கள் அழிய, பெருங்கடல் சிறு குளம் போல் வற்றிப்போக, முற்றிய மாமரம் (வடிவில் நின்ற சூரன்) குறிவைத்தபடி பட்டு, பிளவுபட, மேலே பற்றும்படியாக பிடியுள்ள எரிவீசும் வேற்படையை செலுத்தியவனே, திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) கடற்கரையில் மகிழ்ச்சியோடு கோலம் கொண்ட குமரனே, அழியாத பரிசுத்த வடிவில் உள்ள சிவனார்க்கு யாவும் கடந்த ஓம் என்னும் பொருளை விளக்கிய அதிபனே, அடியவர்களுக்கு எளிதான பெருமாளே. Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link நிலையாப் பொருளை ... நிலையில்லாத பொருட்களை
உடலாக் கருதி ... பொன்னாக மதித்து,
நெடுநாட் பொழுதும் அவமேபோய் ... நீண்ட நாட்களெல்லாம்
வீணாக்கி,
நிறைபோய் ... மனத்திண்மை போய்,
செவிடு குருடாய் ... செவிடாகி, குருடாகி,
பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி ... நோய்கள் மிகுந்து,
ஐம்பொறிகளும் தடுமாற்றம் அடைந்து,
மலநீர் ... மலமும், சிறுநீரும்
சயன மிசையாப் பெருகி ... படுக்கை மேலேயே (தன்னிச்சையின்றி)
பெருகி,
மடிவேற்கு ... இறந்து படுவேனுக்கு,
உரிய நெறியாக ... கடைத்தேறுவதற்கு உரிய முக்தி நெறியாக,
மறைபோற் றரிய ... வேதங்களாலும் போற்றுதற்கு அரியதான
ஒளியாய்ப் பரவு ... ஒளியாக விரிந்துள்ள
மலர்தாட் கமலம் அருள்வாயே ... நின்மலர்த் தாமரையை
தந்தருள்வாயாக.
கொலைகாட்டு அவுணர் கெட ... கொலையே செய்து வருகின்ற
அசுரர்கள் அழிய,
சலதி குளமாய்ச் சுவற ... பெருங்கடல் சிறு குளம் போல் வற்றிப்போக,
முதுசூதம் ... முற்றிய மாமரம் (வடிவில் நின்ற சூரன்)
குறிபோய்ப் பிளவு பட ... குறிவைத்தபடி பட்டு, பிளவுபட,
மேற் கதுவு ... மேலே பற்றும்படியாக பிடியுள்ள
கொதிவேற் படையை விடுவோனே ... எரிவீசும் வேற்படையை
செலுத்தியவனே,
அலைவாய்க் கரையின் ... திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)
கடற்கரையில்
மகிழ்சீர்க் குமர ... மகிழ்ச்சியோடு கோலம் கொண்ட குமரனே,
அழியாப் புநித வடிவாகும் அரனார்க்கு ... அழியாத பரிசுத்த
வடிவில் உள்ள சிவனார்க்கு
அதித பொருள்காட் டதிப ... யாவும் கடந்த ஓம் என்னும் பொருளை
விளக்கிய அதிபனே,
அடியார்க் கெளிய பெருமாளே. ... அடியவர்களுக்கு எளிதான
பெருமாளே.
1
Similar songs:
தனனாத் தனன தனனாத் தனன
தனனாத் தனன ...... தனதான
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song lang tamil sequence no 72