சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
698   திருவான்மியூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 269 - வாரியார் # 706 )  

குசமாகி யாருமலை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதான தானதன தனதான தானதன
     தனதான தானதன ...... தனதான


குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை
     குடிலான ஆல்வயிறு ...... குழையூடே
குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
     குழல்கார தானகுண ...... மிலிமாதர்
புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி
     புலையேனு லாவிமிகு ...... புணர்வாகிப்
புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
     பொலிவான பாதமல ...... ரருள்வாயே
நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
     நிகழ்பொத மானபர ...... முருகோனே
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
     நிபுணாநி சாசரர்கள் ...... குலகாலா
திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி
     சிவநாத ராலமயில் ...... அமுதேசர்
திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்
     திருவான்மி யூர்மருவு ...... பெருமாளே.

குசமாகி யாருமலை
மரைமாநு ணூலினிடை
குடிலான ஆல்வயிறு
குழையூடே குறிபோகு மீனவிழி
மதிமாமு காருமலர்
குழல்கார் அதானகுணமிலிமாதர்
புசவாசையால்மனது உனைநாடிடாதபடி
புலையேன் உலாவிமிகு புணர்வாகி
புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
பொலிவான பாதமலரருள்வாயே
நிசநாரணாதி திரு மருகா
உலாசமிகு நிகழ்போதமானபர முருகோனே
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு நிபுணா
நிசாசரர்கள் குலகாலா
திசைமாமுக ஆழியரி மகவான் முனோர்கள் பணி
மார்பு எனப்பட்ட நிறைந்துள்ள மலை, தாமரையின் அழகிய நுண்ணிய நூல் போன்ற இடை, கருவுக்கு இருப்பிடமான ஆலிலை போன்ற வயிறு, காதின் குண்டலங்களுக்கு குறி போகின்ற மீன் போன்ற கண்கள், சந்திரனைப் போன்ற அழகிய முகமாகிய நிறைந்த மலர், மேகத்தைப் போன்ற கூந்தல் என்ற நற்குணமில்லாத பொது மகளிரின் தோள்களை அணைக்கும் ஆசையால் என் மனம் உன்னை நாடாதபடி, இழிந்தவனாகிய நான் இங்கும் அங்கும் உலவித் திரிந்து, தீய வழியிலே மிகுந்த சேர்க்கையாகி, புகழ் பெற்ற இப்பூமியிலே அழிவுற்று முடிந்துபோகாதபடி உன் பிரகாசமான பாதத் தாமரையைத் தந்தருள்வாயாக. மெய்யான நாராயணமூர்த்தியின் அழகிய மருகனே, உள்ளக் களிப்பை மிகுத்து உண்டாக்கும் ஞான சொரூபமான மேலான முருகனே, பொக்கிஷம் போன்ற சிறந்த ஞான மந்திரத்தை, சிவபிரானுடைய இரண்டு செவிகளிலும் உபதேசித்து அருளிய சாமர்த்தியசாலியே, அசுரர்களின் குலத்துக்கே யமனாக இருந்தவனே, நான்கு திசைகளிலும் முகத்தைக் காட்டும் பிரமன், சுதர்
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
குசமாகி யாருமலை ... மார்பு எனப்பட்ட நிறைந்துள்ள மலை,
மரைமாநு ணூலினிடை ... தாமரையின் அழகிய நுண்ணிய நூல்
போன்ற இடை,
குடிலான ஆல்வயிறு ... கருவுக்கு இருப்பிடமான ஆலிலை போன்ற
வயிறு,
குழையூடே குறிபோகு மீனவிழி ... காதின் குண்டலங்களுக்கு
குறி போகின்ற மீன் போன்ற கண்கள்,
மதிமாமு காருமலர் ... சந்திரனைப் போன்ற அழகிய முகமாகிய
நிறைந்த மலர்,
குழல்கார் அதானகுணமிலிமாதர் ... மேகத்தைப் போன்ற கூந்தல்
என்ற நற்குணமில்லாத பொது மகளிரின்
புசவாசையால்மனது உனைநாடிடாதபடி ... தோள்களை
அணைக்கும் ஆசையால் என் மனம் உன்னை நாடாதபடி,
புலையேன் உலாவிமிகு புணர்வாகி ... இழிந்தவனாகிய நான்
இங்கும் அங்கும் உலவித் திரிந்து, தீய வழியிலே மிகுந்த சேர்க்கையாகி,
புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை ... புகழ் பெற்ற
இப்பூமியிலே அழிவுற்று முடிந்துபோகாதபடி
பொலிவான பாதமலரருள்வாயே ... உன் பிரகாசமான பாதத்
தாமரையைத் தந்தருள்வாயாக.
நிசநாரணாதி திரு மருகா ... மெய்யான நாராயணமூர்த்தியின்
அழகிய மருகனே,
உலாசமிகு நிகழ்போதமானபர முருகோனே ... உள்ளக் களிப்பை
மிகுத்து உண்டாக்கும் ஞான சொரூபமான மேலான முருகனே,
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு நிபுணா ... பொக்கிஷம்
போன்ற சிறந்த ஞான மந்திரத்தை, சிவபிரானுடைய இரண்டு
செவிகளிலும் உபதேசித்து அருளிய சாமர்த்தியசாலியே,
நிசாசரர்கள் குலகாலா ... அசுரர்களின் குலத்துக்கே யமனாக
இருந்தவனே,
திசைமாமுக ஆழியரி மகவான் முனோர்கள் பணி ... நான்கு
திசைகளிலும் முகத்தைக் காட்டும் பிரமன், சுதர்
Similar songs:

698 - குசமாகி யாருமலை (திருவான்மியூர்)

தனதான தானதன தனதான தானதன
     தனதான தானதன ...... தனதான

Songs from this thalam திருவான்மியூர்

698 - குசமாகி யாருமலை

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 698