சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
653   காசி திருப்புகழ் ( குருஜி இராகவன் # 219 - வாரியார் # 661 )  

வேழம் உண்ட

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தான தந்தன தானன ...... தனதான
     தான தந்தன தானன ...... தனதான

வேழ முண்ட விளாகனி ...... யதுபோல
     மேனி கொண்டு வியாபக ...... மயலூறி
நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி
     நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே
மாள அன்றம ணீசர்கள் ...... கழுவேற
     வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா
காள கண்ட னுமாபதி ...... தருபாலா
     காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே.

வேழ முண்ட விளாகனி யதுபோல
     மேனி கொண்டு வியாபக.....மயலூறி
நாளு மிண்டர்கள் போல்மிக அயர்வாகி
     நானு நைந்து விடாதருள்.....புரிவாயே
மாள அன்று அமணீசர்கள் கழுவேற
     வாதில் வென்ற சிகாமணி.....மயில்வீரா
காள கண்ட னுமாபதி தருபாலா
     காசி கங்கையில் மேவிய.....பெருமாளே.

வேழம் என்ற பழங்களுக்கு ஏற்படும் நோய் தாக்கிய விளாம்பழம் போல உள்ளிருக்கும் சத்து நீங்கிய உடலை அடைந்து, எங்கும் காம இச்சை ஊறிப் பரவி, தினமும் அறிவின்மை மிகுந்த மூடர்கள் போன்று மிகுந்த தளர்ச்சியடைந்து, நானும் மெலிந்து வாட்டமுறாதபடி அருள் புரிவாயாக. முன்பு சமணக் குருக்கள் கழுவில் ஏறி இறக்கும்படியாக வாது செய்து வென்ற (சம்பந்தராக வந்த) சிகாமணியே, மயில் வீரனே, விஷமுண்ட கண்டனாகிய உமாநாதன் சிவபிரான் தந்த குமரனே, கங்கைநதிக் கரையிலுள்ள காசி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
வேழ முண்ட விளாகனி யதுபோல ... வேழம் என்ற பழங்களுக்கு
ஏற்படும் நோய் தாக்கிய விளாம்பழம் போல
மேனி கொண்டு வியாபக மயலூறி ... உள்ளிருக்கும் சத்து நீங்கிய
உடலை அடைந்து, எங்கும் காம இச்சை ஊறிப் பரவி,
நாளு மிண்டர்கள் போல்மிக அயர்வாகி ... தினமும் அறிவின்மை
மிகுந்த மூடர்கள் போன்று மிகுந்த தளர்ச்சியடைந்து,
நானு நைந்து விடாதருள் புரிவாயே ... நானும் மெலிந்து
வாட்டமுறாதபடி அருள் புரிவாயாக.
மாள அன்று அமணீசர்கள் கழுவேற ... முன்பு சமணக் குருக்கள்
கழுவில் ஏறி இறக்கும்படியாக
வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா ... வாது செய்து வென்ற
(சம்பந்தராக வந்த) சிகாமணியே, மயில் வீரனே,
காள கண்ட னுமாபதி தருபாலா ... விஷமுண்ட கண்டனாகிய
உமாநாதன் சிவபிரான் தந்த குமரனே,
காசி கங்கையில் மேவிய பெருமாளே. ... கங்கைநதிக்
கரையிலுள்ள காசி நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

653 - வேழம் உண்ட (காசி)

தான தந்தன தானன ...... தனதான
     தான தந்தன தானன ...... தனதான

Songs from this thalam காசி

651 - தாரணிக் கதி

652 - மங்கைக் கணவனும்

653 - வேழம் உண்ட
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000