சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
64   திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 32 - வாரியார் # 44 )  

தரிக்குங்கலை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனத்தந்தன தனத்தந்தன
     தனத்தந்தன ...... தனதானத்


தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர
     தவிக்குங்கொடி ...... மதனேவிற்
றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு
     தமிழ்த்தென்றலி ...... னுடனேநின்
றெரிக்கும்பிறை யெனப்புண்படு
     மெனப்புன்கவி ...... சிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
     யுரைத்துய்ந்திட ...... அறியாரே
அரிக்குஞ்சதுர் மறைக்கும்பிர
     மனுக்குந்தெரி ...... வரிதான
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடு
     மரற்கும்புரி ...... தவபாரக்
கிரிக்கும்பநன் முநிக்குங்க்ருபை
     வரிக்குங்குரு ...... பரவாழ்வே
கிளைக்குந்திற லரக்கன்கிளை
     கெடக்கன்றிய ...... பெருமாளே.

தரிக்குங்கலை நெகிழ்க்கும் பர
   தவிக்கும் கொடி மதனேவில்
தகைக்கும் தனி திகைக்கும் சிறு
   தமிழ்த்தென்றலினுடனே
நின்றெரிக்கும்பிறை யெனப்புண்படும்
   எனப்புன்கவி சிலபாடி
இருக்குஞ்சிலர் திருச்செந்திலை
   உரைத்துய்ந்திட அறியாரே
அரிக்குஞ் சதுர் மறைக்கும்
   பிரமனுக்குந் தெரிவரிதான
அடி செஞ்சடை முடிக்கொண்டிடும்
   அரற்கும் புரி தவபாரக்
கிரிக் கும்ப நன் முநிக்கும் க்ருபை
   வரிக்கும் குருபரவாழ்வே
கிளைக்குந்திற லரக்கன்
   கிளை கெடக்கன்றிய பெருமாளே.
உடுத்தியுள்ள ஆடை அவிழ்கின்றது, விரக வேதனையால் தவிக்கின்றேன், கொடி போன்ற யான் மன்மதனது பாணத்தால் தடை படுகின்றேன், தனிமையில் நின்று திகைக்கின்றேன், மெல்லிய இனிய தென்றல் காற்றினுடன் வந்து சந்திரன் நின்று கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன், என்றெல்லாம் புன்மையான கவிதைகள் சிலவற்றை மனிதர்கள் மீது பாடி சில புலவர்கள் வீணே இருக்கின்றனர். திருச்செந்தூரில் எழுந்தருளிய உன்னைப் பற்றிப் பாடி கடைத்தேற அறிய மாட்டார்களோ? திருமாலுக்கும், நான்கு வேதங்களுக்கும், பிரமனுக்கும் காண்பதற்கு முடியாத திருவடியையும் சிவந்த ஜடாமுடியையும் உடைய சிவ பிரானுக்கும், செய்தவம் நிறைந்தவரும், பொதிய மலையில் வாழ்பவருமான அகஸ்திய முநிவருக்கும், கருணை புரிந்து உபதேசித்த மேலான குருமூர்த்தியே, சுற்றத்தார் சூழ வலிமையுடன் வந்த அரக்கன் சூரன் தன் குலத்தோடு அழியும்படிக் கோபித்த பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
தரிக்குங்கலை நெகிழ்க்கும் ... உடுத்தியுள்ள ஆடை அவிழ்கின்றது,
பரதவிக்கும் ... விரக வேதனையால் தவிக்கின்றேன்,
கொடி மதனேவில் தகைக்கும் ... கொடி போன்ற யான் மன்மதனது
பாணத்தால் தடை படுகின்றேன்,
தனி திகைக்கும் ... தனிமையில் நின்று திகைக்கின்றேன்,
சிறு தமிழ்த்தென்றலினுடனே ... மெல்லிய இனிய தென்றல்
காற்றினுடன் வந்து
நின்றெரிக்கும்பிறை யெனப்புண்படும் ... சந்திரன் நின்று
கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றேன்,
எனப்புன்கவி சிலபாடி ... என்றெல்லாம் புன்மையான கவிதைகள்
சிலவற்றை மனிதர்கள் மீது பாடி
இருக்குஞ்சிலர் ... சில புலவர்கள் வீணே இருக்கின்றனர்.
திருச்செந்திலை உரைத்துய்ந்திட அறியாரே ... திருச்செந்தூரில்
எழுந்தருளிய உன்னைப் பற்றிப் பாடி கடைத்தேற அறிய மாட்டார்களோ?
அரிக்குஞ் சதுர் மறைக்கும் ... திருமாலுக்கும், நான்கு வேதங்களுக்கும்,
பிரமனுக்குந் தெரிவரிதான அடி ... பிரமனுக்கும் காண்பதற்கு
முடியாத திருவடியையும்
செஞ்சடை முடிக்கொண்டிடும் அரற்கும் ... சிவந்த ஜடாமுடியையும்
உடைய சிவ பிரானுக்கும்,
புரி தவபாரக் கிரிக் கும்ப நன் முநிக்கும் ... செய்தவம்
நிறைந்தவரும், பொதிய மலையில் வாழ்பவருமான அகஸ்திய முநிவருக்கும்,
க்ருபை வரிக்கும் குருபரவாழ்வே ... கருணை புரிந்து உபதேசித்த
மேலான குருமூர்த்தியே,
கிளைக்குந்திற லரக்கன் ... சுற்றத்தார் சூழ வலிமையுடன் வந்த
அரக்கன் சூரன்
கிளை கெடக்கன்றிய பெருமாளே. ... தன் குலத்தோடு
அழியும்படிக் கோபித்த பெருமாளே.
Similar songs:

64 - தரிக்குங்கலை (திருச்செந்தூர்)

தனத்தந்தன தனத்தந்தன
     தனத்தந்தன ...... தனதானத்

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 64