சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
63   திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 31 - வாரியார் # 43 )  

தந்த பசிதனை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்த தனதனன தந்த தனதனன
     தந்த தனதனன ...... தனதானா


தந்த பசிதனைய றிந்து முலையமுது
     தந்து முதுகுதட ...... வியதாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகருயி ...... ரெனவேசார்
மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
     மந்த வரிசைமொழி ...... பகர்கேடா
வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
     யங்க வொருமகிட ...... மிசையேறி
அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
     லஞ்ச லெனவலிய ...... மயில்மேல்நீ
அந்த மறலியொடு கந்த மனிதனம
     தன்ப னெனமொழிய ...... வருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலு ...... மயில்வீரா
திங்க ளரவுநதி துன்று சடிலரருள்
     செந்தி னகரிலுறை ...... பெருமாளே.

தந்த பசிதனையறிந்து முலையமுது
     தந்து முதுகு தடவிய தாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
     தங்கை மருகர் உயிரெனவே சார்
மைந்தர் மனைவியர்கடும்பு கடனுதவும்
     அந்த வரிசைமொழி பகர்கேடா
வந்து தலைநவிர் அவிழ்ந்து தரைபுக
     மயங்க ஒருமகிட மிசையேறி
அந்தகனும் எனைய டர்ந்து வருகையினில்
     அஞ்ச லெனவலிய மயில்மேல்நீ
அந்த மறலியொடு உகந்த மனிதன்
     நமதன்பன் எனமொழிய வருவாயே
சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள்
     சிந்து பயமயிலும் அயில்வீரா
திங்கள் அரவுநதி துன்று சடிலர் அருள்
     செந்தி னகரிலுறை பெருமாளே.
ஏற்பட்ட பசியை அறிந்து, முலைப்பால் தந்து, முதுகைத் தடவிவிட்ட தாயார், தம்பி, ஏவல் செய்து வந்த வேலைக்காரர்கள், அன்புமிக்க தங்கை, மருமக்கள், தம்முயிர் போல அன்பு பூண்டு சார்ந்திருந்த பிள்ளைகள், மனைவியர், சுற்றத்தார், யாவரும் தத்தம் கடமைக்குரிய அந்த உறவு முறைகளைச் சொல்லிக்கொண்டு, குறையுடன் வந்து தலைமயிர் அவிழ்ந்து தரையில் விழவும், மயங்கவும், ஓர் எருமைக்கடாவின் மேல் ஏறி யமனும் என்னை நெருங்கி வரும்போது, அஞ்சாதே என்று கூறியவண்ணம் வலியதான மயில் மீது நீ அந்த யமனிடம் இவன் நமக்கு மிகவும் வேண்டிய மனிதன், நம்முடைய அன்பன் என்று சொல்லவந்து அருள்வாயாக. சிந்தை மகிழும்படியாக, ஹிமவான் மகளாகிய பார்வதியின் இரண்டு மார்பிலும் பீறிட்ட பால் அமுதை உண்ட வேலாயுதக் கடவுளே, நிலவும், பாம்பும், கங்கைநதியும் நெருங்கிப் பொதிந்துள்ள ஜடாமுடியை உடைய சிவபெருமான் அருளியவனே, திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
தந்த பசிதனையறிந்து முலையமுது தந்து ... ஏற்பட்ட பசியை
அறிந்து, முலைப்பால் தந்து,
முதுகு தடவிய தாயார் ... முதுகைத் தடவிவிட்ட தாயார்,
தம்பி பணிவிடைசெய் தொண்டர் ... தம்பி, ஏவல் செய்து வந்த
வேலைக்காரர்கள்,
பிரியமுள தங்கை மருகர் உயிரெனவே சார் ... அன்புமிக்க
தங்கை, மருமக்கள், தம்முயிர் போல அன்பு பூண்டு சார்ந்திருந்த
மைந்தர் மனைவியர்கடும்பு கடனுதவும் ... பிள்ளைகள்,
மனைவியர், சுற்றத்தார், யாவரும் தத்தம் கடமைக்குரிய
அந்த வரிசைமொழி பகர்கேடா வந்து ... அந்த உறவு
முறைகளைச் சொல்லிக்கொண்டு, குறையுடன் வந்து
தலைநவிர் அவிழ்ந்து தரைபுக மயங்க ... தலைமயிர் அவிழ்ந்து
தரையில் விழவும், மயங்கவும்,
ஒருமகிட மிசையேறி ... ஓர் எருமைக்கடாவின் மேல் ஏறி
அந்தகனும் எனைய டர்ந்து வருகையினில் ... யமனும் என்னை
நெருங்கி வரும்போது,
அஞ்ச லெனவலிய மயில்மேல்நீ ... அஞ்சாதே என்று
கூறியவண்ணம் வலியதான மயில் மீது நீ
அந்த மறலியொடு உகந்த மனிதன் ... அந்த யமனிடம் இவன்
நமக்கு மிகவும் வேண்டிய மனிதன்,
நமதன்பன் எனமொழிய வருவாயே ... நம்முடைய அன்பன்
என்று சொல்லவந்து அருள்வாயாக.
சிந்தை மகிழ மலை மங்கை நகிலிணைகள் ... சிந்தை
மகிழும்படியாக, ஹிமவான் மகளாகிய பார்வதியின் இரண்டு மார்பிலும்
சிந்து பயமயிலும் அயில்வீரா ... பீறிட்ட பால் அமுதை உண்ட
வேலாயுதக் கடவுளே,
திங்கள் அரவுநதி துன்று சடிலர் அருள் ... நிலவும், பாம்பும்,
கங்கைநதியும் நெருங்கிப் பொதிந்துள்ள ஜடாமுடியை உடைய
சிவபெருமான் அருளியவனே,
செந்தி னகரிலுறை பெருமாளே. ... திருச்செந்தூர் நகரில்
வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

63 - தந்த பசிதனை (திருச்செந்தூர்)

தந்த தனதனன தந்த தனதனன
     தந்த தனதனன ...... தனதானா

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 63