சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
60   திருச்செந்தூர் திருப்புகழ் ( - வாரியார் # 42 )  

தகரநறை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனன தாந்த தந்தத்
     தனதனன தாந்த தந்தத்
          தனதனன தாந்த தந்தத் ...... தனதான

தகரநறை பூண்ட விந்தைக்
     குழலியர்கள் தேய்ந்த இன்பத்
          தளருமிடை யேந்து தங்கத் ...... தனமானார்
தமைமனதில் வாஞ்சை பொங்கக்
     கலவியொடு சேர்ந்து மந்த்ரச்
          சமயஜெப நீங்கி யிந்தப் ...... படிநாளும்
புகலரிய தாந்த்ரி சங்கத்
     தமிழ்பனுவ லாய்ந்து கொஞ்சிப்
          புவியதனில் வாழ்ந்து வஞ்சித் ...... துழல்மூடர்
புநிதமிலி மாந்தர் தங்கட்
     புகழ்பகர்தல் நீங்கி நின்பொற்
          புளகமலர் பூண்டு வந்தித் ...... திடுவேனோ
தகுடதகு தாந்த தந்தத்
     திகுடதிகு தீந்த மிந்தித்
          தகுகணக தாங்க ணங்கத் ...... தனதான
தனனதன தாந்த னந்தத்
     தெனநடன மார்ந்த துங்கத்
          தனிமயிலை யூர்ந்த சந்தத் ...... திருமார்பா
திசையசுரர் மாண்ட ழுந்தத்
     திறலயிலை வாங்கு செங்கைச்
          சிமையவரை யீன்ற மங்கைக் ...... கொருபாலா
திகழ்வயிர மேந்து கொங்கைக்
     குறவனிதை காந்த சந்த்ரச்
          சிகரமுகி லோங்கு செந்திற் ...... பெருமாளே.

தகர நறை பூண்ட விந்தைக்
     குழலியர்கள் தேய்ந்த இன்பத்
    தளரும் இடை ஏந்து தங்கத் .... தன மானார்
தமைமனதில் வாஞ்சை பொங்கக்
     கலவியொடு சேர்ந்து மந்த்ரச்
    சமய ஜெப நீங்கி இந்தப் .... படிநாளும்
புகல் அரியதாம் த்ரி சங்கத்
     தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சிப்
    புவி அதனில் வாழ்ந்து வஞ்சித்து .... உழல்மூடர்
புநிதம் இலி மாந்தர் தங்கள்
     புகழ்பகர்தல் நீங்கி நின் பொன்
     புளக மலர் பூண்டு வந்தித் .... திடுவேனோ
தகுடதகு தாந்த தந்தத்
     திகுடதிகு தீந்த மிந்தித்
     தகுகணக தாங்க ணங்கத் தனதான
தனனதன தாந்த னந்தத்
     தெனநடனம் ஆர்ந்த துங்கத்
     தனி மயிலை ஊர்ந்த சந்தத் .... திருமார்பா
திசை அசுரர் மாண்டு அழுந்தத்
     திறல் அயிலை வாங்கு செம் கை
     சிமைய வரை ஈன்ற மங்கைக்கு .... ஒருபாலா
திகழ் வயிரம் ஏந்து கொங்கைக்
    குற வனிதை காந்த சந்த்ரச்
    சிகர முகில் ஓங்கு செந்தில் .... பெருமாளே.

மயிர்ச் சாந்தின் நறு மணம் கொண்ட அழகிய கூந்தலை உடையவர்கள், மெலிந்ததும் இன்பம் தருவதும் தளர்ந்துள்ளதுமான இடுப்பு தாங்கும் தங்கநிற மார்பினை உடைய விலைமாதர்களை, உள்ளத்தில் காம ஆசை மேலெழ, கலவி இன்பத்தில் கூடி, மந்திரம், மதம், துதி இவைகளை விட்டு இவ்வாறு ஒவ்வொரு நாளும், சொல்லுதற்கு அரிய முச்சங்கத்து தமிழ் நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில் வாழ்ந்தும், பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும், பரிசுத்தம் இல்லாதவர்களுமான மக்களிடம் (போய் அவர்களைப்) புகழ்ந்து பேசுதலை விடுத்து, உனது அழகிய இன்பம் தரும் திருவடி மலர்களை மனத்தில் கொண்டு துதிக்க மாட்டேனோ? தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகணக தாங்க ணங்கத் தனதான தனனதன தாந்த னந்தத் தென்ற தாளத்துக்கு ஏற்ப நடனம் நிறைந்த உயர்ந்த ஒப்பில்லாத மயிலை வாகனமாகக் கொண்ட, சந்தனம் அணிந்த அழகிய மார்பனே, திசைகளில் உள்ள அசுரர்கள் இறந்து அடங்கும்படி, செவ்விய திருக்கையில் ஏந்திய வெற்றி வேலைச் செலுத்தியவனே, பல உச்சிகளைக் கொண்ட (இமய) மலை (அரசன்) பெற்ற மகளாகிய பார்வதியின் ஒப்பற்ற குழந்தையே, விளங்குகின்ற வைர மாலையை அணிந்த மார்பினைக் கொண்ட குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, சந்திரன் தவழும் கோபுரத்தின் மேல் மேகங்கள் விளங்குகின்ற திருச்செந்தூர்ப் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
தகர நறை பூண்ட விந்தைக் குழலியர்கள் தேய்ந்த இன்பத்
தளரும் இடை ஏந்து தங்கத் தன மானார் தமை
... மயிர்ச்
சாந்தின் நறு மணம் கொண்ட அழகிய கூந்தலை உடையவர்கள்,
மெலிந்ததும் இன்பம் தருவதும் தளர்ந்துள்ளதுமான இடுப்பு தாங்கும்
தங்கநிற மார்பினை உடைய விலைமாதர்களை,
மனதில் வாஞ்சை பொங்கக் கலவியொடு சேர்ந்து மந்த்ரச்
சமய ஜெப நீங்கி இந்தப்படி நாளும்
... உள்ளத்தில் காம ஆசை
மேலெழ, கலவி இன்பத்தில் கூடி, மந்திரம், மதம், துதி இவைகளை
விட்டு இவ்வாறு ஒவ்வொரு நாளும்,
புகல் அரியதாம் த்ரி சங்கத் தமிழ் பனுவல் ஆய்ந்து கொஞ்சிப்
புவி அதனில் வாழ்ந்து
... சொல்லுதற்கு அரிய முச்சங்கத்து தமிழ்
நூல்களை நன்கு ஆராய்ந்தும், இனிமையாகப் பேசியும், பூமியில்
வாழ்ந்தும்,
வஞ்சித்து உழல் மூடர் புநிதம் இலி மாந்தர் தங்கள் புகழ்
பகர்தல் நீங்கி நின் பொன் புளக மலர் பூண்டு
வந்தித்திடுவேனோ
... பலரை வஞ்சித்துத் திரிகின்ற மூடர்களும்,
பரிசுத்தம் இல்லாதவர்களுமான மக்களிடம் (போய் அவர்களைப்)
புகழ்ந்து பேசுதலை விடுத்து, உனது அழகிய இன்பம் தரும் திருவடி
மலர்களை மனத்தில் கொண்டு துதிக்க மாட்டேனோ?
தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித் தகுகணக
தாங்க ணங்கத் தனதான தனனதன தாந்த னந்தத் தென
நடனம் ஆர்ந்த துங்கத் தனி மயிலை ஊர்ந்த சந்தத்
திருமார்பா
... தகுடதகு தாந்த தந்தத் திகுடதிகு தீந்த மிந்தித்
தகுகணக தாங்க ணங்கத் தனதான தனனதன தாந்த னந்தத்
தென்ற தாளத்துக்கு ஏற்ப நடனம் நிறைந்த உயர்ந்த ஒப்பில்லாத
மயிலை வாகனமாகக் கொண்ட, சந்தனம் அணிந்த அழகிய மார்பனே,
திசை அசுரர் மாண்டு அழுந்தத் திறல் அயிலை வாங்கு
செம் கை
... திசைகளில் உள்ள அசுரர்கள் இறந்து அடங்கும்படி,
செவ்விய திருக்கையில் ஏந்திய வெற்றி வேலைச் செலுத்தியவனே,
சிமைய வரை ஈன்ற மங்கைக்கு ஒரு பாலா ... பல உச்சிகளைக்
கொண்ட (இமய) மலை (அரசன்) பெற்ற மகளாகிய பார்வதியின்
ஒப்பற்ற குழந்தையே,
திகழ் வயிரம் ஏந்து கொங்கைக் குற வனிதை காந்த ...
விளங்குகின்ற வைர மாலையை அணிந்த மார்பினைக் கொண்ட
குறப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே,
சந்த்ரச் சிகர முகில் ஓங்கு செந்தில் பெருமாளே. ... சந்திரன்
தவழும் கோபுரத்தின் மேல் மேகங்கள் விளங்குகின்ற திருச்செந்தூர்ப்
பெருமாளே.
Similar songs:

60 - தகரநறை (திருச்செந்தூர்)

தனதனன தாந்த தந்தத்
     தனதனன தாந்த தந்தத்
          தனதனன தாந்த தந்தத் ...... தனதான

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000