சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
53   திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 27 - வாரியார் # 39 )  

கொம்பனையார்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்தன தானான தானன
     தந்தன தானான தானன
          தந்தன தானான தானன ...... தனதான


கொம்பனை யார்காது மோதிரு
     கண்களி லாமோத சீதள
          குங்கும பாடீர பூஷண ...... நகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர்
     செங்கழு நீர்மாலை சூடிய
          கொண்டையி லாதார சோபையில் ...... மருளாதே
உம்பர்கள் ஸ்வாமிந மோநம
     எம்பெரு மானேந மோநம
          ஒண்டொடி மோகாந மோநம ...... எனநாளும்
உன்புக ழேபாடி நானினி
     அன்புட னாசார பூசைசெய்
          துய்ந்திட வீணாள்ப டாதருள் ...... புரிவாயே
பம்பர மேபோல ஆடிய
     சங்கரி வேதாள நாயகி
          பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி
பங்கமி லாநீலி மோடிப
     யங்கரி மாகாளி யோகினி
          பண்டுசு ராபான சூரனொ ...... டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெ
     னும்படி வீறான வேல்தர
          என்றுமு ளானேம நோகர ...... வயலூரா
இன்சொல்வி சாகாக்ரு பாகர
     செந்திலில் வாழ்வாகி யேயடி
          யென்றனை யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.

கொம்பனையார் காது மோது இரு கண்களில்
ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகமேவு
கொங்கையில்
நீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையில்
ஆதார சோபையில் மருளாதே
உம்பர்கள் ஸ்வாமி நமோநம
எம்பெருமானே நமோநம
ஒண்டொடி மோகா நமோநம
எனநாளும் உன்புகழேபாடி
நானினி அன்புடன் ஆசார பூசைசெய்துய்ந்திட
வீணாள்படாதருள் புரிவாயே
பம்பரமேபோல ஆடிய சங்கரி
வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி கரசூலி
பங்கமி லாநீலி மோடிபயங்கரி
மாகாளி யோகினி
பண்டுசுராபான சூரனொடெதிர் போர்கண்டு
எம் புதல்வா வாழி வாழியெனும்படி
வீறான வேல்தர என்றுமுளானே
மநோகர வயலூரா
இன்சொல் விசாகா க்ருபாகர
செந்திலில் வாழ்வாகியே யடியென்றனை
ஈடேற வாழ்வருள் பெருமாளே.
பூங்கொடி போன்ற மாதர்களின் காதுவரை நீண்டு அதை மோதும் இரண்டு கண்களிலும், வாசம் மிக்கதும், குளிர்ந்த செஞ்சாந்து, சந்தனம், நகைகள் அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களிலும், நீர்த் தடாகத்தின் மேல் வளரும் செங்கழுநீர் மலர்மாலையைச் சூடிய கூந்தலிலும், உடலின் அழகிலும் மயங்காமல், தேவர்களின் ஸ்வாமியே போற்றி, போற்றி, எங்கள் பெருமானே போற்றி, போற்றி, ஒளி பொருந்திய வளையல்களை அணிந்த வள்ளியிடம் மோகம் கொண்டவனே போற்றி, போற்றி, என்று தினமும் உனது புகழையே பாடி யான் இனி அன்புடனே ஆசாரமான பூஜையைச் செய்து பிழைத்திடவும், என் வாழ்நாள் வீண் நாளாகப் போகாதபடியும் அருள் புரிவாயாக. பம்பரம் போலவே சுழன்று நடனம் ஆடும் சங்கரி, வேதாளங்களுக்கெல்லாம் (சிவ கணங்களுக்கு) தலைவி, தாமரை போன்ற திரு நிறைந்த பாதங்களில் சிலம்பை அணிந்தவள், திருக்கரத்தில் சூலத்தைத் தரித்தவள், குற்றமில்லாத கருநீல நிறத்தவள், காட்டைக் காக்கும் வன துர்க்கை, பயத்தைத் தருபவள் (தந்த பயத்தைப் போக்குபவள்) மகா காளி, யோகத்தின் தலைவியாகிய அன்னை பார்வதி, முன்பு மதுபானம் செய்திருந்த சூரனோடு நீ எதிர்த்துப் போர் செய்யவேண்டி, என் மகனே நீ வாழ்க, வாழ்க என்று ஆசி கூறும் வகையில் வெற்றியைத் தரும் வேலாயுதத்தைத் தரப்பெற்ற, என்றும் அழியாது விளங்கும் மூர்த்தியே, மனத்துக்கு இன்பம் தருபவனே, வயலூர்ப் பெருமானே, இனிய சொற்களை உடைய விசாகப் பெருமானே, கருணை நிறைந்தவனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் செல்வமாகி அடியேனை உய்விக்கும்படியாக வாழ்வை எனக்கு அருளும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
கொம்பனையார் காது மோது இரு கண்களில் ... பூங்கொடி
போன்ற மாதர்களின் காதுவரை நீண்டு அதை மோதும் இரண்டு
கண்களிலும்,
ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகமேவு
கொங்கையில்
... வாசம் மிக்கதும், குளிர்ந்த செஞ்சாந்து, சந்தனம்,
நகைகள் அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களிலும்,
நீராவி மேல்வளர் செங்கழு நீர்மாலை சூடிய கொண்டையில் ...
நீர்த் தடாகத்தின் மேல் வளரும் செங்கழுநீர் மலர்மாலையைச் சூடிய
கூந்தலிலும்,
ஆதார சோபையில் மருளாதே ... உடலின் அழகிலும்
மயங்காமல்,
உம்பர்கள் ஸ்வாமி நமோநம ... தேவர்களின் ஸ்வாமியே போற்றி,
போற்றி,
எம்பெருமானே நமோநம ... எங்கள் பெருமானே போற்றி, போற்றி,
ஒண்டொடி மோகா நமோநம ... ஒளி பொருந்திய வளையல்களை
அணிந்த வள்ளியிடம் மோகம் கொண்டவனே போற்றி, போற்றி,
எனநாளும் உன்புகழேபாடி ... என்று தினமும் உனது புகழையே
பாடி
நானினி அன்புடன் ஆசார பூசைசெய்துய்ந்திட ... யான் இனி
அன்புடனே ஆசாரமான பூஜையைச் செய்து பிழைத்திடவும்,
வீணாள்படாதருள் புரிவாயே ... என் வாழ்நாள் வீண் நாளாகப்
போகாதபடியும் அருள் புரிவாயாக.
பம்பரமேபோல ஆடிய சங்கரி ... பம்பரம் போலவே சுழன்று
நடனம் ஆடும் சங்கரி,
வேதாள நாயகி ... வேதாளங்களுக்கெல்லாம் (சிவ கணங்களுக்கு)
தலைவி,
பங்கய சீபாத நூபுரி கரசூலி ... தாமரை போன்ற திரு நிறைந்த
பாதங்களில் சிலம்பை அணிந்தவள், திருக்கரத்தில் சூலத்தைத்
தரித்தவள்,
பங்கமி லாநீலி மோடிபயங்கரி ... குற்றமில்லாத கருநீல
நிறத்தவள், காட்டைக் காக்கும் வன துர்க்கை, பயத்தைத் தருபவள்
(தந்த பயத்தைப் போக்குபவள்)
மாகாளி யோகினி ... மகா காளி, யோகத்தின் தலைவியாகிய
அன்னை பார்வதி,
பண்டுசுராபான சூரனொடெதிர் போர்கண்டு ... முன்பு மதுபானம்
செய்திருந்த சூரனோடு நீ எதிர்த்துப் போர் செய்யவேண்டி,
எம் புதல்வா வாழி வாழியெனும்படி ... என் மகனே நீ வாழ்க, வாழ்க
என்று ஆசி கூறும் வகையில்
வீறான வேல்தர என்றுமுளானே ... வெற்றியைத் தரும்
வேலாயுதத்தைத் தரப்பெற்ற, என்றும் அழியாது விளங்கும் மூர்த்தியே,
மநோகர வயலூரா ... மனத்துக்கு இன்பம் தருபவனே, வயலூர்ப்
பெருமானே,
இன்சொல் விசாகா க்ருபாகர ... இனிய சொற்களை உடைய
விசாகப் பெருமானே, கருணை நிறைந்தவனே,
செந்திலில் வாழ்வாகியே யடியென்றனை ... திருச்செந்தூரில்
வீற்றிருக்கும் செல்வமாகி அடியேனை
ஈடேற வாழ்வருள் பெருமாளே. ... உய்விக்கும்படியாக வாழ்வை
எனக்கு அருளும் பெருமாளே.
Similar songs:

53 - கொம்பனையார் (திருச்செந்தூர்)

தந்தன தானான தானன
     தந்தன தானான தானன
          தந்தன தானான தானன ...... தனதான

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 53