சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
515   சிதம்பரம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 489 - வாரியார் # 1317 )  

பரமகுரு நாத

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதானா


பரமகுரு நாத கருணையுப தேச
     பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண்
பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
     பகருமதி காரப் ...... பெருமாள்காண்
திருவளரு நீதி தினமனொக ராதி
     செகபதியை யாளப் ...... பெருமாள்காண்
செகதலமும் வானு மருவையவை பூத
     தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண்
ஒருபொருள தாகி அருவிடையை யூரு
     முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண்
உகமுடிவு கால மிறுதிகளி லாத
     உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண்
கருவுதனி லூறு மருவினைகள் மாய
     கலவிபுகு தாமெய்ப் ...... பெருமாள்காண்
கனகசபை மேவி அனவரத மாடு
     கடவுள்செக சோதிப் ...... பெருமாளே.

பரமகுரு நாத கருணையுப தேச
பதவிதரு ஞானப் பெருமாள்காண்
பகலிரவிலாத ஒளிவெளியில்
மேன்மை பகரும் அதிகாரப் பெருமாள்காண்
திருவளரு நீதி தின மனொகர ஆதி
செகபதியை யாளப் பெருமாள்காண்
செகதலமும் வானு மருவு ஐ அவை பூத
தெரிசனைசிவாயப் பெருமாள்காண்
ஒருபொருள் அதாகி அருவிடையை யூரும்
உமைதன்மண வாளப் பெருமாள்காண்
உகமுடிவு காலம் இறுதிகளிலாத
உறுதி அநுபூதிப் பெருமாள்காண்
கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய
கலவிபுகு தாமெய்ப் பெருமாள்காண்
கனகசபை மேவி அனவரதம் ஆடு
கடவுள்செக சோதிப் பெருமாளே.
பரமசிவனுக்கும் குருநாதனே, கருணையுடன் உபதேசிப்பவனே, அருட் பதவிகளைத் தருகின்ற பெருமாள் நீதான். பகலும் இரவும் அற்றதான ஞான ஒளிவீசும் சிதாகாச வெளியில் மேலான உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமாள் நீதான். முக்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதியே, நித்ய மனோகரனே, ஆதிப் பரம்பொருளே, உலகிலுள்ள மன்னர்களை எல்லாம் ஆள்கின்ற பெருமாள் நீதான். மண்ணும், விண்ணும், அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி தரிசனம் தரும் சிவாயநம என்ற பஞ்சாட்சரப் பொருளான பெருமாள் நீதான். ஏக வஸ்துவாகி அருமையான ரிஷப வாகனத்தில் ஏறுகின்ற பார்வதியின் மணவாளப் பெருமாளும் நீதான். பிரபஞ்சங்களின் யுக முடிவு, காலம், இறுதிகள் என்பவை இல்லாத நிலைபெற்ற சிவாநுபூதியைத் தந்தருளும் பெருமாள் நீதான். கருக்குழியிலிருந்தே ஊறி வருகின்ற கொடிய வினைகள் அழிய மீண்டும் என்னை மாயப் பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமாள் நீதான். பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) பொருந்தி எப்போதும் திருநடனம் புரிகின்ற தெய்வமாகின்ற ஜெகஜ்ஜோதியான பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
பரமகுரு நாத கருணையுப தேச ... பரமசிவனுக்கும் குருநாதனே,
கருணையுடன் உபதேசிப்பவனே,
பதவிதரு ஞானப் பெருமாள்காண் ... அருட் பதவிகளைத்
தருகின்ற பெருமாள் நீதான்.
பகலிரவிலாத ஒளிவெளியில் ... பகலும் இரவும் அற்றதான ஞான
ஒளிவீசும் சிதாகாச வெளியில்
மேன்மை பகரும் அதிகாரப் பெருமாள்காண் ... மேலான
உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமாள்
நீதான்.
திருவளரு நீதி தின மனொகர ஆதி ... முக்திச் செல்வத்தை
வளர்க்கின்ற நீதியே, நித்ய மனோகரனே, ஆதிப் பரம்பொருளே,
செகபதியை யாளப் பெருமாள்காண் ... உலகிலுள்ள மன்னர்களை
எல்லாம் ஆள்கின்ற பெருமாள் நீதான்.
செகதலமும் வானு மருவு ஐ அவை பூத ... மண்ணும், விண்ணும்,
அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி
தெரிசனைசிவாயப் பெருமாள்காண் ... தரிசனம் தரும் சிவாயநம
என்ற பஞ்சாட்சரப் பொருளான பெருமாள் நீதான்.
ஒருபொருள் அதாகி அருவிடையை யூரும் ... ஏக வஸ்துவாகி
அருமையான ரிஷப வாகனத்தில் ஏறுகின்ற
உமைதன்மண வாளப் பெருமாள்காண் ... பார்வதியின் மணவாளப்
பெருமாளும் நீதான்.
உகமுடிவு காலம் இறுதிகளிலாத ... பிரபஞ்சங்களின் யுக முடிவு,
காலம், இறுதிகள் என்பவை இல்லாத
உறுதி அநுபூதிப் பெருமாள்காண் ... நிலைபெற்ற சிவாநுபூதியைத்
தந்தருளும் பெருமாள் நீதான்.
கருவுதனில் ஊறும் அருவினைகள் மாய ... கருக்குழியிலிருந்தே
ஊறி வருகின்ற கொடிய வினைகள் அழிய
கலவிபுகு தாமெய்ப் பெருமாள்காண் ... மீண்டும் என்னை மாயப்
பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமாள் நீதான்.
கனகசபை மேவி அனவரதம் ஆடு ... பொன்னம்பலத்தில்
(சிதம்பரம்) பொருந்தி எப்போதும் திருநடனம் புரிகின்ற
கடவுள்செக சோதிப் பெருமாளே. ... தெய்வமாகின்ற
ஜெகஜ்ஜோதியான பெருமாளே.
Similar songs:

449 - கனகசபை மேவும் (சிதம்பரம்)

தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதானா

515 - பரமகுரு நாத (சிதம்பரம்)

தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதானா

Songs from this thalam சிதம்பரம்

449 - கனகசபை மேவும்

450 - கைத்தருண சோதி

451 - இருவினையின் மதி

452 - குகனே குருபரனே

453 - வண்டையொத்து

454 - கங்குலின் குழல்

455 - கொந்தளம் புழு

456 - மந்தரமென் குவடார்

457 - வந்து வந்துவித்தூறி

458 - கதித்துப் பொங்கலு

459 - சிரித்துச் சங்கொளி

460 - தத்தையென்று

461 - தனத்தில் குங்குமத்தை

462 - திருடிகள் இணக்கி

463 - கொந்தரம் குழல்

464 - தியங்கும் சஞ்சலம்

465 - பருவம் பணை

466 - மதவெம் கரி

467 - முகசந்திர புருவம்

468 - சந்திர வோலை

469 - காய மாய வீடு

470 - அவகுண விரகனை

471 - கட்டி முண்டக

472 - நஞ்சினைப் போலுமன

473 - செம் கலச

474 - கரிய மேகமெனும்

475 - கூந்தலாழ விரிந்து

476 - அத்தன் அன்னை

477 - இருள் காட்டு

478 - முல்லைமலர் போலும்

479 - அடப்பக்கம் பிடித்து

480 - அக்குப் பீளை

481 - ஆரத்தோடு அணி

482 - காதைக் காதி

483 - கொள்ளை ஆசை

484 - தாது மாமலர்

485 - எலுப்புத் தோல்

486 - நீல மாமுகில்

487 - வாத பித்தமொடு

488 - சுரும்பு உற்ற

489 - இணங்கித் தட்பொடு

490 - விடுங்கைக்கு ஒத்த

491 - கொந்தள வோலைகள் ஆட

492 - நகையா லெத்திகள்

493 - எழுகடல் மணலை

494 - தறுகணன் மறலி

495 - இரசபா கொத்தமொழி

496 - இருளும் ஓர்கதிரணு

497 - காவி உடுத்தும்

498 - கோதிக் கோதி

499 - சகசம்பக் குடைசூழ்

500 - சகுட முந்தும்

501 - சாந்துடனே புழுகு

502 - சுடரனைய திருமேனி

503 - தத்தை மயில்

504 - துத்தி பொற்றன

505 - நாடா பிறப்பு

506 - நாலு சதுரத்த பஞ்ச

507 - நீலக் குழலார்

508 - பனி போலத் துளி

509 - மகரமொடுறு குழை

510 - மச்ச மெச்சு

511 - மதிய மண்குண

512 - மருவு கடல்முகில்

513 - மனமே உனக்குறுதி

514 - முத்த மோகன

515 - பரமகுரு நாத

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 515