சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
463   சிதம்பரம் திருப்புகழ் ( - வாரியார் # 631 )  

கொந்தரம் குழல்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்த தந்தன தந்த தந்தன
     தந்த தந்தன தந்த தந்தன
          தந்த தந்தன தந்த தந்தன ...... தந்ததான


கொந்த ரங்குழ லிந்து வண்புரு
     வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை
          கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி ...... துண்டமாதர்
கொந்த ளங்கதி ரின்கு லங்களி
     னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி
          கொண்ட நண்பித ழின்சு கங்குயி ...... லின்சொல்மேவுந்
தந்த வந்தர ளஞ்சி றந்தெழு
     கந்த ரங்கமு கென்ப பைங்கழை
          தண்பு யந்தளி ரின்கு டங்கைய ...... ரம்பொனாரந்
தந்தி யின்குவ டின்த னங்களி
     ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர்
          தங்க டம்படி யுங்க வண்டிய ...... சிந்தையாமோ
மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர்
     தங்க டைந்தவ னஞ்சு மங்குலி
          மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற ...... எந்தவாழ்வும்
வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந
     டங்கொ ளுந்திரு மங்கை பங்கினன்
          வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடி ...... கண்டமாயோன்
உந்தி யின்புவ னங்க ளெங்கும
     டங்க வுண்டகு டங்கை யன்புக
          ழொண்பு ரம்பொடி கண்ட எந்தையர் ...... பங்கின்மேவும்
உம்ப லின்கலை மங்கை சங்கரி
     மைந்த னென்றய னும்பு கழ்ந்திட
          வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் ...... தம்பிரானே.

கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம்
கணை கொண்டு அரம்பையர் அந்தமும் சசி துண்டம் மாதர்
கொந்தளம் கதிரின் குலங்களில் உஞ்சு உழன்று இரசம் பலம்
கனி கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும்
தந்த(ம்) அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப
பைங் கழை தண் புயம் தளிரின் குடங்கையர் அம் பொன்
ஆரம் தந்தியின் குவடின் தனங்கள் இரண்டையும் குலை
கொண்டு விண்டவர் தம் கடம் படியும் கவண் தீய
சிந்தையாமோ
மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம் கடைந்தவன் அஞ்சு
மங்குலி மந்திரம் செல்வமும் சுகம் பெற எந்த வாழ்வும்
வந்த அரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு
மங்கை பங்கினன்
வண்டர் லங்கை உளன் சிரம் பொடி கண்ட மாயோன்
உந்தியில் புவனங்கள் எங்கும் அடங்க உண்ட குடங்கையன்
புகழ்
ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் பங்கின் மேவும் உம்பலின்
கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட
ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே.
அழகிய பூங் கொத்துக்கள் கொண்ட கூந்தல், பிறைச் சந்திரன் போன்ற வளப்பமுள்ள புருவங்கள், கயல் மீன் போலவும் அம்பு போலவும் அம்பின் அலகு போலவும் உள்ள கண்கள் ஆகியவற்றைக் கொண்ட விலைமாதர் தெய்வ மகளிர் போன்ற அழகும் சந்திரன் போன்ற முகமும் உடையவர்கள். இத்தகையோரின் கூந்தலின் ஒளி அழகுகளில் ஈடுபட்டுத் திரிந்து, சுவையுள்ள பழத்தின் சாரத்தைக் கொண்டு உகந்ததாக இருந்த வாயிதழ் ஊறலின் இன்பம், கிளி, குயில் இவைகளின் மொழி போன்ற இனிய சொல், விரும்பும்படியான அழகிய முத்துக்கள் போன்ற பற்கள், நல்ல எழுச்சியுள்ள கமுகு போன்ற கழுத்து, பசிய மூங்கில் போன்ற குளிர்ந்த புயங்கள், தளிர் போல மென்மையான உள்ளங்கையை உடையவர்கள், அழகிய பொன் மாலையை அணிந்துள்ள, யானை போலவும் மலை போலவும் பெரிதாக உள்ள இரண்டு மார்பகங்களும் நிலை கெட்டு வெளியே காட்டுபவர்கள். இத்தகைய பொது மகளிருடைய உடலில் தோய்கின்ற, கவண்கல் போல வேகமாய்ப் பாய்கின்ற கெட்ட சிந்தை எனக்கு ஆகுமோ? மந்தர மலையைக் கடலில் சுழல வைத்து அமுதத்தைக் கடைந்து எடுத்தவன், அச்சம் கொண்ட இந்திரன் இருப்பிடத்தையும் பொருளையும் சுகத்தையும் எல்லா வாழ்வையும் பெற, அந்தக் கடலில் தோன்றிய அரம்பை முதலான நடன மாதர்களையும் பங்கிட்டு அளித்து நடனம் புரிந்த லக்ஷ்மியின் நாயகன், மங்கல பாடகர் பாடி நின்ற இலங்கை வேந்தனான ராவணனுடைய பத்துத் தலைகளையும் பொடியாகும்படி வென்ற மாயவன், தனது வயிற்றில் அண்டங்கள் யாவும் அடங்க உண்ட உள்ளங்கையை உடைய திருமால் புகழ, ஒளி வீசிய திரி புரங்களை பொடி செய்த எமது தந்தையாகிய சிவபெருமானின் பாகத்தில் இருப்பவளும், எழுச்சி கொண்ட எல்லா கலைகளுக்கும் தலைவியுமாகிய மங்கை என்னும் சங்கரியின் மகனே என்று பிரமனும் புகழ, ஒள்ளிய மேலான சிதம்பரத்தின் திரு அம்பலத்தில் விளங்கும் தம்பிரானே.
Add (additional) Audio/Video Link
கொந்தர் அம் குழல் இந்து வண் புருவங்கள் கண் கயலும் சரம்
கணை கொண்டு அரம்பையர் அந்தமும் சசி துண்டம் மாதர்
...
அழகிய பூங் கொத்துக்கள் கொண்ட கூந்தல், பிறைச் சந்திரன் போன்ற
வளப்பமுள்ள புருவங்கள், கயல் மீன் போலவும் அம்பு போலவும்
அம்பின் அலகு போலவும் உள்ள கண்கள் ஆகியவற்றைக் கொண்ட
விலைமாதர் தெய்வ மகளிர் போன்ற அழகும் சந்திரன் போன்ற முகமும்
உடையவர்கள்.
கொந்தளம் கதிரின் குலங்களில் உஞ்சு உழன்று இரசம் பலம்
கனி கொண்ட நண்பு இதழின் சுகம் குயிலின் சொல் மேவும்
தந்த(ம்) அம் தரளம் சிறந்து எழு கந்தரம் கமுகு என்ப
...
இத்தகையோரின் கூந்தலின் ஒளி அழகுகளில் ஈடுபட்டுத் திரிந்து,
சுவையுள்ள பழத்தின் சாரத்தைக் கொண்டு உகந்ததாக இருந்த வாயிதழ்
ஊறலின் இன்பம், கிளி, குயில் இவைகளின் மொழி போன்ற இனிய
சொல், விரும்பும்படியான அழகிய முத்துக்கள் போன்ற பற்கள், நல்ல
எழுச்சியுள்ள கமுகு போன்ற கழுத்து,
பைங் கழை தண் புயம் தளிரின் குடங்கையர் அம் பொன்
ஆரம் தந்தியின் குவடின் தனங்கள் இரண்டையும் குலை
கொண்டு விண்டவர் தம் கடம் படியும் கவண் தீய
சிந்தையாமோ
... பசிய மூங்கில் போன்ற குளிர்ந்த புயங்கள், தளிர்
போல மென்மையான உள்ளங்கையை உடையவர்கள், அழகிய பொன்
மாலையை அணிந்துள்ள, யானை போலவும் மலை போலவும் பெரிதாக
உள்ள இரண்டு மார்பகங்களும் நிலை கெட்டு வெளியே காட்டுபவர்கள்.
இத்தகைய பொது மகளிருடைய உடலில் தோய்கின்ற, கவண்கல்
போல வேகமாய்ப் பாய்கின்ற கெட்ட சிந்தை எனக்கு ஆகுமோ?
மந்தரம் கடலும் சுழன்று அமிர்தம் கடைந்தவன் அஞ்சு
மங்குலி மந்திரம் செல்வமும் சுகம் பெற எந்த வாழ்வும்
வந்த அரம்பையர் எணும் பகிர்ந்து நடம் கொளும் திரு
மங்கை பங்கினன்
... மந்தர மலையைக் கடலில் சுழல வைத்து
அமுதத்தைக் கடைந்து எடுத்தவன், அச்சம் கொண்ட இந்திரன்
இருப்பிடத்தையும் பொருளையும் சுகத்தையும் எல்லா வாழ்வையும்
பெற, அந்தக் கடலில் தோன்றிய அரம்பை முதலான நடன
மாதர்களையும் பங்கிட்டு அளித்து நடனம் புரிந்த லக்ஷ்மியின்
நாயகன்,
வண்டர் லங்கை உளன் சிரம் பொடி கண்ட மாயோன்
உந்தியில் புவனங்கள் எங்கும் அடங்க உண்ட குடங்கையன்
புகழ்
... மங்கல பாடகர் பாடி நின்ற இலங்கை வேந்தனான
ராவணனுடைய பத்துத் தலைகளையும் பொடியாகும்படி வென்ற
மாயவன், தனது வயிற்றில் அண்டங்கள் யாவும் அடங்க உண்ட
உள்ளங்கையை உடைய திருமால் புகழ,
ஒண் புரம் பொடி கண்ட எந்தையர் பங்கின் மேவும் உம்பலின்
கலை மங்கை சங்கரி மைந்தன் என்று அயனும் புகழ்ந்திட
ஒண் பரம் திரு அம்பலம் திகழ் தம்பிரானே.
... ஒளி வீசிய திரி
புரங்களை பொடி செய்த எமது தந்தையாகிய சிவபெருமானின்
பாகத்தில் இருப்பவளும், எழுச்சி கொண்ட எல்லா கலைகளுக்கும்
தலைவியுமாகிய மங்கை என்னும் சங்கரியின் மகனே என்று பிரமனும்
புகழ, ஒள்ளிய மேலான சிதம்பரத்தின் திரு அம்பலத்தில் விளங்கும்
தம்பிரானே.
Similar songs:

463 - கொந்தரம் குழல் (சிதம்பரம்)

தந்த தந்தன தந்த தந்தன
     தந்த தந்தன தந்த தந்தன
          தந்த தந்தன தந்த தந்தன ...... தந்ததான

Songs from this thalam சிதம்பரம்

449 - கனகசபை மேவும்

450 - கைத்தருண சோதி

451 - இருவினையின் மதி

452 - குகனே குருபரனே

453 - வண்டையொத்து

454 - கங்குலின் குழல்

455 - கொந்தளம் புழு

456 - மந்தரமென் குவடார்

457 - வந்து வந்துவித்தூறி

458 - கதித்துப் பொங்கலு

459 - சிரித்துச் சங்கொளி

460 - தத்தையென்று

461 - தனத்தில் குங்குமத்தை

462 - திருடிகள் இணக்கி

463 - கொந்தரம் குழல்

464 - தியங்கும் சஞ்சலம்

465 - பருவம் பணை

466 - மதவெம் கரி

467 - முகசந்திர புருவம்

468 - சந்திர வோலை

469 - காய மாய வீடு

470 - அவகுண விரகனை

471 - கட்டி முண்டக

472 - நஞ்சினைப் போலுமன

473 - செம் கலச

474 - கரிய மேகமெனும்

475 - கூந்தலாழ விரிந்து

476 - அத்தன் அன்னை

477 - இருள் காட்டு

478 - முல்லைமலர் போலும்

479 - அடப்பக்கம் பிடித்து

480 - அக்குப் பீளை

481 - ஆரத்தோடு அணி

482 - காதைக் காதி

483 - கொள்ளை ஆசை

484 - தாது மாமலர்

485 - எலுப்புத் தோல்

486 - நீல மாமுகில்

487 - வாத பித்தமொடு

488 - சுரும்பு உற்ற

489 - இணங்கித் தட்பொடு

490 - விடுங்கைக்கு ஒத்த

491 - கொந்தள வோலைகள் ஆட

492 - நகையா லெத்திகள்

493 - எழுகடல் மணலை

494 - தறுகணன் மறலி

495 - இரசபா கொத்தமொழி

496 - இருளும் ஓர்கதிரணு

497 - காவி உடுத்தும்

498 - கோதிக் கோதி

499 - சகசம்பக் குடைசூழ்

500 - சகுட முந்தும்

501 - சாந்துடனே புழுகு

502 - சுடரனைய திருமேனி

503 - தத்தை மயில்

504 - துத்தி பொற்றன

505 - நாடா பிறப்பு

506 - நாலு சதுரத்த பஞ்ச

507 - நீலக் குழலார்

508 - பனி போலத் துளி

509 - மகரமொடுறு குழை

510 - மச்ச மெச்சு

511 - மதிய மண்குண

512 - மருவு கடல்முகில்

513 - மனமே உனக்குறுதி

514 - முத்த மோகன

515 - பரமகுரு நாத

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 463