சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
442   திருவருணை திருப்புகழ் ( - வாரியார் # 557 )  

விடு மதவேள்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தானாதன தனதன தானாதன
     தனதன தானாதன ...... தனதான


விடுமத வேள்வாளியின் விசைபெறு மாலாகல
     விழிகொடு வாபோவென ...... வுரையாடும்
விரகுட னூறாயிர மனமுடை மாபாவிகள்
     ம்ருகமத கோலாகல ...... முலைதோய
அடையவு மாசாபர வசமுறு கோமாளியை
     அவனியு மாகாசமும் ...... வசைபேசும்
அசடஅ நாசாரனை அவலனை ஆபாசனை
     அடியவ ரோடாள்வது ...... மொருநாளே
வடகுல கோபாலர்த மொருபதி னாறாயிரம்
     வனிதையர் தோள்தோய்தரு ...... மபிராம
மரகத நாராயணன் மருமக சோணாசல
     மகிபச தாகாலமு ...... மிளையோனே
உடுபதி சாயாபதி சுரபதி மாயாதுற
     உலகுய வாரார்கலி ...... வறிதாக
உயரிய மாநாகமு நிருதரு நீறாய்விழ
     ஒருதனி வேலேவிய ...... பெருமாளே.

விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல விழி
கொ(ண்)டு வா போ என உரை ஆடும்
விரகுடன் நூறாயிரம் மனம் உடை மா பாவிகள்
ம்ருகமத கோலாகல முலை தோய அடையவும் ஆசா பரவசம்
உறு கோமாளியை
அவனியும் ஆகாசமும் வசை பேசும் அசட அநாசாரனை
அவலனை ஆபாசனை
அடியவரோடு ஆள்வதும் ஒரு நாளே
வட குல கோபாலர் தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர்
தோள் தோய் தரும் அபிராம மரகத நாராயணன் மருமக
சோணாசல மகிப சதா காலமும் இளையோனே
உடுபதி சாயாபதி சுரபதி மாயாது உற
உலகு உய்ய வார் ஆர்கலி வறிது ஆக
உயரிய மா நாகமும் நிருதரும் நீறாய் விழ
ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே.
செருக்கு உள்ள மன்மதன் செலுத்தும் அம்பு போல வேகம் பெற்றுள்ள, ஆலகால விஷம் போன்ற கண்களைக் கொண்டு, வா என்றும் போ என்றும் பேசுகின்ற சாமர்த்தியத்துடன் நூறாயிரக் கணக்கான மனத்தை உடைய பெரிய பாவிகளான விலைமாதரின், கஸ்தூரி அணிந்துள்ள ஆடம்பரமான மார்பகங்களை அணைந்து சேர ஆசைப் பிரமை பூண்ட கோணங்கியை, மண்ணுள்ளோரும், விண்ணுள்ளோரும் பழிப்புரை பேசும் முட்டாளான துராசாரனை, பயனற்றவனை, அசுத்தனை, உனது அடியார்களோடு ஆண்டருளுவதும் ஒரு நாள் ஆகுமோ? வடக்கே கோபாலர் குலத்தவரான இடையர்களின் ஒரு பதினாயிரம் மாதர்களது தோள்களை அணைந்த அழகிய பச்சை நிற நாராயணனுக்கு மருகனே, திருவண்ணாமலைக்கு அரசே, என்றும் இளமையாக இருப்பவனே, நட்சத்திரங்களுக்குத் தலைவனான சந்திரனும், சாயா தேவிக்குக் கணவனாகிய சூரியனும், தேவர்கள் தலைவனான இந்திரனும் இறந்து படாமல் வாழ, உலகம் பிழைக்க, நீண்ட கடல் வற்றிப் போக, சிறந்த பெரிய கிரவுஞ்ச மலையும் அசுரர்களும் தூள்பட்டு விழ, ஒப்பற்ற வேலைச் செலுத்திய பெருமாளே.
Add (additional) Audio/Video Link
விடு மதவேள் வாளியின் விசை பெறும் ஆலாகல விழி
கொ(ண்)டு வா போ என உரை ஆடும்
... செருக்கு உள்ள
மன்மதன் செலுத்தும் அம்பு போல வேகம் பெற்றுள்ள, ஆலகால விஷம்
போன்ற கண்களைக் கொண்டு, வா என்றும் போ என்றும் பேசுகின்ற
விரகுடன் நூறாயிரம் மனம் உடை மா பாவிகள் ...
சாமர்த்தியத்துடன் நூறாயிரக் கணக்கான மனத்தை உடைய பெரிய
பாவிகளான விலைமாதரின்,
ம்ருகமத கோலாகல முலை தோய அடையவும் ஆசா பரவசம்
உறு கோமாளியை
... கஸ்தூரி அணிந்துள்ள ஆடம்பரமான
மார்பகங்களை அணைந்து சேர ஆசைப் பிரமை பூண்ட கோணங்கியை,
அவனியும் ஆகாசமும் வசை பேசும் அசட அநாசாரனை
அவலனை ஆபாசனை
... மண்ணுள்ளோரும், விண்ணுள்ளோரும்
பழிப்புரை பேசும் முட்டாளான துராசாரனை, பயனற்றவனை, அசுத்தனை,
அடியவரோடு ஆள்வதும் ஒரு நாளே ... உனது
அடியார்களோடு ஆண்டருளுவதும் ஒரு நாள் ஆகுமோ?
வட குல கோபாலர் தம் ஒரு பதி நூறாயிரம் வனிதையர்
தோள் தோய் தரும் அபிராம மரகத நாராயணன் மருமக
...
வடக்கே கோபாலர் குலத்தவரான இடையர்களின் ஒரு பதினாயிரம்
மாதர்களது தோள்களை அணைந்த அழகிய பச்சை நிற நாராயணனுக்கு
மருகனே,
சோணாசல மகிப சதா காலமும் இளையோனே ...
திருவண்ணாமலைக்கு அரசே, என்றும் இளமையாக இருப்பவனே,
உடுபதி சாயாபதி சுரபதி மாயாது உற ... நட்சத்திரங்களுக்குத்
தலைவனான சந்திரனும், சாயா தேவிக்குக் கணவனாகிய சூரியனும்,
தேவர்கள் தலைவனான இந்திரனும் இறந்து படாமல் வாழ,
உலகு உய்ய வார் ஆர்கலி வறிது ஆக ... உலகம் பிழைக்க,
நீண்ட கடல் வற்றிப் போக,
உயரிய மா நாகமும் நிருதரும் நீறாய் விழ ... சிறந்த பெரிய
கிரவுஞ்ச மலையும் அசுரர்களும் தூள்பட்டு விழ,
ஒரு தனி வேல் ஏவிய பெருமாளே. ... ஒப்பற்ற வேலைச்
செலுத்திய பெருமாளே.
Similar songs:

442 - விடு மதவேள் (திருவருணை)

தனதன தானாதன தனதன தானாதன
     தனதன தானாதன ...... தனதான

Songs from this thalam திருவருணை

6 - முத்தைத்தரு

367 - குமர குருபர குணதர

368 - அருவ மிடையென

369 - கருணை சிறிதும்

370 - துகிலு ம்ருகமத

371 - மகர மெறிகடல்

372 - முகிலை யிகல்

373 - முருகு செறிகுழல் சொரு

374 - விடமும் அமுதமும்

375 - கமரி மலர்குழல்

376 - கயல் விழித்தேன்

377 - கறுவு மிக்கு ஆவி

378 - பரியகைப் பாசம்

379 - தருண மணி

380 - முழுகிவட

381 - வடவை அனல் ஊடு

382 - ஆலவிழி நீல

383 - பேதக விரோத

384 - அமுதம் ஊறு சொல்

385 - உருகும் மாமெழுகாக

386 - கரி உரி அரவம்

387 - கனை கடல் வயிறு

388 - இரவியும் மதியும்

389 - விரகொடு வளை

390 - இடம் அடு சுறவை

391 - கெஜ நடை மடவார்

392 - அருக்கார் நலத்தை

393 - அருமா மதனை

394 - அழுதும் ஆவா

395 - ஆனை வரிக் கோடு

396 - இடருக்கு இடர்

397 - இமராஜன் நிலாவது

398 - இரத சுரதமுலை

399 - இரவுபகற் பலகாலும்

400 - இருவர் மயலோ

401 - இருவினை அஞ்ச

402 - இருவினை ஊண்

403 - இருளளகம் அவிழ

404 - இறுகு மணி முலை

405 - உலையிலனல்

406 - கடல்பரவு தரங்க

407 - கமலமுகப் பிறை

408 - கமல மொட்டை

409 - கரிமுகக் கடகளிறு

410 - கரு நிறம் சிறந்து

411 - காணாத தூர நீள்

412 - காராடக் குழல்

413 - காரும் மருவும்

414 - கீத விநோத மெச்சு

415 - குரவ நறும் அளக

416 - குழவியுமாய் மோகம்

417 - கேதகையபூ முடித்த

418 - கோடு ஆன மடவார்கள்

419 - கோடு செறி

420 - சிலைநுதல் வைத்து

421 - சிவமாதுடனே

422 - சினமுடுவல் நரிகழுகு

423 - சுக்கிலச் சுரொணித

424 - செஞ்சொற் பண்

425 - செயசெய அருணா

426 - தமரம் குரங்களும்

427 - தமிழோதிய குயிலோ

428 - தலையை மழித்து

429 - திருட்டு வாணிப

430 - தேதென வாச முற்ற

431 - தோதகப் பெரும்

432 - பாண மலரது

433 - பாலாய் நூலாய்

434 - புணர்முலை மடந்தை

435 - புலையனான

436 - போக கற்ப

437 - மானை விடத்தை

438 - முகத் துலக்கிகள்

439 - மேக மொத்தகுழலார்

440 - மொழிய நிறம்

441 - வலிவாத பித்தமொடு

442 - விடு மதவேள்

443 - விதி அதாகவே

444 - விந்துப் புளகித

445 - வீறு புழுகான பனி

1328 - ஏறுமயிலேறி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 442