சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
417   திருவருணை திருப்புகழ் ( - வாரியார் # 533 )  

கேதகையபூ முடித்த

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தானதன தானதத்த தானதன தானதத்த
     தானதன தானதத்த ...... தனதான


கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
     கேவலம தானஅற்ப ...... நினைவாலே
கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த
     கேடுறுக வேநினைக்கும் ...... வினையாலே
வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்
     மேதினியெ லாமுழற்று ...... மடியேனை
வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து
     வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே
நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து
     நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற
நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த
     நீலநிற மால்தனக்கு ...... மருகோனே
சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்
     சோபைவட கோபுரத்தி ...... லுறைவோனே
சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி
     தோளின்மிசை வாளெடுத்த ...... பெருமாளே.

கேதகைய பூ முடித்த மாதர் தம் மய(யா)லில் உற்று
கேவலம் அதான அற்ப நினைவாலே கேள்வி அது
இலாதிருக்கு(ம்) ஊழ் வினையினால்
மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே
வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில் மேதினி
எ(ல்)லாம் உழற்றும் அடியேனை
வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில்
மீதில் உற்று வருவாயே
நீதி நெறியே அழித்த தாருகனை வேர் அறுத்து
நீடு புகழ் தேவர் இல்கள் குடி ஏற
நீடு அருளினால் விடுத்த பால குமரா
செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே
சோதி அனலா(ய்) உதித்த சோணகிரி மா மலைக்குள்
சோபை வட கோபுரத்தில் உறைவோனே
சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி
தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே.
தாழம்பூவை அணிந்துள்ள பொது மகளிர்களுடைய மோகத்தில் ஈடுபட்டு, தாழ்மையான அற்ப நினைவுகளாலும், ஆராய்ச்சிக்கு இடம் தராது இருக்கும் ஊழ் வினையாலும், மிக்க அழிவு வருதற்கே நினைக்கின்ற செயல்களாலும், வேதனையில் பட்டு, மிக்க பாதகத்துக்கு இடம் தருபவனாக, வீணாக உலக முழுமையும் அலைச்சல் உற்றுத் திரியும் அடியேனுக்கு வீட்டின்பத்தைக் கொடுத்து உதவி, என்னை ஆட்கொள்ளும் பொருட்டு வெற்றி வேலைத் திருக் கரத்தே எடுத்து, விளங்குகின்ற மயிலின் மீது ஏறி வருவாயாக. நீதி நெறிகளை அழித்த தாரகாசுரனை வேரோடே அறுத்து, பெரும் புகழைக் கொண்ட தேவர்கள் தத்தம் வீடுகளில் குடிபுக, பெருங் கருணையால் உதவிய இளங் குமரனே, செழிப்புள்ள நீல நிறம் உள்ள திருமாலுக்கு மருகனே, ஜோதி நெருப்பாகத் தோன்றிய அருணாசலம் என்னும் சிறந்த மலைக்குள் அழகான வடக்குக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, விடாது பெய்யும் பெரு மழையைப் போல எதிர்த்து வந்த அசுரர்கள் இறந்து போகும்படி, வெற்றி பொருந்திய தோளின் மீது வாளாயுதத்தை எடுத்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link
கேதகைய பூ முடித்த மாதர் தம் மய(யா)லில் உற்று ...
தாழம்பூவை அணிந்துள்ள பொது மகளிர்களுடைய மோகத்தில் ஈடுபட்டு,
கேவலம் அதான அற்ப நினைவாலே கேள்வி அது
இலாதிருக்கு(ம்) ஊழ் வினையினால்
... தாழ்மையான அற்ப
நினைவுகளாலும், ஆராய்ச்சிக்கு இடம் தராது இருக்கும் ஊழ்
வினையாலும்,
மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே ... மிக்க
அழிவு வருதற்கே நினைக்கின்ற செயல்களாலும்,
வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில் மேதினி
எ(ல்)லாம் உழற்றும் அடியேனை
... வேதனையில் பட்டு, மிக்க
பாதகத்துக்கு இடம் தருபவனாக, வீணாக உலக முழுமையும் அலைச்சல்
உற்றுத் திரியும் அடியேனுக்கு
வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில்
மீதில் உற்று வருவாயே
... வீட்டின்பத்தைக் கொடுத்து உதவி,
என்னை ஆட்கொள்ளும் பொருட்டு வெற்றி வேலைத் திருக் கரத்தே
எடுத்து, விளங்குகின்ற மயிலின் மீது ஏறி வருவாயாக.
நீதி நெறியே அழித்த தாருகனை வேர் அறுத்து ... நீதி
நெறிகளை அழித்த தாரகாசுரனை வேரோடே அறுத்து,
நீடு புகழ் தேவர் இல்கள் குடி ஏற ... பெரும் புகழைக் கொண்ட
தேவர்கள் தத்தம் வீடுகளில் குடிபுக,
நீடு அருளினால் விடுத்த பால குமரா ... பெருங் கருணையால்
உதவிய இளங் குமரனே,
செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே ... செழிப்புள்ள
நீல நிறம் உள்ள திருமாலுக்கு மருகனே,
சோதி அனலா(ய்) உதித்த சோணகிரி மா மலைக்குள்
சோபை வட கோபுரத்தில் உறைவோனே
... ஜோதி நெருப்பாகத்
தோன்றிய அருணாசலம் என்னும் சிறந்த மலைக்குள் அழகான வடக்குக்
கோபுரத்தில் வீற்றிருப்பவனே,
சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி
தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே.
... விடாது பெய்யும்
பெரு மழையைப் போல எதிர்த்து வந்த அசுரர்கள் இறந்து போகும்படி,
வெற்றி பொருந்திய தோளின் மீது வாளாயுதத்தை எடுத்த பெருமாளே.
Similar songs:

417 - கேதகையபூ முடித்த (திருவருணை)

தானதன தானதத்த தானதன தானதத்த
     தானதன தானதத்த ...... தனதான

Songs from this thalam திருவருணை

6 - முத்தைத்தரு

367 - குமர குருபர குணதர

368 - அருவ மிடையென

369 - கருணை சிறிதும்

370 - துகிலு ம்ருகமத

371 - மகர மெறிகடல்

372 - முகிலை யிகல்

373 - முருகு செறிகுழல் சொரு

374 - விடமும் அமுதமும்

375 - கமரி மலர்குழல்

376 - கயல் விழித்தேன்

377 - கறுவு மிக்கு ஆவி

378 - பரியகைப் பாசம்

379 - தருண மணி

380 - முழுகிவட

381 - வடவை அனல் ஊடு

382 - ஆலவிழி நீல

383 - பேதக விரோத

384 - அமுதம் ஊறு சொல்

385 - உருகும் மாமெழுகாக

386 - கரி உரி அரவம்

387 - கனை கடல் வயிறு

388 - இரவியும் மதியும்

389 - விரகொடு வளை

390 - இடம் அடு சுறவை

391 - கெஜ நடை மடவார்

392 - அருக்கார் நலத்தை

393 - அருமா மதனை

394 - அழுதும் ஆவா

395 - ஆனை வரிக் கோடு

396 - இடருக்கு இடர்

397 - இமராஜன் நிலாவது

398 - இரத சுரதமுலை

399 - இரவுபகற் பலகாலும்

400 - இருவர் மயலோ

401 - இருவினை அஞ்ச

402 - இருவினை ஊண்

403 - இருளளகம் அவிழ

404 - இறுகு மணி முலை

405 - உலையிலனல்

406 - கடல்பரவு தரங்க

407 - கமலமுகப் பிறை

408 - கமல மொட்டை

409 - கரிமுகக் கடகளிறு

410 - கரு நிறம் சிறந்து

411 - காணாத தூர நீள்

412 - காராடக் குழல்

413 - காரும் மருவும்

414 - கீத விநோத மெச்சு

415 - குரவ நறும் அளக

416 - குழவியுமாய் மோகம்

417 - கேதகையபூ முடித்த

418 - கோடு ஆன மடவார்கள்

419 - கோடு செறி

420 - சிலைநுதல் வைத்து

421 - சிவமாதுடனே

422 - சினமுடுவல் நரிகழுகு

423 - சுக்கிலச் சுரொணித

424 - செஞ்சொற் பண்

425 - செயசெய அருணா

426 - தமரம் குரங்களும்

427 - தமிழோதிய குயிலோ

428 - தலையை மழித்து

429 - திருட்டு வாணிப

430 - தேதென வாச முற்ற

431 - தோதகப் பெரும்

432 - பாண மலரது

433 - பாலாய் நூலாய்

434 - புணர்முலை மடந்தை

435 - புலையனான

436 - போக கற்ப

437 - மானை விடத்தை

438 - முகத் துலக்கிகள்

439 - மேக மொத்தகுழலார்

440 - மொழிய நிறம்

441 - வலிவாத பித்தமொடு

442 - விடு மதவேள்

443 - விதி அதாகவே

444 - விந்துப் புளகித

445 - வீறு புழுகான பனி

1328 - ஏறுமயிலேறி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 417