| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
கீத விநோத மெச்சு ...... குரலாலே கீத விநோத மெச்சு குரலாலே 414 - கீத விநோத மெச்சு (திருவருணை) Songs from this thalam திருவருணை
414 திருவருணை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 461 - வாரியார் # 530 )
கீத விநோத மெச்சு
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தான தனான தத்த ...... தனதான
தான தனான தத்த ...... தனதான
கீறு மையார் முடித்த ...... குழலாலே
நீதி யிலாத ழித்து ...... முழலாதே
நீமயி லேறி யுற்று ...... வரவேணும்
சூதமர் சூர ருட்க ...... பொருசூரா
சோண கிரீயி லுற்ற ...... குமரேசா
ஆதியர் காதொ ருச்சொ ...... லருள்வோனே
ஆனை முகார்க னிட்ட ...... பெருமாளே.
கீறு மையார் முடித்த குழலாலே
நீதி யிலாதழித்தும் உழலாதே
நீமயி லேறி யுற்று வரவேணும்
சூதமர் சூரர் உட்க பொருசூரா
சோண கிரீயி லுற்ற குமரேசா
ஆதியர்காது ஒருச்சொல் அருள்வோனே
ஆனைமுகார் கனிட்ட பெருமாளே. (மாதரின்) ராக ஜாலங்கள் காட்டக்கூடிய மெச்சத்தக்க குரலின் இனிமையிலும், வகிடு எடுத்த, கரிய நிறமுள்ள, வாரி முடிக்கப்பட்ட கூந்தலினாலும், மயங்கி நீதியற்ற அக்ரமங்களைச் செய்து நான் திரியாதிருக்க, நீ மயில் மீது ஏறி மனது வைத்து வரவேண்டுகிறேன். சூதான எண்ணங்கள் நிறைந்த சூரர்கள் பயப்படும்படி போர் செய்த சூரனே, (சோணகிரி) திருவண்ணாமலையில் வாழும் குமரேசனே, ஆதிதேவர் சிவனது காதில் ஒப்பற்ற பிரணவச்சொல்லை ஓதியவனே, யானைமுகக் கணபதிக்கு கனிஷ்ட (தம்பியான) பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
Similar songs: கீத விநோத மெச்சு குரலாலே ... (மாதரின்) ராக ஜாலங்கள்
காட்டக்கூடிய மெச்சத்தக்க குரலின் இனிமையிலும்,
கீறு மையார் முடித்த குழலாலே ... வகிடு எடுத்த, கரிய நிறமுள்ள,
வாரி முடிக்கப்பட்ட கூந்தலினாலும்,
நீதி யிலாதழித்தும் உழலாதே ... மயங்கி நீதியற்ற அக்ரமங்களைச்
செய்து நான் திரியாதிருக்க,
நீமயி லேறி யுற்று வரவேணும் ... நீ மயில் மீது ஏறி மனது வைத்து
வரவேண்டுகிறேன்.
சூதமர் சூரர் உட்க பொருசூரா ... சூதான எண்ணங்கள் நிறைந்த
சூரர்கள் பயப்படும்படி போர் செய்த சூரனே,
சோண கிரீயி லுற்ற குமரேசா ... (சோணகிரி)
திருவண்ணாமலையில் வாழும் குமரேசனே,
ஆதியர்காது ஒருச்சொல் அருள்வோனே ... ஆதிதேவர் சிவனது
காதில் ஒப்பற்ற பிரணவச்சொல்லை ஓதியவனே,
ஆனைமுகார் கனிட்ட பெருமாளே. ... யானைமுகக் கணபதிக்கு
கனிஷ்ட (தம்பியான) பெருமாளே.
தான தனான தத்த ...... தனதான
தான தனான தத்த ...... தனதான