சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
39   திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 23 - வாரியார் # 32 )  

கண்டுமொழி

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த
     தந்ததன தந்த தந்த ...... தனதான


கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு
     கண்கள்குழல் கொண்டல் என்று ...... பலகாலும்
கண்டுளம்வ ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
     கங்குல்பகல் என்று நின்று ...... விதியாலே
பண்டைவினை கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
     பங்கயப தங்கள் தந்து ...... புகழோதும்
பண்புடைய சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து
     பண்புபெற அஞ்ச லஞ்ச ...... லெனவாராய்
வண்டுபடு கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
     வம்பினைய டைந்து சந்தின் ...... மிகமூழ்கி
வஞ்சியைமு னிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
     வந்தழகு டன்க லந்த ...... மணிமார்பா
திண்டிறல்பு னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
     செஞ்சமர்பு னைந்து துங்க ...... மயில்மீதே
சென்றசுரர் அஞ்ச வென்று குன்றிடைம ணம்பு ணர்ந்து
     செந்தில்நகர் வந்த மர்ந்த ...... பெருமாளே.

கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு
கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும்
கண்டு உளம்வ ருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து
கங்குல்பகல் என்று நின்று விதியாலே
பண்டைவினை கொண்டு உழன்று வெந்துவிழுகின்றல் கண்டு
பங்கயப தங்கள் தந்து புகழோதும்
பண்புடைய சிந்தை யன்பர் தங்களினுடன் கலந்து
பண்புபெற அஞ்சல் அஞ்சலெனவாராய்
வண்டுபடுகின்ற தொங்கல் கொண்டு அறநெருங்கியிண்டு
வம்பினைய டைந்து சந்தின் மிகமூழ்கி
வஞ்சியை முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
வந்தழகுடன்கலந்த மணிமார்பா
திண்டிறல்புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு
செஞ்சமர்புனைந்து துங்க மயில்மீதே
சென்று அசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம்புணர்ந்து
செந்தில்நகர் வந்தமர்ந்த பெருமாளே.
கற்கண்டுச் சொல், யானைத் தந்தம் போன்ற மார்பு, வஞ்சிக் கொடி போன்ற இடை, அம்பையும் நஞ்சையும் ஒத்த கண்கள், கூந்தல் மேகம் போன்றது என பலமுறையும் உவமை கண்டு, உள்ளம் வருந்தி, நொந்து போய், மாதர்களின் வசப்பட்டு, இரவும் பகலுமாக நின்று, விதியின் பயனாய் பழவினை தாக்க, அதனால் திரிந்து, என் மனம் வெந்து வீழ்வதைக் கண்டு, உன் தாமரைப் பதங்களைத் தந்தளித்து, உன் புகழை ஓதும் பண்பு கொண்ட மனத்து அன்பர்களுடன் கலந்து நான் நற்குணம் பெறுவதற்கு, நீ அஞ்சாதே அஞ்சாதே என்று கூறி வருவாயாக. வண்டுகள் மொய்க்கின்ற மலர்மாலையைப் பூண்டு, மிக நெருக்கமாக நெய்த அழுத்தமான ரவிக்கையை அணிந்து, சந்தனக்குழம்பில் மிகவும் முழுகி, வஞ்சிக் கொடி போன்ற இடையை வருத்துகின்ற மார்பினள், மென்மையான குறப்பெண் வள்ளியின் சிவந்த கைகளை அவளது இடத்துக்கு (வள்ளிமலைக்கு)ச் சென்று எழிலுடன் தொட்டுக் கலந்த திருமார்பனே. திண்ணிய வலிமை கொண்ட தேவர்கள் நின்னிடம் அபயம் அடைய வேண்டுவதைக் கண்டு, செவ்விய போர்க்கோலம் பூண்டு, தூய மயில்மீது ஏறிச்சென்று, போர்க்களத்தில் அசுரர்களை அஞ்சும்படி வெற்றி கொண்டு, (திருப்பரங்) குன்றத்தில் தேவயானையை மணம்புரிந்து, திருச்செந்தூர்ப்பதியில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
கண்டுமொழி கொம்பு கொங்கை ... கற்கண்டுச் சொல், யானைத்
தந்தம் போன்ற மார்பு,
வஞ்சியிடை யம்பு நஞ்சு கண்கள் ... வஞ்சிக் கொடி போன்ற இடை,
அம்பையும் நஞ்சையும் ஒத்த கண்கள்,
குழல் கொண்டல் என்று பலகாலும் கண்டு ... கூந்தல் மேகம்
போன்றது என பலமுறையும் உவமை கண்டு,
உளம்வ ருந்தி நொந்து ... உள்ளம் வருந்தி, நொந்து போய்,
மங்கையர்வசம்புரிந்து ... மாதர்களின் வசப்பட்டு,
கங்குல்பகல் என்று நின்று ... இரவும் பகலுமாக நின்று,
விதியாலே பண்டைவினை கொண்டு உழன்று ... விதியின்
பயனாய் பழவினை தாக்க, அதனால் திரிந்து,
வெந்துவிழுகின்றல் கண்டு ... என் மனம் வெந்து வீழ்வதைக் கண்டு,
பங்கயப தங்கள் தந்து ... உன் தாமரைப் பதங்களைத் தந்தளித்து,
புகழோதும் பண்புடைய சிந்தை யன்பர் தங்களினுடன்
கலந்து
... உன் புகழை ஓதும் பண்பு கொண்ட மனத்து அன்பர்களுடன்
கலந்து
பண்புபெற அஞ்சல் அஞ்சலெனவாராய் ... நான் நற்குணம்
பெறுவதற்கு, நீ அஞ்சாதே அஞ்சாதே என்று கூறி வருவாயாக.
வண்டுபடுகின்ற தொங்கல் கொண்டு ... வண்டுகள் மொய்க்கின்ற
மலர்மாலையைப் பூண்டு,
அறநெருங்கியிண்டு வம்பினைய டைந்து ... மிக நெருக்கமாக
நெய்த அழுத்தமான ரவிக்கையை அணிந்து,
சந்தின் மிகமூழ்கி வஞ்சியை முனிந்த கொங்கை ...
சந்தனக்குழம்பில் மிகவும் முழுகி, வஞ்சிக் கொடி போன்ற இடையை
வருத்துகின்ற மார்பினள்,
மென்குறம டந்தை செங்கை ... மென்மையான குறப்பெண்
வள்ளியின் சிவந்த கைகளை
வந்தழகுடன்கலந்த மணிமார்பா ... அவளது இடத்துக்கு
(வள்ளிமலைக்கு)ச் சென்று எழிலுடன் தொட்டுக் கலந்த திருமார்பனே.
திண்டிறல்புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு ...
திண்ணிய வலிமை கொண்ட தேவர்கள் நின்னிடம் அபயம் அடைய
வேண்டுவதைக் கண்டு,
செஞ்சமர்புனைந்து துங்க மயில்மீதே சென்று ... செவ்விய
போர்க்கோலம் பூண்டு, தூய மயில்மீது ஏறிச்சென்று,
அசுரர் அஞ்ச வென்று ... போர்க்களத்தில் அசுரர்களை அஞ்சும்படி
வெற்றி கொண்டு,
குன்றிடை மணம்புணர்ந்து ... (திருப்பரங்) குன்றத்தில்
தேவயானையை மணம்புரிந்து,
செந்தில்நகர் வந்தமர்ந்த பெருமாளே. ... திருச்செந்தூர்ப்பதியில்
வந்து வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

39 - கண்டுமொழி (திருச்செந்தூர்)

தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த
     தந்ததன தந்த தந்த ...... தனதான

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 39