சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
38   திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 22 - வாரியார் # 31 )  

கட்டழகு விட்டு

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
     தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
          தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதான


கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
     இட்டபொறி தப்பிப் பிணங்கொண் டதின்சிலர்கள்
          கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே
வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
     மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
          விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ
பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
     முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
          பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத்
தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
     நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
          சற்சமய வித்தைப் பலன்கண் டுசெந்திலுறை ...... பெருமாளே.

கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்து
முனம் இட்டபொறி தப்பி
பிணங்கொண்டதின் சிலர்கள்
கட்டணமெ டுத்துச் சுமந்தும்
பெரும்பறைகள் முறையோடே
வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்
வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்து
உன் பதங்களுற வுணர்வேனோ
பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்து
கடல் முற்றும் அலை வற்றிக் குழம்புங் குழம்ப
முனை பட்டஅயில் தொட்டு
திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாய
தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு நிர்த்தமிட
ரத்தக் குளங்கண்டு உமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண்டு
செந்திலுறை பெருமாளே.
இறுகிய கட்டுக்கோப்பாய் இருந்த அழகிய உடல் தளர்ந்துபோய், அவ்வுடலில் இருந்துகொண்டு முன்பு ஆட்டிவைத்த ஐந்து பொறிகளும் கலங்கிச் சிதறிப்போய், பிணம் என்ற நிலையை உடல் அடைந்ததும், சில பேர்கள் பிணத்தைக் கூலிக்கு எடுத்துச் சுமந்து போக, பெரிய பறைகள் முறைப்படியாக வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சம் என்ற ஓசையில் முழங்க, மக்கள் ஒன்றுகூடிப் பிணத்தைத் தொடர்ந்தும், சிலர் செல்லும் வழியிலே புரண்டும் சிலர் பிணம் செல்வதற்கு வழி விடுகின்றதுமான இந்தப் பொய்யான வாழ்வை விட்டு, உன் திருவடிகளை அடையும் வழியை நான் உணர மாட்டேனோ? பட்டு உருவிச் செல்லும்படி ஆணவம் கொண்ட உயரமான கிரெளஞ்சமலையை வேலாயுதம் பிளந்து எறிந்து, கடல் முழுதும் அலை வற்றிப்போய் குழம்பாகக் போகும்படி, கூர்மை கொண்ட வேலாயுதத்தைச் செலுத்தி, வலிமையோடு எதிர்த்த அசுரர்களின் முடி சாயும்படியாக, அடியோடு அழியும்படி வெட்டி, தலையற்ற உடல்களும், பெரிய கழுகுகளும் நடனமாடவும், ரத்தம் குளமாகப் பெருகச்செய்தும், அசுரர் கிரீடங்களினின்று மணிகள் சிதறி விழ வைத்தும், தேவர்களுக்கு நல்ல காலம் வருவதற்கான விதையைப் பலன் கிடைக்குமாறு நீ நட்டுவைத்த திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்து ... இறுகிய கட்டுக்கோப்பாய்
இருந்த அழகிய உடல் தளர்ந்துபோய், அவ்வுடலில் இருந்துகொண்டு
முனம் இட்டபொறி தப்பி ... முன்பு ஆட்டிவைத்த ஐந்து பொறிகளும்
கலங்கிச் சிதறிப்போய்,
பிணங்கொண்டதின் சிலர்கள் ... பிணம் என்ற நிலையை உடல்
அடைந்ததும், சில பேர்கள்
கட்டணமெ டுத்துச் சுமந்தும் ... பிணத்தைக் கூலிக்கு எடுத்துச்
சுமந்து போக,
பெரும்பறைகள் முறையோடே ... பெரிய பறைகள் முறைப்படியாக
வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென ... வெட்டவிட
வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சம் என்ற ஓசையில் முழங்க,
மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும் ... மக்கள் ஒன்றுகூடிப்
பிணத்தைத் தொடர்ந்தும், சிலர் செல்லும் வழியிலே புரண்டும்
வழி விட்டுவரு மித்தைத் தவிர்ந்து ... சிலர் பிணம் செல்வதற்கு
வழி விடுகின்றதுமான இந்தப் பொய்யான வாழ்வை விட்டு,
உன் பதங்களுற வுணர்வேனோ ... உன் திருவடிகளை அடையும்
வழியை நான் உணர மாட்டேனோ?
பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்து ... பட்டு உருவிச்
செல்லும்படி ஆணவம் கொண்ட உயரமான கிரெளஞ்சமலையை
வேலாயுதம் பிளந்து எறிந்து,
கடல் முற்றும் அலை வற்றிக் குழம்புங் குழம்ப ... கடல் முழுதும்
அலை வற்றிப்போய் குழம்பாகக் போகும்படி,
முனை பட்டஅயில் தொட்டு ... கூர்மை கொண்ட வேலாயுதத்தைச்
செலுத்தி,
திடங்கொண் டெதிர்ந்தவுணர் முடிசாய ... வலிமையோடு
எதிர்த்த அசுரர்களின் முடி சாயும்படியாக,
தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு நிர்த்தமிட ...
அடியோடு அழியும்படி வெட்டி, தலையற்ற உடல்களும், பெரிய
கழுகுகளும் நடனமாடவும்,
ரத்தக் குளங்கண்டு உமிழ்ந்துமணி ... ரத்தம் குளமாகப்
பெருகச்செய்தும், அசுரர் கிரீடங்களினின்று மணிகள் சிதறி விழ வைத்தும்,
சற்சமய வித்தைப் பலன்கண்டு ... தேவர்களுக்கு நல்ல காலம்
வருவதற்கான விதையைப் பலன் கிடைக்குமாறு நீ நட்டுவைத்த
செந்திலுறை பெருமாளே. ... திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும்
பெருமாளே.
Similar songs:

38 - கட்டழகு விட்டு (திருச்செந்தூர்)

தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
     தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
          தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதான

Songs from this thalam திருச்செந்தூர்

21 - அங்கை மென்குழல்

22 - அந்தகன் வருந்தினம்

23 - அமுத உததி விடம்

24 - அம்பொத்த விழி

25 - அருணமணி மேவு

26 - அவனி பெறுந்தோடு

27 - அளக பாரமலைந்து

28 - அறிவழிய மயல்பெருக

29 - அனிச்சம் கார்முகம்

30 - அனைவரும் மருண்டு

31 - இயலிசையில் உசித

32 - இருகுழை யெறிந்த

33 - இருள்விரி குழலை

34 - உததியறல் மொண்டு

35 - உருக்கம் பேசிய

36 - ஏவினை நேர்விழி

37 - ஓராது ஒன்றை

38 - கட்டழகு விட்டு

39 - கண்டுமொழி

40 - கமல மாதுடன்

41 - கரிக்கொம்பம்

42 - கருப்பம் தங்கு

43 - களபம் ஒழுகிய

44 - கனங்கள் கொண்ட

45 - கன்றிலுறு மானை

46 - காலனார் வெங்கொடும்

47 - குகர மேவுமெய்

48 - குடர்நிண மென்பு

49 - குழைக்கும் சந்தன

50 - கொங்கைகள்

51 - கொங்கைப் பணை

52 - கொடியனைய இடை

53 - கொம்பனையார்

54 - கொலை மதகரி

55 - சங்குபோல் மென்

56 - சங்கை தான் ஒன்று

57 - சத்தம் மிகு ஏழு

58 - சந்தன சவ்வாது

59 - சேமக் கோமள

60 - தகரநறை

61 - தண் தேனுண்டே

62 - தண்டை அணி

63 - தந்த பசிதனை

64 - தரிக்குங்கலை

65 - துன்பங்கொண்டு அங்கம்

66 - தெருப்புறத்து

67 - தொடரியமன்

68 - தொந்தி சரிய

69 - தோலொடு மூடிய

70 - நாலும் ஐந்து வாசல்

71 - நிதிக்குப் பிங்கலன்

72 - நிலையாப் பொருளை

73 - நிறுக்குஞ் சூதன

74 - பங்கம் மேவும் பிறப்பு

75 - பஞ்ச பாதகம்

76 - படர்புவியின் மீது

77 - பதும இருசரண்

78 - பரிமள களப

79 - பருத்தந்த

80 - பாத நூபுரம்

81 - புகரப் புங்க

82 - பூரண வார கும்ப

83 - பெருக்கச் சஞ்சலித்து

84 - மங்கை சிறுவர்

85 - மஞ்செனுங் குழல்

86 - மனத்தின் பங்கு

87 - மனைகனக மைந்தர்

88 - மாய வாடை

89 - மான்போல் கண்

90 - முகிலாமெனும்

91 - முந்துதமிழ் மாலை

92 - முலை முகம்

93 - மூப்புற்றுச் செவி

94 - மூளும்வினை சேர

95 - வஞ்சங்கொண்டும்

96 - வஞ்சத்துடன் ஒரு

97 - வந்து வந்து முன்

98 - வரியார் கருங்கண்

99 - விதி போலும் உந்து

100 - விந்ததில் ஊறி

101 - விறல்மாரன் ஐந்து

102 - வெங்காளம் பாணம்

103 - வெம் சரோருகமோ

1334 - கன்றிவரு நீல

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 38