சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
348   காஞ்சீபுரம் திருப்புகழ் ( - வாரியார் # 496 )  

மயல் ஓதும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான

மயலோது மந்த நிலையாலும் வஞ்ச
     வசைபேசு கின்ற ...... மொழியாலும்
மறிபோலு கின்ற விழிசேரு மந்தி
     மதிநேரு கின்ற ...... நுதலாலும்
அயிலேநி கர்ந்த விழியாலும் அஞ்ச
     நடையாலும் அங்கை ...... வளையாலும்
அறிவேய ழிந்து அயர்வாகி நைந்து
     அடியேன்ம யங்கி ...... விடலாமோ
மயிலேறி யன்று நொடிபோதி லண்டம்
     வலமாக வந்த ...... குமரேசா
மறிதாவு செங்கை அரனா ரிடங்கொள்
     மலைமாது தந்த ...... முருகேசா
நயவானு யர்ந்த மணிமாட மும்பர்
     நடுவேநி றைந்த ...... மதிசூழ
நறைவீசு கும்ப குடமேவு கம்பை
     நகர்மீத மர்ந்த ...... பெருமாளே.

மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச
     வசை பேசுகின்ற.....மொழியாலும்
மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி
     மதி நேருகின்ற.....நுதலாலும்
அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச(ம்)
     நடையாலும் அங்கை.....வளையாலும்
அறிவே அழிந்து அயர்வாகி நைந்து
     அடியேன் மயங்கி.....விடலாமோ
மயில் ஏறி அன்று நொடி போதில் அண்டம்
     வலமாக வந்த.....குமரேசா
மறி தாவு செங்கை அரனார் இடங்கொள்
     மலைமாது தந்த.....முருகேசா
நய வான் உயர்ந்த மணி மாடம் உம்பர்
     நடுவே நிறைந்த மதி சூழ
நறை வீசு கும்ப குட(ம்) மேவு கம்பை
     நகர் மீது அமர்ந்த.....பெருமாளே.

காம ஆசையை அறிவிக்கும் (வேசையர்களின்) அந்த தோற்றத்தாலும், வஞ்சகம் கூடிய பழிப்புச் சொற்களைப் பேசுகின்ற பேச்சுக்களாலும், மான் பார்வை கொண்ட கண்களுக்கு அருகிலுள்ள, மாலைப் பிறையை நிகர்க்கின்ற, நெற்றியாலும், வேலை ஒத்த கண்களாலும், அன்னத்தை ஒத்த நடையாலும், அழகிய கையில் உள்ள வளையல்களாலும், என் அறிவு அழிபட்டு, சோர்வு அடைந்து, உள்ளம் ஒடுங்கி அடியேனாகிய நான் மயக்கம் கொள்ளலாமோ? மயிலின் மீது ஏறி முன்பு ஒரு நொடிப் பொழுதில் உலகைச் சுற்றி வந்த குமரேசனே, மான் தாவுகின்ற சிவந்த கையை உடைய சிவபெருமானின் இடது பாகத்தில் குடிகொண்டுள்ள பார்வதி தேவி பெற்ற முருகேசனே, மேம்பாட்டுடன், வான் அளவும் உயர்ந்த, அழகிய மாடங்களின் உச்சியிலும் நடுவிலும் நிறைந்த ஒளி வீசும் நிலவு சூழ்ந்து விளங்க, (வேள்வியின் பொருட்டு) நறுமணம் கமழும் கும்ப கலசங்களும், குடங்களும் பொருந்தி உள்ள, கம்பை ஆற்றங்கரை நகராகிய காஞ்சீபுரத்தின் மீது விருப்பம் வைத்து வீற்றிருக்கும் பெருமாளே.
Add (additional) Audio/Video Link
மயல் ஓதும் அந்த நிலையாலும் வஞ்ச வசை பேசுகின்ற
மொழியாலும்
... காம ஆசையை அறிவிக்கும் (வேசையர்களின்) அந்த
தோற்றத்தாலும், வஞ்சகம் கூடிய பழிப்புச் சொற்களைப் பேசுகின்ற
பேச்சுக்களாலும்,
மறி போல் உகின்ற விழி சேரும் அந்தி மதி நேருகின்ற
நுதலாலும்
... மான் பார்வை கொண்ட கண்களுக்கு அருகிலுள்ள,
மாலைப் பிறையை நிகர்க்கின்ற, நெற்றியாலும்,
அயிலே நிகர்ந்த விழியாலும் அஞ்ச(ம்) நடையாலும்
அங்கை வளையாலும்
... வேலை ஒத்த கண்களாலும், அன்னத்தை
ஒத்த நடையாலும், அழகிய கையில் உள்ள வளையல்களாலும்,
அறிவே அழிந்து அயர்வாகி நைந்து அடியேன் மயங்கி
விடலாமோ
... என் அறிவு அழிபட்டு, சோர்வு அடைந்து, உள்ளம்
ஒடுங்கி அடியேனாகிய நான் மயக்கம் கொள்ளலாமோ?
மயில் ஏறி அன்று நொடி போதில் அண்டம் வலமாக வந்த
குமரேசா
... மயிலின் மீது ஏறி முன்பு ஒரு நொடிப் பொழுதில் உலகைச்
சுற்றி வந்த குமரேசனே,
மறி தாவு செங்கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த
முருகேசா
... மான் தாவுகின்ற சிவந்த கையை உடைய
சிவபெருமானின் இடது பாகத்தில் குடிகொண்டுள்ள பார்வதி
தேவி பெற்ற முருகேசனே,
நய வான் உயர்ந்த மணி மாடம் உம்பர் நடுவே நிறைந்த
மதி சூழ
... மேம்பாட்டுடன், வான் அளவும் உயர்ந்த, அழகிய
மாடங்களின் உச்சியிலும் நடுவிலும் நிறைந்த ஒளி வீசும் நிலவு
சூழ்ந்து விளங்க,
நறை வீசு கும்ப குட(ம்) மேவு கம்பை நகர் மீது அமர்ந்த
பெருமாளே.
... (வேள்வியின் பொருட்டு) நறுமணம் கமழும் கும்ப
கலசங்களும், குடங்களும் பொருந்தி உள்ள, கம்பை ஆற்றங்கரை
நகராகிய காஞ்சீபுரத்தின் மீது விருப்பம் வைத்து வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

99 - விதி போலும் உந்து (திருச்செந்தூர்)

தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான

101 - விறல்மாரன் ஐந்து (திருச்செந்தூர்)

தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான

348 - மயல் ஓதும் (காஞ்சீபுரம்)

தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான

Songs from this thalam காஞ்சீபுரம்

309 - அதி மதம் கக்க

310 - கனக தம்பத்தை

311 - செடியுடம் பத்தி

312 - கன க்ரவுஞ்சத்தில்

313 - தெரியல் அம் செச்சை

314 - புன மடந்தைக்கு

315 - கறை இலங்கும்

316 - செறிதரும் செப்பத்து

317 - அரி அயன் புட்பி

318 - கனி தரும் கொக்கு

319 - தசைதுறுந் தொக்கு

320 - புரைபடுஞ் செற்ற

321 - சலமலம் விட்ட

322 - தலை வலையத்து

323 - இதத்துப் பற்றி

324 - எனக்குச்சற்று

325 - இறைச்சிப் பற்று

326 - கடத்தைப் பற்று

327 - கருப் பற்றிப் பருத்து

328 - கறுக்கப் பற்று

329 - அற்றைக்கு இரைதேடி

330 - முட்டுப் பட்டு

331 - அற்றைக் கற்றை

332 - சுத்தச் சித்த

333 - கொக்குக்கு ஒக்க

334 - தத்தித் தத்தி

335 - பொக்குப்பை

336 - அயில் அப்பு

337 - கச்சு இட்ட அணி

338 - கமலரு சோகம்

339 - கருமமான பிறப்பற

340 - கலகலென

341 - கொத்தார் பற் கால்

342 - கோவைச் சுத்த

343 - சீசி முப்புர

344 - நச்சு அரவம் என்று

345 - படிறொழுக்கமும்

346 - மகுடக் கொப்பாட

347 - மக்கட்குக் கூற

348 - மயல் ஓதும்

349 - முத்து ரத்ந சூத்ர

350 - வம்பறாச்சில

351 - வாய்ந்தப்பிடை

352 - அறிவிலாப் பித்தர்
     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Fri, 13 Mar 2026 03:33:17 +0000