சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
347   காஞ்சீபுரம் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 438 - வாரியார் # 495 )  

மக்கட்குக் கூற

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தத்தத்தத் தானன தானன
     தத்தத்தத் தானன தானன
          தத்தத்தத் தானன தானன ...... தனதான


மக்கட்குக் கூற அரிதானது
  கற்று எட்டத் தான்முடி யாதது
          மற்றொப்புக் கியாதும் ஒவாதது ...... மனதாலே
மட்டிட்டுத் தேடவொணாதது
     தத்வத்திற் கோவைபடாதது
         மத்தப்பொற் போது பகீரதி மதிசூடும்
முக்கட்பொற்பாளர் உசாவிய
     அர்த்தக்குப் போதக மானது
          முத்திக்குக் காரண மானது ...... பெறலாகா
முட்டர்க்கெட் டாதது நான்மறை
     ஏட்டிற்றெட் டாதென வேவரு
          முற்பட்டப் பாலையி லாவது ...... புரிவாயே
செக்கட் சக்ராயுத மாதுலன்
     மெச்சப்புற் போதுப டாவிய
          திக்குப்பொற் பூதர மேமுதல் ...... வெகுரூபம்
சிட்டித்துப் பூதப சாசுகள்
     கைக்கொட்டிட்டாட ம கோததி
          செற்றுக்ரச் சூரனை மார்பக ...... முதுசோரி
கக்கக்கைத் தாமரை வேல்விடு
     செச்சைக் கர்ப்பூர புயாசல
          கச்சுற்றப் பாரப யோதர ...... முலையாள்முன்
கற்புத் தப்பாது உலகேழையும்
     ஒக்கப்பெற்றாள் விளையாடிய
          கச்சிக்கச் சாலையில் மேவிய ...... பெருமாளே.

மக்கட்குக் கூறரி தானது
     கற்றெட்டத் தான்முடி யாதது
          மற்றொப்புக் கியாதுமொ வாதது ...... மனதாலே
மட்டிட்டுத் தேடவொ ணாதது
     தத்வத்திற் கோவைப டாதது
          மத்தப்பொற் போதுப கீரதி ...... மதிசூடும்
முக்கட்பொற் பாளரு சாவிய
     அர்த்தக்குப் போதக மானது
          முத்திக்குக் காரண மானது ...... பெறலாகா
முட்டர்க்கெட் டாதது நான்மறை
     ஏட்டிற்றெட் டாதென வேவரு
          முற்பட்டப் பாலையி லாவது ...... புரிவாயே
செக்கட்சக் ராயுத மாதுலன்
     மெச்சப்புற் போதுப டாவிய
          திக்குப்பொற் பூதர மேமுதல் ...... வெகுரூபம்
சிட்டித்துப் பூதப சாசுகள்
     கைக்கொட்டிட் டாடம கோததி
          செற்றுக்ரச் சூரனை மார்பக ...... முதுசோரி
கக்கக்கைத் தாமரை வேல்விடு
     செச்சைக்கர்ப் பூரபு யாசல
          கச்சுற்றப் பாரப யோதர ...... முலையாள்முன்
கற்புத்தப் பாதுல கேழையு
     மொக்கப்பெற் றாள்விளை யாடிய
          கச்சிக்கச் சாலையில் மேவிய ...... பெருமாளே.
மக்களுக்கு இது இத்தன்மையது என எடுத்துக்கூற அரிதானது, கற்ற கல்வியாலும் அதனை எட்ட முடியாதது, மற்றபடி அதற்கு உவமை ஏதும் ஒவ்வாதது, மனதினால் அதை அளவிட்டுத் தேடி அறியமுடியாதது, எத்தகைய ஆராய்ச்சியிலும் அதனை வரிசைப்படுத்த முடியாதது, ஊமத்தை மலரையும், தங்கநிறக் கொன்றை மலரையும், கங்கைநதியையும், பிறைச்சந்திரனையும் சடையிலே சூடும் முக்கண்ணராகிய அழகிய சிவபிரான் சொல்லுக என்று கேட்க சொல்லப்பட்ட பொருளுக்கு உபதேச வித்தாக இருப்பது, மோட்சத்துக்குக் காரணமாக இருப்பது, பெறுவதற்கு முடியாததாய், மூடர்களுக்கு எட்டாததாய் இருப்பது, நான்கு வேதங்களும் எட்டுவதற்கு முயன்றாலும், எட்ட முடியாமல் இருக்கும் பொருள் அது, முதன்மையான பொருளுக்கும் அப்பாற்பட்ட பொருள் எதுவோ, அதனை எனக்கு உபதேசித்து அருள்வாயாக. செங்கண்களையும், சக்ராயுதத்தையும் உடைய தாய்மாமன் திருமால் மெச்சிப் புகழும்படியாக, புல்லையும் மலரையும் பெரிதாகப் படரவிட்டு, திசைகளில் உள்ள பொன் மேரு மலை முதலாக பலப்பல உருவங்களைச் சிருஷ்டித்து, பூதங்களும் பேய்களும் கைகொட்டி ஆடும்படியாக, பெருங்கடலை வற்றடித்து, கடுமையான சூரனுடைய மார்பகத்திலிருந்து மிகுந்த இரத்தம் கக்கச்செய்யுமாறு, தாமரைமலர் போன்ற திருக்கரத்தினின்று வேலாயுதத்தை விட்ட செஞ்சந்தனமும் பச்சைக் கற்பூரமும் பூசிய புயமலையை உடையோனே, கச்சணிந்த கனமான பால் ஊறும் மார்பினாளும், முன்னர், கற்புநிலை தவறாமல் ஏழு உலகங்களையும் ஒருங்கே ஈன்றளித்தவளுமான காமாட்சித் தாயார் திருவிளையாடல்கள் பல புரிந்த காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
மக்கட்குக் கூற அரிதானது ... மக்களுக்கு இது இத்தன்மையது என
எடுத்துக்கூற அரிதானது,
கற்று எட்டத் தான்முடி யாதது ... கற்ற கல்வியாலும் அதனை எட்ட
முடியாதது,
மற்றொப்புக் கியாதும் ஒவாதது ... மற்றபடி அதற்கு உவமை ஏதும்
ஒவ்வாதது,
மனதாலே மட்டிட்டுத் தேடவொணாதது ... மனதினால் அதை
அளவிட்டுத் தேடி அறியமுடியாதது,
தத்வத்திற் கோவைபடாதது ... எத்தகைய ஆராய்ச்சியிலும் அதனை
வரிசைப்படுத்த முடியாதது,
மத்தப்பொற் போது பகீரதி மதிசூடும் ... ஊமத்தை மலரையும்,
தங்கநிறக் கொன்றை மலரையும், கங்கைநதியையும், பிறைச்சந்திரனையும்
சடையிலே சூடும்
முக்கட்பொற்பாளர் உசாவிய ... முக்கண்ணராகிய அழகிய சிவபிரான்
சொல்லுக என்று கேட்க
அர்த்தக்குப் போதக மானது ... சொல்லப்பட்ட பொருளுக்கு உபதேச
வித்தாக இருப்பது,
முத்திக்குக் காரண மானது ... மோட்சத்துக்குக் காரணமாக இருப்பது,
பெறலாகா முட்டர்க்கெட் டாதது ... பெறுவதற்கு முடியாததாய்,
மூடர்களுக்கு எட்டாததாய் இருப்பது,
நான்மறை யெட்டிற்று எட்டாதெனவேவரு ... நான்கு வேதங்களும்
எட்டுவதற்கு முயன்றாலும், எட்ட முடியாமல் இருக்கும் பொருள் அது,
முற்பட்டப் பாலையி லாவது புரிவாயே ... முதன்மையான
பொருளுக்கும் அப்பாற்பட்ட பொருள் எதுவோ, அதனை எனக்கு
உபதேசித்து அருள்வாயாக.
செக்கட் சக்ராயுத மாதுலன் ... செங்கண்களையும், சக்ராயுதத்தையும்
உடைய தாய்மாமன் திருமால்
மெச்சப்புற் போது படாவிய ... மெச்சிப் புகழும்படியாக, புல்லையும்
மலரையும் பெரிதாகப் படரவிட்டு,
திக்குப்பொற் பூதர மேமுதல் ... திசைகளில் உள்ள பொன் மேரு
மலை முதலாக
வெகுரூபம் சிட்டித்துப் பூதப சாசுகள் ... பலப்பல உருவங்களைச்
சிருஷ்டித்து, பூதங்களும் பேய்களும்
கைக்கொட்டிட் டாட மகோததி செற்று ... கைகொட்டி
ஆடும்படியாக, பெருங்கடலை வற்றடித்து,
உக்ரச் சூரனை மார்பக முதுசோரி கக்க ... கடுமையான
சூரனுடைய மார்பகத்திலிருந்து மிகுந்த இரத்தம் கக்கச்செய்யுமாறு,
கைத் தாமரை வேல்விடு ... தாமரைமலர் போன்ற திருக்கரத்தினின்று
வேலாயுதத்தை விட்ட
செச்சைக்கர்ப்பூர புயாசல ... செஞ்சந்தனமும் பச்சைக் கற்பூரமும்
பூசிய புயமலையை உடையோனே,
கச்சுற்றப் பார பயோதர முலையாள் ... கச்சணிந்த கனமான பால்
ஊறும் மார்பினாளும்,
முன் கற்புத் தப்பாது உலகேழையும் ஒக்கப்பெற்றாள் ... முன்னர்,
கற்புநிலை தவறாமல் ஏழு உலகங்களையும் ஒருங்கே ஈன்றளித்தவளுமான
காமாட்சித் தாயார்
விளை யாடிய கச்சிக்கச் சாலையில் ... திருவிளையாடல்கள் பல
புரிந்த காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுரம் என்னும் திருத்தலத்தில்
மேவிய பெருமாளே. ... வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

347 - மக்கட்குக் கூற (காஞ்சீபுரம்)

தத்தத்தத் தானன தானன
     தத்தத்தத் தானன தானன
          தத்தத்தத் தானன தானன ...... தனதான

Songs from this thalam காஞ்சீபுரம்

309 - அதி மதம் கக்க

310 - கனக தம்பத்தை

311 - செடியுடம் பத்தி

312 - கன க்ரவுஞ்சத்தில்

313 - தெரியல் அம் செச்சை

314 - புன மடந்தைக்கு

315 - கறை இலங்கும்

316 - செறிதரும் செப்பத்து

317 - அரி அயன் புட்பி

318 - கனி தரும் கொக்கு

319 - தசைதுறுந் தொக்கு

320 - புரைபடுஞ் செற்ற

321 - சலமலம் விட்ட

322 - தலை வலையத்து

323 - இதத்துப் பற்றி

324 - எனக்குச்சற்று

325 - இறைச்சிப் பற்று

326 - கடத்தைப் பற்று

327 - கருப் பற்றிப் பருத்து

328 - கறுக்கப் பற்று

329 - அற்றைக்கு இரைதேடி

330 - முட்டுப் பட்டு

331 - அற்றைக் கற்றை

332 - சுத்தச் சித்த

333 - கொக்குக்கு ஒக்க

334 - தத்தித் தத்தி

335 - பொக்குப்பை

336 - அயில் அப்பு

337 - கச்சு இட்ட அணி

338 - கமலரு சோகம்

339 - கருமமான பிறப்பற

340 - கலகலென

341 - கொத்தார் பற் கால்

342 - கோவைச் சுத்த

343 - சீசி முப்புர

344 - நச்சு அரவம் என்று

345 - படிறொழுக்கமும்

346 - மகுடக் கொப்பாட

347 - மக்கட்குக் கூற

348 - மயல் ஓதும்

349 - முத்து ரத்ந சூத்ர

350 - வம்பறாச்சில

351 - வாய்ந்தப்பிடை

352 - அறிவிலாப் பித்தர்

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 347