சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
225   சுவாமிமலை திருப்புகழ் ( குருஜி இராகவன் # 110 - வாரியார் # 214 )  

நிறைமதி முகமெனும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதன தனதன ...... தனதான
     தனதன தனதன ...... தனதான


நிறைமதி முகமெனு ...... மொளியாலே
     நெறிவிழி கணையெனு ...... நிகராலே
உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ
     உனதிரு வடிவியினி ...... யருள்வாயே
மறைபயி லரிதிரு ...... மருகோனே
     மருவல ரசுரர்கள் ...... குலகாலா
குறமகள் தனைமண ...... மருள்வோனே
     குருமலை மருவிய ...... பெருமாளே.

நிறைமதி முகமெனும் ஒளியாலே
நெறிவிழி கணையெனு நிகராலே
உறவுகொள் மடவர்கள் உறவாமோ
உனதிரு வடியினி யருள்வாயே
மறைபயி லரிதிரு மருகோனே
மருவல ரசுரர்கள் குலகாலா
குறமகள் தனை மண மருள்வோனே
குருமலை மருவிய பெருமாளே.
பூரண சந்திரன் போன்ற முகத்தின் பிரகாசத்தாலும், வழிகாட்டியாக இருக்க வேண்டிய கண்கள் அம்பு போலச் செய்யும் போரினாலும், சொந்தம் கொண்டாடுகின்ற மாதர்களின் உறவு ஆகுமோ? (ஆகாது என்ற படிக்கு) உன்னிரு திருவடிகளை இனியாகிலும் தந்தருள்வாயாக. வேதங்களில் சொல்லப்படும் திருமால், இலக்குமியின் மருகோனே, பகைவர்களாம் அசுரர்களின் குலத்தை அழித்த காலனே, குறத்தி வள்ளியை திருமணம் செய்து அருளியவனே, குருமலை (திருவேரகம்) வீற்றிருக்கும் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
நிறைமதி முகமெனும் ... பூரண சந்திரன் போன்ற முகத்தின்
ஒளியாலே ... பிரகாசத்தாலும்,
நெறிவிழி ... வழிகாட்டியாக இருக்க வேண்டிய கண்கள்
கணையெனு நிகராலே ... அம்பு போலச் செய்யும் போரினாலும்,
உறவுகொள் மடவர்கள் ... சொந்தம் கொண்டாடுகின்ற மாதர்களின்
உறவாமோ ... உறவு ஆகுமோ? (ஆகாது என்ற படிக்கு)
உனதிரு வடியினி ... உன்னிரு திருவடிகளை இனியாகிலும்
யருள்வாயே ... தந்தருள்வாயாக.
மறைபயி லரிதிரு மருகோனே ... வேதங்களில் சொல்லப்படும்
திருமால், இலக்குமியின் மருகோனே,
மருவல ரசுரர்கள் ... பகைவர்களாம் அசுரர்களின்
குலகாலா ... குலத்தை அழித்த காலனே,
குறமகள் தனை ... குறத்தி வள்ளியை
மண மருள்வோனே ... திருமணம் செய்து அருளியவனே,
குருமலை மருவிய பெருமாளே. ... குருமலை (திருவேரகம்)
வீற்றிருக்கும் பெருமாளே.
Similar songs:

225 - நிறைமதி முகமெனும் (சுவாமிமலை)

தனதன தனதன ...... தனதான
     தனதன தனதன ...... தனதான

Songs from this thalam சுவாமிமலை

201 - அவாமருவு

202 - ஆனனம் உகந்து

203 - ஆனாத பிருதி

204 - இராவினிருள் போலும்

205 - இருவினை புனைந்து

206 - எந்தத் திகையினும்

207 - ஒருவரையும் ஒருவர்

208 - கடாவினிடை

209 - கடிமா மலர்க்குள்

210 - கதிரவனெ ழுந்து

211 - கறை படும் உடம்பு

212 - காமியத் தழுந்தி

213 - குமரகுருபர முருக குகனே

214 - குமர குருபர முருக சரவண

215 - கோமள வெற்பினை

216 - சரண கமலாலயத்தில்

217 - சுத்திய நரப்புடன்

218 - செகமாயை உற்று

219 - சேலும் அயிலும்

220 - தருவர் இவர்

221 - தெருவினில் நடவா

222 - நாசர்தங் கடை

223 - நாவேறு பா மணத்த

224 - நிலவினிலே

225 - நிறைமதி முகமெனும்

226 - பரவரிதாகி

227 - பலகாதல் பெற்றிட

228 - பாதி மதிநதி

229 - மகர கேதனத்தன்

230 - மருவே செறித்த

231 - முறுகு காள

232 - வாதமொடு சூலை

233 - வாரம் உற்ற

234 - வார்குழலை

235 - வார்குழல் விரித்து

236 - விடமும் வடிவேலும்

237 - விரித்த பைங்குழல்

238 - விழியால் மருட்டி

1336 - வறுமைப் பாழ்பிணி

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 225