![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
148 - குழல்கள் சரிய (பழநி) Songs from this thalam பழநி 1338 - சிவணிதா வியமனது
148 பழநி திருப்புகழ் ( - வாரியார் # 1315 )
குழல்கள் சரிய
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தனன தனன தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிக ளுலவ
கொலைகள் செயவெ ...... களவோடே
குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள்
குமுற வளையி ...... னொலிமீற
இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும்
இடையு மசைய ...... மயில்போலே
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்
இடரில் மயலில் ...... உளர்வேனோ
மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல்
விஜய கிரிசொல் ...... அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி
விபின கெமனி ...... யருள்பாலா
பழைய மறையின் முடிவி லகர மகர உகர
படிவ வடிவ ...... முடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ
பழநி மருவு ...... பெருமாளே.
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகள் உலவ கொலைகள்
செயவெ களவோடே குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில்
ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற
இள நிர் எனவும் முலைகள் அசைய உபய தொடையும்
இடையும் அசைய மயில் போலே இனிய அமுத ரசமும் வடிய
உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ
மிளிரும் மதுர கவிதை ஒளிரும் அருணகிரி சொல் விஜயகிரி
சொல் அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி
அருள்பாலா
பழைய மறையின் முடிவில் அகர மகர உகர படிவ வடிவும்
உடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ பழநி மருவு
பெருமாளே. கூந்தல் சரியவும், பேச்சு பதறவும், கண்கள் புரண்டு கொலைத் தொழிலைக் காட்டவும், களவு எண்ணத்துடன் குலவுதல் செய்து, கிகிகி என்ற ஓசை எழவும், கண்டத்தில் (புட்குரல்கள்) குமுறி எழவும், வளையல்களின் ஒலி மிகுந்து மேலெழவும், இளநீர் என்று சொல்லும்படி மார்பகங்கள் அசையவும், இரண்டு தொடைகளும் இடுப்பும் அசையவும், மயில் போல் நடனமாடி, (இதழ்களில் இருந்து) இன்ப ஊற்று வடியவும் மிகுதியான கலவி புரிகின்ற பரத்தையருடைய துன்பத்திலும் மயக்கிலும் பட்டு அழிவேனோ? விளங்கிய இலக்கியச் சுவை பொலிவுறும் அருணகிரி என்கின்ற புலவன் சொல்லுகின்ற வெற்றி மலை போன்ற புகழ் மாலையை அணிபவனே, தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகிய உமை பெற்ற குழந்தையே, பழைமையான வேத முடிவில் பிரணவத்தை (அ+உ+ம் = ஓம் என்ற) உருவத் திரு மேனியாகக் கொண்டவனே, நன்செய் புன்செய் நிலங்களும், கமுகு மரங்களும், வாழை, பலா மரங்களும் விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. Add (additional) Audio/Video Link குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகள் உலவ கொலைகள்
செயவெ களவோடே குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில்
ஒலிகள் குமுற வளையின் ஒலி மீற ... கூந்தல் சரியவும், பேச்சு
பதறவும், கண்கள் புரண்டு கொலைத் தொழிலைக் காட்டவும், களவு
எண்ணத்துடன் குலவுதல் செய்து, கிகிகி என்ற ஓசை எழவும், கண்டத்தில்
(புட்குரல்கள்) குமுறி எழவும், வளையல்களின் ஒலி மிகுந்து மேலெழவும்,
இள நிர் எனவும் முலைகள் அசைய உபய தொடையும்
இடையும் அசைய மயில் போலே இனிய அமுத ரசமும் வடிய
உபரி புரிவர் இடரில் மயலில் உளர்வேனோ ... இளநீர் என்று
சொல்லும்படி மார்பகங்கள் அசையவும், இரண்டு தொடைகளும்
இடுப்பும் அசையவும், மயில் போல் நடனமாடி, (இதழ்களில் இருந்து)
இன்ப ஊற்று வடியவும் மிகுதியான கலவி புரிகின்ற பரத்தையருடைய
துன்பத்திலும் மயக்கிலும் பட்டு அழிவேனோ?
மிளிரும் மதுர கவிதை ஒளிரும் அருணகிரி சொல் விஜயகிரி
சொல் அணிவோனே ... விளங்கிய இலக்கியச் சுவை பொலிவுறும்
அருணகிரி என்கின்ற புலவன் சொல்லுகின்ற வெற்றி மலை
போன்ற புகழ் மாலையை அணிபவனே,
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி
அருள்பாலா ... தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள்,
இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம்
உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகிய உமை பெற்ற குழந்தையே,
பழைய மறையின் முடிவில் அகர மகர உகர படிவ வடிவும்
உடையோனே ... பழைமையான வேத முடிவில் பிரணவத்தை
(அ+உ+ம் = ஓம் என்ற) உருவத் திரு மேனியாகக் கொண்டவனே,
பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ பழநி மருவு
பெருமாளே. ... நன்செய் புன்செய் நிலங்களும், கமுகு மரங்களும்,
வாழை, பலா மரங்களும் விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும்
பெருமாளே.
1
Similar songs:
தனன தனன தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song lang tamil sequence no 148