சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
139   பழநி திருப்புகழ் ( - வாரியார் # 189 )  

களப முலையை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த
     தனதனன தத்த தந்த ...... தனதான


களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து
     கயலொடுப கைத்த கண்கள் ...... குழைதாவக்
கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து
     கடியிருளு டுக்கு லங்க ...... ளெனவீழ
முழுமதியெ னச்சி றந்த நகைமுகமி னுக்கி யின்ப
     முருகிதழ்சி வப்ப நின்று ...... விலைகூறி
முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து
     முடுகுமவ ருக்கி ரங்கி ...... மெலிவேனோ
இளமதிக டுக்கை தும்பை அரவணிப வர்க்கி சைந்து
     இனியபொரு ளைப்ப கர்ந்த ...... குருநாதா
இபமுகவ னுக்கு கந்த இளையவம ருக்க டம்ப
     எனதுதலை யிற்ப தங்க ...... ளருள்வோனே
குழகெனஎ டுத்து கந்த உமைமுலைபி டித்த ருந்து
     குமரசிவ வெற்ப மர்ந்த ...... குகவேலா
குடிலொடுமி கச்செ றிந்த இதணுளபு னத்தி ருந்த
     குறவர்மக ளைப்பு ணர்ந்த ...... பெருமாளே.

களப முலையைத் திறந்து தளவ நகையைக் கொணர்ந்து
கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ
கரிய குழலைப் பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து
கடி இருள் உடுக் குலங்கள் என வீழ
முழு மதி எனச் சிறந்த நகை முக(ம்) மினுக்கி இன்ப
முருகு இதழ் சிவப்ப நின்று விலை கூறி
முதல் உளது கைப் புகுந்து அழகு துகிலைத் திறந்து முடுகும்
அவருக்கு இரங்கி மெலிவேனோ
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து
இனிய பொருளைப் பகர்ந்த குரு நாதா
இப முகவனுக்கு உகந்த இளையவ மருக் கடம்ப எனது
தலையில் பதங்கள் அருள்வோனே
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து
குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா
குடிலொடு மிகச் செறிந்த இதண் உ(ள்)ள புனத்து இருந்த
குறவர் மகளைப் புணர்ந்த பெருமாளே.
கலவைச் சந்தனம் அணிந்த மார்பகத்தைத் திறந்து, முல்லை போன்ற பற்களைக் காட்டி, கயல் மீனோடு மாறுபட்ட கண்கள் (செவிகளிலுள்ள) தோடுகளின் மீது தாவவும், கருத்த கூந்தலை வாரி ஒழுங்கு படுத்தி, (மலர்கள்) சொருகப்பட்ட கொண்டை கலைவதால், இருளை நீக்குகின்ற நட்சத்திரக் கூட்டங்களைப் போல் உதிரவும், பூரணச் சந்திரனைப் போல சிறந்த ஒளி பொருந்திய முகத்தை மினுக்கி, இன்பம் தரும் வாசனையுள்ள இதழ்கள் சிவக்கும்படி (வாயிற்படியில்) நின்று விலை பேசி, (வந்தவருடைய) பொருள் யாவும் தமது கையில் வந்த பின் அழகிய புடவையைத் திறந்து நெருங்கி உறவாடும் வேசியர்களுக்கு (ஈடுபட்டு) இரங்கி மெலிந்து நிற்பேனோ? பிறைச் சந்திரனையும், கொன்றை மலரையும், தும்பையையும், பாம்பையும் அணிந்துள்ள சிவபெருமானுக்கு இணங்கி, இனிமை வாய்ந்த (பிரணவமாகிய) மூலப் பொருளை உபதேசித்த குரு நாதனே, யானை முகக் கணபதிக்குப் பிரியமான தம்பியே, நறுமணமுடைய கடப்ப மாலையை அணிபவனே, எனது தலையில் உனது திருவடியைச் சூட்டியவனே, குழந்தை என்று எடுத்து மகிழ்ந்த உமா தேவியின் திருமுலைகளைப் பற்றி (ஞானப்) பாலை உண்ட குமரனே, சிவ மலையில் (பழநி மலையில்) வீற்றிருக்கும் குகனே, வேலனே, சிறு குடிசைக்கு அருகில் நெருங்கியிருந்த பரண் அமைந்த தினைப் புனத்திலிருந்த குறப்பெண்ணாகிய வள்ளியை மணந்த பெருமாளே.
Add (additional) Audio/Video Link
களப முலையைத் திறந்து தளவ நகையைக் கொணர்ந்து
கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ
... கலவைச் சந்தனம்
அணிந்த மார்பகத்தைத் திறந்து, முல்லை போன்ற பற்களைக் காட்டி,
கயல் மீனோடு மாறுபட்ட கண்கள் (செவிகளிலுள்ள) தோடுகளின்
மீது தாவவும்,
கரிய குழலைப் பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து
கடி இருள் உடுக் குலங்கள் என வீழ
... கருத்த கூந்தலை வாரி
ஒழுங்கு படுத்தி, (மலர்கள்) சொருகப்பட்ட கொண்டை கலைவதால்,
இருளை நீக்குகின்ற நட்சத்திரக் கூட்டங்களைப் போல் உதிரவும்,
முழு மதி எனச் சிறந்த நகை முக(ம்) மினுக்கி இன்ப
முருகு இதழ் சிவப்ப நின்று விலை கூறி
... பூரணச் சந்திரனைப்
போல சிறந்த ஒளி பொருந்திய முகத்தை மினுக்கி, இன்பம் தரும்
வாசனையுள்ள இதழ்கள் சிவக்கும்படி (வாயிற்படியில்) நின்று
விலை பேசி,
முதல் உளது கைப் புகுந்து அழகு துகிலைத் திறந்து முடுகும்
அவருக்கு இரங்கி மெலிவேனோ
... (வந்தவருடைய) பொருள்
யாவும் தமது கையில் வந்த பின் அழகிய புடவையைத் திறந்து
நெருங்கி உறவாடும் வேசியர்களுக்கு (ஈடுபட்டு) இரங்கி மெலிந்து
நிற்பேனோ?
இள மதி கடுக்கை தும்பை அரவு அணிபவர்க்கு இசைந்து
இனிய பொருளைப் பகர்ந்த குரு நாதா
... பிறைச் சந்திரனையும்,
கொன்றை மலரையும், தும்பையையும், பாம்பையும் அணிந்துள்ள
சிவபெருமானுக்கு இணங்கி, இனிமை வாய்ந்த (பிரணவமாகிய)
மூலப் பொருளை உபதேசித்த குரு நாதனே,
இப முகவனுக்கு உகந்த இளையவ மருக் கடம்ப எனது
தலையில் பதங்கள் அருள்வோனே
... யானை முகக் கணபதிக்குப்
பிரியமான தம்பியே, நறுமணமுடைய கடப்ப மாலையை அணிபவனே,
எனது தலையில் உனது திருவடியைச் சூட்டியவனே,
குழகு என எடுத்து உகந்த உமை முலை பிடித்து அருந்து
குமர சிவ வெற்பில் அமர்ந்த குக வேலா
... குழந்தை என்று
எடுத்து மகிழ்ந்த உமா தேவியின் திருமுலைகளைப் பற்றி (ஞானப்)
பாலை உண்ட குமரனே, சிவ மலையில் (பழநி மலையில்) வீற்றிருக்கும்
குகனே, வேலனே,
குடிலொடு மிகச் செறிந்த இதண் உ(ள்)ள புனத்து இருந்த
குறவர் மகளைப் புணர்ந்த பெருமாளே.
... சிறு குடிசைக்கு
அருகில் நெருங்கியிருந்த பரண் அமைந்த தினைப் புனத்திலிருந்த
குறப்பெண்ணாகிய வள்ளியை மணந்த பெருமாளே.
Similar songs:

139 - களப முலையை (பழநி)

தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த
     தனதனன தத்த தந்த ...... தனதான

Songs from this thalam பழநி

104 - அகல்வினை

105 - அணிபட்டு அணுகி

106 - அதல விதல

107 - அபகார நிந்தை

108 - அரிசன வாடை

109 - அருத்தி வாழ்வொடு

110 - அவனிதனிலே

111 - அறமிலா நிலை

112 - ஆதாளிகள் புரி

113 - ஆலகாலம் என

114 - ஆறுமுகம் ஆறுமுகம்

115 - இத் தாரணிக்குள்

116 - இரவி என

117 - இருகனக மாமேரு

118 - இரு செப்பென

119 - இலகிய களப

120 - இலகுகனி மிஞ்சு

121 - உயிர்க் கூடு

122 - உலகபசு பாச

123 - ஒருபொழுதும் இருசரண

124 - ஒருவரை ஒருவர்

125 - ஓடி ஓடி

126 - கடலைச் சிறை

127 - கடலை பொரியவரை

128 - கதியை விலக்கு

129 - கரிய பெரிய

130 - கரிய மேகமதோ

131 - கரியிணை கோடென

132 - கருகி அகன்று

133 - கருப்புவிலில்

134 - கருவின் உருவாகி

135 - கலக வாள்விழி

136 - கலகக் கயல்விழி

137 - கலவியி லிச்சி

138 - கலை கொடு

139 - களப முலையை

140 - கறுத்த குழலணி

141 - கனக கும்பம்

142 - கனத்திறுகி

143 - கனமாய் எழுந்து

144 - கார் அணிந்த

145 - குரம்பை மலசலம்

146 - குருதி மலசலம்

147 - குழல் அடவி

148 - குழல்கள் சரிய

149 - குறித்தமணி

150 - குன்றுங் குன்றும்

151 - கொந்துத் தரு

152 - கோல குங்கும

153 - கோல மதிவதனம்

154 - சகடத்திற் குழை

155 - சிந்துர கூரம

156 - சிவனார் மனங்குளிர

157 - சிறு பறையும்

158 - சீ உதிரம் எங்கும்

159 - சீறல் அசடன்

160 - சுருதி முடி மோனம்

161 - சுருளளக பார

162 - ஞானங்கொள்

163 - தகர நறுமலர்

164 - தகைமைத் தனியில்

165 - தமரும் அமரும்

166 - தலைவலி மருத்தீடு

167 - திடமிலி சற்குணமிலி

168 - திமிர உததி

169 - தோகைமயிலே கமல

170 - நாத விந்து

171 - நிகமம் எனில்

172 - நெற்றி வெயர்த்துளி

173 - பகர்தற்கு அரிதான

174 - பஞ்ச பாதகன்

175 - பாரியான கொடை

176 - புடவிக்கு அணி

177 - புடைசெப் பென

178 - பெரியதோர் கரி

179 - போதகம் தரு

180 - மந்தரமதெனவே

181 - மருமலரினன்

182 - மனக்கவலை ஏதும்

183 - மலரணி கொண்டை

184 - முகிலளகத்தில்

185 - முகை முளரி

186 - முதிரவுழையை

187 - முத்துக்கு

188 - மூலம் கிளர் ஓர்

189 - மூல மந்திரம்

190 - முருகுசெறி குழலவிழ

191 - முருகு செறிகுழல் முகில்

192 - வசனமிக ஏற்றி

193 - வஞ்சனை மிஞ்சி

194 - வரதா மணி நீ

195 - வனிதை உடல்

196 - வாதம் பித்தம்

197 - வாரணந் தனை

198 - விதம் இசைந்து

199 - விரை மருவு

200 - வேய் இசைந்து

1338 - சிவணிதா வியமனது

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 139