சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
1337   பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( )  

காதின்மணி ஓலை

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தானதன தானதத்த ...... தனதான

காதின்மணி ஓலையிட்டு ...... வருமானார்
காமவலை யூடுபுக்கு ...... மதிமாழ்கி
நீதிநெறி யேவிடுத்து ...... அலையாதே
நீயுன்இரு தாள்அளிக்க ...... வரவேணும்
ஆதிமக மாயிபெற்ற ...... குமரேசா
ஆறுமுக மேபடைத்த ...... குருநாதா
தீதில்அடி யார்மனத்தில் ...... உறைவோனே
தேவர்குடி வாழவைத்த ...... பெருமாளே.

காதின்மணி ஓலையிட்டு வருமானார்
காமவலை யூடுபுக்கு
மதிமாழ்கி
நீதி நெறியேவிடுத்து
அலையாதே
நீயுன் இரு தாள் அளிக்க வரவேணும்
ஆதி மகமாயி பெற்ற குமரேசா
ஆறு முகமே படைத்த குருநாதா
தீது இல் அடியார் மனத்தில் உறைவோனே
தேவர் குடி வாழவைத்த பெருமாளே.
காதில் மணி, காதோலை இவற்றை அணிந்து காமத்தை ஊட்டுகின்ற வலையிலே நான் புகுந்து என்னுடைய (மதி) புத்தி அழிந்து நீதி நெறிமுறைகளை நான் அனுசரிக்காமல் நான் அலையாமல் நீ உன்னுடைய இரண்டு திருவடிகளையும் எனக்கு அளிக்க வரவேண்டும் ஆதி மகமாயி பரமேஸ்வரி பெற்ற குமரேசனே ஆறு திருமுகங்களைக் கொண்டுள்ள குருநாதனே குற்றம் இல்லாத அடியார்கள் மனத்தில் உறைகின்ற பெருமானே தேவர்களின் குலத்தை வாழவைத்த பெருமை மிக்கவரே. (உன்னுடைய இரண்டு திருவடிகளையும் எனக்கு அளிக்க நீ வரவேண்டும்.)
Add (additional) Audio/Video Link
காதின்மணி ஓலையிட்டு ... காதில் மணி, காதோலை இவற்றை அணிந்து
காமவலை யூடுபுக்கு ... காமத்தை ஊட்டுகின்ற வலையிலே நான் புகுந்து
மதிமாழ்கி ... என்னுடைய (மதி) புத்தி அழிந்து
நீதி நெறியேவிடுத்து ... நீதி நெறிமுறைகளை நான் அனுசரிக்காமல்
அலையாதே ... நான் அலையாமல்
நீயுன் இரு தாள் அளிக்க வரவேணும் ... நீ உன்னுடைய இரண்டு திருவடிகளையும் எனக்கு அளிக்க வரவேண்டும்
ஆதி மகமாயி பெற்ற குமரேசா ... ஆதி மகமாயி பரமேஸ்வரி பெற்ற குமரேசனே
ஆறு முகமே படைத்த குருநாதா ... ஆறு திருமுகங்களைக் கொண்டுள்ள குருநாதனே
தீது இல் அடியார் மனத்தில் உறைவோனே ... குற்றம் இல்லாத அடியார்கள் மனத்தில் உறைகின்ற பெருமானே
தேவர் குடி வாழவைத்த பெருமாளே. ... தேவர்களின் குலத்தை வாழவைத்த பெருமை மிக்கவரே.
(உன்னுடைய இரண்டு திருவடிகளையும் எனக்கு அளிக்க நீ வரவேண்டும்.)
Similar songs:

1337 - காதின்மணி ஓலை (பொதுப்பாடல்கள்)

தானதன தானதத்த ...... தனதான

Songs from this thalam பொதுப்பாடல்கள்

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 1337