![]() | சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Hebrew
Korean
1337 - காதின்மணி ஓலை (பொதுப்பாடல்கள்) Songs from this thalam பொதுப்பாடல்கள்
1337 பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( )
காதின்மணி ஓலை
முன் திருப்புகழ்
அடுத்த திருப்புகழ்
தானதன தானதத்த ...... தனதான
காதின்மணி ஓலையிட்டு ...... வருமானார்
காமவலை யூடுபுக்கு ...... மதிமாழ்கி
நீதிநெறி யேவிடுத்து ...... அலையாதே
நீயுன்இரு தாள்அளிக்க ...... வரவேணும்
ஆதிமக மாயிபெற்ற ...... குமரேசா
ஆறுமுக மேபடைத்த ...... குருநாதா
தீதில்அடி யார்மனத்தில் ...... உறைவோனே
தேவர்குடி வாழவைத்த ...... பெருமாளே.
காதின்மணி ஓலையிட்டு வருமானார்
காமவலை யூடுபுக்கு
மதிமாழ்கி
நீதி நெறியேவிடுத்து
அலையாதே
நீயுன் இரு தாள் அளிக்க வரவேணும்
ஆதி மகமாயி பெற்ற குமரேசா
ஆறு முகமே படைத்த குருநாதா
தீது இல் அடியார் மனத்தில் உறைவோனே
தேவர் குடி வாழவைத்த பெருமாளே. காதில் மணி, காதோலை இவற்றை அணிந்து காமத்தை ஊட்டுகின்ற வலையிலே நான் புகுந்து என்னுடைய (மதி) புத்தி அழிந்து நீதி நெறிமுறைகளை நான் அனுசரிக்காமல் நான் அலையாமல் நீ உன்னுடைய இரண்டு திருவடிகளையும் எனக்கு அளிக்க வரவேண்டும் ஆதி மகமாயி பரமேஸ்வரி பெற்ற குமரேசனே ஆறு திருமுகங்களைக் கொண்டுள்ள குருநாதனே குற்றம் இல்லாத அடியார்கள் மனத்தில் உறைகின்ற பெருமானே தேவர்களின் குலத்தை வாழவைத்த பெருமை மிக்கவரே. (உன்னுடைய இரண்டு திருவடிகளையும் எனக்கு அளிக்க நீ வரவேண்டும்.) Add (additional) Audio/Video Link காதின்மணி ஓலையிட்டு ... காதில் மணி, காதோலை இவற்றை அணிந்து
காமவலை யூடுபுக்கு ... காமத்தை ஊட்டுகின்ற வலையிலே நான் புகுந்து
மதிமாழ்கி ... என்னுடைய (மதி) புத்தி அழிந்து
நீதி நெறியேவிடுத்து ... நீதி நெறிமுறைகளை நான் அனுசரிக்காமல்
அலையாதே ... நான் அலையாமல்
நீயுன் இரு தாள் அளிக்க வரவேணும் ... நீ உன்னுடைய இரண்டு திருவடிகளையும் எனக்கு அளிக்க வரவேண்டும்
ஆதி மகமாயி பெற்ற குமரேசா ... ஆதி மகமாயி பரமேஸ்வரி பெற்ற குமரேசனே
ஆறு முகமே படைத்த குருநாதா ... ஆறு திருமுகங்களைக் கொண்டுள்ள குருநாதனே
தீது இல் அடியார் மனத்தில் உறைவோனே ... குற்றம் இல்லாத அடியார்கள் மனத்தில் உறைகின்ற பெருமானே
தேவர் குடி வாழவைத்த பெருமாளே. ... தேவர்களின் குலத்தை வாழவைத்த பெருமை மிக்கவரே.
(உன்னுடைய இரண்டு திருவடிகளையும் எனக்கு அளிக்க நீ வரவேண்டும்.)
1
Similar songs:
தானதன தானதத்த ...... தனதான
This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
send corrections and suggestions to admin-at-sivaya.org
thiruppugazh song lang tamil sequence no 1337