சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Hebrew   Korean  
1241   பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 366 - வாரியார் # 1144 )  

சிவஞான புண்டரிக

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதான தந்ததன தனதான தந்ததன
     தனதான தந்ததன ...... தனதான


சிவஞான புண்டரிக மலர்மாது டன்கலவி
     சிவபோக மன்பருக ...... அறியாமற்
செகமீது ழன்றுமல வடிவாயி ருந்துபொது
     திகழ்மாதர் பின்செருமி ...... யழிவேனோ
தவமாத வங்கள்பயில் அடியார்க ணங்களொடு
     தயவாய்ம கிழ்ந்துதினம் ...... விளையாடத்
தமியேன்ம லங்களிரு வினைநோயி டிந்தலற
     ததிநாளும் வந்ததென்முன் ...... வரவேணும்
உவகாரி யன்பர்பணி கலியாணி யெந்தையிட
     முறைநாய கங்கவுரி ...... சிவகாமி
ஒளிரானை யின்கரமில் மகிழ்மாது ளங்கனியை
     யொருநாள்ப கிர்ந்தவுமை ...... யருள்பாலா
அவமேபி றந்தஎனை யிறவாம லன்பர்புகு
     மமுதால யம்பதவி ...... யருள்வோனே
அழகாந கம்பொலியு மயிலாகு றிஞ்சிமகிழ்
     அயிலாபு கழ்ந்தவர்கள் ...... பெருமாளே.

சிவஞான புண்டரிக மலர்மாதுடன்
கலவி சிவபோக மன்பருக அறியாமல்
செகமீது உழன்று மல வடிவாயிருந்து
பொது திகழ்மாதர் பின்செருமி அழிவேனோ
தவ மாதவங்கள்பயில்
அடியார் கணங்களொடு
தயவாய் மகிழ்ந்துதினம் விளையாட
தமியேன்மலங்கள் இரு வினைநோய்
இடிந்து அலற
ததிநாளும் வந்ததென்முன் வரவேணும
உவகாரி யன்பர்பணி கலியாணி
எந்தை இடம் உறை நாயகங் கவுரி
சிவகாமி
ஒளிர் ஆனையின்கரமில்
மகிழ்மாதுளங்கனியை ஒருநாள் பகிர்ந்த
உமை யருள்பாலா
அவமேபி றந்தஎனை யிறவாமல்
அன்பர்புகும் அமுதாலயம் பதவியருள்வோனே
அழகாநகம்பொலியு மயிலா
குறிஞ்சிமகிழ் அயிலா
புகழ்ந்தவர்கள் பெருமாளே.
சிவஞானம் என்னும் தாமரை மலரில் வீற்றிருக்கும் சிவமாதுடனே இணையும் மங்களகரமான பேரின்பத்தை நன்றாக அனுபவிக்கத் தெரியாமல், இவ்வுலகில் அலைந்து திரிந்து, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மல சொரூபமாகி, பொதுவாய்த் திகழும் விலைமாதரைப் பின்தொடர்ந்து அழிந்து போவேனோ? தவமும் நிஷ்டைகளும் செய்கின்ற உன் அடியார்களின் கூட்டங்களுடன் அன்போடு மகிழ்ந்து தினமும் விளையாடவும், அடியேனது மும்மலங்கள், பிறப்பு, இறப்பு, நல்வினை, தீவினை, நோய்கள் யாவும் அச்சமுற்று அலறி ஓடும்படியாகவும், தக்க சமயத்தில் தினமும் பிரத்யக்ஷமாக வந்தவனாக என்முன்னால் நீ வரவேண்டும். யாவர்க்கும் உதவி செய்பவளும், அன்பர்கள் பணிந்து போற்றும் கல்யாணியும், எந்தை சிவபிரானின் இடது பாகத்தில் நாயகியாக விளங்கும் கெளரியும், சிவகாம சுந்தரியும், விளங்கும் யானைமுக விநாயகனுக்குக் கரத்தில் மகிழும்படியாக மாதுளங்கனியை முன்பொருநாள் அளித்தவளும் ஆகிய உமாதேவி பார்வதி அருளிய பாலகனே, வீண் காலம் போக்கும் பிறவியை எடுத்த எனக்கு இறவாத வரத்தைத் தந்து அன்பர்கள் புகுகின்ற அமுதக்கோயிலாகிய உயர் நிலையை அருள்வோனே, அழகனே, மலைகளில் விளங்கி வாழ்பவனே, மயில் வாகனனே, குறிஞ்சி நிலத்தில் மகிழ்ச்சியோடு குடியிருக்கும் வேலவனே, புகழ்ந்து போற்றும் அடியவர்களின் பெருமாளே.
Audio/Video Link(s)
Add (additional) Audio/Video Link
சிவஞான புண்டரிக மலர்மாதுடன் ... சிவஞானம் என்னும் தாமரை
மலரில் வீற்றிருக்கும் சிவமாதுடனே
கலவி சிவபோக மன்பருக அறியாமல் ... இணையும்
மங்களகரமான பேரின்பத்தை நன்றாக அனுபவிக்கத் தெரியாமல்,
செகமீது உழன்று மல வடிவாயிருந்து ... இவ்வுலகில் அலைந்து
திரிந்து, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மல சொரூபமாகி,
பொது திகழ்மாதர் பின்செருமி அழிவேனோ ... பொதுவாய்த்
திகழும் விலைமாதரைப் பின்தொடர்ந்து அழிந்து போவேனோ?
தவ மாதவங்கள்பயில் ... தவமும் நிஷ்டைகளும் செய்கின்ற
அடியார் கணங்களொடு ... உன் அடியார்களின் கூட்டங்களுடன்
தயவாய் மகிழ்ந்துதினம் விளையாட ... அன்போடு மகிழ்ந்து
தினமும் விளையாடவும்,
தமியேன்மலங்கள் இரு வினைநோய் ... அடியேனது மும்மலங்கள்,
பிறப்பு, இறப்பு, நல்வினை, தீவினை, நோய்கள் யாவும்
இடிந்து அலற ... அச்சமுற்று அலறி ஓடும்படியாகவும்,
ததிநாளும் வந்ததென்முன் வரவேணும ... தக்க சமயத்தில் தினமும்
பிரத்யக்ஷமாக வந்தவனாக என்முன்னால் நீ வரவேண்டும்.
உவகாரி யன்பர்பணி கலியாணி ... யாவர்க்கும் உதவி செய்பவளும்,
அன்பர்கள் பணிந்து போற்றும் கல்யாணியும்,
எந்தை இடம் உறை நாயகங் கவுரி ... எந்தை சிவபிரானின் இடது
பாகத்தில் நாயகியாக விளங்கும் கெளரியும்,
சிவகாமி ... சிவகாம சுந்தரியும்,
ஒளிர் ஆனையின்கரமில் ... விளங்கும் யானைமுக விநாயகனுக்குக்
கரத்தில்
மகிழ்மாதுளங்கனியை ஒருநாள் பகிர்ந்த ... மகிழும்படியாக
மாதுளங்கனியை முன்பொருநாள் அளித்தவளும்
உமை யருள்பாலா ... ஆகிய உமாதேவி பார்வதி அருளிய பாலகனே,
அவமேபி றந்தஎனை யிறவாமல் ... வீண் காலம் போக்கும்
பிறவியை எடுத்த எனக்கு இறவாத வரத்தைத் தந்து
அன்பர்புகும் அமுதாலயம் பதவியருள்வோனே ... அன்பர்கள்
புகுகின்ற அமுதக்கோயிலாகிய உயர் நிலையை அருள்வோனே,
அழகாநகம்பொலியு மயிலா ... அழகனே, மலைகளில் விளங்கி
வாழ்பவனே, மயில் வாகனனே,
குறிஞ்சிமகிழ் அயிலா ... குறிஞ்சி நிலத்தில் மகிழ்ச்சியோடு
குடியிருக்கும் வேலவனே,
புகழ்ந்தவர்கள் பெருமாளே. ... புகழ்ந்து போற்றும் அடியவர்களின்
பெருமாளே.
Similar songs:

1241 - சிவஞான புண்டரிக (பொதுப்பாடல்கள்)

தனதான தந்ததன தனதான தந்ததன
     தனதான தந்ததன ...... தனதான

Songs from this thalam பொதுப்பாடல்கள்

This page was last modified on Fri, 11 Apr 2025 05:32:46 +0000
 


1
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh song lang tamil sequence no 1241