சிவய.திருக்கூட்டம்
sivaya.org



Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: விரிஞ்சிபுரம்
668   ஒருவரைச் சிறுமனை     669   குலையமயி ரோதி     670   நிகரில் பஞ்ச     671   பரவி உனது     672   மருவும் அஞ்சு    
668   விரிஞ்சிபுரம்   ஒருவரைச் சிறுமனை  
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
     தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
          தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான

ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத்
     தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட்
          டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட் ...... டதனாலே
ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட்
     டுருவுபத் திரமெடுத் தறையின்மற் புரியவிட்
          டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச் ...... செயுமானார்
தருமயற் ப்ரமைதனிற் றவநெறிக் கயலெனச்
     சரியையிற் கிரியையிற் றவமுமற் றெனதுகைத்
          தனமவத் தினிலிறைத் தெவருமுற் றிகழ்வுறத் ...... திரிவேனைச்
சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத்
     தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனதுபொற்
          சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திடஅருட் ...... டருவாயே
குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்வைத்
     தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக்
          கொடியதுர்க் குணஅவத் தரைமுதற் றுரிசறுத் ...... திடும்வேலா
குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற்
     சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக்
          கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப் ...... புணர்வோனே
கருதுசட் சமயிகட் கமைவுறக் கிறியுடைப்
     பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக்
          கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத் ...... திடுவோனே
கமுகினிற் குலையறக் கதலியிற் கனியுகக்
     கழையின்முத் தமுதிரக் கயல்குதித் துலவுநற்
          கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப் ...... பெருமாளே.


ஒருவரைச் சிறு மனைச் சயன மெத்தையினில் வைத்து
     ஒருவரைத் தமது அலைக் கடையினில் சுழல விட்டு
        ஒருவரைப் பரபரப்பொடு தெருத் திரிய விட்டு.....அதனாலே
ஒருவருக்கு ஒருவர் சக்களமையில் சருவ விட்டு
     உருவு பத்திரம் எடுத்து அறையில் மல் புரிய விட்டு
        உயிர் பிழைப்பது கருத்து அளவில் உச்சிதம் என.....செ(ய்)யும் மானார்
தரும் மயல் ப்ரமை தனில் தவ நெறிக்கு அயல் என
     சரியையில் கிரியையில் தவமும் அற்று எனது கை
        தனம் அவத்தினில் இறைத்து எவரும் உற்று இகழ்வுற.....திரிவேனை
சகல துக்கமும் அற சகல சற் குணம் வர
     தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன்
        சரணம் எப்பொழுது நட்பொடு நினைந்திட.....அருள் தருவாயே
குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து
     அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு
        கொடிய துர்க்குண அவத்தரை முதல் துரிசு.....அறுத்திடும் வேலா
குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல்
      சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி
        கொடி இடை பிடி நடை குற மகள் திருவினை.....புணர்வோனே
கருது சட் சமயிகட்கு அமைவுற கிறி உடை
     பறி தலை சமணரை குல முதல் பொடிபட
        கலகமிட்டு உடல் உயிர் கழுவின் உச்சியினில்.....வைத்திடுவோனே
கமுகினின் குலை அற கதலியின் கனி உக
     கழையின் முத்து உதிர கயல் குதித்து உலவு நல்
        கன வயல் திகழ் திரு கரபுரத்து அறுமுக.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

669   விரிஞ்சிபுரம்   குலையமயி ரோதி  
தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதானா

குலையமயி ரோதி குவியவிழி வீறு
     குருகினிசை பாடி ...... முகமீதே
குறுவியர்வு லாவ அமுதினினி தான
     குதலையுமொ ராறு ...... படவேதான்
பலவிதவி நோத முடனுபய பாத
     பரிபுரமு மாட ...... அணைமீதே
பரிவுதரு மாசை விடமனமொ வாத
     பதகனையு மாள ...... நினைவாயே
சிலைமலைய தான பரமர்தரு பால
     சிகிபரிய தான ...... குமரேசா
திருமதுரை மேவு மமணர்குல மான
     திருடர்கழு வேற ...... வருவோனே
கலின்வடிவ மான அகலிகைபெ ணான
     கமலபத மாயன் ...... மருகோனே
கழனிநெடு வாளை கமுகொடிய மோது
     கரபுரியில் வீறு ...... பெருமாளே.


குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு
     குருகின் இசை பாடி.....முக(ம்) மீதே
குறு வியர்வு உலாவ அமுதின் இனிதான
     குதலையும் ஒர் ஆறு.....படவே தான்
பல வித விநோதமுடன் உபய பாத
     பரிபுரமும் ஆட.....அணை மீதே
பரிவு தரும் ஆசை விட மனம் ஒ(வ்)வாத
     ப(பா)தகனையும் ஆள.....நினைவாயே
சிலை மலை அதான பரமர் தரு பால
     சிகி பரியதான.....குமரேசா
திரு மதுரை மேவும் அமணர் குலமான
     திருடர் கழு ஏற.....வருவோனே
க(ல்)லின் வடிவமான அகலிகை பெ(ண்)ணான
     கமல பத மாயன்.....மருகோனே
கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது
     கர புரியில் வீறு.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

670   விரிஞ்சிபுரம்   நிகரில் பஞ்ச  
தனன தந்த தானன தனன தந்த தானன
     தனன தந்த தானன ...... தனதான

நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
     நெகிழ வந்து நேர்படு ...... மவிரோதம்
நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
     நிருப அங்கு மாரவெ ...... ளெனவேதம்
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
     சமய பஞ்ச பாதக ...... ரறியாத
தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
     சரண புண்ட ரீகம ...... தருள்வாயே
மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
     மறுகி வெந்து வாய்விட ...... நெடுவான
வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு
     மடிய இந்தி ராதியர் ...... குடியேறச்
சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
     சிறுவ சந்த்ர சேகரர் ...... பெருவாழ்வே
திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய
     திருவி ரிஞ்சை மேவிய ...... பெருமாளே.


நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சும் ஆவியு
     நெகிழ வந்து நேர்படும்.....அவிரோதம்
நிகழ் தரும் ப்ரபாகர நிரவயம் பராபர
     நிருப அங்குமார வெளென.....வேதம்
சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்
     சமய பஞ்ச பாதகர்.....அறியாத
தனிமை கண்டதான கிண் கிணிய தண்டை சூழ்வன
     சரண புண்டரீகம் அது.....அருள்வாயே
மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
     மறுகி வெந்து வாய்விட.....நெடுவான
வழிதிறந்து சேனையும் எதிர்மலைந்த சூரனு
     மடிய இந்தி ராதியர்.....குடியேற
சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
     சிறுவ சந்த்ர சேகரர்.....பெருவாழ்வே
திசைதொறும் ப்ர பூபதி திசைமுகன்பராவிய
     திருவிரிஞ்சை மேவிய.....பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=uBtBcAYU4R4
Add (additional) Audio/Video Link

Back to Top

671   விரிஞ்சிபுரம்   பரவி உனது  
தனன தனதனத் தனன தனதனத்
     தனன தனதனத் தனன தனதனத்
          தனன தனதனத் தனன தனதனத் ...... தனதானா

பரவி யுனதுபொற் கரமு முகமுமுத்
     தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப்
          பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட் ...... பரிவாலே
படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத்
     தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப்
          பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் ...... படையாதே
சருவி யினியநட் புறவு சொலிமுதற்
     பழகு மவரெனப் பதறி யருகினிற்
          சரச விதமளித் துரிய பொருள்பறித் ...... திடுமானார்
தமது ம்ருகமதக் களப புளகிதச்
     சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத்
          தழுவி யவசமுற் றுருகி மருளெனத் ...... திரிவேனோ
கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக்
     கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக்
          கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் ...... திடுதீரா
கமல அயனுமச் சுதனும் வருணனக்
     கினியு நமனுமக் கரியு லுறையுமெய்க்
          கணனு மமரரத் தனையு நிலைபெறப் ...... புரிவோனே
இரையு முததியிற் கடுவை மிடறமைத்
     துழுவை யதளுடுத் தரவு பணிதரித்
          திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத் ...... தமவேளே
இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத்
     தவனி தனிலெழிற் கரும முனிவருக்
          கினிய கரபுரப் பதியி லறுமுகப் ...... பெருமாளே.


பரவி உனது பொன் கரமும் முகமும் முத்து
     அணியும் உரமும் மெய்ப் ப்ரபையும் மரு மலர்ப்
        பதமும் விரவு குக்குடமும் மயிலும் உள்.....பரிவாலே
படிய மனதில் வைத்து உறுதி சிவம் மிகுத்து
     எவரும் மகிழ் உற தரும நெறியின் மெய்ப்
        பசியில் வரும் அவர்க்கு அசனம் ஒரு பிடிப்.....படையாதே
சருவி இனிய நட்பு உறவு சொ(ல்)லி முதல்
     பழகும் அவர் எனப் பதறி அருகினில்
        சரச விதம் அளித்து உரிய பொருள் பறித்.....திடும் மானார்
தமது ம்ருகமதக் களப புளகிதச்
     சயிலம் நிகர் தனத்து இணையில் மகிழ் உறத்
        தழுவி அவசம் உற்று உருகி மருள் எனத்.....திரிவேனோ
கரிய நிறம் உடை கொடிய அசுரரை
     கெருவ(ம்) மதம் ஒழித்து உடல்கள் துணி பட
        கழுகு பசி கெடக் கடுகி அயில் விடுத்திடு.....தீரா
கமல அயனும் அச்சுதனும் வருணன்
     அக்கினியும் நமனும் அக் கரியில் உறையும் மெய்க்
        க(ண்)ணனும் அமரர் அத்தனையும் நிலை பெறப்.....புரிவோனே
இரையும் உததியில் கடுவை மிடறு அமைத்து
     உழுவை அதள் உடுத்து அரவு பணி தரித்து
        இலகு பெற நடிப்பவர் முன் அருளும்.....உத்தம வேளே
இசையும் அரு மறைப் பொருள்கள் தினம் உரைத்து
     அவனி தனில் எழில் கரும முனிவருக்கு
        இனிய கர புரப் பதியில் அறு முகப்.....பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

672   விரிஞ்சிபுரம்   மருவும் அஞ்சு  
தனன தந்த தான தனன தந்த தான
     தனன தந்த தான ...... தனதான

மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது
     மலமி தென்று போட ...... அறியாது
மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
     வகையில் வந்தி ராத ...... அடியேனும்
உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும்
     உலக மென்று பேச ......அறியாத
உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
     உபய துங்க பாத ...... மருள்வாயே
அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
     அடிப ணிந்து பேசி ...... கடையூடே
அருளு கென்ற போது பொருளி தென்று காண
     அருளு மைந்த ஆதி ...... குருநாதா
திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர்
     செருவ டங்க வேலை ...... விடுவோனே
செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி
     திருவி ரிஞ்சை மேவு ...... பெருமாளே.


மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது
மலமி தென்று போட அறியாது
மயல்கொள் இந்த வாழ்வு அமையும்
எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும்
உருகி யன்பினோடு உனைநினைந்து நாளும்
உலக மென்று பேச அறியாத
உருவ மொன்றிலாத பருவம் வந்து சேர
உபய துங்க பாதமருள்வாயே
அரிவிரிஞ்சர் தேட அரிய தம்பிரானும்
அடிப ணிந்து பேசி
கடையூடே அருளு கென்ற போது
பொருளி தென்று காண
அருளு மைந்த ஆதி குருநாதா
திரியு மும்பர் நீடு கிரிபிளந்து
சூரர் செருவடங்க வேலை விடுவோனே
செயல மைந்த வேத தொனிமுழங்கு வீதி
திருவி ரிஞ்சை மேவு பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=lIpj034UPvQ
Add (additional) Audio/Video Link

Back to Top

     
send corrections and suggestions to admin-at-sivaya.org
This page was last modified on Wed, 24 Jun 2026 06:31:58 +0000