| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: மதுரை
956 அலகு இல் அவுணரை 957 ஆனைமுகவற்கு 958 பரவு நெடுங்கதிர் 959 பழிப்பர் வாழ்த்துவர் 960 சீத வாசனை மலர் 961 புருவச் செஞ்சிலை 962 முகமெலா நெய் 963 ஏலப் பனி நீர் 965 நீதத்துவமாகி 966 மனநினை சுத்த 967 முத்து நவரத்நமணி 1327 சைவ முதல்
956
மதுரை அலகு இல் அவுணரை தனதன தனனத் தந்த தானன
தனதன தனனத் தந்த தானன
தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான
அலகில வுணரைக் கொன்ற தோளென
மலைதொளை யுருவச் சென்ற வேலென
அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டரீக
அடியென முடியிற் கொண்ட கூதள
மெனவன சரியைக் கொண்ட மார்பென
அறுமுக மெனநெக் கென்பெ லாமுரு ...... கன்புறாதோ
கலகல கலெனக் கண்ட பேரொடு
சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
கதறிய வெகுசொற் பங்க மாகிய ...... பொங்களாவுங்
கலைகளு மொழியப் பஞ்ச பூதமு
மொழியுற மொழியிற் றுஞ்சு றாதன
கரணமு மொழியத் தந்த ஞானமி ...... ருந்தவாறென்
இலகுக டலைகற் கண்டு தேனொடு
மிரதமு றுதினைப் பிண்டி பாகுடன்
இனிமையி னுகருற் றெம்பி ரானொரு ...... கொம்பினாலே
எழுதென மொழியப் பண்டு பாரதம்
வடகன சிகரச் செம்பொன் மேருவில்
எழுதிய பவளக் குன்று தாதையை ...... யன்றுசூழ
வலம்வரு மளவிற் சண்ட மாருத
விசையினும் விசையுற் றெண்டி சாமுக
மகிதல மடையக் கண்டு மாசுண ...... முண்டுலாவு
மரகத கலபச் செம்புள் வாகன
மிசைவரு முருகச் சிம்பு ளேயென
மதுரையில் வழிபட் டும்ப ரார்தொழு ...... தம்பிரானே.
அலகு இல் அவுணரை கொன்ற தோள் என
மலை தொளை உருவச் சென்ற வேல் என
அழகிய கனகத் தண்டை சூழ்வன புண்டரீக அடி என
முடியில் கொண்ட கூதளம் என
வனசரியைக் கொண்ட மார்பு என
அறுமுகம் என நெக்கு என்பெலாம் உருக அன்பு உறாதோ
கல கல கல எனக் கண்ட பேரொடு சிலுகிடு சமயப் பங்க
வாதிகள்
கதறிய வெகு சொல் பங்கம் ஆகிய பொங்கு அளாவும்
கலைகளும் ஒழியப் பஞ்ச பூதமும் ஒழி உற
மொழியின் துஞ்சு உறாதன கரணமும் ஒழிய
தந்த ஞானம் இருந்தவாறு என்
இலகு கடலை கற்கண்டு தேனொடும்
இரதம் உறு தினைப் பிண்டி பாகுடன்
இனிமையில் நுகர் உற்ற எம்பிரான் ஒரு கொம்பினாலே
எழுது என மொழியப் பண்டு பாரதம்
வட கன சிகரச் செம் பொன் மேருவில்
எழுதிய பவளக் குன்று தாதையை அன்று சூழ வலம் வரும்
அளவில்
சண்ட மாருத விசையினும் விசையுற்று எண் திசா முக
மகிதலம் அடையக் கண்டு
மாசுணம் உண்டு உலாவு மரகத கலபச் செம் புள் வாகன
மிசை வரு முருக
சிம்புளே என மதுரையில் வழிபட்டு உம்பரார் தொழு
தம்பிரானே. Add (additional) Audio/Video Link
957
மதுரை ஆனைமுகவற்கு தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்த ...... கமரேசா
ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
ஆரணமு ரைத்த ...... குருநாதா
தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா
தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே
வானெழு புவிக்கு மாலுமய னுக்கும்
யாவரொரு வர்க்கு ...... மறியாத
மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க
மாமயில் நடத்து ...... முருகோனே
தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி
சேரமரு வுற்ற ...... திரள்தோளா
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
வேல்கொடு தணித்த ...... பெருமாளே.
ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
ஆறுமுக வித்தக அமரேசா
ஆதியரனுக்கும் வேதமுதல்வற்கும்
ஆரணமுரைத்த குருநாதா
தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
சால்சதுர் மிகுத்த திறல்வீரா
தாளிணைகள் உற்று மேவிய பதத்தில்
வாழ்வொடு சிறக்க அருள்வாயே
வானெழு புவிக்கு மாலும் அயனுக்கும்
யாவரொருவர்க்கும் அறியாத
மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க
மாமயில் நடத்து முருகோனே
தேனெழு புனத்தில்
மான்விழி குறத்தி சேர
மருவுற்ற திரள்தோளா
தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
வேல்கொடு தணித்த பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=Yu9WQDaGyic
Add (additional) Audio/Video Link
958
மதுரை பரவு நெடுங்கதிர் தனன தனந்தன தனன தனந்தன
தனன தனந்தன ...... தனதான
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி ...... யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது ...... நிலவாலே
வரையினி லெங்கணு முலவி நிறைந்தது
வரிசை தரும்பத ...... மதுபாடி
வளமொடு செந்தமி ழுரைசெய அன்பரு
மகிழ வரங்களு ...... மருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே
அசலநெ டுங்கொடி அமையுமை தன்சுத
குறமக ளிங்கித ...... மணவாளா
கருதரு திண்புய சரவண குங்கும
களபம ணிந்திடு ...... மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே.
பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய
பவனி வரும்படி யதனாலே
பகர வளங்களு நிகர விளங்கிய
இருளை விடிந்தது நிலவாலே
வரையினி லெங்கணும் உலவி நிறைந்தது
வரிசை தரும்பதம் அதுபாடி
வளமொடு செந்தமிழுரைசெய
அன்பரு மகிழ வரங்களும் அருள்வாயே
அரஹர சுந்தர அறுமுக என்றுனி
அடியர் பணிந்திட மகிழ்வோனே
அசலநெடுங்கொடி அமையுமை தன்சுத
குறமகள் இங்கித மணவாளா
கருதரு திண்புய சரவண
குங்கும களபம் அணிந்திடு மணிமார்பா
கனக மிகும்பதி மதுரை வளம்பதி
யதனில் வளர்ந்தருள் பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=bzSp-SlVz7A
Add (additional) Audio/Video Link
959
மதுரை பழிப்பர் வாழ்த்துவர் தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன
தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதனத் தனதான
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
ஒருத்தர் வாய்ச்சுரு ளொருவர்கை யுதவுவர்
பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் ...... அளவளப் பதனாலே
படுக்கை வீட்டுனு ளவுஷத முதவுவர்
அணைப்பர் கார்த்திகை வருதென வுறுபொருள்
பறிப்பர் மாத்தையி லொருவிசை வருகென ...... அவரவர்க் குறவாயே
அழைப்ப ராஸ்திகள் கருதுவ ரொருவரை
முடுக்கி யோட்டுவ ரழிகுடி யரிவையர்
அலட்டி னாற்பிணை யெருதென மயலெனு ...... நரகினிற் சுழல்வேனோ
அவத்த மாய்ச்சில படுகுழி தனில்விழும்
விபத்தை நீக்கியு னடியவ ருடனெனை
அமர்த்தி யாட்கொள மனதினி லருள்செய்து ...... கதிதனைத் தருவாயே
தழைத்த சாத்திர மறைபொரு ளறிவுள
குருக்கள் போற்சிவ நெறிதனை யடைவொடு
தகப்ப னார்க்கொரு செவிதனி லுரைசெய்த ...... முருகவித் தகவேளே
சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய்
திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து
சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு ...... மருமகப் பரிவோனே
செழித்த வேற்றனை யசுரர்க ளுடலது
பிளக்க வோச்சிய பிறகம ரர்கள்பதி
செலுத்தி யீட்டிய சுரபதி மகள்தனை ...... மணமதுற் றிடுவோனே
திறத்தி னாற்பல சமணரை யெதிரெதிர்
கழுக்க ளேற்றிய புதுமையை யினிதொடு
திருத்த மாய்ப்புகழ் மதுரையி லுறைதரும் ...... அறுமுகப் பெருமாளே.
பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
ஒருத்தர் வாய்ச்சுருள் ஒருவர் கை உதவுவர்
பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர்
அளவளப் பதனாலே படுக்கை வீட்டினுள் அவுஷதம்
உதவுவர் அணைப்பர்
கார்த்திகை வருது என உறு பொருள் பறிப்பர் மாத்தையில்
ஒருவிசை வருக என அவரவர்க்கு உறவாயே அழைப்பர்
ஆஸ்திகள் கருதுவர் ஒருவரை முடுக்கி ஓட்டுவர்
அழிகுடி அரிவையர் அலட்டினால் பிணை எருது என மயல்
எனும் நரகினில் சுழல்வேனோ
அவத்தமாய்ச் சில படு குழி தனில் விழும் விபத்தை நீக்கி
உன் அடியவர் உடன் எனை அமர்த்தி ஆட் கொள மனதினில்
அருள் செய்து கதி தனைத் தருவாயே
தழைத்த சாத்திர மறை பொருள் அறிவு உள குருக்கள் போல்
சிவ நெறி தனை
அடைவொடு தகப்பனார்க்கு ஒரு செவி தனில் உரை செய்த
முருக வித்தக வேளே
சமத்தினால் புகழ் சனகியை நலிவு செய் திருட்டு ராக்கதன்
உடல் அது துணி செய்து
சயத்து அயோத்தியில் வருபவன் அரி திரு மருமகப்
பரிவோனே
செழித்த வேல் தனை அசுரர்கள் உடல் அது பிளக்க ஓச்சிய
பிறகு அமரர்கள் பதி செலுத்தி
ஈட்டிய சுர பதி மகள் தனை மணம் அது உற்றிடுவோனே
திறத்தினால் பல சமணரை எதிர் எதிர் கழுக்கள் ஏற்றிய
புதுமையை இனிதொடு திருத்தமாய்ப் புகழ் மதுரையில் உறை
தரும் அறுமுகப் பெருமாளே. Add (additional) Audio/Video Link
960
மதுரை சீத வாசனை மலர் தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன ...... தத்ததான
சீத வாசனைம லர்க்குழல்பி லுக்கிமுக
மாய வேல்விழிபு ரட்டிநகை முத்தமெழ
தேமல் மார்பினிள பொற்கிரிப ளப்பளென ...... தொங்கலாரஞ்
சேரு மோவியமெ னச்சடமி னுக்கிவெகு
வாசை நேசமும்வி ளைத்துஇடை யுற்றவரி
சேலை காலில்விழ விட்டுநடை யிட்டுமயி ...... லின்கலாபச்
சாதி யாமெனவெ ருட்டிநட மிட்டுவலை
யான பேர்தமையி ரக்கவகை யிட்டுகொடி
சாக நோய்பிணிகொ டுத்திடர்ப டுத்துவர்கள் ...... பங்கினூடே
தாவி மூழ்கிமதி கெட்டவல முற்றவனை
பாவ மானபிற விக்கடலு ழப்பவனை
தாரு லாவுபத பத்தியிலி ருத்துவது ...... மெந்தநாளோ
வாத வூரனைம தித்தொருகு ருக்களென
ஞான பாதம்வெளி யிட்டுநரி யிற்குழுவை
வாசி யாமெனந டத்துவகை யுற்றரச ...... னன்புகாண
மாடை யாடைதர பற்றிமுன கைத்துவைகை
யாறின் மீதுநட மிட்டுமணெ டுத்துமகிழ்
மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள் ...... கந்தவேளே
வேத லோகர்பொனி லத்தர்தவ சித்தரதி
பார சீலமுனி வர்க்கமுறை யிட்டலற
வேலை யேவியவு ணக்குலமி றக்கநகை ...... கொண்டசீலா
வேத மீணகம லக்கணர்மெய் பச்சைரகு
ராம ரீணமயி லொக்கமது ரைப்பதியின்
மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி ...... தம்பிரானே.
சீத வாசனை மலர்க் குழல் பிலுக்கி முகம் மாய வேல் விழி
புரட்டி நகை முத்தம் எழ
தேமல் மார்பின் இள பொன் கிரி பளப்பள என தொங்கல்
ஆரம் சேரும் ஓவியம் எனச் சடம் மினுக்கி வெகு ஆசை
நேசமும் விளைத்து இடை உற்ற வரி சேலை காலில்
விழவிட்டு
நடை இட்டு மயிலின் கலாபச் சாதியாம் என வெருட்டி நடம்
இட்டு வலையான பேர் தமை இரக்க வகை இட்டு கொடி சாக
நோய் பிணி கொடுத்து இடர் படுத்துவர்கள் பங்கினூடே
தாவி மூழ்கி மதி கெட்டு அவலம் உற்றவனை பாவமான
பிறவிக் கடல் உழப்பவனை தார் உலாவு பத பத்தியில்
இருத்துவதும் எந்த நாளோ
வாதவூரனை மதித்து ஒரு குருக்கள் என ஞான பாதம் வெளி
இட்டு
நரியின் குழுவை வாசியாம் என நடத்து உவகை உற்று
அரசன் அன்பு காண மாடை ஆடை தர பற்றி முன் நகைத்து
வைகை ஆறின் மீது நடம் இட்டு மண் எடுத்து மகிழ் மாது
வாணி தரு பிட்டு நுகர் பித்தன் அருள் கந்த வேளே
வேத லோகர் பொன் நிலத்தர் தவ சித்தர் அதி பார சீல முனி
வர்க்க(ம்) முறை இட்டு அலற வேலை ஏவி அவுணக் குலம்
இறக்க நகை கொண்ட சீலா
வேதம் மீண கமலக் க(ண்)ணர் மெய் பச்சை ரகு ராமர் ஈண
மயில் ஒக்க மதுரைப் பதியில் மேவி வாழ் அமரர் முத்தர் சிவ
பத்தர் பணி தம்பிரானே. Add (additional) Audio/Video Link
961
மதுரை புருவச் செஞ்சிலை தனனத் தந்தன தந்தன தனதன
தனனத் தந்தன தந்தன தனதன
தனனத் தந்தன தந்தன தனதன ...... தனதான
புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி
யெறியக் கொங்கையி ரண்டெனு மதகரி
பொரமுத் தந்தரு மிங்கித நயவித ...... மதனாலே
புகலச் சங்கிசை கண்டம தனிலெழ
உருவச் செந்துவர் தந்தத ரமுமருள்
புதுமைத் தம்பல முஞ்சில தரவரு ...... மனதாலே
பருகித் தின்றிட லஞ்சுக மெனமன
துருகிக் குங்கும சந்தன மதிவியர்
படியச் சம்ப்ரம ரஞ்சித மருள்கல ...... வியினாலே
பலருக் குங்கடை யென்றெனை யிகழவு
மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு
பலமிற் கொண்டிடு வண்டனு முனதடி ...... பணிவேனோ
திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை
வரவச் சங்கொடு வந்திடு முழையுடல்
சிதறக் கண்டக வெங்கர னொடுதிரி ...... சிரனோடு
திரமிற் றங்கிய கும்பக னொருபது
தலைபெற் றும்பரை வென்றிடு மவனொடு
சிலையிற் கொன்றமு குந்தன லகமகிழ் ...... மருகோனே
மருவைத் துன்றிய பைங்குழ லுமையவள்
சிவனுக் கன்பரு ளம்பிகை கவுரிகை
மலையத் தன்தரு சங்கரி கருணைசெய் ...... முருகோனே
வடவெற் பங்கய லன்றணி குசசர
வணையிற் றங்கிய பங்கய முகதமிழ்
மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே.
புருவச் செம் சிலை கொண்டு இரு கணை விழி எறியக்
கொங்கை இரண்டு எனும் மத கரி பொர முத்தம் தரும்
இங்கித நய விதம் அதனாலே
புகலச் சங்கு இசை கண்டம் அதனில் எழ உருவச் செம் துவர்
தந்த அதரமும் அருள் புதுமைத் தம்பலமும் சில தர வரு(ம்)
மனதாலே
பருகித் தின்றிடல் அம் சுகம் என மனது உருகிக் குங்கும
சந்தன அதி வியர் படியச் சம்ப்ரம ரஞ்சிதம் அருள்
கலவியினாலே பலருக்கும் கடை என்று எனை இகழவும்
மயலைத் தந்து அரு மங்கையர் தமை வெகு பலமில்
கொண்டிடு வண்டனும் உனது அடி பணிவேனோ
திருவைக் கொண்டு ஒரு தண்டக வன(ம்) மிசை வர அச்சம்
கொடு வந்திடும் உழை உடல் சிதற
கண்டக வெம் கரனொடு திரி சிரனொடு திரம் இல் தங்கிய
கும்பகன் ஒரு ப(த்)து தலை பெற்று உம்பரை வென்றிடும்
அவனொடு சிலையில் கொன்ற முகுந்தன் நலம் மகிழ்
மருகோனே
மருவைத் துன்றிய பைம் குழல் உமையவள் சிவனுக்கு அன்பு
அருள் அம்பிகை கவுரிகை மலை அத்தன் தரு சங்கரி
கருணை செய் முருகோனே
வட வெற்பு அங்கு அயல் அன்று அணி குசம் சரவணையில்
தங்கிய பங்கய முக
தமிழ் மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் பெருமாளே. Add (additional) Audio/Video Link
962
மதுரை முகமெலா நெய் தனன தான தானத் தனந்த
தனன தான தானத் தனந்த
தனன தான தானத் தனந்த ...... தனதான
முகமெ லாநெய் பூசித் தயங்கு
நுதலின் மீதி லேபொட் டணிந்து
முருகு மாலை யோதிக் கணிந்த ...... மடமாதர்
முதிரு மார பாரத் தனங்கள்
மிசையி லாவி யாய்நெக் கழிந்து
முடிய மாலி லேபட் டலைந்து ...... பொருள்தேடிச்
செகமெ லாமு லாவிக் கரந்து
திருட னாகி யேசற் றுழன்று
திமிர னாகி யோடிப் பறந்து ...... திரியாமல்
தெளியு ஞான மோதிக் கரைந்து
சிவபு ராண நூலிற் பயின்று
செறியு மாறு தாளைப் பரிந்து ...... தரவேணும்
அகர மாதி யாம க்ஷரங்க
ளவனி கால்வி ணாரப் பொடங்கி
அடைய வேக ரூபத் திலொன்றி ...... முதலாகி
அமரர் காண வேயத் தமன்றில்
அரிவை பாட ஆடிக் கலந்த
அமல நாத னார்முற் பயந்த ...... முருகோனே
சகல வேத சாமுத் ரியங்கள்
சமய மாறு லோகத் ரயங்கள்
தரும நீதி சேர்தத் துவங்கள் ...... தவயோகம்
தவறி லாம லாளப் பிறந்த
தமிழ்செய் மாறர் கூன்வெப் பொடன்று
தவிர ஆல வாயிற் சிறந்த ...... பெருமாளே.
முகம் எ(ல்)லாம் நெய் பூசித் தயங்கு(ம்) நுதலின் மீதிலே
பொட்டு அணிந்து முருகு மாலை ஓதிக்கு அணிந்த மட
மாதர்
முதிரும் ஆர பார தனங்கள் மிசையில் ஆவியாய் நெக்கு
அழிந்து முடிய மாலிலே பட்டு அலைந்து பொருள் தேடி
செகம் எ(ல்)லாம் உலாவிக் கரந்து திருடனாகியே சற்று
உழன்று திமிரனாகி ஓடிப் பறந்து திரியாமல்
தெளிவு ஞானம் ஓதிக் கரைந்து சிவ புராண நூலில் பயின்று
செறியுமாறு தாளைப் பரிந்து தர வேணும்
அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் அவனி கால் விண் ஆர் அப்பு
ஒடு அங்கி அடைய ஏக ரூபத்தில் ஒன்றி முதலாகி
அமரர் காணவே அத்த மன்றில் அரிவை பாட ஆடிக் கலந்த
அமல நாதனார் முன் பயந்த முருகோனே
சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள்
தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம் தவறு இ(ல்)லாமல்
ஆளப் பிறந்த தமிழ் செய்
மாறர் கூன் வெப்பொடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த
பெருமாளே. Add (additional) Audio/Video Link
963
மதுரை ஏலப் பனி நீர் தானத்தன தானன தானன
தானத்தன தானன தானன
தானத்தன தானன தானன ...... தனதான
ஏலப்பனி நீரணி மாதர்கள்
கானத்தினு மேயுற வாடிடு
மீரத்தினு மேவளை சேர்கர ...... மதனாலும்
ஏமக்கிரி மீதினி லேகரு
நீலக்கய மேறிய னேரென
ஏதுற்றிடு மாதன மீதினு ...... மயலாகிச்
சோலைக்குயில் போல்மொழி யாலுமெ
தூசுற்றிடு நூலிடை யாலுமெ
தோமிற்கத லீநிக ராகிய ...... தொடையாலும்
சோமப்ரபை வீசிய மாமுக
சாலத்திலு மாகடு வேல்விழி
சூதத்தினு நானவ மேதின ...... முழல்வேனோ
ஆலப்பணி மீதினில் மாசறு
மாழிக்கிடை யேதுயில் மாதவ
னானைக்கினி தாயுத வீயருள் ...... நெடுமாயன்
ஆதித்திரு நேமியன் வாமன
னீலப்புயல் நேர்தரு மேனியன்
ஆரத்துள வார்திரு மார்பினன் ...... மருகோனே
கோலக்கய மாவுரி போர்வையர்
ஆலக்கடு வார்கள நாயகர்
கோவிற்பொறி யால்வரு மாசுத ...... குமரேசா
கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய
சீரற்புத மாநக ராகிய
கூடற்பதி மீதினில் மேவிய ...... பெருமாளே.
ஏலப் பனி நீர் அணி மாதர்கள் கானத்தினுமே உறவு ஆடிடும்
ஈரத்தினுமே வளை சேர் கரம் அதனாலும்
ஏமக் கிரி மீதினிலே கரு நீலக் கயம் ஏறிய நேர் என
ஏதுற்றிடு மா தன மீதினும் மயலாகி
சோலைக் குயில் போல் மொழியாலுமெ தூசு உற்றிடு நூல்
இடையாலுமெ
தோம் இல் கதலீ நிகர் ஆகிய தொடையாலும் சோம ப்ரபை
வீசிய மா முக சாலத்திலும்
மா கடு வேல் விழி சூது அ(த்)தினும் நான் அவமே தினம்
உழல்வேனோ
ஆலப் பணி மீதினில் மாசு அறு ஆழைக்கு இடையே துயில்
மாதவன்
ஆனைக்கு இனிதாய் உதவீ அருள் நெடுமாயன்
ஆதித் திரு நேமியன் வாமனன் நீலப் புயல் நேர் தரு
மேனியன்
ஆரத் துளவார் திரு மார்பினன் மருகோனே
கோலக் கய மா உரி போர்வையர் ஆலக் கடு ஆர் கள(ர்)
நாயகர்
கோவில் பொறியால் வரு மா சுத குமரேசா
கூர் முத்தமிழ் வாணர்கள் வீறிய சீர் அற்புத மா நகர் ஆகிய
கூடல் பதி மீதினில் மேவிய பெருமாளே. Add (additional) Audio/Video Link
965
மதுரை நீதத்துவமாகி தானத் தனதான தானத் ...... தனதான
நீதத் துவமாகி .. நேமத் ...... துணையாகிப்
பூதத் தயவான .. போதைத் ...... தருவாயே
நாதத் தொனியோனே .. ஞானக் ...... கடலோனே
கோதற் றமுதானே .. கூடற் ...... பெருமாளே.
நீதத் துவமாகி .. நேமத் ...... துணையாகிப்
பூதத் தயவான .. போதைத் ...... தருவாயே
நாதத் தொனியோனே .. ஞானக் ...... கடலோனே
கோதற் றமுதானே .. கூடற் ...... பெருமாளே. Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=br0YJb-Tbds
Add (additional) Audio/Video Link
966
மதுரை மனநினை சுத்த தனதன தத்தந் தான தானன
தனதன தத்தந் தான தானன
தனதன தத்தந் தான தானன ...... தனதான
மனநினை சுத்தஞ் சூது காரிகள்
அமளிவி ளைக்குங் கூளி மூளிகள்
மதபல நித்தம் பாரி நாரிக ...... ளழகாக
வளைகுழை முத்தும் பூணும் வீணிகள்
விழலிகள் மெச்சுண் டாடி பாடிகள்
வரமிகு வெட்கம் போல வோடிகள் ...... தெருவூடே
குனகிகள் பக்ஷம் போல பேசிகள்
தனகிக ளிச்சம் பேசி கூசிகள்
குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள் ...... பொருளாசைக்
கொளுவிக ளிஷ்டம் பாறி வீழ்பட
அருளமு தத்தின் சேரு மோர்வழி
குறிதனி லுய்த்துன் பாத மேறிட ...... அருள்தாராய்
தனதன தத்தந் தான தானன
டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு
தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி
தவில்முர சத்தந் தாரை பூரிகை
வளைதுடி பொற்கொம் பார சூரரை
சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா
தினைவன நித்தங் காவ லாளியள்
நகைமுறை முத்தின் பாவை மான்மகள்
திகழ்பெற நித்தங் கூடி யாடிய ...... முருகோனே
திரிபுர நக்கன் பாதி மாதுறை
யழகிய சொக்கன் காதி லோர்பொருள்
செலவரு ளித்தென் கூடல்மேவிய ...... பெருமாளே.
மன(ம்) நினை சுத்தம் சூதுகாரிகள்
அமளி விளைக்கும் கூளி மூளிகள்
மதபலம் நித்தம் பாரி நாரிகள் அழகாக வளை குழை முத்தும்
பூணும் வீணிகள்
விழலிகள் மெச்சுண்டு ஆடி பாடிகள்
வர மிகு வெட்கம் போல ஓடிகள் தெருவூடே குனகிகள்
பக்ஷம் போல பேசிகள்
தனகிகள் இச்சம் பேசி கூசிகள் குசலிகள் வ(ரு)க்கம்
சூறைகாரிகள்
பொருள் ஆசைக் கொளுவிகள் இஷ்டம் பாறி வீழ்பட
அருள் அமுதத்தின் சேரும் ஓர் வழி குறி தனில் உய்த்து உன்
பாதம் ஏறிட அருள் தாராய்
தனதன தத்தந் தான தானன
டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு
தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி
தவில் முரசு சத்தம் தாரை பூரிகை வளை துடி பொன் கொம்பு
ஆர
சூரரை சமர் தனில் முற்றும் பாறி நூறிட விடும் வேலா
தினை வன(ம்) நித்தம் காவலாளியள் நகை முறை முத்தின்
பாவை மான் மகள்
திகழ் பெற நித்தம் கூடி ஆடிய முருகோனே
திரி புர நக்கன் பாதி மாது உறை அழகிய சொக்கன் காதில்
ஓர் பொருள் செல அருளி
தென் கூடல் மேவிய பெருமாளே. Add (additional) Audio/Video Link
967
மதுரை முத்து நவரத்நமணி தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான
முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும்
முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள்
முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி
பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி
பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும்
பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்
பத்தர்மன துற்றசிவம் ...... அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்தததென ...... தெனனான
திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை ...... யெனஆடும்
அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ
சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா
அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவள
ரற்கனக பத்மபுரி ...... பெருமாளே.
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம்
மொய்த்த கிரி முத்தி தரு என ஓதும்
முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த முருகக் கடவுள்
முப்பது முவர்க்க சுரர் அடி பேணி
பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி
பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும்
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள்
பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே
தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
தெய்த்ததென தெய்தததென தெனனான
திக்குவென மத்தளம் இடக்கைதுடி தத்ததகு
செச்சரிகை செச்சரிகை யெனஆடும்
அத்தனுடன் ஒத்த நடநி த்ரிபுவனத்தி நவ
சித்தி அருள் சத்தி அருள் புரிபாலா
அற்ப இடை தற்பம் அது முற்று நிலை பெற்று வளர்
அல் கனக பத்ம புரி பெருமாளே.
Add (additional) Audio/Video Link
1327
மதுரை சைவ முதல் தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா
சைவமுதற் குருவாயே சமணர்களைத் ...... தெறுவோனே
பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் ...... புரிவாயே
கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் ...... புதநீபா
தெய்வசற் குருநாதா திருமதுரைப் ...... பெருமாளே.
சைவ முதல் குருவாயே சமணர்களைத் தெறுவோனே
பொய்யர் உ(ள்)ளத்து அணுகானே புனித அருள் புரிவாயே
கையின் மிசைக் கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா
தெய்வ சற் குரு நாதா திருமதுரைப் பெருமாளே. Add (additional) Audio/Video Link