| சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking language links. Or with Google |
Selected Thiruppugazh
Thiruppugazh Thalangal
All Thiruppugazh Songs
Thiruppugazh by Santham
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Marati
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
Spanish
Hebrew
Korean
Thiruppugazh from Thalam: திருவிடைமருதூர்
858 அறுகுநுனி பனி 859 இலகு குழைகிழிய 860 படியை அளவிடு 861 புழுகொடுபனி
858
திருவிடைமருதூர் அறுகுநுனி பனி தனதனன தனதனன தனதனன தனதனன
தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
தான தானனா தான தானனா ...... தனதன தனதான
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர
ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய்
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
ஆவி யாயவோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென
வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே
வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்
மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு
சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே
மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்
வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
வார்கள் போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில்
வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில
வாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய்
மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு
காடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச
இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ
ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
ஈமொ லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே
இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு
ஆகம் ஆகி ஓர் பால ரூபமாய்
அரு மதலை குதலை மொழி தனில் உருகி அவருடைய
ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினில் அருமை இட மொளு மொளு என உடல் வளர
ஆளு(ம்) மேளமாய் வால ரூபமாய்.....அவர் ஒரு பெரியோராய்
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி
ஆவியாய ஓர் தேவிமாருமாய்
விழு சுவரை அரிவையர்கள் படு குழியை நிலைமை என
வீடு வாசலாய் மாட கூடமாய்
அணு அளவு தவிடும் இக பிதிரவிட மனம் இறுகி
ஆசை ஆளராய் ஊசி வாசியாய்.....அவி உறு(ம்) சுடர் போலே
வெறு மிடியன் ஒரு தவசி அமுது படை எனும் அளவில்
மேலை வீடு கேள் கீழை வீடு கேள்
திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு
சீறி ஞாளி போல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வரு பொருள்கள் சுவறி இட மொழியும் ஒரு
வீணியார் சொ(ல்)லே மேலது ஆயிடா.....விதி தனை நினையாதே
மினுகு மினுகு எனும் உடலம் அற முறுகி நெகிழ்வு உறவும்
வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமை உளது எனும் அவரை விடும் விழலை அதனின் வரு
வார்கள் போகுவார் காணுமோ எனா
விடு துறவு பெரியவரை மறையவரை வெடு வெடு என
மேளமே சொலாய் ஆளி வாயராய்.....மிடை உற வரு நாளில்
வறுமைகளு(ம்) முடுகி வர உறு பொருளு(ம்) நழுவ சில
வாதம் ஊது காமாலை சோகை நோய்
பெரு வயிறு வயிறு வலி படுவன் வர இரு விழிகள்
பீளை சாறு இடா ஈளை மேலிடா
வழ வழ என உமிழும் அது கொழ கொழ என ஒழுகி விழ
வாடி ஊன் எலாம் நாடி பேதமாய்.....மனையவள் மனம் வேறாய்
மறுக மனை உறும் அவர்கள் நணுகு நணுகு எனும் அளவில்
மாதர் சீ எனா வாலர் சீ எனா
கனவு தனில் இரதமொடு குதிரை வர நெடிய சுடு
காடு வா எனா வீடு போ எனா
வலது அழிய விரகு அழிய உரை குழறி விழி சொருகி
வாயு மேலிடா ஆவி போகு நாள்.....மனிதர்கள் பல பேச
இறுதி அதொடு அறுதி என உறவின் முறை கதறி அழ
ஏழை மாதராள் மோதி மேல் விழா
எனது உடைமை எனது அடிமை எனும் அறிவு சிறிதும் அற
ஈ மொலேல் எனா வாயை ஆ எனா
இடுகு பறை சிறு பறைகள் திமிலையொடு தவில் அறைய
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய்.....எரிதனில் இடும் வாழ்வே
இணை அடிகள் பரவும் உனது அடியவர்கள் பெறுவதுவும்
ஏசிடார்களோ பாச நாசனே
இரு வினை மு(ம்)மலமும் அற இறவி ஒடு பிறவி அற
ஏக போகமாய் நீயு(ம்) நானுமாய்
இறுகும் வகை பரம சுக மதனை அருள் இடை மருதில்
ஏக நாயகா லோக நாயகா.....இமையவர் பெருமாளே.
Audio/Video Link(s)
http://kaumaram.com/thiru/nnt0858_u.html#audio
https://www.youtube.com/watch?v=HXDsw0vdu5g
Add (additional) Audio/Video Link
859
திருவிடைமருதூர் இலகு குழைகிழிய தனன தனதனன தான தானதன
தனன தனதனன தான தானதன
தனன தனதனன தான தானதன ...... தந்ததான
இலகு குழைகிழிய வூடு போயுலவி
யடர வருமதன னூல ளாவியெதி
ரிளைஞ ருயிர்கவர ஆசை நேர்வலைபொ ...... திந்தநீலம்
இனிமை கரைபுரள வாகு லாவுசரி
நெறிவு கலகலென வாசம் வீசுகுழ
லிருளின் முகநிலவு கூர மாணுடைய ...... கன்றுபோக
மலையு மிதழ்பருகி வேடை தீரவுட
லிறுக இறுகியநு ராக போகமிக
வளரு மிளகுதன பார மீதினில்மு ...... யங்குவேனை
மதுர கவியடைவு பாடி வீடறிவு
முதிர அரியதமி ழோசை யாகவொளி
வசன முடையவழி பாடு சேருமருள் ...... தந்திடாதோ
கலக அசுரர்கிளை மாள மேருகிரி
தவிடு படவுதிர வோல வாரியலை
கதற வரியரவம் வாய்வி டாபசித ...... ணிந்தபோகக்
கலப மயிலின்மிசை யேறி வேதநெறி
பரவு மமரர்குடி யேற நாளும்விளை
கடிய கொடியவினை வீழ வேலைவிட ...... வந்தவாழ்வே
அலகை யுடனடம தாடு தாதைசெவி
நிறைய மவுனவுரை யாடு நீபஎழில்
அடவி தனிலுறையும் வேடர் பேதையைம ...... ணந்தகோவே
அமணர் கழுவில்விளை யாட வாதுபடை
கருது குமரகுரு நாத நீதியுள
தருளு மிடைமருதில் மேவு மாமுனிவர் ...... தம்பிரானே.
இலகு குழை கிழிய ஊடு போய் உலவி
அடர வரு மதன நூல் அளாவி எதிர்
இளைஞர் உயிர் கவர ஆசை நேர் வலை.....பொதிந்த நீலம்
இனிமை கரை புரள வாகு உலாவு சரி
நெறிவு கலகல என வாசம் வீசும் குழல்
இருளின் முக நிலவு கூர மாண் உடை.....அகன்று போக
மலையும் இதழ் பருகி வேடை தீர உடல்
இறுக இறுகி அநுராக போக மிக
வளரும் இள தன
பாரம் மீதினில்.....முயங்குவேனை
மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு
முதிர அரிய தமிழோசை ஆக ஒளி
வசனம் உடைய வழிபாடு சேரும் அருள்.....தந்திடாதோ
கலக அசுரர் கிளை மாள மேரு கிரி
தவிடு பட உதிர ஓல வாரி அலை
கதற வரி அரவம் வாய் விடா பசி.....தணிந்த போகக்
கலப மயிலின் மிசை ஏறி வேத நெறி
பரவும் அமரர் குடியேற நாளும் விளை
கடிய கொடிய வினை வீழ வேலை விட.....வந்த வாழ்வே
அலகையுடன் நட(ன)ம் அது ஆடும் தாதை செவி
நிறைய மவுன உரையாடு(ம்) நீப எழில்
அடவி தனில் உறையும் வேடர் பேதையை.....மணந்த கோவே
அமணர் கழுவில் விளையாட வாது படை
கருது குமரகுரு நாத நீதி உளது
அருளும் இடை மருதில் மேவும் மா முனிவர்.....தம்பிரானே. Add (additional) Audio/Video Link
860
திருவிடைமருதூர் படியை அளவிடு தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தந்ததான
படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும்
தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும்
பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன் ...... செம்பொன்மேனிப்
பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந்
திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும்
பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந் ...... துன்றுமூலச்
சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங்
குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன்
சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென் ...... றுய்ந்துபாடித்
தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன்
பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன்
தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ் ...... சிந்தியாதோ
கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம்
பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங்
கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங் ...... கண்டுசேரக்
கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின்
றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங்
கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந் ...... துங்கவேலா
அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம்
பெரியகுரு பரகுமர சிந்துரஞ் சென்றடங்
கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந் ...... தங்குமார்பா
அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங்
கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென்
றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந் ...... தம்பிரானே.
படியை அளவு இடு நெடிய கொண்டலும் சண்டனும்
தமர சதுமறை அமரர் சங்கமும் சம்புவும்
பரவ அரிய நிருபன் விரகன் சுடும் சம்பனன்.....செம் பொன் மேனிப்
பரமன் எழில் புனையும் அரவங்களும் கங்கையும்
திரு வளரும் முளரியொடு திங்களும் கொன்றையும்
பரிய குமிழ் அறுகு கன தும்பையும் செம்பையும்.....துன்று மூலச்
சடை முடியில் அணியும் ந(ல்)ல சங்கரன் கும்பிடும்
குமரன் அறுமுகவன் மதுரம் தரும் செம் சொ(ல்)லன்
சரவணையில் வரு முதலி கொந்தகன் கந்தன் என்று.....உய்ந்து பாடித்
தணிய ஒலி புகலும் விதம் ஒன்றிலும் சென்றிலன்
பகிர ஒரு தினை அளவு பண்பு கொண்டு அண்டிலன்
தவ நெறியில் ஒழுகி வழி பண்படும் கங்கணம்.....சிந்தியாதோ
கடுகு பொடி தவிடு பட மந்திரம் தந்திரம்
பயில வரு(ம்) நிருதர் உடலம் பிளந்து அம்பரம்
கதறி வெகு குருதி நதி பொங்கிடும் சம்ப்ரமம்.....கண்டு சேர
கழுகு நரி கொடி கருடன் அங்கு எழுந்து எங்கு(ம்) நின்று
அலகை பல திமிலை கொடு தந்தனம் தந்தனம்
கருதி இசை பொசியும் நசை கண்டு கண்டு இன்புறும்.....துங்க வேலா
அடல் புனையும் இடை மருதில் வந்து இணங்கும் குணம்
பெரிய குருபர குமர சிந்துரம் சென்று அடங்கு(ம்)
அடவி தனில் உறை குமரி சந்து இலங்கும் தனம்.....தங்கு(ம்) மார்பா
அருண மணி வெயில் இலகு தண்டை அம் பங்கயம்
கருணை பொழிவன கழலில் அந்தமும் தம்பம் என்று
அழகு பெற நெறி வருடி அண்டரும் தொண்டு உறும்.....தம்பிரானே. Add (additional) Audio/Video Link
861
திருவிடைமருதூர் புழுகொடுபனி தனதனதன தான தானன தனதனதன தான தானன
தனதனதன தான தானன ...... தந்ததான
புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன
புளகிதஅபி ராம பூஷித ...... கொங்கையானை
பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீது தாவடி
பொருவனகணை போல்வி லோசன ...... வந்தியாலே
மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகன
வெகுவிதபரி தாப வாதனை ...... கொண்டுநாயேன்
மிடைபடுமல மாயை யால்மிக கலவியஅறி வேக சாமிநின்
விதரணசிவ ஞான போதகம் ...... வந்துதாராய்
எழுகிரிநிலை யோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினி
யிடர்கெடஅசு ரேசர் சேனைமு ...... றிந்துபோக
இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிட
ரணமுககண பூத சேனைகள் ...... நின்றுலாவச்
செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவக
செயசெயமுரு காகு காவளர் ...... கந்தவேளே
திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தரு
திருவிடைமரு தூரில் மேவிய ...... தம்பிரானே.
புழுகு ஒடு பனிநீர் சவாது உடன் இரு கரம் மிகு மார்பி(ல்) லேபனம்
புளகித அபிராம பூஷித.....கொங்கை யானை
பொதுவினில் விலைகூறும் மாதர்கள் மணிஅணி குழை மீது தாவடி
பொருவன கணை போல் விலோசன....வந்தியாலே
மெழுகு என உருகா அ(ன்)னார் தமது இதய கலகமோடு மோகன
வெகு வித பரிதாப வாதனை.....கொண்டு நாயேன்
மிடை படும் மலம் மாயையால் மிக கலவிய அறிவு ஏக சாமி நின்
விதரண சிவ ஞான போதகம்.....வந்து தாராய்
எழு கிரி நிலை ஓட வாரிதி மொகுமொகு என வீச மேதினி
இடர் கெட அசுரேசர் சேனை.....முறிந்து போக
இமையவர் சிறை மீள நாய் நரி கழுகுகள் கக ராசன் மேலிட
ரண முக கண பூத சேனைகள்.....நின்று உலாவ
செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக
செய செய முருகா குகா வளர்.....கந்த வேளே
திரைபொரு கரை மோது(ம்) காவிரி வருபுனல் வயல் வாவி சூழ்தரு
திருவிடை மருதூரில் மேவிய.....தம்பிரானே. Add (additional) Audio/Video Link