சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference by clicking language links.
Search this site internally
Or with Google

Selected Thiruppugazh      Thiruppugazh Thalangal      All Thiruppugazh Songs      Thiruppugazh by Santham     

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew   Korean  
Order by:
Thiruppugazh from Thalam: திருவானைக்கா
353   அஞ்சன வேல்விழி இட்டு     361   காவிப் பூவை     360   கரு முகில்     359   ஓல மறைகள்     358   உரைக் காரிகை     366   வேலைப்போல் விழி     357   ஆலம் வைத்த     365   பரிமளம் மிக உள     356   ஆரமணி வாரை     364   நிறைந்த துப்பிதழ்     355   அனித்தமான ஊன்     363   நாடித் தேடி     354   அம்புலி நீரை     362   குருதி புலால் என்பு    
353   திருவானைக்கா   அஞ்சன வேல்விழி இட்டு  
தந்தன தானன தத்ததத்தன
     தந்தன தானன தத்ததத்தன
          தந்தன தானன தத்ததத்தன ...... தனதான

அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு
     மிங்கித மாகந கைத்துருக்கவு
          மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் ...... நகரேகை
அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு
     மந்தர மாமுலை சற்றசைக்கவு
          மம்பரம் வீணில விழ்த்துடுக்கவு ...... மிளைஞோர்கள்
நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும்
     வம்புரை கூறிவ ளைத்திணக்கவு
          மன்றிடை யாடிம ருட்கொடுக்கவு ...... மெவரேனும்
நிந்தைசெ யாதுபொ ருட்பறிக்கவு
     மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற
          நின்பத சேவைய நுக்ரகிப்பது ...... மொருநாளே
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
     அங்குச பாசக ரப்ரசித்தனொர்
          கொம்பன்ம கோதரன் முக்கண்விக்ரம ...... கணராஜன்
கும்பிடு வார்வினை பற்றறுப்பவன்
     எங்கள்வி நாயக னக்கர்பெற்றருள்
          குன்றைய ரூபக கற்பகப்பிளை ...... யிளையோனே
துஞ்சலி லாதச டக்ஷரப்பிர
     பந்தச டானன துஷ்டநிக்ரக
          தும்பிகள் சூழவை யிற்றமிழ்த்ரய ...... பரிபாலா
துங்கக ஜாரணி யத்திலுத்தம
     சம்புத டாகம டுத்ததக்ஷிண
          சுந்தர மாறன்ம திட்புறத்துறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

354   திருவானைக்கா   அம்புலி நீரை  
தந்தன தானத் தானன தந்தன தானத் தானன
     தந்தன தானத் தானன ...... தனதான

அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதிற் றாவிய
     ஐந்தலை நாகப் பூஷண ...... ரருள்பாலா
அன்புட னாவிற் பாவது சந்தத மோதிப் பாதமு
     மங்கையி னானிற் பூசையு ...... மணியாமல்
வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்
     வண்டுழ லோதித் தாழலி ...... லிருகாதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண்துகி லாடைச் சேர்வையில்
     மங்கியெ யேழைப் பாவியெ ...... னழிவேனோ
கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
     குண்டலி யாலப் போசனி ...... யபிராமி
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
     குன்றது வார்பொற் காரிகை ...... யருள்பாலா
செம்பவ ளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை
     திண்புய மாரப் பூரண ...... மருள்வோனே
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
     தென்திரு வானைக் காவுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

355   திருவானைக்கா   அனித்தமான ஊன்  
தனத்த தான தானான தனத்த தான தானான
     தனத்த தான தானான ...... தனதான

அனித்த மான வூனாளு மிருப்ப தாக வேநாசி
     யடைத்து வாயு வோடாத ...... வகைசாதித்
தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச
     அசட்டு யோகி யாகாமல் ...... மலமாயை
செனித்த காரி யோபாதி யொழித்து ஞான ஆசார
     சிரத்தை யாகி யான்வேறெ ...... னுடல்வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சி யாம நோதீத
     சிவச்சொ ரூபமாயோகி ...... யெனஆள்வாய்
தொனித்த நாத வேயூது சகஸ்ர நாம கோபால
     சுதற்கு நேச மாறாத ...... மருகோனே
சுவர்க்க லோக மீகாம சமஸ்த லோக பூபால
     தொடுத்த நீப வேல்வீர ...... வயலுரா
மனித்த ராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
     மகப்ர வாக பானீய ...... மலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோக மாள்வாரு
     மதித்த சாமி யேதேவர் ...... பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=TansCtAkCyE
Add (additional) Audio/Video Link

Back to Top

356   திருவானைக்கா   ஆரமணி வாரை  
தானதன தானத் தானதன தானத்
     தானதன தானத் ...... தனதான

ஆரமணி வாரைப் பீறியற மேலிட்
     டாடவர்கள் வாடத் ...... துறவோரை
ஆசைமட லூர்வித் தாளுமதி பாரப்
     பாளித படீரத் ...... தனமானார்
காரளக நீழற் காதளவு மோடிக்
     காதுமபி ராமக் ...... கயல்போலக்
காலனுடல் போடத் தேடிவரு நாளிற்
     காலைமற வாமற் ...... புகல்வேனோ
பாரடைய வாழ்வித் தாரபதி பாசச்
     சாமளக லாபப் ...... பரியேறிப்
பாய்மதக போலத் தானொடிக லாமுற்
     பாடிவரு மேழைச் ...... சிறியோனே
சூரர்புர சூறைக் காரசுரர் காவற்
     காரஇள வேனற் ...... புனமேவுந்
தோகைதிரு வேளைக் காரதமிழ் வேதச்
     சோதிவளர் காவைப் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

357   திருவானைக்கா   ஆலம் வைத்த  
தான தத்தன தத்தன தத்தன
     தான தத்தன தத்தன தத்தன
          தான தத்தன தத்தன தத்தன ...... தனதான

ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச
     னாக மக்கலை கற்றச மர்த்திக
          ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் ...... தெருவூடே
ஆர வட்டமு லைக்குவி லைப்பண
     மாயி ரக்கல மொட்டிய ளப்பினு
          மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ ...... ருடன்மாலாய்
மேலி ளைப்புமு சிப்பும வத்தையு
     மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு
          மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி ...... யதனாலே
மேதி னிக்குள பத்தனெ னப்பல
     பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை
          வீடு கட்டியி ருக்குமெ னக்குநி ...... னருள்தாராய்
பீலி மிக்கம யிற்றுர கத்தினி
     லேறி முட்டவ ளைத்துவ குத்துடல்
          பீற லுற்றவு யுத்தக ளத்திடை ...... மடியாத
பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை
     பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர்
          பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு ...... குடனாட
ஏலம் வைத்தபு யத்தில ணைத்தருள்
     வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர்
          ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை ...... யருள்வோனே
ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ
     ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம
          ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

358   திருவானைக்கா   உரைக் காரிகை  
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
     தனத்தா தனத்தான ...... தந்ததான

உரைக்கா ரிகைப்பா லெனக்கே முதற்பே
     ருனக்கோ மடற்கோவை ...... யொன்றுபாட
உழப்பா திபக்கோ டெழுத்தா ணியைத்தே
     டுனைப்பா ரிலொப்பார்கள் ...... கண்டிலேன்யான்
குரைக்கா னவித்யா கவிப்பூ பருக்கே
     குடிக்காண் முடிப்போடு ...... கொண்டுவாபொன்
குலப்பூ ணிரத்நா திபொற்றூ செடுப்பா
     யெனக்கூ றிடர்ப்பாடின் ...... மங்குவேனோ
அரைக்கா டைசுற்றார் தமிழ்க்கூ டலிற்போய்
     அனற்கே புனற்கேவ ...... ரைந்தஏடிட்
டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே
     லறப்பாய் வயற்கீழ ...... மர்ந்தவேளே
திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே
     சிவத்யா னமுற்றோர்சி ...... லந்திநூல்செய்
திருக்கா வணத்தே யிருப்பா ரருட்கூர்
     திருச்சால கச்சோதி ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

359   திருவானைக்கா   ஓல மறைகள்  
தான தனன தனதந்த தந்தன
     தான தனன தனதந்த தந்தன
          தான தனன தனதந்த தந்தன ...... தனதான

ஓல மறைக ளறைகின்ற வொன்றது
     மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
          ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும்
ஓத வரிய துரியங் கடந்தது
     போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
          ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம்
சால வுடைய தவர்கண்டு கொண்டது
     மூல நிறைவு குறைவின்றி நின்றது
          சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ்
சாரு மநுப வரமைந்த மைந்தமெய்
     வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
          தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறி
     வேல மயில எனவந்து கும்பிடு
          வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
     வீர கடக புயசிங்க சுந்தர
          வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
     நீலி கவுரி பரைமங்கை குண்டலி
          நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி
நாத வடிவி யகிலம் பரந்தவ
     ளாலி னுதர முளபைங் கரும்புவெ
          ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=62v2Yw8Q6Kk
Add (additional) Audio/Video Link

Back to Top

360   திருவானைக்கா   கரு முகில்  
தனதனதன தானத் தானன
     தனதனதன தானத் தானன
          தனதனதன தானத் தானன ...... தனதான

கருமுகில்திர ளாகக் கூடிய
     இருளெனமரு ளேறித் தேறிய
          கடிகமழள காயக் காரிகள் ...... புவிமீதே
கனவியவிலை யோலைக் காதிகள்
     முழுமதிவத னேரப் பாவைகள்
          களவியமுழு மோசக் காரிகள் ...... மயலாலே
பரநெறியுண ராவக் காமுகர்
     உயிர்பலிகொளு மோகக் காரிகள்
          பகழியைவிழி யாகத் தேடிகள் ...... முகமாயப்
பகடிகள்பொரு ளாசைப் பாடிக
     ளுருவியதன பாரக் கோடுகள்
          படவுளமழி வேனுக் கோரருள் ...... புரிவாயே
மரகதவித நேர்முத் தார்நகை
     குறமகளதி பாரப் பூண்முலை
          மருவியமண வாளக் கோலமு ...... முடையோனே
வளைதருபெரு ஞாலத் தாழ்கடல்
     முறையிடநடு வாகப் போயிரு
          வரைதொளைபட வேல்விட் டேவிய ...... அதிதீரா
அரவணைதனி லேறிச் சீருடன்
     விழிதுயில்திரு மால்சக் ராயுதன்
          அடியிணைமுடி தேடிக் காணவும் ...... அரிதாய
அலைபுனல்சடை யார்மெச் சாண்மையும்
     உடையதொர்மயில் வாசிச் சேவக
          அழகியதிரு வானைக் காவுறை ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

361   திருவானைக்கா   காவிப் பூவை  
தானத் தான தான தனதன
     தானத் தான தான தனதன
          தானத் தான தான தனதன ...... தனதான

காவிப் பூவை யேவை யிகல்கவன
     நீலத் தால கால நிகர்வன
          காதிப் போக மோக மருள்வன ...... இருதோடார்
காதிற் காதி மோதி யுழல்கண
     மாயத் தார்கள் தேக பரிசன
          காமக் ரோத லோப மதமிவை ...... சிதையாத
பாவிக் காயு வாயு வலம்வர
     லாலிப் பார்கள் போத கருமவு
          பாயத் தான ஞான நெறிதனை ...... யினிமேலன்
பாலெக் காக யோக ஜெபதப
     நேசித் தார வார பரிபுர
          பாதத் தாளு மாறு திருவுள ...... நினையாதோ
கூவிக் கோழி வாழி யெனமயி
     லாலித் தால கால மெனவுயர்
     கூளிச் சேனை வான மிசைதனில் ...... விளையாடக்
கோரத் தீர சூர னுடைவினை
          பாறச் சீற லேன பதிதனை
          கோலக் கால மாக அமர்செய்த ...... வடிவேலா
ஆவிச் சேல்கள் பூக மடலிள
     பாளைத் தாறு கூறு படவுய
          ராலைச் சோலை மேலை வயலியி ...... லுறைவோனே
ஆசைத் தோகை மார்க ளிசையுட
     னாடிப் பாடி நாடி வருதிரு
          ஆனைக் காவில் மேவி யருளிய ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top

362   திருவானைக்கா   குருதி புலால் என்பு  
தனதன தானந்த தான தந்தன
     தனதன தானந்த தான தந்தன
          தனதன தானந்த தான தந்தன ...... தனதான

குருதிபு லாலென்பு தோன ரம்புகள்
     கிருமிகள் மாலம்பி சீத மண்டிய
          குடர்நிணம் ரோமங்கள் மூளை யென்பன ...... பொதிகாயக்
குடிலிடை யோரைந்து வேட ரைம்புல
     அடவியி லோடுந்து ராசை வஞ்சகர்
          கொடியவர் மாபஞ்ச பாத கஞ்செய ...... அதனாலே
சுருதிபு ராணங்க ளாக மம்பகர்
     சரியைக்ரி யாவண்டர் பூசை வந்தனை
          துதியொடு நாடுந்தி யான மொன்றையு ...... முயலாதே
சுமடம தாய்வம்பு மால்கொ ளுந்திய
     திமிரரொ டேபந்த மாய்வ ருந்திய
          துரிசற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே
ஒருதனி வேல்கொண்டு நீள்க்ர வுஞ்சமும்
     நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
          உடைபட மோதுங்கு மார பங்கய ...... கரவீரா
உயர்தவர் மாவும்ப ரான அண்டர்கள்
     அடிதொழு தேமன்ப ராவு தொண்டர்கள்
          உளமதில் நாளுங்க லாவி யின்புற ...... வுறைவோனே
கருதிய ஆறங்க வேள்வி யந்தணர்
     அரிகரி கோவிந்த கேச வென்றிரு
          கழல்தொழு சீரங்க ராச னண்புறு ...... மருகோனே
கமலனு மாகண்ட லாதி யண்டரு
     மெமது பிரானென்று தாள்வ ணங்கிய
          கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=gUU_zF-tfVI
Add (additional) Audio/Video Link

Back to Top

363   திருவானைக்கா   நாடித் தேடி  
தானத் தானத் ...... தனதான
     தானத் தானத் ...... தனதான

நாடித் தேடித் ...... தொழுவார்பால்
     நானத் தாகத் ...... திரிவேனோ
மாடக் கூடற் ...... பதிஞான
     வாழ்வைச் சேரத் ...... தருவாயே
பாடற் காதற் ...... புரிவோனே
     பாலைத் தேனொத் ...... தருள்வோனே
ஆடற் றோகைக் ...... கினியோனே
     ஆனைக் காவிற் ...... பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=SJRH502Khv4
https://www.youtube.com/watch?v=iOMwd02FY2s
Add (additional) Audio/Video Link

Back to Top

364   திருவானைக்கா   நிறைந்த துப்பிதழ்  
தனந்த தத்தன தானான தானன
     தனந்த தத்தன தானான தானன
          தனந்த தத்தன தானான தானன ...... தந்ததான

நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
     மறந்த ரித்தக ணாலால நேரென
          நெடுஞ்சு ருட்குழல் ஜீமூத நேரென ...... நெஞ்சின்மேலே
நெருங்கு பொற்றன மாமேரு நேரென
     மருங்கு நிட்கள ஆகாச நேரென
          நிதம்ப முக்கணர் பூணார நேரென ...... நைந்துசீவன்
குறைந்தி தப்பட வாய்பாடி யாதர
     வழிந்த ழைத்தணை மேல்வீழு மாலொடு
          குமண்டை யிட்டுடை சோராவி டாயில ...... மைந்துநாபி
குடைந்தி ளைப்புறு மாமாய வாழ்வருள்
     மடந்தை யர்க்கொரு கோமாள மாகிய
          குரங்கை யொத்துழல் வேனோம னோலய ...... மென்றுசேர்வேன்
மறந்த சுக்ரிப மாநீசன் வாசலி
     லிருந்து லுத்தநி யோராத தேதுசொல்
          மனங்க ளித்திட லாமோது ரோகித ...... முன்புவாலி
வதஞ்செய் விக்ரம சீராம னானில
     மறிந்த திச்சர மோகோகெ டாதினி
          வரும்ப டிக்குரை யாய்பார்ப லாகவ ...... மென்றுபேசி
அறந்த ழைத்தநு மானோடு மாகடல்
     வரம்ப டைத்ததின் மேலேறி ராவண
          னரண்கு லைத்தெதிர் போராடு நாரணன் ...... மைந்தனான
அநங்கன் மைத்துன வேளேக லாபியின்
     விளங்கு செய்ப்பதி வேலாயு தாவிய
          னலங்க யப்பதி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.
Add (additional) Audio/Video Link

Back to Top

365   திருவானைக்கா   பரிமளம் மிக உள  
தனதன தனதன தாந்த தானன
     தனதன தனதன தாந்த தானன
          தனதன தனதன தாந்த தானன ...... தனதான

பரிமள மிகவுள சாந்து மாமத
     முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
          பலவரி யளிதுயில் கூர்ந்து வானுறு ...... முகில்போலே
பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
     பரிபுர மலரடி வேண்டி யேவிய
          பணிவிடை களிலிறு மாந்த கூளனை ...... நெறிபேணா
விரகனை யசடனை வீம்பு பேசிய
     விழலனை யுறுகலை யாய்ந்தி டாமுழு
          வெகுளியை யறிவது போங்க பாடனை ...... மலமாறா
வினையனை யுரைமொழி சோர்ந்த பாவியை
     விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
          வினவிமு னருள்செய்து பாங்கி னாள்வது ...... மொருநாளே
கருதலர் திரிபுர மாண்டு நீறெழ
     மலைசிலை யொருகையில் வாங்கு நாரணி
          கழலணி மலைமகள் காஞ்சி மாநக ...... ருறைபேதை
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
     கடலுடை யுலகினை யீன்ற தாயுமை
          கரிவன முறையகி லாண்ட நாயகி ...... யருள்பாலா
முரணிய சமரினில் மூண்ட ராவண
     னிடியென அலறிமு னேங்கி வாய்விட
          முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே
முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
     யிருதன கிரிமிசை தோய்ந்த காமுக
          முதுபழ மறைமொழி யாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
Audio/Video Link(s)
https://www.youtube.com/watch?v=1BKpTceWv4A
Add (additional) Audio/Video Link

Back to Top

366   திருவானைக்கா   வேலைப்போல் விழி  
தானத் தானன தத்தன தத்தன
     தானத் தானன தத்தன தத்தன
          தானத் தானன தத்தன தத்தன ...... தனதான

வேலைப் போல்விழி யிட்டும ருட்டிகள்
     காமக் ரோதம்வி ளைத்திடு துட்டிகள்
          வீதிக் கேதிரி பப்பர மட்டைகள் ...... முலையானை
மேலிட் டேபொர விட்டபொ றிச்சிகள்
     மார்பைத் தோளைய சைத்துந டப்பிகள்
          வேளுக் காண்மைசெ லுத்துச மர்த்திகள் ...... களிகூருஞ்
சோலைக் கோகில மொத்தமொ ழிச்சிகள்
     காசற் றாரையி தத்திலொ ழிச்சிகள்
          தோலைப் பூசிமி னுக்கியு ருக்கிகள் ...... எவரேனும்
தோயப் பாயல ழைக்கும வத்திகள்
     மோகப் போகமு யக்கிம யக்கிகள்
          சூறைக் காரிகள் துக்கவ லைப்பட ...... லொழிவேனோ
காலைக் கேமுழு கிக்குண திக்கினில்
     ஆதித் யாயஎ னப்பகர் தர்ப்பண
          காயத் ரீசெப மர்ச்சனை யைச்செயு ...... முநிவோர்கள்
கானத் தாசிர மத்தினி லுத்தம
     வேள்விச் சாலைய ளித்தல்பொ ருட்டெதிர்
          காதத் தாடகை யைக்கொல்க்ரு பைக்கடல் ...... மருகோனே
ஆலைச் சாறுகொ தித்துவ யற்றலை
     பாயச் சாலித ழைத்திர தித்தமு
          தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி ...... யுறைவேலா
ஆழித் தேர்மறு கிற்பயில் மெய்த்திரு
     நீறிட் டான்மதிள் சுற்றிய பொற்றிரு
          ஆனைக் காவினி லப்பர்ப்ரி யப்படு ...... பெருமாளே.
Add (additional) Audio/Video Link

Back to Top


This page was last modified on Sat, 20 Jul 2024 00:11:04 +0000
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thiruppugazh list lang tamil thalam %E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE